Friday, December 13, 2019

ஜராசந்தன் வாரிசு! - அஸ்வமேதபர்வம் பகுதி – 82

The heir of Jarasandha! | Aswamedha-Parva-Section-82 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 67)


பதிவின் சுருக்கம் : ஜராசந்தன் பேரனும், சகாதேவன் மகனுமான மேகசந்தியை அர்ஜுனன் வென்றது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பெருங்கடலால் சூழப்பட்ட மொத்த பூமியிலும் திரிந்த அந்த (வேள்விக்) குதிரை, நின்று, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தை {ஹஸ்தினாபுரத்தை} நோக்கித் தன் முகத்தைத் திருப்பியது. அந்தக் குதிரையைப் பின்தொடர்ந்து சென்ற கிரீடம் தரித்த அர்ஜுனனும், குரு தலைநகரத்தை நோக்கித் தன் முகத்தைத் திருப்பினான். விருப்பப்படி திரும்பிய அந்தக் குதிரை ராஜகிருஹ நகருக்கு வந்தது.(2) ஓ! ஏகாதிபதி, அவன் தன் நாட்டுக்குள் வந்திருப்பதைக் கண்டவனும் க்ஷத்திரியக் கடமைகளை நோற்பவனுமான சகாதேவன் மகன் {ஜராசந்தனின் பேரனான மேகசந்தி}அவனைப் போருக்கு அறைகூவி அழைத்தான்.(3) தன் தேரில் ஏறி, வில் மற்றும் கணைகளையும், தோலாலான கையுறையும் தரித்துக் கொண்டு தன் நகரத்தைவிட்டு வெளியே வந்த மேகசந்தி, தரையில் நின்று கொண்டிருந்த தனஞ்சயனை நோக்கி விரைந்தான்.(4)


ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெருஞ்சக்தி கொண்ட மேகசந்தி, தனஞ்சயனை அணுகி, எந்தத் திறனும் இல்லாத சிறுபிள்ளைத்தனத்தின் மூலம் இந்தச் சொற்களைச் சொன்னான்.(5) {மேகசந்தி அர்ஜுனனிடம்}, "ஓ! பாரதா, உம்முடைய குதிரை பெண்களால் மட்டுமே பாதுகாக்கப்பட்டுச் செல்வதைப் போலத் தெரிகிறது. நான் இந்தக் குதிரையை அபகரித்துச் செல்வேன். அதை விடுவிக்க நீர் முனைவீராக.(6) என் தந்தைமார் உமக்குப் போரில் விருந்தோம்பல் கடமைகளைப் போதிக்க வில்லையெனினும் நான் அவற்றை உமக்குக் கற்பிப்பேன். நான் உம்மைத் தாக்குவேன், நீர் என்னைத் தாக்குவீராக" என்றான்.(7)

இவ்வாறு சொல்லப்பட்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே அவனிடம், "எனக்கு இடையூறு செய்பவனைத் தடுக்க வேண்டும் என்ற நோன்பை என் அண்ணன் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறார். ஓ! மன்னா, இதை நீ நிச்சயம் அறிவாய். உன் சக்திக்குச் சிறந்த வகையில் என்னைத் தாக்குவாயாக. எனக்குக் கோபமேதும் இல்லை" என்றான்.(8,9)

இவ்வாறு சொல்லப்பட்ட மகத ஆட்சியாளன் {மேகசந்தி}, ஆயிரங்கண் இந்திரன் கனத்த மழையைப் பொழிவதைப் போலத் தன் கணைகளைப் பொழிந்து பாண்டுவின் மகனை முதலில் தாக்கினான்.(10) ஓ! பாரதக் குலத் தலைவா {ஜனமேஜயா}, அப்போது வீரனான காண்டீவதாரி, தன் சிறந்த வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளைக் கொண்டு, தன் எதிராளியால் கவனமாக ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும் கலங்கடித்தான்.(11) இவ்வாறு அந்தக் கணை மேகங்களைக் கலங்கடித்தவனும், குரங்குக் கொடியைக் கொண்டவனுமான அந்த வீரன், நெருப்பு வாயுடன் கூடிய பாம்புகளுக்கு ஒப்பான சுடமிக்கக் கணைகள் எண்ணற்றவற்றைத் தன் எதிரியின் மீது ஏவினான்.(12) அவன் {அர்ஜுனன்} தன் எதிரி மற்றும் அவனது தேரோட்டியின் உடலை மட்டும் விட்டுவிட்டு அவனுடைய கொடி, கொடிக்கம்பம், தேர், துருவங்கள், நுகம் மற்றும் குதிரைகளின் மீது இந்தக் கணைகளை ஏவினான்.(13) இடது கையாலும் (வலது கையாலும்) வில்லைப் பயன்படுத்தவல்ல பார்த்தன், மகத இளவரசனின் உடலைத் துளைக்காமல் விட்டதால், அவன் தன் ஆற்றலின் மூலமே தன் உடல் பாதுகாக்கப்படுவதாகக் கருதி, பார்த்தன் மீது கணைகள் பலவற்றை ஏவினான்.(14)

மகத இளவரசனால் ஆழத் துளைக்கப்பட்ட காண்டீவதாரி, வசந்த காலத்தில் மலரும் பலாசத்தை {புரசு மரத்தைப்} போல ஒளிர்ந்தான்.(15) அர்ஜுனனுக்கு மகத இளவரசனைக் கொல்லும் விருப்பமேதும் இல்லை. அவன் பாண்டுவின் மகனைத் தாக்கினாலும், இதன் காரணமாகவே அந்த முதன்மையான வீரனின் முன்னால் எஞ்சியிருப்பதில் அவனால் வெல்ல முடிந்தது.(16) கோபமடைந்த தனஞ்சயன் பெரும் பலத்துடன் தன் வில்லை வளைத்துத் தன் எதிராளியின் குதிரைகளைக் கொன்று அவனுடைய தேரோட்டியின் தலையையும் கொய்தான்.(17) அவன் ஒரு க்ஷுரத்தைக் கொண்டு, அழகானதும், பெரியதுமான மேகசந்தியின் வில்லையும், அவனுடைய தோல் கையுறையையும் வெட்டி வீழ்த்தினான். அதன் பிறகு அவனது கொடியையும், கொடிக்கம்பத்தையும் வெட்டி வீழ்த்தி, அவற்றை விழச்செய்தான்.(18) பெரிதும் பீடிக்கப்பட்ட அந்த மகத இளவரசன், தன் குதிரைகள், வில் மற்றும் சாரதியை இழந்து, ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, குந்தியின் மகனை நோக்கிப் பெரும் வேகத்துடன் விரைந்தான்.(19) அப்போது அர்ஜுனன், பிரகாசமான பொன்னலானதும், முன்னேறிவரும் தன் பகைவனுக்குரியதுமான அந்தக் கதாயுதத்தைக் கழுகின் இறகுகளுடன் கூடிய கணைகள் பலவற்றைக் கொண்டு துண்டுகளாக வெட்டினான்.(20) இவ்வாறு துண்டுகளாக வெட்டப்பட்டதும், ரத்தினப்பூட்டுகள் சிதறியதுமான அந்தக் கதாயுதம், யாரோ ஒருவனால் வீசியெறியப்பட்ட ஆதரவற்ற பெண் பாம்பைப் போலப் பூமியில் விழுந்தது.(21)

தன் பகைவன், தனது தேர், வில், கதாயுதம் ஆகியவற்றை இழந்தபோது, நுண்ணறிவுமிக்கவனும், போர்வீரர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனன் அவனைத் தாக்க விரும்பவில்லை.(22) குரங்குக் கொடி கொண்ட அந்த வீரன், உற்சாகமிழந்திருந்தவனும், க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றியவனுமான தன் பகைவனிடம், இந்தச் சொற்களில்,(23) "ஓ! மகனே, க்ஷத்திரியக் கடமைகளில் போதுமான பற்றை நீ வெளிப்படுத்தினாய். இப்போது செல்வாயாக. ஓ! மன்னா, வயதால் மிக இளையவனாக இருப்பினும் போரில் நீ சாதித்த அருஞ்செயல்கள் பெரியனவாகும்.(24) என்னை எதிர்க்கும் மன்னர்கள் கொல்லப்படக்கூடாது என்பது நான் யுதிஷ்டிரரிடம் இருந்து பெற்ற ஆணையாகும். ஓ! ஏகாதிபதி, போரில் நீ எனக்குக் குற்றமிழைத்திருந்தாலும் அதன் காரணமாகவே நீ இன்னும் உயிரோடு இருக்கிறாய்" என்றான்.(25)

இவ்வாறு சொல்லப்பட்ட மகத ஆட்சியாளன் {மேகசந்தி}, வெல்லப்பட்டவானகவும், தப்பவிடப்பட்டவனாகவும் தன்னைக் கருதினான். அர்ஜுனனை வழிபடுவது கடமையென நினைத்த அவன், கூப்பிய கரங்களுடன் முறையாக அவனை அணுகி வழிபட்டான். மேலும் அவன், "நான் உன்னால் வெல்லப்பட்டேன். நீ அருளப்பட்டிருப்பாயாக. நான் போரைத் தொடரத் துணியேன். நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக. நீ கேட்பது ஏற்கனவே நிறைவேறிவிட்டதாகக் கருதுவாயாக" என்றான்.(27)

அவனை மீண்டும் தேற்றி அர்ஜுனன், மீண்டும் அவனிடம், "சைத்ரமாத முழு நிலவில் நடைபெற இருக்கும் எங்கள் மன்னனின் குதிரை வேள்விக்கு நீ வர வேண்டும்" என்றான்.(28) அவனால் இவ்வாறு சொல்லப்பட்ட சகாதேவன் மகன் {ஜராசந்தன் பேரனான மேகசந்தி}, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி, அந்தக் குதிரையையும், போர்வீரர்களில் முதன்மையான பல்குனனையும் முறையாக வழிபட்டான்.(29) அழகிய பிடரியுடன் கூடிய அந்த வேள்விக் குதிரை, கடற்கரையோரமாகவே சென்று, வங்கர்கள், புண்ட்ரர்கள் மற்றும் கோசலர்களின் நாட்டுகளுக்குச் சென்றது.(30) அந்த நாடுகளில், தனஞ்சயன் தன் காண்டீவத்தைக் கொண்டு எண்ணற்ற மிலேச்ச படைகளை ஒன்றன்பின் ஒன்றாக வீழ்த்தினான்" {என்றார் வைசம்பாயனர்}.(31)

அஸ்வமேதபர்வம் பகுதி – 82ல் உள்ள சுலோகங்கள் : 31

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்