Friday, January 27, 2017

அஸ்வத்தாமனை விரட்டிய அர்ஜுனன்! - கர்ண பர்வம் பகுதி – 17

Arjuna drove Aswathama away! | Karna-Parva-Section-17 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்; அர்ஜுனனால் களத்தைவிட்டு விரட்டப்பட்ட அஸ்வத்தாமன் கர்ணனின் படைக்குள் தஞ்சமடைந்தது; சம்சப்தகர்களை மீண்டும் எதிர்த்துச் சென்ற அர்ஜுனனும், கிருஷ்ணனும்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, ஆகாயத்தில் ஒரே நட்சத்திரக்கூட்டத்திற்குள் நுழையும் போது சுக்ரனுக்கும், பிருஹஸ்பதிக்கும் இடையில் நடைபெறும் போரைப் போலவே, கோள்களான சுக்ரன் மற்றும் பிருஹஸ்பதியின் காந்திக்கு ஒப்பான அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் அந்தப் போர் நடந்தது.(1) உலகத்தை அச்சுறுத்துபவர்களான அவர்கள், சுடர்மிக்கக் கணைகளையே தங்கள் கதிர்களாகக் கொண்டு ஒருவரையொருவர் பீடித்து, தங்கள் சுற்றுப்பாதையில் இருந்து விலகிய இரு கோள்களைப் போல நின்றனர்.(2) அப்போது அர்ஜுனன், அஸ்வத்தாமனின் புருவ மத்தியைத் தன் கணையொன்றால் ஆழத்துளைத்தான். {நெற்றியில்} அந்தக் கணையுடன் கூடிய துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, மேல்நோக்கிய கதிர்களைக் கொண்ட சூரியனைப் போலவே பிரகாசமாகத் தெரிந்தான்.(3) அஸ்வத்தாமனின் நூற்றுக்கணக்கான கணைகளால் ஆழமாகப் பீடிக்கப்பட்ட இரு கிருஷ்ணர்களும் கூட, யுக முடிவில் கதிர்களுடன் கூடிய இரு சூரியன்களைப் போலவே தெரிந்தனர்.(4)


பிறகு கிருஷ்ணனை மயக்கத்தில் கண்ட அர்ஜுனன், அனைத்துப் பக்கங்களிலும் கணைத்தாரைகளை வெளியிடும் ஓர் ஆயுதத்தை ஏவினான். பிறகு அவன் {அர்ஜுனன்}, இடி, அல்லது நெருப்பு, அல்லது மரணக்கோலுக்கு ஒப்பான எண்ணற்ற கணைகளால் துரோணர் மகனைத் தாக்கினான்.(5)

வலிமையும் சக்தியும் கொண்ட அந்தக் கடுஞ்சாதனையாளன் (அஸ்வத்தாமன்), பெரும் வேகம் கொண்டவையும், தாக்கப்பட்டால் காலனையும் வலியை உணரச் செய்பவையும், நன்கு ஏவப்பட்டவையுமான கணைகளால் கேசவன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரையும் துளைத்தான்.(6) துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} அந்தக் கணைகளைத் தடுத்த அர்ஜுனன், நல்ல சிறகுகளைக் கொண்ட இரு மடங்கு கணைகளால் அவனை மறைத்து, அந்த முதன்மையான வீரனையும் {அஸ்வத்தாமனையும்}, அவனது குதிரைகள், சாரதி மற்றும் கொடிமரத்தையும் மறைத்துச் சம்சப்தகர்களைத் தாக்கத் தொடங்கினான்.(7)

பார்த்தன் {அர்ஜுனன்}, பின்வாங்காதவர்களான தன் எதிரிகளின் விற்கள், கணைகள், அம்பறாத்தூணிகள், வில்லின் நாண்கயிறுகள், கரங்கள், தோள்கள், இறுக்கப்பிடிக்கப்பட்ட ஆயுதங்கள், குடைகள், கொடிமரங்கள், குதிரைகள், தேர் அச்சுகள், ஆடைகள், மலர்மாலைகள், ஆபரணங்கள், கவசங்கள், அழகிய கேடயங்கள் மற்றும் அழகான தலைகள் ஆகியவற்றை நன்கு ஏவப்பட்ட தன் கணைகளால் பெரும் எண்ணிக்கையில் அறுத்தான்.(8,9) பெரும் கவனத்துடன் போரிடும் வீரர்களால் செலுத்தப்பட்டவையும், நன்கு ஆயத்தம் செய்யப்பட்டவையுமான தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியன பார்த்தனால் {அர்ஜுனனால்} ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான கணைகளால் அழிக்கப்பட்டு, அவற்றைச் செலுத்திய வீரர்களுடனேயே கீழே விழுந்தன.(10) அகன்ற தலை {பல்லம்}, பிறை வடிவ {அர்த்தச்சந்திர}, கத்திமுக {க்ஷுரப்ர} கணைகளால் வெட்டப்பட்டவையும், தாமரை, சூரியன், அல்லது முழு நிலவின் அழகுக்கு ஒப்பானவையும், கிரீடங்கள், ஆரங்கள், மகுடங்கள் ஆகியவற்றால் பிரகாசித்தவையுமான மனிதத் தலைகள் இடைவிடாமல் பூமியில் விழுந்து கொண்டிருந்தன.(11)

அப்போது தானவர்களின் செருக்கைத் தணிப்பவனான அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கொல்ல விரும்பிய கலிங்க, வங்க மற்றும் நிஷாத வீரர்கள், தைத்தியர்களின் பெரும் எதிரியுடைய {இந்திரனுடைய} யானையின் {ஐராவதத்தின்} காந்திக்கு ஒப்பானதை {யானையைச்} செலுத்திக் கொண்டு, அவனை {அர்ஜுனனை} எதிர்த்து வேகமாக விரைந்தனர்[1].(12) பார்த்தன்  {அர்ஜுனன்}, அந்த யானைகளின் கவசம், முக்கிய அங்கங்கள், துதிக்கைகள், சாரதிகள், கொடிமரங்கள் மற்றும் கொடிகள் ஆகியவற்றை வெட்டியதால், இடியால் பிளக்கப்பட்ட மலைச் சிகரங்களைப் போல அந்த விலங்குகள் கீழே விழுந்தன.(13) அந்த யானைப்படை பிளக்கப்பட்ட போது, மேகக்கூட்டங்களின் திரள்களால் உதயச் சூரியனைத் தடுக்கும் காற்றைப் போலக் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனான அந்த அர்ஜுனன், புதிதாக உதித்த சூரியனின் காந்தியைக் கொண்ட கணைகளால் தன் ஆசான் மகனை {அஸ்வத்தாமனைத்} தடுத்தான்.(14) தன் கணைகளால் அர்ஜுனன் கணைகளைத் தடுத்த அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அர்ஜுனன் மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரையும் தன் கணைகளாலேயே மறைத்து, கோடையின் முடிவில் சூரியனையோ, சந்திரனையோ ஆகாயத்தில் மறைக்கும் மேகங்களின் திரளைப் போல உரக்க முழங்கினான்.(15) அந்தக் கணைகளால் ஆழத்துளைத்தக்கப்பட்ட அர்ஜுனன், தன் ஆயுதங்களால், அஸ்வத்தாமனையும், அவனைப் பின்பற்றும் உமது படையினரையும் நோக்கிக் குறிவைத்து, அஸ்வத்தாமனின் கணைகளால் உண்டாக்கப்பட்ட இருளை வேகமாக விலக்கி, நல்ல சிறகுகளைக் கொண்ட கணைகளால் அவர்கள் அனைவரையும் துளைத்தான்.(16)

[1] “இங்கே சொல்லப்படும் தைத்தியாரிபுத்வீபம் Daityaripudwipa என்பது யானையின் வடிவத்தைக் கொண்ட ஓர் அசுரன் என்று நீலகண்டரால் பொருள் கொள்ளப்படுகிறது. நான் உரையாசிரியரைப் பின்பற்றுவதற்காக அந்தக் கலவையின் {கூட்டு சொல்லின்} தெளிவான பொருளை நிராகரிக்க முடியாது. தைத்தியர்களின் எதிரியுடைய யானை என்பது யானைகளின் இளவரசனான ஐராவாதம் என்று அழைக்கப்படும் இந்திரனுடைய யானையையே குறிக்கும்” என இங்கே விளக்குகிறார் கங்குலி.

அந்தப் போரில் சவ்யசச்சின் {அர்ஜுனன்} எப்போது தன் கணைகளை எடுத்தான், எப்போது அவற்றைக் குறி பார்த்தான், எப்போது அவற்றை விடுத்தான் என்பதை யாராலும் காணமுடியவில்லை. யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள், தேர்வீரர்கள் ஆகியோர், அவனது கணைகளால் தாக்கப்பட்டு உயிரையிழந்து கீழே விழுவது மட்டுமே அங்கே காணப்பட்டது.(17) அப்போது, ஒரு கணத்தையும் இழக்காத துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, பத்து முதன்மையான கணைகளைக் குறிபார்த்து, அவை ஏதோ ஒரே கணையே என்பதைப் போல அவற்றை வேகமாக ஏவினான். பெரும் சக்தியுடன் ஏவப்பட்ட அவற்றில் ஐந்து அர்ஜுனனையும், மற்ற ஐந்து வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} துளைத்தன.(18) அந்தக் கணைகளால் தாக்கபட்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான அவ்விருவரும், குபேரனையும், இந்திரனையும் போலக் குருதியில் குளித்தனர். இப்படிப் பீடிக்கப்பட்ட அவ்விரு வீரர்களும், ஆயுதங்களின் அறிவியலில் முற்றான திறன் கொண்ட அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டனர் என்றே மக்கள் அனைவரும் கருதினர்.(19)

அப்போது அந்தத் தசார்ஹர்களின் தலைவன் {கிருஷ்ணன்} அர்ஜுனனிடம், “(இப்படி அஸ்வத்தாமனை மிதமாக விடுவதால்) ஏன் பிழை செய்கிறாய்? இந்தப் போர்வீரனைக் கொல்வாயாக. வேறுபாடின்றி மதிக்கப்பட்டால், சிகிச்சையில்லாமல் தணிக்கப்படாத நோயைப் போல இவர் பெரும் துன்பத்திற்குக் காரணமாவார்” என்றான். மங்கா மகிமை கொண்ட கேசவனிடம், “அப்படியே ஆகட்டும்” என்று மறுமொழி கூறியவனும், மறைக்கப்படாத புரிதல் கொண்டவனுமான அர்ஜுனன், துரோணர் மகனைத் தன் கணைகளால் கவனமாகச் சிதைக்கத் தொடங்கினான்.(20) அப்போது சினத்தால் நிறைந்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, காண்டீவத்தில் இருந்து பெரும் சக்தியுடன் ஏவப்பட்டவையும், ஆடுகளின் காதுகளைப் போன்ற தலை கொண்டவையுமான கணைகளால் தன் எதிரியின் {அஸ்வத்தாமனின்}, சந்தனக்குழம்பு பூசப்பட்ட பருத்த கரங்களையும், மார்பையும், தலையையும், ஈடற்ற தொடைகளையும் வேகமாகத் துளைத்தான். பிறகு அஸ்வத்தாமனின் குதிரைகளுடைய கடிவாளங்களை வெட்டிய அர்ஜுனன், அந்தக் குதிரைகளையும் துளைக்கத் தொடங்கியதால், அவை {குதிரைகள்} அஸ்வத்தாமனைக் களத்தைவிட்டுப் பெருந்தொலைவுக்குக் கொண்டு சென்றன.(21)

காற்றின் வேகத்தைக் கொண்ட அந்தக் குதிரைகளால் இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவனும், பார்த்தனின் கணைகளால் ஆழத்துளைக்கப்பட்டவனும், புத்திசாலியுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சிறிது நேரம் சிந்தித்த பின், திரும்பிச் செல்லவும், பார்த்தனோடு {அர்ஜுனனோடு} போரைப் புதுப்பிக்கவும் விரும்பவில்லை.(22) வெற்றியானது எப்போதும் விருஷ்ணிகளின் தலைவனுடனும் {கிருஷ்ணனுடனும்}, தனஞ்சயனுடனும் {அர்ஜுனனுடனும்} இருக்கும் என்பதையறிந்த அந்த முதன்மையான அங்கீரசக் குலத்தவன் {அஸ்வத்தாமன்}, நம்பிக்கை இழந்தவனாக, கணைகளும், ஆயுதங்களும் கிட்டத்தட்டத் தீர்ந்தவனுமாகக் கர்ணனின் படைக்குள் நுழைந்தான்.(23) உண்மையில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தன் குதிரைகளைக் கட்டுப்படுத்திய அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} சற்றே ஆறுதலடைந்து, தேர்கள், குதிரைகள் மற்றும் மனிதர்களால் நிறைந்த அந்தக் கர்ணனின் படைக்குள் நுழைந்தான்.(24) தங்கள் எதிரியான அந்த அஸ்வத்தாமன், மந்திரங்களாலும், மருந்துகளாலும், வழிமுறைகளாலும் உடலில் இருந்து விலக்கப்பட்ட நோயைப் போல, அவனது குதிரைகளால் இவ்வாறு களத்தைவிட்டு விலகிய பிறகு,(25) கேசவனும், அர்ஜுனனும், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான சடசடப்பொலி கொண்டதும், காற்றில் ஆடிய கொடியைக் கொண்டதுமான தங்கள் தேரில் சம்சப்தகர்களை எதிர்த்துச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.(26)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்