Saturday, December 28, 2019

பீமனின் கோபம்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 11

The wrath of Bhima! | Asramavasika-Parva-Section-11 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 11)


பதிவின் சுருக்கம் : பீஷ்மர் முதலியோருக்குச் சிராத்தஞ்செய்யப் பொருள் வேண்டிய திருதராஷ்டிரன்; கொடுக்க மறுத்த பீமன்; அர்ஜுனன் கொடுக்க வேண்டும் என்று சொன்னது; அர்ஜுனனை மெச்சிய யுதிஷ்டிரன்; அர்ஜுனனிடம் கோபமாகப் பேசிய பீமன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்த இரவு கடந்ததும், அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன், யுதிஷ்டிரனின் மாளிகைக்கு விதுரனை அனுப்பினான்.(1) பெருஞ்சக்தி கொண்டவனும், நுண்ணறிவு பெற்ற மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான விதுரன், யுதிஷ்டிரனின் மாளிகைக்கு வந்து, மனிதர்களில் முதன்மையானவனும், மங்கா மகிமை கொண்டவனுமான அந்த மன்னனிடம், இந்தச் சொற்களில்,(2) "மன்னர் திருதராஷ்டிரர், காட்டுக்கு ஓய்ந்து செல்லும் காரியத்தை நிறைவேற்றுவதற்குரிய தொடக்கச் சடங்குகளைச் செய்ய வேண்டும். ஓ! மன்னா, கார்த்திகை மாதம் முழு நிலவு {பௌர்ணமி} நாளில் அவர் {திருதராஷ்டிரர்} காட்டுக்குப் புறப்பட இருக்கிறார்[1].(3) ஓ! குருக்களில் முதன்மையானவனே, அவர் உன்னிடம் இருந்து சிறிது செல்வத்தை வேண்டுகிறார். உயர் ஆன்ம கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, துரோணர், சோமதத்தன், பெரும் நுண்ணறிவைக் கொண்ட பாஹ்லீகர், கொல்லப்பட்ட அவருடைய அனைத்து மகன்கள் மற்றும் நலன்விரும்பிகள், தீய ஆன்மா கொண்டவனும், இழிந்தவனுமான சிந்துக்களின் ஆட்சியாளனுக்கும் {ஜெயத்ரதனுக்கும்} சிராத்தம் செய்ய விரும்புகிறார்" என்றான்.(5)


[1] கும்பகோணம் பதிப்பில், "திருதராஷ்டிர மஹாராஜர் வனவாஸத்திற்காகத் தீக்ஷை பெற்றிருக்கிறார். வரப்போகிற இந்தக் கார்த்திகியில் அரண்யம் செல்லப் போகிறார்" என்றிருக்கிறது. கார்த்திகி என்பதன் அடிக்குறிப்பில், "க்ருத்திகா நக்ஷத்ரம் சேர்ந்த பூர்ணிமை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மன்னன் கார்த்தி மாத முழு நிலவு நாளில் காட்டுக்குச் செல்லப் போகிறார்" என்றிருக்கிறது. கார்த்திகை என்பதன் அடிக்குறிப்பில், "அக்டோபர்-நவம்பர்" என்றிருக்கிறது.

விதுரனின் இந்தச் சொற்களைக் கேட்ட யுதிஷ்டிரன் மற்றும் சுருள்முடி கொண்டவனான அர்ஜுனன் ஆகிய இருவரும் அவற்றை உயர்வாக மெச்சினர்.(6) எனினும், பெருஞ்சக்தி கொண்டவனும், தணிக்க இயலாத கோபத்தைக் கொண்டவனுமான பீமன், துரியோதனனின் செயல்களை நினைவுகூர்ந்தவனாக விதுரனின் அந்தச் சொற்களை நல்லூக்கத்துடன் ஏற்றுக் கொள்ளவில்லை. கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட பல்குனன் {அர்ஜுனன்}, பீமசேனனின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு, சற்றே தன் தலையைக் கீழே தொங்கப்போட்டவாறு, மனிதர்களில் முதன்மையானவனான அவனிடம் இந்தச் சொற்களில் பேசினான்: "ஓ! பீமரே, வயதில் முதிர்ந்தவரான நமது அரசத் தந்தை காட்டுக்கு ஓய்ந்து செல்லத் தீர்மானித்திருக்கிறார்.(7-9) கொல்லப்பட்டவர்களான தமது உற்றார் உறவினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் மறுமையில் அடையும் மகிழ்ச்சியை அதிகரிப்பதற்காக அவர் கொடையளிக்க விரும்புகிறார். ஓ! குருகுலத்தைச் சார்ந்தவரே, உம்மால் வெல்லப்பட்டு உமக்குரியதாக இருக்கும் செல்வதை அவர் கொடையளிக்க விரும்புகிறார்.(10)

உண்மையில், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, அந்த முதிர்ந்த மன்னர் பீஷ்மர் மற்றும் பிறரின் நிமித்தமாக இந்தக் கொடைகளை அளிக்க விரும்புகிறார். அதற்கு அனுமதி அளிப்பதே உமக்குத் தகும். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, முன்பு நம்மால் இரந்து கேட்கப்பட்டவர், இப்போது நம்மிடம் இரந்து கேட்பது நற்பேற்றினாலேயே நேர்கிறது. காலம் கொண்டு வந்த மாற்றத்தைப் பாரும். எந்த மன்னன் முன்பு மொத்த பூமியின் தலைவனாகவும், பாதுகாவலனாகவும் இருந்தோரோ,(11,12) எவருடைய உற்றார் உறவினர் மற்றும் துணைவர்கள் பகைவர்களால் கொல்லப்பட்டனரோ, அவர் இப்போது காடுகளுக்குச் செல்ல விரும்புகிறார். ஓ! மனிதர்களின் தலைவா, கேட்கப்படும் அனுமதியைக் கொடுப்பதிலிருந்து உமது கருத்து விலக வேண்டாம்.(13) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, மறுப்பது புகழ்க்கேட்டையும், பாவத்தையும் கொண்டுவரும். இக்காரியத்தில் நீர், அனைவருக்கும் தலைவரும், நமது அண்ணனுமான மன்னனிடமிருந்து கற்பீராக.(14) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மறுப்பதைவிடக் கொடுப்பதே உமக்குத் தகும்" என்றான் {அர்ஜுனன்}. இவ்வாறு சொன்ன பீபத்சுவை {அர்ஜுனனை} நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் மெச்சினான்.(15)

கோபவசப்பட்ட பீமசேனன், இந்தச் சொற்களில், "ஓ! பல்குனா {அர்ஜுனா}, பீஷ்மர், மன்னர் சோமதத்தர், பூரிஸ்ரவஸ், அரசமுனியான பாஹ்லீகர், உயர் ஆன்ம துரோணர் மற்றும் பிறர் அனைவரின் ஈமச்சடங்குகளுக்காக நாம் கொடையளிக்கலாம்.(16,17) நம் அன்னை குந்தி, கர்ணனுக்கான ஈமக்காணிக்கைகளை அளிப்பாள். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, அந்தச் சிராத்தங்களைத் திருதராஷ்டிரர் செய்ய வேண்டாம்.(18) இதையே நான் நினைக்கிறேன். நமது பகைவர்கள் மகிழ வேண்டாம். துரியோதனனும், பிறரும் மேலும் மேலும் படு பயங்கர நிலைக்குள் மூழ்கட்டும்.(19) ஐயோ, குலத்தில் இழிந்தவர்களான அவர்களே மொத்த பூமியையும் அழித்தவர்கள். பனிரெண்டு வருடங்கள் நீண்ட கடுங்கவலையையையும்,(20) திரௌபதிக்குத் துன்பம் நிறைந்ததாக அமைந்த ஒருவருட தலைமறைவு வாழ்வையும் உன்னால் எவ்வாறு மறக்க முடிந்தது? திருதராஷ்டிரர் நம்மிடம் கொள்ளும் இந்த அன்பு அப்போது எங்கிருந்தது?(21)

கருப்பு மான்தோலை உடுத்தி, உன் ஆபரணங்கள் அனைத்தையும் அகற்றி, பாஞ்சால இளவரசியையும் {திரௌபதியையும்} அழைத்துக் கொண்டு நீ இந்த மன்னனை {யுதிஷ்திரரைப்} பின் தொடர்ந்து செல்லவில்லையா?(22) அப்போது பீஷ்மரும், துரோணரும் எங்கிருந்தனர்? சோமதத்தர் எங்கிருந்தார்? நீ பதிமூன்று வருடங்கள் காட்டு விளைச்சலை உண்டு வாழ வேண்டிருந்ததே.(23) உன்னுடைய பெரிய தந்தை, அப்போது தந்தைக்குரிய அன்புக்கண்களுடன் உன்னைப் பார்க்கவில்லையே. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பகடையாட்டம் நடந்து கொண்டிருந்தபோது, விதுரரிடம், "வெல்லப்பட்டதென்ன?" என்று நம் குலத்தில் இழிந்தவரும், தீய புத்தி கொண்டவருமான இவர்தான் கேட்டுக் கொண்டிருந்தார் என்பதை நீ மறந்துவிட்டாயா?" என்றான் {பீமன்}. இவ்வளவு வரை கேட்டுக் கொண்டிருந்தவனும், குந்தியின் மகனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான மன்னன் யுதிஷ்டிரன், அவனை {பீமனை} அதட்டி, அமைதியாக இருக்கும்படி சொன்னான்" {என்றார் வைசம்பாயனர்}.(24,25)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 11ல் உள்ள சுலோகங்கள் : 25

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்