The gift of earth! | Anusasana-Parva-Section-62 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 62)
பதிவின் சுருக்கம் : நிலக்கொடை குறித்தும், வேறு கொடைகளைக் குறித்தும் பிருஹஸ்பதி இந்திரனுக்குச் சொன்ன விபரங்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "’இதைக் கொடுக்க வேண்டும், இதையும் கொடுக்க வேண்டும்’ என்று சொல்லும் ஸ்ருதிகளின் அறிவிப்புகளை மக்கள் அன்புடன் ஏற்கிறார்கள். மேலும், மன்னர்களைப் பொறுத்தவரையில், பல்வேறு மனிதர்களுக்குப் பல்வேறு பருட்களைக் கொடையளிக்கிறார்கள். எனினும், ஓ! பாட்டா, கொடைகள் அனைத்திலும் சிறந்தது, அல்லது முதன்மையானது எது?" என்று கேட்டான்.(1)
