Wednesday, December 25, 2019

அறத்தின் ஆட்சி! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 07

Rule of righteousness! | Asramavasika-Parva-Section-07 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 07) (திருதராஷ்டிர நீதி - 3)


பதிவின் சுருக்கம் : போரும் அமைதியும்; செல்வம், கூட்டாளிகள் ஆகியவற்றின் பலங்கள்; இயந்திர மற்றும் வணிக வர்க்கத்தினரின் பலம்; மன்னர்களின் பேரிடர்கள்; நூறு குதிரை வேள்விகளும் அறம்சார்ந்த ஆட்சியும் ஒரே பயனை உண்டாக்கும் என்பது...


திருதராஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னர்களில் சிறந்தவனே, ஓ! யுதிஷ்டிரா, போர் மற்றும் அமைதி குறித்தும் நீ முறையாகச் சிந்திக்க வேண்டும். அவை ஒவ்வொன்றும் இருவகைகளைக் கொண்டவை. பல்வேறு வழிமுறைகள் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளின் மூலம் போரும், அமைதியும் உண்டாகின்றன[1].(1) ஓ! குரு குலத்தோனே, நீ உன்னைப் பொறுத்தவரையில் (பலம் மற்றும் பலவீனம் என்ற) இரண்டையும் குறித்து நீ அமைதியாகச் சிந்திக்க வேண்டும். நிறைவடைந்தவர்களும், உடல்நலமிக்கவர்களும், புத்திசாலிகளுமான படைவீரர்களைக் கொண்ட பகைவனை எதிர்த்து நீ திடீரெனப் படையெடுக்கக்கூடாது. மறுபுறம், அவனை வெல்லும் வழிமுறைகளைக் குறித்து நீ கவனமாகச் சிந்திக்க வேண்டும்[2].(2) நிறைவடைந்தவர்களும், உடல்நலம் சிறந்திருப்பவர்களுமான போராளிகள் இல்லாத பகைவனை எதிர்த்தே நீ படையெடுக்க வேண்டும். அனைத்தும் சாதகமாக இருக்கும்போதுதான் பகைவனை வீழ்த்த முடியும். எனினும், அதன்பிறகு வெற்றியாளன் ஓய்ந்து (பலமான நிலையில் நீடித்து) இருக்க வேண்டும்.(3) அடுத்ததாக அவன் தன் பகைவனைப் பல்வேறு துன்பங்களில் மூழ்கடித்து, அவனுடைய கூட்டாளிகளுக்கு மத்தியில் வேற்றுமையை விதைக்க வேண்டும். அவன், பகைவனைப் பீடித்து, அவனது இதயத்திற்கு அச்சமூட்டி, அவனைத் தாக்கி அவனது படைகளைப் பலவீனப்படுத்த வேண்டும்.(4)


[1] "பலமான பகைவன், பலமற்ற பகைவன் ஆகியோருடன் எனப் போரும் அமைதியும் ஈரிரு வகைகளாக இருக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ராஜஸ்ரேஷ்டனே, யுதிஷ்டிர, நீ இப்பொழுது (பலிஷ்டன் துர்ப்பலன் என்று) இரண்டு காரணங்களுள்ளனவும், பலவித உபாயங்களுள்ளனவும், அநேகவிதங்களுமான ஸந்திவிக்ரஹவகைகளையும் தெரிந்து கொள்" என்றிருக்கிறது.

[2] "உரையாசிரியரைப் பின்பற்றி இந்தச் சுலோகத்தைச் சற்றே விரித்துக் கூறியிருக்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சாத்திரங்களை அறிந்த மன்னன், பகைவனை எதிர்த்துப் படையெடுக்கும்போது, மூன்று வகைப் பலங்களைக் குறித்துச் சிந்திக்க வேண்டும், உண்மையில் தன் பலத்தையும், பகைவனின் பலத்தையும் அவன் சிந்திக்க வேண்டும்[3].(5) ஓ! பாரதா, எந்த மன்னன், சுறுசுறுப்பு {உத்ஸாகசக்தியுடனும்}, ஒழுக்கம் {பிரபுசக்தியுடனும்}, ஆலோசனைகள் {மந்திரசக்தி} ஆகிய சக்திகளுடன் இருக்கிறானோ, அவனே பகைவரை எதிர்த்துப் படையெடுக்கலாம். அவனுடைய நிலை வேறு வகையில் இருந்தால், அவன் தாக்குதலைத் தவிர்க்க வேண்டும்[4].(6) மன்னனானவன், செல்வத்தின் பலம் {மௌலபலம்}, கூட்டாளிகளின் பலம் {மித்ரபலம்}, காட்டுவாசிகளின் பலம் {அடவீபலம்}, ஊதியம் பெறும் படைவீரர்களின் பலம் {பிருதபலம்}, இயந்திர மற்றும் வணிக வர்க்கங்களின் பலம் {ஸ்ரேணீபலம்} ஆகியவற்றுடன் இருக்க வேண்டும்[5].(7) இவையனைத்திலும் கூட்டாளிகள் பலமும், செல்வபலமும் எஞ்சியவற்றைவிட மேன்மையானவை. வர்க்கங்களின் பலமும் {ஸ்ரேணீபலமும்}, நிலையான படையின் பலமும் {பிருதபலமும்} நிகரானவையாகும்.(8)

[3] "இந்த மூன்று வகைப் பலங்கள் அடுத்தச் சுலோகத்தில் விளக்கப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] "உத்ஸாஹம் என்பது தயார் நிலை அல்லது சுறுசுறுப்பாகும். பிரபுசக்தி என்பது ஒழுக்கத்தின் மூலம் தன் படைகளை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நிலையாகும். ஆலோசனைகளின் பலம் என்பது நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல் மற்றும் தற்காப்பாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[5] "மௌலம் என்பது பணபலமாகும். நவீன காலப் போர்களில்கூட பணம் என்பது போரின் நரம்புகள் என்றழைக்கப்படுகிறது. அடவீ பலம் என்பது காட்டுவாசிகளைக் கொண்ட படை என்பதாகும், ஒருவேளை முறைசார்ந்த போராளிகளால் ஆதரிக்கப்படும் முறைசாராத போராளிகளாக இருக்கலாம். ப்ருத பலம் என்பது எக்காலத்திலும் நாட்டிடம் இருந்து ஊதியம் பெறும் முறை சார்ந்த படையாகும். இந்தியாவில் நிலையான படைகள் பழங்காலத்தில் இருந்தே இருக்கின்றன. ஸ்ரேணீ பலம் என்பது சாலைகள் மற்றும் போக்குவரத்தைக் கவனித்துக் கொண்ட கைவினைஞர்கள், இயந்திரக் கைவினைஞர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோரையும், படைக்குப் பொருட்களைக் கொடுக்கும் வணிகர்களையும் உள்ளடக்கிய படையாக இருக்கலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நியாயமாகச் செல்வமும், க்ஷேமமும் உறுதியாகவுள்ள அரசன் மூலபலத்தையும், மித்திரனுடைய சேனையையும், காட்டிலுள்ள சேனையையும், கூலிப்படையையும், ஸ்ரேணியிலுள்ள சேனையையும் மித்திரனுக்கு மித்திரனுடைய சேனையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மன்னன், செல்வபலத்தையும், நண்பர்களின் பலத்தையும், காட்டு பலத்தையும், பணியாள் பலத்தையும், வணிகர்களின் பலத்தையும் நிச்சயம் திரட்ட வேண்டும்" என்றிருக்கிறது.

மேற்கண்ட இரண்டு பலங்களையும் பயன்படுத்த வேண்டிய வேளைவரும் பல சந்தர்ப்பங்களில், அவை இரண்டிற்கும் இணையாக ஒற்றர்களின் பலமே செயல்திறன் கொண்ட பலமாக மன்னனால் கருதப்படும்.(9) ஓ! மன்னா, ஆட்சியாளர்களை மூழ்கடிக்கும் பேரிடர் {ஆபத்து} என்பது, பல வடிவங்களைக் கொண்டதாகக் கருதப்பட வேண்டும். ஓ! குரு குலத்தோனே, அந்தப் பல்வேறு வடிவங்கள் யாவை என்பதைக் கேட்பாயாக.(10) உண்மையில், ஓ! பாண்டுவின் மகனே, பேரிடர் {ஆபத்துகள்} பல்வேறு வகைகளைச் சார்ந்தவையே. ஓ! மன்னா, அவற்றின் வடிவங்களைத் தனித்தனியாகக் கண்டு, (சோம்பலில் அவற்றை மறைக்காமல்) சமரசம் மற்றும் நன்கறியப்பட்ட பிற வழிமுறைகளைப் பயன்படுத்தி அவற்றைச் சந்திக்க வேண்டும்.(11) ஓ! பகைவரை எரிப்பவனே, மன்னன் நல்ல படையைக் கொண்டிருக்கும்போது (பகைவனை எதிர்த்து) படையெடுக்க வேண்டும். படையெடுக்கத் தயாராகும்போது, காலம், இடம், தான் திரட்டியிருக்கும் படை, (பிற காரியங்களில்) தன்னுடைய சாதகங்கள் ஆகியவற்றை அவன் கருத்தில் கொள்ள வேண்டும்.(12)

தன் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் கவனமுள்ள மன்னன், உற்சாகமிக்கவர்களும், உடல்நலமிக்கவர்களுமான போர்வீரர்களுடன் ஆயத்தமான பிறகே படையெடுக்க வேண்டும். ஓ! பாண்டுவின் மகனே, அவன் பலமடையும்போது, பருவகாலம் சாதகமற்றிருந்தாலும் கூட, அவன் படையெடுக்கலாம்.(13) அம்பறாத்தூணிகளையே கற்களாகக் கொண்டதும், குதிரைகளையும், தேர்களையும் ஓடையாகக் கொண்டதும், கொடிமரங்களைக் கரைகளில் நிற்கும் மரங்களாகக் கொண்டதும் காலாட்படைவீரர்களையும், யானைகளையும் சகதியாகக் கொண்டதுமான ஓர் ஆற்றை மன்னன் உண்டாக்க வேண்டும். அத்தகைய ஆற்றையே {படையையே} மன்னன் தன் பகைவனை அழிக்கப் பயன்படுத்த வேண்டும்.(14) உசானஸ் {சுக்ராச்சாரியர்} அறிந்த அறிவியலுக்கு ஏற்புடைய வகையில், பகைவரோடு போரிட சகடம், பத்மம் மற்றும் வஜ்ரம் என்றழைக்கப்படும் வியூகங்களை அமைக்க வேண்டும்[6].(15) பகைவனின் பலம் குறித்த அனைத்தையும் ஒற்றர்களின் மூலம் அறிந்து, தன் பலத்தையும் ஆய்வு செய்து கொண்டு, ஒரு மன்னன் தன் ஆட்சிப்பகுதிக்குள்ளோ, பகைவரின் ஆட்சிப்பகுதிக்குள்ளோ போரைத் தொடங்க வேண்டும்[7].(16)

[6] "சகடம் என்பது தேரின் வடிவிலான ஒரு வியூகமாகும். அது சுக்ர நீதியில் முழுமையாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அது துரோண பர்வத்திலும் சொல்லப்பட்டுள்ளது. பத்மம் என்பது கோண முனைப்புகளுடன் கூடிய ஒரு வட்ட வடிவ வியூகமாகும். அது பல நவீன கோட்டைகளைக் கட்டுவதற்கு இன்று பயன்படும் நட்சத்திர வியூகம் போன்றதாகும். வஜ்ரம் என்பது ஆப்பு போன்ற வடிவத்தைக் கொண்ட வியூகமாகும். அஃது ஓர் ஆப்பைப் போலப் பகைவரின் படையணிகளைப் பிளக்க உதவுகிறது, சுசிவியூகம் என்றும் அஃது அழைக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[7] "அதாவது, தன் நாட்டிற்குள்ளேயே பகைவனைச் சந்தித்தல், அல்லது பகைவனின் நாட்டுக்குப் படையெடுத்துச் சென்று அங்கே அவனை வீழச் செய்தல்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

மன்னன் எப்போதும் தன் படையை நிறைவடையச் செய்து, (பகைவனை எதிர்த்து) தன்னுடைய பலமிக்கப் போர்வீரர்களை ஏவ வேண்டும். முதலில் தன்னுடைய நாட்டின் நிலையை உறுதி செய்து கொண்டு, சமரசத்தையோ, நன்கறியப்பட்ட வேறு வழிமுறைகளையோ ஒருவன் பயன்படுத்த வேண்டும்.(17) ஓ! மன்னா, ஒருவன் அனைத்து வழிமுறைகளின் மூலமும் தன் உடலைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இம்மையிலும், மறுமையிலும் பெறப்போகும் உயர்ந்த நன்மைக்காக அவன் அதைச் செய்ய வேண்டும்.(18) ஓ! ஏகாதிபதி, மன்னன் இவ்வழிமுறைகளில் முறையாக நடந்து கொள்வதன் மூலம், இவ்வுலகில் அறம்சார்ந்த தன் குடிமக்களை ஆண்டபிறகு, மறுமையில் சொர்க்கத்தை அடைகிறான்.(19) ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, ஈருலகங்களையும் அடைவதற்காக இவ்வாறே நீ உன் குடிமக்களின் நன்மையை எப்போதும் நாட வேண்டும்[8].(20)

[8] "அஃதாவது, இம்மையில் புகழையும், மறுமையில் இன்பத்தையும் பெறுவது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பீஷ்மர், கிருஷ்ணன், விதுரன் ஆகியோர் மூலம் ஏற்கனேவே கடமைகள் அனைத்தம் உனக்குக் கற்பிக்கப்பட்டிருந்தாலும், நான் உன் மீது கொண்டிருக்கும் அன்பின் காரணமாக இந்த நெறிமுறைகளை உனக்குச் சொன்னேன்.(21) வேள்விகளில் அபரிமிதமான கொடைகளை அளிப்பவனே, இவை யாவற்றையும் நீ முறையாகச் செய்ய வேண்டும். இவ்வழியில் உன்னை நடத்திக் கொண்டு உன் குடிமக்களின் அன்புக்குரியவனாகி சொர்க்கத்தின் இன்பநிலையை அடைவாயாக.(22) நூறு குதிரை வேள்விகளில் தேவர்களைத் துதித்தவனும், அறம்சார்ந்து தன் குடிமக்களை ஆண்ட மன்னனும் நிகரான தகுதியையே அடைகிறார்கள்" என்றான் {திருதராஷ்டிரன்}.(23)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 07ல் உள்ள சுலோகங்கள் : 23

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்