Sunday, January 05, 2020

தேவ அம்சங்கள்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 31

Portions of deities! | Asramavasika-Parva-Section-31 | Mahabharata In Tamil

(புத்ரதர்சன பர்வம் - 3)


பதிவின் சுருக்கம் : போரில் மாண்டவர்களைக் காட்டப் போவதாகச் சொன்ன வியாசர்; ஒவ்வொருவரும் எவரெவருடைய அம்சமென்பதையும் சொன்னது; அனைவரும் கங்கைக் கரைக்குச் சென்றது...


வியாசர், "ஓ! காந்தாரி, நீ அருளப்பட்டிருப்பாயாக, நீ உன் மகன்கள், சகோதரர்கள், நண்பர்கள், உற்றார், உறவினர் மற்றும் உன் தந்தைமார் ஆகியோரை உறக்கத்தில் இருந்து எழுந்த மனிதர்களைப் போல இவ்விரவில் காணப் போகிறாய்.(1) குந்தி கர்ணனைக் காண்பாள், யது குலத்தவள் {சுபத்திரை} தன் மகன் அபிமன்யுவைக் காண்பாள். திரௌபதி தன் ஐந்து மகன்களையும், தன் தந்தைமாரையும், தன் சகோதரர்களையும் காண்பாள். நீ கேட்பதற்கு முன்பே என் மனத்தில் இருந்த எண்ணமிது. ஓ! காந்தாரி, மன்னனாலும், உன்னாலும், குந்தியாலும் தூண்டபட்டபோது நான் இந்த நோக்கத்தை ஊக்குவித்தேன்.(3) அந்த மனிதர்களில் முதன்மையானவர்களுக்காக நீ வருந்தக்கூடாது. க்ஷத்திரிய நடைமுறைகளில் நிறுவப்பட்ட தங்கள் அர்ப்பணிப்பின் விளைவால் அவர்கள் மரணமடைந்தனர்.(4)


ஓ! குற்றமற்றவளே, தேவர்களின் பணியைச் செய்வதைத் தவிர வேறேதும் முடியாது. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே அந்த வீரர்கள் பூமிக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் தேவர்களின் பகுதிகளாவர் {அம்சங்களாவர்}.(5) கந்தர்வர்கள், அப்சரஸ்கள், பிசாசங்கள், குஹ்யர்கள், ராட்சசர்கள், பெரும் புனிதர்கள், (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், தெய்வீக முனிவர்கள்,(6) தேவர்கள், தானவர்கள், களங்கமற்ற குணம் கொண்ட தெய்வீக முனிவர்கள் ஆகியோர் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் மரணமடைந்தனர்[1].(7)

[1] "அதாவது, மனிதர்களாக அவதரித்திருந்த அவர்கள் அனைவரும் ஒருவரோடொருவர் போரிட்டு மரணமடைந்தனர் எனப் பொருள் கொள்ள வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

நுண்ணறிவுமிக்கவனும், திருதராஷ்டிரன் என்ற பெயரைக் கொண்டவனுமான கந்தர்வர்களின் மன்னனே, மனிதர்களின் உலகில் உன் தலைவனான திருதராஷ்டிரனாகப் பிறப்பெடுத்தான் {அவதரித்தான்} எனக் கேள்விப் படுகிறோம்.(8) மங்கா மகிமை கொண்டவனும், அனைவரைக் காட்டிலும் புகழ்மிக்கவனுமான பாண்டு, மருத்துக்களிலிருந்து உதித்தான் என்பதை அறிவாயாக. க்ஷத்ரி {விதுரன்} மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய இருவரும் அறத் தேவனின் {தர்ம தேவனின்} இரு பகுதிகளாவர் {அவதாரங்களாவர்}.(9) துரியோதனனைக் கலியென்றும், சகுனியை துவாபரனென்றும் அறிவாயாக. ஓ! நற்குணங்களைக் கொண்டவளே, துச்சாசனனும், {அவனைச் சார்ந்த} பிறர் அனைவரும் ராட்சசர்கள் என்பதை அறிவாயாக.(10)

பெரும் வலிமைமிக்கவனும், பகைவரைத் தண்டிப்பவனுமான பீமசேனன் மருத்துக்களில் இருந்து வந்தவனாவான். பிருதையின் மகனான இந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} புராதன முனிவனான நரன் என்பதை அறிவாயாக.(11) ரிஷிகேசன் {கிருஷ்ணன்} நாராயணனாவான், இரட்டையர்கள் அஸ்வினிகளாவர். வெப்பங்கொடுப்பவர்களில் முதன்மையான சூரியன், தன்னுடலை இரண்டாக வகுத்து, ஒரு பகுதியைக் கொண்டு உலகங்களுக்கு வெப்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான், மற்றொரு பகுதியைக் கொண்டு (பூமியில்) கர்ணனாக வாழ்ந்தான். அனைவரையும் மகிழ்ச்சியுறச் செய்தவனும், பாண்டவர்களின் உடைமைகளுக்கு வாரிசும், (ஒன்று கூடி போரிட்ட) ஆறு பெரும் தேர்வீரர்களால் கொல்லப்பட்டவனுமான அர்ஜுனன் மகனாக {அபிமன்யுவாக} சோமன் பிறந்தான். அவன் சுபத்திரையிடம் பிறந்தான். யோக பலத்தின் மூலம் அவன் தன்னைத் தானே இரண்டாக வகுத்துக் கொண்டான்.(12-14) வேள்வித் தீயில் இருந்து திரௌபதியுடன் சேர்ந்து உதித்த திருதஷ்டத்யும்னன், நெருப்பு {அக்னி} தேவனின் மங்கப் பகுதியாவான் {அவதாரமாவான்}. சிகண்டி ஒரு ராட்சசனாவான்.(15)

துரோணர் பிருஹஸ்பதியின் பகுதி என்றும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ருத்தரனின் பகுதியாகப் பிறந்தவன் என்றும் அறிவாயாக. கங்கையின் மைந்தனான பீஷ்மர், மனிதனாகப் பிறந்த வசுக்களில் ஒருவராவார்.(16) ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, இவ்வாறே தேவர்கள் மனிதர்களாகப் பிறந்து, தங்கள் பணியை நிறைவற்றிய பின்னர்ச் சொர்க்கத்திற்குத் திரும்பிச் சென்றனர்.(17) மறுமைக்குத் திரும்பிச் சென்ற அவர்கள் அனைவரைக் குறித்தும் உங்கள் இதயங்களில் உள்ள கவலையை நான் இன்று விலக்குவேன்.(18) நீங்கள் அனைவரும் பாகீரதியை {கங்கையை} நோக்கிச் செல்வீராக. அப்போது, போர்க்களத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவரையும் காண்பீர்கள்" என்றார் {வியாசர்}".(19)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அங்கே இருந்தோர் அனைவரும் வியாசரின் சொற்களைக் கேட்டு, சிங்க முழக்கம் செய்து கொண்டே பாகீரதியை நோக்கிச் சென்றனர்.(20) தன் அமைச்சர்களுடன் கூடிய திருதராஷ்டிரனும், பாண்டவர்களும், அங்கே வந்திருந்த முதன்மையான முனிவர்களும் கந்தர்வர்களும், சொல்லப்பட்டது போலவே புறப்பட்டனர்.(21) கங்கைக் கரையை அடைந்த அந்த மனிதக் கடல், தான் விரும்பியவாறு தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டது.(22) பெரும் நுண்ணறிவைக் கொண்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, பாண்டவர்களுடனும், குடும்பத்தின் பெண்கள் மற்றும் முதியவர்களுடனும் ஓர் இனிமையான இடத்தில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.(23) இறந்து போன இளவரசர்களைக் காணப் போகும் இரவின் வருகைக்காக அவர்கள் ஒரு முழு வருடத்தைப் போல அந்த நாளைக் கழித்தனர்.(24) சூரியன் மேற்கின் புனித மலையை அடைந்தபோது, அவர்கள் அனைவரும் அந்தப் புனித ஓடையில் நீராடி தங்கள் மாலை சடங்குகளை முடித்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(25)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 31ல் உள்ள சுலோகங்கள் : 25

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்