The ordinances in scriptures! | Anusasana-Parva-Section-125 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 125)
பதிவின் சுருக்கம் : உயர்ந்த கதியை அடைவதற்குப் பின்பற்ற வேண்டிய ஒழுக்கம்; சிராத்தங்கள்; உயிர்க்கொலையில் உள்ள பாவம் ஆகியவற்றைக் குறித்து தேவதேதூதன், இந்திரன், முனிவர்கள், பித்ருக்கள் மற்றும் பிருஹஸ்பதி ஆகியோருக்கிடையில் நடைபெற்ற உரையாடல்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, தனக்கான நன்மையை அடைய விரும்பும் ஒரு வறிய மனிதன், அடைதற்கரிதான செயல்களின் உலகத்திற்குள் மனித நிலையை அடைந்து {கர்மங்கள் பலிக்கும் பூமியில், கிடைத்தற்கரிதான மானிட ஜன்மத்தை அடைந்து} எவ்வாறு தன்னைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக.(1) கொடைகள் அனைத்திலும் சிறந்தது எது? எந்தெந்தச் சூழ்நிலைகளில் எவையெவை கொடுக்கப்பட வேண்டும் என்பன குறித்தும் எனக்குச் சொல்வீராக. ஓ! கங்கையின் மகனே, கௌரவிப்பதற்கும், வழிபாட்டுக்கும் தகுந்தவர்கள் யார் என்பதை எனக்குச் சொல்வீராக. இந்தப் புதிர்கள் அனைத்தையும் எங்களுக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டான்".(2)
