Tuesday, December 17, 2019

லக்ஷணக் குறை! - அஸ்வமேதபர்வம் பகுதி – 87

Censurable indication! | Aswamedha-Parva-Section-87 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 72)


பதிவின் சுருக்கம் : பாண்டவர்களில் மற்ற நால்வரைவிட அர்ஜுனனுக்குப் பெரும் அலைச்சல் நேரிடும் வகையில் அவன் உடலில் உள்ள லக்ஷணக் குறை எதுவெனக் கிருஷ்ணனிடம் கேட்ட யுதிஷ்டிரன்; அதைக் கூறிய கிருஷ்ணன்; குதிரையுடன் திரும்பி வந்த அர்ஜுனன்...


யுதிஷ்டிரன், "ஓ! கிருஷ்ணா, உன்னுடைய இனிமையான சொற்களை நான் கேட்டேன். அவை உன்னால் பேசத் தகுந்தனவாக இருந்தன. அவை மகிழ்ச்சி நிறைந்தவையாகவும், அமுதத்தைப் போல இனிமையாகவும் இருந்தன. உண்மையில், ஓ! பலமிக்கவனே, அவை என் இதயத்தைப் பேரின்பத்தால் நிறைத்தன.(1) ஓ! ரிஷிகேசா, பூமியின் மன்னர்களுடன் விஜயனுக்கு நேர்ந்திருக்கும் போர்கள் எண்ணற்றவையென நான் கேட்டிருக்கிறேன்.(2) சுகத்தில் {வசதி வாய்ப்புகளில்} இருந்து எப்போதும் தொடர்பறுந்தவனாகப் பார்த்தன் இருப்பதன் காரணம் யாது? விஜயன் பெரும் நுண்ணறிவு பெற்றவனாக இருக்கிறான். எனவே, இஃது என் இதயத்திற்குப் பெரும் துன்பத்தைத் தருகிறது.(3) ஓ! ஜனார்த்தனா, தொழிலில் இருந்து விலகியிருக்கும்போதெல்லாம் நான் குந்தியின் மகனான ஜிஷ்ணுவையே {அர்ஜுனனையே} நினைக்கிறேன். பாண்டுக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிப்பவனான அவன் பெரும் துன்பத்தை அனுபவித்திருக்கிறான்.(4) அவனுடைய உடலில் அனைத்து மங்கலக் குறிகளும் இருக்கின்றன. எனினும், ஓ! கிருஷ்ணா, அவன் {அர்ஜுனன்} எப்போதும் துன்பத்தையும், வசதியின்மையையும் அனுபவிக்கக் காரணமான அந்தக் குறியீடு யாது?(5) குந்தியின் மகனான அவனே, துன்பத்தில் பெரும்பகுதியைச் சுமக்கிறான். அவன் உடலில் நிந்திக்கத்தக்க குறியீடு {கெட்ட லக்ஷணம்} எதையும் நான் காணவில்லை. இதைக் கேட்க நான் தகுந்தவனெனில் எனக்கு அதை விளக்கிச் சொல்வாயாக" என்று கேட்டான்.(6)


இவ்வாறு சொல்லப்பட்டவனும், போஜ இளவரசர்களின் மகிமையை அதிகரிப்பவனுமான ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, நீண்ட நேரம் சிந்தித்த பிறகு, பின்வருமாறு பதிலளித்தான்:(7) "மனிதர்களில் சிங்கமான இவனது தாடையெலும்புகள் சற்றே உயர்ந்திருப்பதைத் தவிர நிந்திக்கத்தக்க இயல்பு வேறு எதையும் நான் காணவில்லை.(8) இதன் விளைவாகவே மனிதர்களில் முதன்மையான இவன் எப்போதும் சாலைகளிலேயே இருக்கிறான். இவன் மகிழ்ச்சியற்றவனாக இருப்பதற்கு வேறு எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை[1]" என்றான்.(9)

[1] கும்பகோணம் பதிப்பில், "புருஷஸ்ரேஷ்டனான இந்த அர்ஜுனனுக்குப் பிண்டிகைகள் அதிகமாக இருக்கின்றன. இதைத் தவிர இவனிடத்தில் வேறு ஒரு கெட்ட லக்ஷணத்தையும் நான் காணவில்லை. புருஷஸ்ரேஷ்டனான அவன் எப்பொழுதும் மார்க்கங்களில் இருக்கிறான். அவன் துக்கத்தை அனுபவிக்கக்கூடிய வேறு லக்ஷணத்தை நான் காணவில்லை" என்றிருக்கிறது. பிண்டிகைகள் என்பதன் அடிக்குறிப்பில், "முழங்காலுக்குக் கீழ் பின்புறமாக உள்ள சதை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்ற இருக்கிறது. மூலத்தில், "puruṣasiṃhasya piṇḍike 'syātikāyataḥ புருஷஸிம்ʼஹஸ்ய பிண்டிகே(அ)ஸ்யாதி⁴கே யத:" என்றிருக்கிறது.

பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மனிதர்களில் முதன்மையான மன்னன் யுதிஷ்டிரன், அந்த விருஷ்ணிகளின் தலைவனிடம் அவ்வாறே இருப்பதாகச் சொன்னான்.(10) எனினும், (அர்ஜுனனுக்கு களங்கமேதும் கற்பிக்கப்படுதைப் பொறுத்துக் கொள்ள முடியாத) இளவரசி திரௌபதி, கிருஷ்ணனை நோக்கி கோபத்துடன் சாய்வாகப் பார்த்தாள். கேசியைக் கொன்றவனான ரிஷிகேசன், தன் நண்பரான பாஞ்சால இளவரசி (தன் நண்பனிடம் {அர்ஜுனனிடம்}) வெளிப்படுத்திய அன்பின் {காதலின்} குறியீட்டை அங்கீகரித்தான்[2].(11)

[2] "திரௌபதி எப்போதும் கிருஷ்ணனால் சகியாகவோ, நண்பராகவோ கருதப்படுவது கவனிக்கத்தக்கது. உலக அளவில் பெண்கள் ஆண்களைவிடத் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்ட காலத்தில் கிருஷ்ணன் எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருத்தியை வீரப் பெருந்தகைமை கொண்டவளாக உயர்வாகக் கருதினான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "துருபதன் மகளான கிருஷ்ணையோ அஸூயையுடன் கிருஷ்ணனைக் குறுக்காகப் பார்த்தாள். கேசியைக் கொன்றவரும், நண்பரும், தனஞ்சயனே போன்றவருமான ஹ்ருஷீகேசரும், தோழனான அர்ஜுனனிடத்தில் அவளுக்குள்ள அந்தப் பிரீதியை ஏற்றுக் கொண்டார்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், கிருஷ்ணை திரௌபதி, கிருஷ்ணனைக் குறுக்குப் பார்வையில் பார்த்தாள். கேசியைக் கொன்றவனும் இதை அன்பின் குறியீடாக ஏற்றுக் கொண்டான். அவள் அவனுடைய நண்பராவாள். தனஞ்சயனும் அவனுடைய நண்பனும், ரிஷிகேசனையே போன்றவனுமாவான்" என்றிருக்கிறது.

குதிரையைப் பின்தொடர்ந்து சென்ற அர்ஜுனனின் இனிமையான வெற்றிகளைக் கேட்ட பீமசேனனும், வேள்விப் புரோகிதர்கள் உள்ளிட்ட பிற குருக்களும் {கௌரவர்களும்} உயர்வான மகிழ்ச்சியை அடைந்தனர்.(12) அவர்கள் அர்ஜுனனைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும்போதே, அந்த உயர்ஆன்ம வீரனிடம் இருந்து ஒரு தூதன் செய்தியைச் சுமந்து வந்தான்.(13) அந்தப் புத்திசாலியான தூதன், குரு மன்னனின் முன்னிலைக்கு வந்து, மதிப்புடன் தலை வணங்கி, மனிதர்களில் முதன்மையான பல்குனனின் வரவைத் தெரிவித்தான்.(14) அந்தச் செய்தியைப் பெற்றதும், மகிழ்ச்சிக் கண்ணீர் மன்னனின் கண்களை மறைந்தது. தூதன் கொண்டு வந்த இனிய செய்திக்காக அவனுக்குப் பெருங்கொடைகள் வழங்கப்பட்டன.(15)

அன்றிலிருந்து இரண்டாவது நாள், மனிதர்களில் முதன்மையான அந்தக் குருக்களின் தலைவன் வந்த போது பேராரவாரம் கேட்டது.(16) அர்ஜுனனுக்கு அருகில் நடந்து வந்த அந்தக் குதிரையின் குளம்படிகளில் இருந்து எழுந்த புழுதியானது, தெய்வீகக் குதிரையான உச்சைஸ்ரவத்தால் எழுப்பட்டதைப் போல அழகாகத் தெரிந்தது.(17)

அர்ஜுனன் முன்னேறி வந்தபோது, குடிமக்களால் சொல்லப்படும் மகிழ்ச்சி நிறைந்த சொற்கள் பலவற்றைக் கேட்டான். {அவர்கள்}, "ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நற்பேற்றினாலேயே நீ ஆபத்துகளில் இருந்து விடுபட்டாய். மன்னன் யுதிஷ்டிரனுக்குப் புகழுண்டாகட்டும்.(18) உலகம் முழுவதும் குதிரையைச் சுற்றித் திரியவிட்டு, போரில் மன்னர்க்ள அனைவரையும் வென்று திரும்ப அர்ஜுனனைத் தவிர வேறு எவனால் முடியும்?(19) சகரனாலும், பழங்காலத்தின் உயர் ஆன்ம மன்னர்களாலும் இத்தகைய அருஞ்செயல் செய்யப்பட்டதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை.(20) ஓ! குருத்தில் முதன்மையானவனே, நீ அடைந்த இந்தச் சாதனையை எதிர்கால மன்னர்களாலும் ஒருபோதும் அடைய முடியாது" {என்றனர்}.(21)

குடிமக்கள் சொன்ன காதுக்கினிய இத்தகைய சொற்களைக் கேட்டபடியே உயர் ஆன்ம பல்குனன் {அர்ஜுனன்}, வேள்விச்சாலைக்குள் நுழைந்தான்.(22) அப்போது மன்னன் யுதிஷ்டிரனும், அவனுடைய அமைச்சர்கள் அனைவரும், யதுக்களைத் திளைக்கச் செய்பவனான கிருஷ்ணனும், திருதராஷ்டிரனைத் தங்கள் முன்னணியில் கொண்டு, தனஞ்சயனை வரவேற்க வெளியே சென்றனர்.(23) அவன், தன் தந்தையின் (திருதராஷ்டிரனின்) பாதங்களையும், பெரும் ஞானியும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனின் பாதங்களையும் வணங்கி விட்டு, பீமனையும், பிறரையும் வழிபட்டு, கேசவனை {கிருஷ்ணனை} ஆரத் தழுவிக் கொண்டான்.(24)

அவர்கள் அனைவரால் வழிபடப்பட்டு, உரிய சடங்குகளின்படி அவர்களை வழிபட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த வீரன் {அர்ஜுனன்}, உடைந்த கப்பலில் இருந்த மனிதன் அலைகளால் அலைக்களிக்கப்பட்டுக் கரையை அடைந்து ஓய்ந்ததைப் போல அந்த இளவரசர்களின் துணையுடன் ஓய்ந்திருந்தான்.(25) அதே வேளையில் பெரும் ஞானம் கொண்ட பப்ருவாஹனன், தன் அன்னையரின் (சித்ராங்கதை மற்றும் உலூபியின்} துணையுடன் குருவின் தலை நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} வந்தான்.(26) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த இளவரசன், குரு குலத்தின் பெரியோர் அனைவரையும், அங்கே இருந்த பிற மன்னர்களையும் முறையாக வணங்கி அவர்கள் அனைவராலும் பதிலுக்குக் கௌரவிக்கப்பட்டான். அதன் பிறகு அவன், தன் பாட்டியான {பிதாமஹியான} குந்தியின் சிறந்த வசிப்பிடத்திற்குள் நுழைந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(27)


அஸ்வமேதபர்வம் பகுதி – 87ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்