Gods in mountain Meru! | Adi Parva - Section 17 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 5)
பதிவின் சுருக்கம் : உச்சைஸ்வரவம் குறித்து விளக்கிய சௌதி; கடல் கடைந்த காரணத்தைக் கேட்ட சௌனகர்; அமுதத்திற்காக மேரு மலையில் தவமிருந்த தேவர்கள்; கடலைக் கடையச் சொன்ன நாராயணன்...
![]() |
| குதிரைகளின் அரசன் உச்சைஸ்ரவம் |
சௌதி சொன்னார், "ஓ துறவியே, அந்தச் சமயத்தில் அந்த இரு சகோதரிகளும் {கத்ருவும், வினதையும்} கடலைக் {பாற்கடலைக்} கடையும் போது எழுந்ததும், தேவர்களால் வழிபடப்படுவதும், குதிரைகளின் ரத்தினமுமான {குதிரைகளின் அரசனான} தெய்வீகக் குதிரை உச்சைஸ்ரவஸ் அருகில் அணுகுவதைக் கண்டனர். தெய்வீகமானதும், அருள்நிறைந்ததும், அழியா இளமை கொண்டதும், படைப்புகளில் தலையாயப் படைப்பானதும், அடக்க முடியாத வீரியம் கொண்டதும், அனைத்து நற்குறிகளும் கொண்டதுமாக அந்தக் குதிரை {உச்சைஸ்ரவம்} அருளப்பட்டு இருந்தது"(1-3)
