Monday, January 06, 2020

ஞானக்கண்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 32

Eye of knowledge! | Asramavasika-Parva-Section-32 | Mahabharata In Tamil

(புத்ரதர்சன பர்வம் - 4)


பதிவின் சுருக்கம் : இரவில் கங்கையில் இறங்கிப் போரில் இறந்தவர்களை அழைத்த வியாசர்; தங்கள் தங்கள் ஆயுதங்கள் மற்றும் ஆபரணங்களுடன் கங்கையில் தோன்றி கரைக்கு வந்த இரு தரப்பினர்; வியாசர் கொடுத்த ஞானக் கண்ணால் அனைவரையும் நேரில் கண்ட திருதராஷ்டிரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இரவு வந்ததும், அவர்கள் அனைவரும் தங்கள் மாலைச் சடங்குகளை முடித்துக் கொண்டு வியாசரை அணுகினர். அற ஆன்மா கொண்டவனும், தூய்மையான உடலுடனும், ஆன்மாவை நோக்கிச் செலுத்தப்படும் மனத்துடனும் கூடியவனுமான திருதராஷ்டிரன், பாண்டவர்களுடனும், தனக்குத் துணையாக இருந்த முனிவர்களுடனும் சேர்ந்து அங்கே அமர்ந்தான்.(2) அரசக் குடும்பத்தின் பெண்மணிகள் காந்தாரியுடன் சேர்ந்து ஒரு தனிப்பட்ட இடத்தில் அமர்ந்தனர். குடிமக்கள் மற்றும் மாகாணவாசிகள் அனைவரும் தங்கள் வயதின்படியாக வரிசையாக அமர்ந்திருந்தனர்.(3)


அப்போது வலிமையும், சக்தியும் கொண்டவனும், பெரும் தவசியுமான வியாசர் பாகீரதியின் புனித நீரில் நீராடி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், பாண்டவர் தரப்பில் போரிட்டவர்களும், கௌரவர் தரப்பில் போரிட்டவர்களுமான இறந்து போன வீரர்கள் அனைவரையும் அழைத்தார்.(4,5) இதன் பேரில், ஓ! ஜனமேஜயா, செவிடாக்கக்கூடியதும், முன்பு குருக்கள் மற்றும் பாண்டவர்களின் படைகளில் கேட்கப்பட்டதற்கு ஒப்பானதுமான ஆரவாரம் நீருக்குள் இருந்து எழுவது கேட்கப்பட்டது.(6)

அப்போது பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையிலான மன்னர்கள், தங்கள் துருப்பினர் அனைவருடன் பாகீரதியின் நீரில் இருந்து ஆயிரக்கணக்கில் எழுந்தனர்.(7) அங்கே விராடனும், துருபதனும் தங்கள் மகன்கள் மற்றும் படைகளுடன் இருந்தனர். திரௌபதியின் மகன்கள், சுபத்திரையின் மகன்கள், ராட்சசன் கடோத்கசன் ஆகியோரும் இருந்தனர்.(8) கர்ணன், துரியோதனன், வலிமைமிக்கத் தேர்வீரனான சகுனி, பெரும் பலம் கொண்டவர்களும், துச்சாசனன் தலைமையிலானவர்களுமான திருதராஷ்டிரனின் வேறு பிள்ளைகளும் அங்கே இருந்தனர்.(9)

ஜராசந்தனின் மகன், பகதத்தன், பெருஞ்சக்தி கொண்ட ஜலசந்தன், பூரிஸ்ரவஸ், சலன், சல்லியன், மற்றும் தம்பியுடன் கூடிய விருஷசேனன் {கர்ணனின் மகன்கள்} ஆகியோரும் அங்கே இருந்தனர்.(10) (துரியோதனன் மகனான) லக்ஷ்மணன், திருஷ்டத்யும்னனின் மகன், சிகண்டியின் பிள்ளைகள் அனைவரும், தம்பியுடன் கூடிய திருஷ்டகேது ஆகியோரும் அங்கே இருந்தனர்.(11) அசலன், விருஷகன், ராட்சசன் அலாயுதன், பாஹ்லீகர், ஸோமதத்தன், மன்னன் சேகிதானன் ஆகியோரும் அங்கே இருந்தனர்.(12)

இவர்களும், எண்ணிக்கையைக் கொண்டு வசதியாகப் பெயர் கூற முடியாத இன்னும் பலரும் அந்தச் சந்தர்ப்பத்தில் தோன்றினர். அவர்கள் அனைவரும் பாகீரதியின் நீரில் இருந்து ஒளியுடல்களுடன் எழுந்தனர்.(13) அந்த மன்னர்கள், போர்க்களத்தில் போரிட்டுக் கொண்டிருந்தபோது உடுத்தியிருந்த உடை, தரித்திருந்த கொடிக்கம்பம் மற்றும் வாகனத்துடன் தோன்றினர்.(14) அவர்கள் அனைவரும் தெய்வீக ஆடை உடுத்தியவர்களாகவும், பிரகாசமான காதுகுண்டலங்களுடன் கூடியவர்களாகவும் இருந்தனர். அவர்கள் பகை, செருக்கு, கோபம் மற்றும் பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுபட்டவர்களாக இருந்தனர்.(15)

அவர்களது செயல்களைச் சொன்னவாறே கந்தர்வர்கள் அவர்களது புகழைப் பாடினர், வந்திகள் அவர்களுக்குப் பணிவிடை செய்தனர். தெய்வீக உடுப்புகளை உடுத்தியவர்களும், தெய்வீக மலர்மாலைகளைச் சூடியவர்களுமான அவர்கள் ஒவ்வொருவரும் அப்சரஸ் கூட்டங்களால் பணிவிடை செய்யப்பட்டனர்.(16) அந்த நேரத்தில், சத்யவதியின் மகனாகிய அந்தப் பெருந்தவசி தன் தவங்களின் பலத்தால், திருதராஷ்டிரனுக்கு தெய்வீகப் பார்வையைக் கொடுத்து அவனை நிறைவடையச் செய்தார்.(17) தெய்வீக அறிவும் பலமும் கொண்டவளும், பெரும் புகழைக் கொண்டவளுமான காந்தாரி, தன் பிள்ளைகள் அனைவருடன், போரில் கொல்லப்பட்ட அனைவரையும் கண்டாள்.(18)

அங்கே கூடியிருந்தோர் அனைவரும், நிலைத்த பார்வையுடனும், இதயம் நிறைந்த ஆச்சரியத்துடனும், தங்களுக்கு மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தியதும், நம்பமுடியாததுமான அந்த ஆச்சரியமான நிகழ்வைக் கண்டனர்.(19) அஃது இன்புற்றிருந்த ஆடவர் மற்றும் பெண்களுக்கான உயர்ந்த விழாவாக {உத்ஸவமாகத்} தெரிந்தது. அந்த அற்புதக் காட்சி, திரையில் வரையப்பட்ட படத்தைப் போலத் தெரிந்தது.(20) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அந்தத் தவசியின் அருளால் பெற்ற தெய்வீகப் பார்வையுடன் கூடிய திருதராஷ்டிரன், அந்த வீரர்கள் அனைவரையும் கண்டு இன்பத்தால் நிறைந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(21)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 32ல் உள்ள சுலோகங்கள் : 21

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்