Tuesday, January 07, 2020

மாண்டோர் மீள்வரோ! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 34

Reappearance of the dead! | Asramavasika-Parva-Section-34 | Mahabharata In Tamil

(புத்ரதர்சன பர்வம் - 6)


பதிவின் சுருக்கம் : மாண்டோர் மீள்வதெப்படி என்று கேட்ட ஜனமேஜயன்; காரணத்துடன் விடையளித்த வைசம்பாயனர்...


சௌதி சொன்னார், "பெரும் நுண்ணறிவுமிக்க மன்னன் ஜனமேஜயன், தன் மூதாதையர்கள் மீண்டும் தோன்றி மறைந்த கதையைக் கேட்டு உயர்வான நிறைவையடைந்தான்.(1) இன்பத்தால் நிறைந்த அவன், மீண்டும் வைசம்பாயனரிடம், இறந்தோர் மீண்டும் தோன்றும் காரியத்தைக் குறித்துக் கேட்கும் வகையில், "உடல் அழிந்தவர்கள் அதே வடிவில் மீண்டும் தோன்றுவது எவ்வாறு சாத்தியம்?" என்று கேட்டான்.(2) இவ்வாறு கேட்கப்பட்டவரும், பேசுபவர்களில் முதன்மையானவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான அந்த வியாசரின் சீடர் {வைசம்பாயனர்}, ஜனமேஜயனிடம் இவ்வாறு பதிலளித்தார்.(3)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "செயல்கள் (அதன் விளைவுகளை அனுபவிக்காமல், அல்லது தாங்கிக் கொள்ளாமல்) ஒருபோதும் அழிவடைவதில்லை என்பது நிச்சயமானது. ஓ! மன்னா, செயல்களின் மூலமே உடல்கள் பிறக்கின்றன; குணங்களும் பிறக்கின்றன.(4) அடிப்படையான பெரும்பூதங்களுக்கும், அனைத்தின் தலைவனுக்கு உள்ள உறவின் விளைவால் அவை நித்தியமானவையாக இருக்கின்றன. அவை நித்தியமானவற்றுடனே இருக்கின்றன. அதே போலவே, நித்தியமற்றவை அழியும்போது அவை அழிவடைவதில்லை.(5) முயற்சியின்றிச் செய்யப்படும் செயல்கள் உண்மையானவையும், முதன்மையானவையும், உண்மை பயனைக் கொடுப்பவையுமாகும். எனினும், சாதிப்பதற்கு முயற்சி தேவைப்படும் செயல்களுடன் தொடர்புடைய ஆன்மா இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது.(6)

அவ்வாறு (இன்ப துன்பத்துடன்) இணைந்திருந்தாலும், ஒரு கண்ணாடியில் உயிரினங்கள் பிரதிபலிக்கப்படுவதைப் போலவே அவற்றால் அஃது ஒருபோதும் மாற்றமடைவதில்லை என்பது ஒரு குறிப்பிட்ட உள்ளுணர்வாகும். அஃது ஒருபோதும் அழிவடைவதில்லை[1].(7) (நல்ல அல்லது தீய கனிகளை {பலன்களைத்} தாங்கிக் கொள்வதன் மூலமோ, அனுபவிப்பதன் மூலமோ) ஒருவனுடைய செயல்கள் தீராதவரை, அவன் உடலையே சுயமென {ஆத்மாவெனக்} கருதுகிறான். எனினும், செயல்கள் தீர்ந்த மனிதன், உடலை சுயமெனக் கருதமால் சுயத்தை வேறொன்றாக ஏற்றுக் கொள்கிறான்.(8) (அடிப்படை பூதங்கள், புலன்கள் முதலியன உள்ளிட்ட) இருப்பிலுள்ள பல்வேறு பொருட்கள் ஓர் உடலை அடைந்து ஒன்று கலக்கின்றன. (உடலுக்கும், சுயத்திற்கும் இடையில் உள்ள) வேறுபாட்டைப் புரிந்த ஞானம் கொண்ட மனிதர்களுக்கு அந்தப் பொருட்களே நித்தியமானவையாகின்றன[2].(9)

[1] கும்பகோணம் பதிப்பில், "கருதாமல் செய்த கர்மத்திற்கும் பயன் கிடைக்குமென்பது (பெரியோரின்) கருத்து. ஜீவன் இந்தக் கர்மங்களோடு கூடினவனாகி ஸுகதுக்கங்களை அனுபவிக்கிறான். ஆத்மாவானவன் எக்காலத்திலும் அழியும்படி செய்யப்பட முடியாதவனென்பது நிச்சயம்" என்றிருக்கிறது.

[2] கும்பகோணம் பதிப்பில், "எதுவரையில் கர்மாவானது அழியவில்லையோ, அதுவரையில் அந்தச் சரீரமானது ஸ்வரூபத்துடன் கூடினதாக இருக்கும். கர்மமானது அழிந்தவுடன் உலகத்தில் மனிதன் வேறு சரீரத்தை அடைகிறான். வெவ்வேறாயிருக்கும் இந்திரியம் முதலானவைகள் சரீரத்தை அடைந்து ஒன்றாயிருக்கும் தன்மையை அடைகின்றன. சரீரத்தைக் காட்டிலும் ஜீவன் வேறு என்று அறிபவர்களுக்கு அவைகள் நித்யமானவைகளாகின்றன" என்றிருக்கிறது.

குதிரை வேள்வியில், குதிரையைக் கொல்லும் காரியத்தில் இந்த ஸ்ருதி கேட்கப்படுகிறது. உடல்படைத்த உயிரினங்களின் நிச்சய உடைமைகளான உயிர்மூச்சுகள் (மற்றும் புலன்கள் முதலியவை), அவை மறுமைக்குச் செல்லும்போதும் நித்தியமாக நீடித்திருக்கின்றன.(10) ஓ! மன்னா {ஜனமேஜயா}, உனக்கு ஏற்புடையதாக இருந்தால், நான் உனக்கான நன்மையைச் சொல்வேன். நீ வேள்வி செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, தேவ பாதைகள் குறித்துக் கேள்விப்பட்டிருப்பாய்.(11) உன்னுடைய எந்த வேள்விக்குமான ஆயத்தங்கள் செய்யப்பட்ட போது, தேவர்கள் உனக்கு நன்மை செய்ய விரும்பினர். உண்மையில், தேவர்கள் இவ்வாறான மனோநிலையை அடைந்து உன் வேள்விக்கு வந்த போது, கொல்லபட்ட விலங்குகளை (இம்மையில் இருந்து மறுமைக்கு இட்டுச் செல்லும்) பாதையின் தலைவர்களாக அவர்களே இருந்தனர்[3].(12)

[3] கும்பகோணம் பதிப்பில், "யாகத்தைச் செய்தால் தேவையான மார்க்கங்கள் உண்டென்று நீர் கேட்டிருக்கிறீரன்றோ? நீர் எப்பொழுது யாகத்தை நன்றாகச் செய்கிறீரோ அப்பொழுதே தேவர்கள் உமக்கு ஹிதர்களாகிறார்கள். பிராணிகளை அந்த அந்த உலகங்களை அடையும்படி செய்வதில் ஈஸ்வரர்களான தேவர்கள் அப்பொழுதே ஒன்று சேர்ந்தவர்களாகின்றனர்.

இந்தக் காரணத்தினாலேயே, நித்தியமானவர்கள் (ஜீவர்கள்), வேள்விகளில் தேவர்களைத் துதிப்பதன் மூலம் சிறந்த கதிகளை அடைவதில் வெல்கிறார்கள். அடிப்படையான ஐந்து பூதங்கள் நித்தியமானவையெனும்போது, ஆன்மாவும் நித்தியமெனும்போது, (உறையில் பொதிந்த ஆன்மாவான) புருஷன் என்றழைக்கப்படுபவனும் அவ்வாறே ஆகிறான்.(13) இஃது இவ்வாறிருக்கும்போது, ஓர் உயிரினம் பல்வேறு வடிவங்களை ஏற்கும் எனக் காண்பவன், பிழையான புரிதலைக் கொண்டவன் என்று கருதப்படுகிறான். பிரிவில் அதீத துயரில் ஈடுபடுபவன் முட்டாளென நான் நினைக்கிறேன்.(14) பிரிவில் தீமையைக் காணும் ஒருவன், சேர்க்கையைக் கைவிட வேண்டும். தனியாக நிற்பதன் மூலம் சேர்க்கைகள் அமையாமல், பிரிவிலேயே உலகத் துன்பங்கள் பிறக்கின்றன என்பதால் கவலைகள் கைவிடப்படுகின்றன[4].(15)

[4] கும்பகோணம் பதிப்பில், "ஐந்து பூதங்களின் சேர்க்கையாலாகிய இச்சரீரமும் ஆத்மாவும் நித்யமானவைகளாகையால், எந்தப் புருஷன் இந்தச் சரீரத்திற்கு நாசத்தையும் சேர்க்கையையும் பார்க்கிறானோ அவன் வீணான புத்தியுள்ளவன். பிரிவில் தோஷத்தைப் பார்ப்பவன் சேர்க்கையை விலக்க வேண்டும். பற்றுதலற்ற ஆத்மாவுக்குச் சேர்க்கையும், பிரிவாலுண்டாகும் துக்கமும் உண்டாக மாட்டா" என்றிருக்கிறது.

உடலுக்கும், சுயத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்பவன் மட்டுமே, பிழையான தீர்மானத்தில் {தவறான நம்பிக்கையில்} இருந்து விடுபடுகிறான், வேறு எவரும் விடுபடுவதில்லை. மற்றொன்றை (சுயத்தை) அறிந்தவன் உயர்ந்த புத்தியை அடைந்து, பிழையில் இருந்து விடுபடுகிறான்[5].(16) உயிரினங்களைப் பொறுத்தவரையில், அவை புலப்படாத நிலையில் இருந்து தோன்றி, மீண்டும் புலப்படாத நிலைக்குள்ளேயே மறைந்து போகின்றன. நான் அவனை அறிவதில்லை. அவனும் என்னை அறிவதில்லை. என்னைப் பொறுத்தவரையில், துறவு இன்னும் எனதாகவில்லை[6].(17) பலமற்றவன் எந்த உடலில் இருந்து தன் செயல்கள் அனைத்தையும் செய்கிறானோ அவன் தன் செயல்களுக்கான கனிகளை இன்புறவோ, பொறுத்துக் கொள்ளவோ செய்கிறான்.(18) அந்தச் செயல் மனச்செயலாக இருந்தால் அதன் விளைவுகளும் மனத்தால் தாங்கவோ, இன்புறவோ கூடியதாக இருக்கும், அஃது உடலைக் கொண்டு செய்யப்படுவதாக இருந்தால், அதன் விளைவுகளும் உடலால் தாங்கவோ, இன்புறவோ கூடியதாக இருக்கும்" {என்றார் வைசம்பாயனர்}.(19)

[5] கும்பகோணம் பதிப்பில், "தத்வஞானமில்லாதவனோ பராபரங்களை அறிந்தவனும், அபிமானமற்றவனும், ஸகுணப் பிரம்மத்தை அறிந்தவனுமாகிப் (பிறகு) மேலான பிரம்மஞானத்தை அடைந்து அஜ்ஞானத்திலிருந்து விடப்படுகிறான்" என்றிருக்கிறது.

[6] கும்பகோணம் பதிப்பில், "(முக்தனானவன்) அறியமுடியாத வஸ்துவினிடமிருந்து வந்தவன், மறுபடியும் அறியமுடியாத வஸ்துவை அடைந்தான். நானும் அவனை அறிகிறேனில்லை. அவனும் என்னை அறிகிறானில்லை; எனக்கோ வைராக்யமுண்டாகவில்லை" என்றிருக்கிறது.

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 34ல் உள்ள சுலோகங்கள் : 19

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்