Thursday, December 26, 2019

குடிமக்களிடம் வேண்டிய திருதராஷ்டிரன்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 08

Dhritarashtra's solicitation to the citizens! | Asramavasika-Parva-Section-08 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 08)


பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனைத் தூண்டிய காந்தாரி; நாட்டு மக்களை அழைத்துத் தான் காட்டுக்குச் செல்ல அனுமதி வேண்டிய திருதராஷ்டிரன்...


யுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! பூமியின் தலைவா, நீர் சொன்னதை நான் செய்வேன். ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, எனக்கு நீர் மேலும் கற்பிக்க வேண்டும்.(1) பீஷ்மர் சொர்க்கத்திற்கு உயர்ந்துவிட்டார். மதுசூதனன் (துவாரகைக்குச்) சென்றுவிட்டான். விதுரரும், சஞ்சயரும் (உம்மோடு காட்டுக்குச்) சென்று விடுவார்கள். எனவே, உம்மைத் தவிர வேறு யார் எனக்குக் கற்பிக்க முடியும்?(2) ஓ! பூமியின் தலைவா, நீர் என் நன்மையை விரும்பி இன்று சொன்ன அனைத்தையும் நான் நிச்சயம் பின்பற்றுவேன். ஓ! மன்னா, இது குறித்து நீர் உறுதி கொள்வீராக[1]" என்றான்".(3)


[1] கும்பகோணம் பதிப்பில், "நன்மையைச் செய்வதில் நிலைபெற்றிருக்கும் நீர் இப்பொழுது இது விஷயத்தில் எனக்கு எதை உபதேசித்தீரோ அதை நான் செய்கிறேன். ராஜரே, கவலையற்றிரும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நீர் இன்று எனக்குச் சொல்லப்போகும் அனைத்தையும் நான் பின்பற்றுவேன். ஓ பூமியின் தலைவா, ஓ பாரதக் குல வழித்தோன்றலே, நீர் சொல்லாமல் இருக்கக்கூடாது" என்றிருக்கிறது.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! பாரதர்களின் தலைவா, பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்ட அரசமுனி திருதராஷ்டிரன், (காட்டுக்கு ஓய்ந்து செல்ல) மன்னனின் அனுமதியைப் பெற விரும்பினான்.(4) அவன், "ஓ! மகனே, நிற்பாயாக {இரு}. நான் அதிகமாக உழன்றிருக்கிறேன்" என்றான்[2]. இதைச் சொன்ன அந்த முதிய மன்னன் காந்தாரியின் அந்தப்புரத்திற்குள் நுழைந்தான்.(5)

[2] கும்பகோணம் பதிப்பில், "புத்திரனே, களைப்பாறு. எனக்கும் ஸ்ரமம் அதிகமாக இருக்கிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஓ மகனே, விலகுவாயாக. என் வலிமை தீர்ந்துவிட்டது" என்றிருக்கிது. திருதராஷ்டிரன், "சற்றுப் பொறு, சொல்கிறேன்: என்று சொல்லிச் செல்வதாகத் தெரிகிறது.

அறவொழுக்கம் கொண்டவளும், காரிய சாதனைகள் அனைத்தையும் அறிந்தவளுமான காந்தாரி, உயிரினங்களின் இரண்டாவது தலைவனைப் போலிருந்த தன் கணவனிடம், அந்தக் காலத்திற்குப் பொருத்தமான சொற்களில்,(6) "பெரும் முனிவரான வியாசரிடமே நீர் அனுமதியைப் பெற்றுவிட்டீர். எனினும், யுதிஷ்டிரனின் அனுமதியுடன் நீர் எப்போது காட்டுக்குச் செல்லப் போகிறீர்?" என்று கேட்டாள்.(7)

திருதராஷ்டிரன், "ஓ! காந்தாரி, உயர் ஆன்மா கொண்ட என் தந்தையிடம்  {வியாசரிடம்} நான் அனுமதியைப் பெற்றுவிட்டேன். (அடுத்துப் பெறப்போகும்) யுதிஷ்டிரனின் அனுமதியுடனும் நான் விரைவில் காட்டுக்கு ஓயப்போகிறேன்.(8) எனினும், கொடிய பகடைக்கு அடிமையாக இருந்த என் மகன்கள் அனைவருக்காகப் பிரேத நிலையைப் பின்பற்றிச் செல்லவல்ல கொஞ்சம் செல்வத்தை நான் கொடையளிக்க விரும்புகிறேன். உண்மையில், என் மாளிகைக்கு மக்கள் அனைவரையும் அழைத்து அக்கொடைகளை அளிக்க நான் விரும்புகிறேன்" என்றான்"[3].(9)

[3] "இறப்பவர்கள் முதலில் பிரேதமாகிறார்கள். சபிண்டிகரணச் சிராத்தம் செய்யப்படும் ஒரு வருட காலம் வரை அவர்கள் அந்த நிலையிலேயே நீடித்திருக்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் பித்ருக்களுடன் சேர்கிறார்கள். முதல் சிராத்தத்திலும், மாதாமாதம் செய்யப்படும் சிராத்தங்களிலும் அளிக்கப்படும் கொடைகள் அந்தப் பிரேதத்தை மீட்கவோ, அவனுக்குத் தகுதியை அளிக்கவோ செய்யும். ஆண்டுதோறும் நிகழும் சிராத்தங்களிலும் கொடுக்கப்படும் கொடைகளுக்கும் அதே திறன் உண்டு" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "(காந்தாரியிடம்) இவ்வாறு சொன்ன திருதராஷ்டிரன், யுதிஷ்டிரனுக்கும் சொல்லி அனுப்பினான். பின்னவன் {யுதிஷ்டிரன்}, தன் பெரியப்பாவின் ஆணையின் பேரில் தேவையான பொருட்கள் அனைத்தையும் கொண்டு வந்தான்.(10) குருஜங்காலத்தில் வசித்த பிராமணர்கள் பலரும், க்ஷத்திரியர்கள் பலரும், வைசியர்கள் பலரும், சூத்திரர்கள் பலரும், நிறைவடைந்த இதயங்களுடன் திருதராஷ்டிரனின் மாளிகைக்கு வந்தனர்.(11) அந்தப்புரத்தில் இருந்து வெளியே வந்த முதிய மன்னன் {திருதராஷ்டிரன்}, அவர்கள் அனைவரையும், அங்கே கூடியிருந்த தன் குடிமக்களை அனைவரையும் கண்டான்.(12) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, பெரும் நுண்ணறிவைக் கொண்ட மன்னன் திருதராஷ்டிரன், அங்கே திரண்டிருந்த குடிமக்கள், மாகாணத்துவாசிகள், தன் நலம் விரும்பிகள், பல்வேறு நாடுகளில் இருந்து பெரும் எண்ணிக்கையில் வந்திருந்த பிராமணர்கள் ஆகியோரைக் கண்டு இந்தச் சொற்களைச் சொன்னான்.(13,14)

{திருதராஷ்டிரன்}, "நீங்களும் குருக்களும் {கௌரவர்களும்} நீண்ட பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து, ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும், ஒருவருக்கொருவர் நன்மை செய்வதில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கிறீர்கள்.(15) இப்போது வந்திருக்கும் வாய்ப்பைக் கருத்தில் கொண்டு நான் சொல்வதை ஆசான்களின் சொற்களை நிறைவேற்றும் சீடர்களைப் போல நீங்கள் அனைவரும் நிறைவேற்ற வேண்டும்.(16) காந்தாரியைத் துணையாகக் கொண்டு காட்டுக்குள் ஓய்ந்து செல்வதில் நான் என் இதயத்தை நிலைநிறுத்தியிருக்கிறேன். வியாசரும், குந்தியின் மகனும் {யுதிஷ்டிரனும்} இதை ஏற்றிருக்கின்றனர்.(17) உங்கள் அனுமதியும் எனக்குக் கிடைக்கட்டும். இதில் தயக்கமேதும் கொள்ளாதீர். உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் எப்போதும் நீடித்திருக்கும் நல்லெண்ணத்தை,(18) வேறு நாடுகளை ஆள்பவர்களுக்கும், ஆளப்படுபவர்களுக்கும் இடையில் காண முடிவதில்லை. இவ்வளவு காலம் என் தலையில் இருக்கும் இந்தச் சுமையால் நான் களைத்திருக்கிறேன். நான் பிள்ளைகளை இழந்தவனாகவும் இருக்கிறேன்.(19) பாவமற்றவர்களே, காந்தாரியுடன் சேர்ந்து நோற்கும் உண்ணாநோன்புகளால் நான் மெலிந்திருக்கிறேன். அரசாட்சி யுதிஷ்டிரனுக்குச் சென்ற பிறகும், நான் பெரும் மகிழ்ச்சியை அனுபவித்தேன்.(20) மனிதர்களில் முதன்மையானவர்களே, துரியோதனனின் அரசில் நான் எதிர்பார்க்கக்கூடிய மகிழ்ச்சியைவிட அது பெரிதாக இருந்ததாக நான் நினைக்கிறேன். முதிர்ந்தவனும், பிள்ளைகளை இழந்தவனும்மான எனக்குக் காடுகளை விடச் சிறந்த புகலிடம் வேறு எது இருக்க முடியும்? உயர்வாக அருளப்பட்டவர்களே, நான் வேண்டும் அனுமதியை எனக்குக் கொடுப்பதே உங்களுக்குத் தகும்" என்றான் {திருதராஷ்டிரன்}.(21)

ஓ! பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அவன் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்ட குருஜங்காலவாசிகள் அனைவரும், கண்ணீரால் தடைபட்ட குரல்களுடன் உரத்த ஒப்பாரியில் ஈடுபட்டனர்.(22) பெருஞ்சக்தி கொண்ட திருதராஷ்டிரன், துயரில் பீடிக்கப்பட்ட அந்த மக்களுக்கும் மேலும் சிலவற்றைச் சொல்ல விரும்பி, மீண்டும் அவர்களிடம் பேசத்தொடங்கிப் பின்வருமாறு சொன்னான்" {என்றார் வைசம்பாயனர்}.(23)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 08ல் உள்ள சுலோகங்கள் : 23

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்