Friday, December 13, 2019

அர்ஜுனன் சாபவிமோசனம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 81

Arjuna's curse expiated! | Aswamedha-Parva-Section-81 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 66)


பதிவின் சுருக்கம் : சித்ராங்கதை போர்க்களத்திற்கு வந்ததற்கும், அர்ஜுனன் தன் மகனிடம் தோற்றதற்கும் காரணம் கூறிய உலூபி...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! குரு குலத்தின் (மரு)மகளே, உன்னை இங்கே கொண்டு வந்த காரியம் என்ன? மணிப்புரத்தின் ஆட்சியாளனுடைய {பப்ருவாகனனுடைய} அன்னை {சித்ராங்கதை} போர்க்களத்திற்கு வருவதற்கான காரணம் என்ன?(1) ஓ! பாம்பின் மகளே {உலூபியே, பன்னக கன்னிகையே}, இந்த மன்னனின் நட்பு நாடி வந்தாயா? ஓ! ஓய்வற்ற பார்வைகளைக் கொண்டவளே, எனது நன்மையை விரும்பி வந்தாயா?(2) ஓ! பருத்த இடை கொண்டவளே {உலூபியே}, ஓ! அழகிய பெண்ணே, நானோ, இங்கே இருக்கும் இந்தப் பப்ருவாஹனனோ தெரியாமல் உனக்கு எத்தீங்கையும் இழைக்கவில்லை என நம்புகிறேன்.(3) சித்திரவாஹன குலத்தின் வழித்தோன்றலும், களங்கமற்ற அங்கங்களைக் கொண்டவளுமான சித்ராங்கதை உனக்கு எத்தீங்கையும் இழைத்தாளா?" என்று கேட்டான்.(4)


பாம்புகளுடைய இளவரசனின் மகள் {உலூபி}, அவனிடம் சிரித்துக் கொண்டே, "நீரும் எனக்குக் குற்றம் ஏதும் இழைக்கவில்லை, பப்ருவாஹனனும் எனக்குத் தீங்கேதும் செய்யவில்லை.(5) பணிப்பெண் போல எப்போதும் எனக்குக் கீழ்ப்படிந்திருக்கும் இந்த இளவரசனின் தாயும் {சித்ராங்கதையும்} எத்தீங்கையும் செய்யவில்லை. இவை யாவற்றையும் எவ்வாறு செய்தேன் என்பதைச் சொல்கிறேன் கேட்பீராக.(6) நீர் என்னிடம் கோபம் கொள்ளக் கூடாது. உண்மையில், மதிப்புடன் தலைவணங்கி நான் உம்மை நிறைவடையச் செய்வதை நாடுகிறேன். ஓ! குரு குலத்தவரே, ஓ! பலமிக்கவரே, இவை அனைத்தையும் உமது நன்மைக்காகவே என்னால் செய்யப்பட்டன.(7) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட தனஞ்சயரே, நான் செய்தவை அனைத்தையும் கேட்பீராக. பாரத இளவரசர்களின் பெரும்போரில் சந்தனுவின் அரச மகனை {பீஷ்மரை} நீதியற்ற வழிகளில் நீர் கொன்றீர். நான் என்ன செய்தேனோ, அஃது உமது பாவத்துக்குப் பரிகாரமாகிறது. பீஷ்மர் உம்முடன் போரிடும்போது நீர் அவரை வீழ்த்தவில்லை[1].(8-10)

[1] பீஷ்ம பர்வம் 120வது பகுதியில் பீஷ்மரை அர்ஜுனன் வீழ்த்திய நிகழ்வு சொல்லப்பட்டிருக்கிறது.

அவர் {பீஷ்மர்} சிகண்டியுடன் போரிட்டுக் கொண்டிருந்தார். உமக்கு உதவியாக இருந்த அவனைச் சார்ந்தே நீர் சந்தனுவின் மகனை {பீஷ்மரை} வீழச் செய்தீர். உமது பாவத்திற்குப் பரிகாரம் செய்யாமல் நீர் இறந்திருந்தால்,(11) நீர் செய்த அந்தப் பாவம் நிறைந்த செயலின் விளைவால் நிச்சயம் நரகத்தில் விழுந்திருப்பீர். உமது மகனிடம் இருந்து அடைந்த நிலை அந்தப் பாவத்திற்கான பரிகாரமாகும்.(12) ஓ! பூமியின் ஆட்சியாளரே, ஓ !பெரும் நுண்ணறிவுமிக்கவரே, கங்கையுடன் வசுக்கள் இருந்தபோது இதைக் கேட்டேன்.(13) சந்தனுவின் மகன் {பீஷ்மர்} வீழ்ந்த பிறகு, தேவர்களான வசுக்கள், கங்கைக் கரைக்கு வந்து, அந்த நீரில் நீராடி, அந்த ஓடையின் தேவியை அழைத்து, அந்தப் பாகீரதியின் அனுமதியுடன் கூடிய இந்தப் பயங்கரச் சொற்களைச் சொன்னார்கள்.

{வசுக்கள்}, "சந்தனுவின் மைந்தன் பீஷ்மன், தனஞ்சயனால் கொல்லப்பட்டான்.(14,15) உண்மையில் ஓ! தேவி, அப்போது பீஷ்மன் {இவனுடன்} போரிடுவதை நிறுத்தி, வேறொருடவனுடனை போரிட்டுக் கொண்டிருந்தான். இந்தக் குற்றத்தின் காரணமாக நாங்கள் இன்று தனஞ்சயனைச் சபிக்கப் போகிறோம்" என்றனர்.(16)

இதைக் கேட்ட கங்கா தேவியும், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி உடனே சம்மதித்தாள். இச்சொற்களைக் கேட்டுப் பெரிதும் துன்பமடைந்த நான், பாதாள லோகத்திற்கு ஊடுருவிச் சென்று என் தந்தையிடம் அனைத்தையும் சொன்னேன்.(17) அவர் வசுக்களிடம் சென்று உமக்காக வேண்டினார்,(18) தன் சக்திக்கு வாய்த்த அனைத்து வழிகளிலும் அவர்களை மீண்டும் மீண்டும் நிறைவடையச் செய்ய முயன்றார். அப்போது அவர்கள் அவரிடம், "உயர்ந்த அருளைக் கொண்டவனும், மணிப்புரத்தின் ஆட்சியாளனாகவும், இளமையுடன் கூடியவனாகவும் தனஞ்சயனுக்கு ஒரு மகன் இருக்கிறான்.(19) அவன் {பப்ருவாகனன்} போர்க்களத்தில் நின்று தனஞ்சயனைப் {அர்ஜுனனைப்} பூமியில் சாய்ப்பான். ஓ! பாம்புகளின் இளவரசே, இது நடக்கும்போது, அர்ஜுனன் எங்கள் சாபத்திலிருந்து விடுபடுவான்.(20) நீ செல்லலாம்" என்றனர்.

வசுக்களால் இவ்வாறு சொல்லப்பட்ட அவர் திரும்பி வந்து நடந்தவற்றை எனக்குச் சொன்னார். ஓ! வீரரே, இவை யாவற்றையும் அறிந்த நான், இவ்வழியில் வசுக்களின் சாபத்தில் இருந்து உம்மை விடுவித்தேன்.(21) தேவர்களின் தலைவனாலும் உம்மைப் போரில் வீழ்த்த இயலாது. மகன் என்பவன் உமது சுயமே {தானே மகனாகிறான் என்று கருதப்பட்டிருக்கிறது}. இதன் காரணமாகவே நீர் அவனால் வீழ்த்தப்பட்டீர்.(22) ஓ! பலமிக்கவரே, என் மீது எக்குற்றத்தையும் சுமத்த முடியாது. உண்மையில், என்னை நிந்திக்கத்தகுந்தவளாக எவ்வாறு நீர் கொள்வீர்?" என்று கேட்டாள்.(23)

(உலூபியால்) இவ்வாறு சொல்லப்பட்டதும், உற்சாகம் நிறைந்த இதயத்துடன் கூடிய விஜயன் {அர்ஜுனன்}, அவளிடம், "ஓ! தேவி {உலூபியே}, நீ செய்த இவை யாவும் எனக்கு மிக இனியவையாகும்" என்றான்.(24) அதன் பிறகு, மணிப்புர ஆட்சியாளனான தன் மகனிடம் பேசிய ஜயன் {அர்ஜுனன்}, குரு குடும்பத்தின் (மரு) மகளான சித்ராங்கதை கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவனிடம்,(25) "வருகின்ற சைத்ர மாதத்தின் முழு நிலவு நாளில் {சித்ராபௌர்ணமியில்} யுதிஷ்டிரரின் குதிரை வேள்வி நடக்க இருக்கிறது. ஓ! மன்னா {பப்ருவாகனா}, உன் அன்னை, உன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அங்கே வருவாயாக" என்றான்[2].(26)

[2] கும்போகோணம் பதிப்பில், "அரசனே, வருகிற சித்ராபூர்ணிமையில் யுதிஷ்டிரருடைய அஸ்வமேதம் நடக்கப் போகிறது. அதற்கு, நீ மந்திரிகளுடனும் இரண்டும் தாயார்களுடனும் வர வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "அடுத்த மாதமான சைத்ர மாதத்தில் யுதிஷ்டிரரின் குதிரை வேள்வி நடக்க இருக்கிறது. ஓ! மன்னா, உன் ஆலோசகர்கள் மற்றும் உன் தாய்மாருடன் நீ அங்கே வருவாயாக" என்றிருக்கிறது.

பார்த்தனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான மன்னன் பப்ருவாஹனன், கண்ணீர் நிறைந்த கண்களுடன் தன் தந்தையிடம் இச்சொற்களில்,(27) "ஓ! அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரே, உமது ஆணையின் பேரில் நிச்சயம் நான் அந்தப் பெரும் குதிரை வேள்விக்கு வந்து, மறுபிறப்பாளர்களுக்கு உணவு வழங்கும் பணியை ஏற்றுக் கொள்வேன்.(28) எனினும், என்னிடம் இரக்கம் காட்டும் வகையில் உமது மனைவியர் இருவருடனும் நீர் உமது நகருக்குள் {பப்ருவாகனனான எனது தலைநகருக்குள்} வரவேண்டும். ஓ! அனைத்துக் கடமைகளையும் முழுமையாக அறிந்தவரே, இதைப் பொறுத்தவரையில் ஐயுணர்வேதும் உமக்கு வேண்டாம்.(29) ஓ! தலைவா, ஓ! வெற்றி பெறும் போர்வீரர்களில் முதன்மையானவரே, உமது மாளிகையில் மகிழ்ச்சியுடன் ஓரிரவு வாழ்ந்துவிட்டு, அதன் பிறகு குதிரையைப் பின்தொடர்ந்து செல்வீராக" என்றான்.(30)

தன் மகனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், குரங்குக் கொடியோனுமான குந்தியின் மைந்தன், சித்திராங்கதையின் பிள்ளையிடம்,(31) "ஓ! வலிமைமிக்கக் கரத்தோனே, நான் என்ன நோன்பை நோற்கிறேன் என்பதை அறிவாயாக. ஓ! அகன்ற கண்களைக் கொண்டவனே, நான் நோற்கும் இந்த நோன்பு முடிவடையும் வரை என்னால் உன் நகருக்குள் நுழைய முடியாது.(32) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இந்த வேள்விக் குதிரை தன் விருப்பப்படி சுற்றித் திரியும். (நான் எப்போதும் அதைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டும்). அருள் உனதாகட்டும். நான் செல்ல வேண்டும். சிறிது காலம் கூட ஓய்ந்திருக்கக்கூடிய இடம் எனக்கு ஒன்றுமில்லை" என்றான் {அர்ஜுனன்}.(33)

பாகனைத் தண்டிப்பவனின் மகன் {அர்ஜுனன்}, தன் மகனால் முறையாக வழிபடப்பட்டு, தன் மனைவியரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்று தன் வழியில் சென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(34)

அஸ்வமேதபர்வம் பகுதி – 81ல் உள்ள சுலோகங்கள் : 34

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்