Wednesday, February 06, 2013

அன்னையைச் சபித்த அருணன்! | ஆதிபர்வம் - பகுதி 16

Aruna cursed his mother! | Adi Parva - Section 16 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 4)

பதிவின் சுருக்கம் : ஆஸ்தீகரின் வரலாற்றைச் சௌதியிடம் கேட்ட சௌனகர்; அதற்கு முன்னோட்டமாகக் கசியபரின் மனைவிகளான கத்ரு மற்றும் வினதையின் கதையைச் சொல்ல ஆரம்பித்த சௌதி; பாம்புகளைப் பெற்ற கத்ரு; தன் இரு முட்டைகளில் ஒன்றை உடைத்த வினதை; ஊனத்துடன் பிறந்த அருணன்; தாயைச் சபித்த அருணன்; கருடன் பிறப்பு ...

சௌனகர், "ஓ சௌதி, கற்றவரும், அறம்சார்ந்தவருமான ஆஸ்தீகரின் வரலாற்றை விரிவாக மேலும் விளக்குவாயாக. அதை அறியும் ஆவல் எங்களுக்கு அதிகமாக உள்ளது.(1) ஓ தகுதியானவனே {மலர்ந்த முகத்தை உடையவனே}, இனிமையாகவும், சரியான உச்சரிப்புடனும் நீ பேசுகிறாய்; நாங்கள் உனது பேச்சால் பெரும் மனநிறைவை அடைந்துள்ளோம். நீயும் உனது தந்தை {ரோமஹர்ஷணர்} போலவே பேசுகிறாய்.(2) உன் தந்தை {ரோமஹர்ஷணர்}, எங்களை மனநிறைவு கொள்ளச் செய்ய எப்போதும் சித்தமாகவே இருப்பார். உனது தந்தை {ரோமஹர்ஷணர்} உன்னிடம் சொன்னவாறே அந்தக் கதையை விவரிப்பாயாக" என்று கேட்டார் {சௌனகர்}.(3)



சௌதி சொன்னார், "ஓ வெகுகாலம் வாழும் ஆசி கொண்டவர்களே, எனது தந்தையிடம் {ரோமஹர்ஷணரிடம்} கேட்டவாறே ஆஸ்தீகரின் வரலாற்றை விவரிக்கிறேன்.(4) ஓ பிராமணரே {சௌனகரே}, பொற்காலத்தில், பிரஜாபதிக்கு {தஷனுக்கு} இரு பெண் மக்கள் இருந்தனர். ஓ பாவமற்றவரே {சௌனகரே}, அந்தப் பெண்மக்கள் இருவரும் மிகுந்த அழகுடன் இருந்தனர்.(5) கத்ரு என்றும், வினதை என்றும் பெயர் கொண்ட அந்த இருவரும் கசியபருக்கு மனைவிகளாகினர்.(6) தமது இரு மனைவியரால் {கத்ரு, வினதையால்} கசியபர் பெரும் இன்பத்தை அடைந்தார். நிறைவடைந்த {திருப்தியடைந்த} அவர், பிரஜாபதியைப் {பிரம்மாவைப்} போல அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வரம் தருவதாகச் சொன்னார். தங்கள் தலைவன் தாங்கள் விரும்பிய வரத்தைத் தருவதாகச் சொன்னது கேட்டு அந்த இருமனைவியரும் {கத்ரு, வினதை} மிகவும் அகமகிந்தனர். கத்ரு, சம ஆற்றல் கொண்ட ஆயிரம் பாம்புகள் தனக்கு மகன்களாக வேண்டும் என்று விரும்பினாள்.(7,8) வினதையோ, கத்ருவின் அந்த ஆயிரம் பிள்ளைகளின் வல்லமையை (பலம், ஆற்றல், உருவம், வீரம் ஆகியவற்றில்) விஞ்சும் இரு மகன்கள் வேண்டும் என்று விரும்பினாள்.(9)

கத்ருவிற்கு அவளது தலைவன் பல குழந்தைகள் பெறும் வரத்தைக் கொடுத்தார். வினதையிடமும் கசியபர், "அப்படியே ஆகட்டும்" என்றார்.(10) வினதை தனது வேண்டுதல் நிறைவேறியதில் பெருமகிழ்ச்சி அடைந்தாள். ஆற்றலில் முதன்மையான இரு புதல்வர்களைப் பெற்று தனது வரம் நிறைவடைந்தது என்று மனநிறைவு கொண்டாள்.(11) கத்ருவும் தனது வேண்டுதலான ஆயிரம் மகன்களை அடைந்தாள். "உங்கள் கருக்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு, வரத்தால் மகிழ்ந்த தனது மனைவியர் இருவரிடமும் கூறிவிட்டுக் கானகத்திற்குச் சென்றார். {கசியபர்}."(12)

சௌதி தொடர்ந்தார், "இருபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே {சௌனகரே}, வெகு காலத்திற்குப் பிறகு, கத்ரு ஆயிரம் முட்டைகளையும், வினதை இருமுட்டைகளையும் இட்டனர்.(13) அவர்களது பெண் பணியாட்கள், அந்த முட்டைகளைத் தனியாக வெதுவெதுப்பான பாத்திரங்களில் வைத்தனர். ஐநூறு {500} வருடங்கள் இப்படியே சென்றன.(14) கத்ருவால் இடப்பட்ட ஆயிரம் முட்டைகளும் வெடித்து, குஞ்சுகள் வெளியே வந்தன. ஆனால் வினதையின் இரட்டையர்கள் வெளிப்படவில்லை.(15)

பொறாமையால் உந்தப்பட்ட வினதை, தனது முட்டையில் ஒன்றை உடைத்தாள். மேலே வளர்ச்சியடைந்து, கீழே வளர்ச்சியடையாமல் {கால்கள் இல்லாமல்} இருந்த தன் கருவைக் கண்டாள். இதனால் அந்த முட்டையிலிருந்த குழந்தை {அருணன்} கோபம் கொண்டு,(16,17) "காலங்கனியும் முன்பே முட்டையை உடைத்ததால், நீ அடிமையாகச் சேவகம் செய்வாய். ஐநூறு வருடங்கள் பொறுத்திருப்பாயாக. உனது பொறுமையின்மையால் இன்னொரு முட்டையை உடைத்து அதை அழிக்காமலோ அல்லது பாதி வளர்ந்ததாய் ஆக்காமலோ இருந்தாயானால், அதிலிருந்து வரும் புகழ்பெற்ற குழந்தை உன்னை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பான். அந்தக் குழந்தை பலம்பெற முட்டையை அந்தக் காலம் வரை பத்திரமாகப் பாதுகாத்திருப்பாயாக"(18-21) என்று தனது தாய்க்கு {வினதைக்கு} சாபமிட்ட அந்தக்குழந்தை {அருணன்} வானத்துக்குப் பறந்தான்.

ஓ பிராமணரே, அவனே {அருணனே} காலையில் முதல் மணி நேரத்தில் தெரியும் சூரியனின் சாரதியாவான்! அதன்பிறகு ஐநூறு ஆண்டுகள் கடந்ததும், மீதமிருந்த மற்றொரு முட்டையை உடைத்துக் கொண்டு, பாம்புகளை உண்பவனான கருடன் வெளிப்பட்டான்.(22,23) ஓ பிருகு குலத்தின் புலியே {சௌனகரே}, ஒளியைக் கண்டதுமே, வினதையின் மகன் {கருடன்} தனது தாயை விட்டுப் பிரிந்தான். அந்தப் பறவைகளின் தலைவன் {கருடன்}, பசியை உணர்ந்து கட்டளையிடுபவர்களில் சிறந்தவரால் {பிரம்மனால்} தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் உணவைத் தேடி பறந்தான்”. {என்றார் சௌதி}.(24)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்