Tuesday, January 07, 2020

அவப்ருதஸ்நானம்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 35

Final bath in sacrifice! | Asramavasika-Parva-Section-35 | Mahabharata In Tamil

(புத்ரதர்சன பர்வம் - 7)


பதிவின் சுருக்கம் : பரிக்ஷித்தைக் காட்ட வேண்டிய ஜனமேஜயன்; பரிக்ஷித், சமீகர் மற்றும் சிருங்கி ஆகியோரை காட்டிய வியாசர்; வேள்வி முடிவில் நீராடி ஆஸ்தீகரை வணங்கிய ஜனமேஜயன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மன்னன் திருதராஷ்டிரன் ஒருபோதும் தன் மகன்களைக் கண்டதில்லை. ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, அந்த முனிவரின் {வியாசரின்} அருள் மூலம் கண் பார்வையை அடைந்த அவன், தன்னைப் போலவே இருந்த தன் பிள்ளைகளை முதல் முறையாகக் கண்டான்.(1) மனிதர்களில் முதன்மையானவனான அந்தக் குரு ஏகாதிபதி, மன்னர்களின் கடமைகள், வேதங்கள், உபநிஷத்துகள் அனைத்தையும் கற்று, (அவற்றிலிருந்தே) நிச்சய புத்தியையும் அடைந்தான்.(2) பெரும் ஞானம் கொண்ட விதுரன், தன் தவச் சக்தியின் மூலம் உயர்ந்த வெற்றியை அடைந்தான். திருதராஷ்டிரனும், தவசியான வியாசரைச் சந்தித்தன் விளைவால் பெரும் வெற்றியை அடைந்தான்".(3)


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "வியாசர் எனக்கொரு வரம் தர மனம் கொண்டு, என் தந்தை {பரீக்ஷித்} இவ்வுலகில் இருந்து செல்லும்போது எவ்வளவு வயதுடன் இருந்தாரோ, அவர் என்ன உடையை உடுத்துவது வழக்கமோ அதே வடிவத்தில், அதே உடையுடன் அன்பு கூர்ந்து அவரை {பரீக்ஷித்தை} எனக்குக் காட்டினால், நீர் சொன்ன அனைத்தையும் நான் நம்புவேன்.(4) அத்தகைய காட்சி எனக்கு மிக ஏற்புடையதே. உண்மையில், நான் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவனாக என்னைக் கருதிக் கொள்வேன். நான் ஒரு குறிபிட்ட தீர்மானத்தை அடைந்திருக்கிறேன். ஓ!, இந்த முதன்மையான முனிவரின் {வியாசரின்} அருளின் மூலம் என் விருப்பம் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்படட்டும்" என்று கேட்டான்".(5)

சௌதி {லோமஹர்சனரின் முனிக்கூட்டத்திடம்} சொன்னார், "மன்னன் ஜனமேஜயன் இந்தச் சொற்களைச் சொன்ன பிறகு, பெரும் சக்தியும், நுண்ணறிவும் கொண்ட வியாசர், தன் அருளைக் காட்டும் வகையில், (வேறு உலகில் {மறுமையில்} இருந்து) பரிக்ஷித்தைக் கொண்டு வந்தார்.(6) மன்னன் ஜனமேஜயன், பேரழகுடன் கூடியவனும், சொர்க்கத்தில் இருந்து வந்தவனுமான தன் அரசத் தந்தை (இவ்வுலகில் இருந்து செல்லும் காலத்தில்) இருந்த அதே வயது மற்றும் அதே வடிவத்துடன் அவனைக் கண்டான்.(7) உயர் ஆன்ம சமீகர், அவரது மகனான சிருங்கின் ஆகியோரும் அதே போல அங்குக் கொண்டு வரப்பட்டனர். மன்னனின் ஆலோசகர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் அவர்களைக் கண்டனர்.(8) மன்னன் ஜனமேஜயன், தன் வேள்வியில் இறுதி நீராடலைச் செய்து பெரிதும் மகிழ்ந்தான். அவன் புனித நீரைத் தன் மீது ஊற்றிக் கொண்டதைப் போலவே தன் தந்தையின் மீதும் ஊற்றினான்.(9)

இறுதி நீராடலைச் செய்த மன்னன், யாயாவரர்களின் குலத்தில் பிறந்தவரும், ஜரத்காருவின் மகனுமான மறுபிறப்பாளர் ஆஸ்தீகரிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(10) "ஓ! ஆஸ்தீகரே, என் கவலைகள் அனைத்தையும் அகற்றியவரும், என்னுடைய தந்தையுமான இவர் {பரிக்ஷித்}, என்னால் காணப்பட்டதால், என்னுடைய இந்த வேள்வி பல அற்புதம் நிறைந்த நிகழ்வுகள் நிறைந்ததாயிற்று" என்றான்.(11)

ஆஸ்தீகர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, தவங்களின் பெரிய கொள்ளிடமும், புராதன முனிவரும், தீவில் பிறந்தவருமான வியாசர் எந்த வேள்வியில் இருக்கிறாரோ, அந்த வேள்வியைச் செய்தவன் நிச்சயம் ஈருலகங்களையும் {இம்மையையும், மறுமையையும்} வெல்வான்.(12) ஓ! பாண்டவர்களின் மகனே, நீ அற்புதம் நிறைந்த ஒரு வரலாற்றைக் கேட்டிருக்கிறாய். பாம்புகள் எரிக்கப்பட்டுச் சாம்பலாகி, உன் தந்தையின் பாதச்சுவடுகளைப் பின்பற்றிச் சென்றன.(13) ஓ! ஏகாதிபதி, தக்ஷகன், உன்னுடைய நேர்மையின் காரணமாகத் துன்பம் நிறைந்த விதியில் இருந்து பெருஞ்சிரமத்துடன் தப்பித்துவிட்டான். முனிவர்கள் அனைவரும் வழிபடப்பட்டனர். உன்னுடைய உயர் ஆன்ம தந்தையால் அடையப்பட்ட கதியையும் நீ கண்டாய்.(14) பாவத்தைத் தூய்மையாக்கும் இந்த வரலாற்றைக் கேட்டதன் மூலம் நீ அபரிமிதமான தகுதியை {புண்ணியத்தை} ஈட்டியிருக்கிறாய். இந்த மனிதர்களில் முதன்மையானவனைக் கண்டதன் மூலம் உன் இதயத்தில் உள்ள முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டன.(15) அறச் சிறகுகளை ஆதரிப்பவர்கள் எவரோ, நல்லொழுக்கமும், சிறந்த மனநிலையும் கொண்டவர்கள் எவரோ, எவரைக் கண்டால் பாவங்கள் பொடிபடுமோ அவர்களை நாம் அனைவரும் வணங்க வேண்டும்" என்றார் {ஆஸ்தீகர்}".(16)

சௌதி தொடர்ந்தார், "மறுபிறப்பாளர்களில் முதன்மையான அவரிடம் {ஆஸ்தீகரிடம்} இருந்து இதைக் கேட்ட மன்னன் ஜனமேஜயன், அனைத்து வழியிலும் அந்த முனிவரை மீண்டும் மீண்டும் கௌரவித்து வழிபட்டான்.(17) கடமைகள் அனைத்தையும் அறிந்த அவன், அதன் பிறகு, மங்கா மகிமை கொண்ட முனிவர் வைசம்பாயனரிடம், மன்னன் திருதராஷ்டிரனனுடைய காட்டு வாசத்தின் தொடர்ச்சியைக் கேட்டான்" {என்றார் சௌதி}.(18)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 35ல் உள்ள சுலோகங்கள் : 18

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்