Sunday, February 24, 2013

அமுதத்தைக் கவர்ந்த கருடனின் மகிமை! | ஆதிபர்வம் - பகுதி 33

Garuda's glory, who took away Amrita! | Adi Parva - Section 33 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 21)

பதிவின் சுருக்கம் : தடைகளை மீறி அமுதத்தைக் கவர்ந்த கருடன்; கருடனைத் தன் வாகனமாக்கிக் கொண்ட விஷ்ணு; தன் தேரின் கொடிமரத்தில் அவனுக்கு இடமளித்தது; வஜ்ராயுதத்திற்கு ஓர் இறகை அளித்த கருடன்; கருடனின் பலத்தை அறிய விரும்பிய இந்திரன்...

சௌதி சொன்னார், "அந்தப் பறவையானாவன் {கருடன்}, கதிரவனின் கதிர்களைப் போலப் பொன்னொளி கொண்ட உருவம் தரித்துக் கடலில் வேகமாகச் செல்லும் நீரோட்டம் போலப் பெரும் சக்தியுடன், (அமுதுள்ள இடத்திற்குள்) நுழைந்தான்.(1) கத்தியைப் போன்ற கூர்மையான முனைகள் கொண்டு இடைவிடாமல் சுழலும் எஃகுச் சக்கரம் ஒன்று அமுதத்தின் அருகே நிறுவப்பட்டிருந்ததைக் கண்டான்.(2)



அமுதத்தைத் திருட வருபவர்களைக் கண்டந்துண்டமாக வெட்டத் தேவர்களால் அமைக்கப்பட்டிருந்த அந்தப் பொறியானது, சூரியனைப் போன்ற பளபளப்புடனும், பயங்கரமான வடிவத்துடனும் இருந்தது.(3) கருடன் அதனுள்ளே {நுழைவதற்கு} ஒரு வழியைக் கண்டு ஒரு கணநேரம் நின்றான். உடனே, தனது உருவத்தை இன்னும் குறுக்கிக் கொண்டு அந்த சக்கரத்தின் {வாள் போன்ற} ஆரங்களுக்கிடையே விரைவாக நுழைந்து சென்றான் கருடன்.(4)

அமுதத்தைக் காப்பதற்காக, நெருப்பைப் போன்ற ஒளி கொண்டவையும், மின்னலின் வீச்சு போன்ற பிரகாசமான நாக்குகளைக் கொண்டவையும், பெரும் ஆற்றல் கொண்டவையும், வாயிலிருந்து நெருப்பைக் கக்குபவையும், ஒளிரும் கண்களைக் கொண்டவையும், விஷத்தையுடையவையும், மிகப் பயங்கரமானவையும், எப்போதும் கோபங்கொண்டே திரிபவையுமான இரண்டு பெரும் பாம்புகள், அந்தச் சக்கரத்திற்குக் கீழே இருப்பதை அவன் {கருடன்} கண்டான்.(5,6) அவற்றின் கண்கள் இமைக்காமலும், எப்போதும் கோபத்தால் பெரிதாகவும் இருந்தன. எவனொருவன் அந்தம் பாம்புகளில் இரண்டில் ஒன்றாலேனும் பார்க்கப்படுகிறானோ அவன் உடனடியாகச் சாம்பலாகிவிடுவான்.(7)

அழகான சிறகுகளையுடைய அந்தப் பறவையானவன் {கருடன்}, திடீரெனப் பாம்புகளின் கண்களில் புழுதியை இறைத்து, அவற்றால் பார்க்க முடியாதபடி செய்து, அனைத்துப்புறங்களிலிருந்தும் அவற்றைத் தாக்கினான்.(8) வினதையின் மைந்தனான அந்த விண்ணோடி {கருடன்}, அவற்றின் உடல்களைத் தாக்கி, அவற்றைத் துண்டுதுண்டாகச் சிதைத்தான். அதன்பிறகு காலந்தாழ்த்தாமல் அமுதம் இருந்த இடத்திற்குச் சென்றான்.(9) அங்கு இருந்த அமுதத்தை எடுத்துக் கொண்டு, தனது சிறகுகளை அடித்து வேகமாகப் பறந்து, அதை {அமுதத்தை} சூழ்ந்திருந்த பொறியை அடித்துத் தூள்தூளாக்கினான்.(10) அவன் {கருடன்}, அந்த அமுதத்தைக் குடிக்காமலேயே, வெளியே எடுத்து வந்தான். சிறிதும் சோர்வோ தளர்ச்சியோ கொள்ளாமல், கதிரவனின் ஒளியை மங்கச் செய்து வந்த வழியே அவன் திரும்பினான்.(11)

வினதையின் மைந்தன் {கருடன்}, வான்வழியே வரும்போது, விஷ்ணுவைக் கண்டான். கருடனின் தன்னலமற்ற செயலால் நாராயணன் பெரிதும் மகிழ்ந்தான்.(12) அழிவற்ற அந்தத் தெய்வம் {மகாவிஷ்ணு}, அந்த விண்ணோடியிடம் {கருடனிடம்}, "ஓ, நான் உனக்கு வரம் தர விரும்புகிறேன்" என்றான். அதற்கு அந்த விண்ணோடி {கருடன்}, "நான் உமக்கு மேலே இருக்க வேண்டும்" என்று கூறி,(13) மேலும், "நான் அமுதத்தைக் குடிக்காமலேயே நோயற்றவனாக, மரணமற்றவனாக இருக்க வேண்டும்" என்று கேட்டான்.(14)

விஷ்ணு வினதையின் மகனிடம் {கருடனிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்றான். கருடன் அந்த இரு வரங்களையும் பெற்றுக்கொண்டு விஷ்ணுவிடம்,(15) "நானும் உமக்கு வரம் தருகிறேன். அதனால் அறுகுணம் கொண்ட நீர் என்னிடம் கேட்கலாம்" என்றான். விஷ்ணு, பெரும் வல்லமை படைத்த கருடனைத் தன்னைச் சுமப்பவனாக {தனது வாகனமாகக்} கேட்டான்.(16) தனது தேரின் கொடிமரத்தில் அந்தப் பறவைக்கு இடம் கொடுத்து, "இப்படியும், நீ எனக்கு மேலிருக்கலாம்" என்றான்.[1] பெரும் வேகம் கொண்ட அந்த விண்ணோடி நாராயணனிடம், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி,(17) காற்றைக் கேலி செய்யும் வகையில் வேகமாகச் சென்றான். அப்படி அந்த விண்ணோடிகளில் முதன்மையான, சிறகுள்ள உயிரினங்களில் முதன்மையான அவன் {கருடன்} அமுதத்தை அபகரித்துக் கொண்டு காற்றில் பறந்து செல்லும்போது, இந்திரன் அவன் மீது வஜ்ராயுதத்தை {இடியை} ஏவினான்.(18)

[1] கருடன் விஷ்ணுவுக்கு மேலிருக்க வரம் கேட்டான், அது தரப்பட்டதும், அவன் விஷ்ணுவுக்கும் மேலானவன் என்பதால் விஷ்ணுவுக்கு வரம் தர விழைகிறான். விஷ்ணு சமயோசிதமாக கருடன் தன் வாகனமாக வேண்டும் எனக் கேட்கிறான். ஆக புத்திசாலித்தனத்தினால் விஷ்ணு கருடனை வென்று விடுகிறான். தன் வரம் பொய்க்காமல் இருக்க கருடனைத் தன் கொடியிலும் ஏற்றுக் கொண்டு தனக்கு மேலே கருடனை வைக்கிறான். இதுதான் ஞானத்திற்கும், அறிவிற்கும் இடையேயான பேதமாகும். ஞானம் வெல்லும்பொழுது யாருக்கும் தோல்வி உண்டாவதில்லை.

அந்தப் பறவை மன்னன் கருடன், போரில் ஈடுபட்ட இந்திரனிடம் சிரித்துக் கொண்டே இனிமையான வார்த்தைகளால்,(19) "யாருடைய எலும்பினால் வஜ்ராயுதமானது செய்யப்பட்டதோ அந்த முனிவரை (ததீசி) நான் மதிக்கிறேன்.(20) வஜ்ராயுதத்தையும், ஆயிரம் வேள்விகள் செய்தவனான உன்னையும் மதிக்கிறேன். {அதனால்} எனது இந்த இறகு ஒன்றை இதோ போடுகிறேன். அதன் இன்னொரு நுனியை உன்னால் அடைய முடியாது.(21) உனது இடியால் தாக்கப்பட்டாலும், எனக்குச் சிறு வலி கூட ஏற்படவில்லை" என்று சொன்ன பறவைகளின் மன்னன் {கருடன்}, தனது இறகு ஒன்றைப் போட்டான்.(22)

கருடனால் அப்படிப் போடப்பட்ட அந்தச் சிறந்த இறகைக் கண்ட அனைத்து உயிர்களும் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தன. அந்த இறகு அழகாக இருப்பதைக் கண்டு "இந்தப் பறவையானவன் {கருடன்}, சுபர்ணன் (அழகிய இறகுகள் கொண்டவன்) என்று அழைக்கப்படட்டும்" என்றனர். ஆயிரங்கண் கொண்ட புரந்தரன் {இந்திரன்}, அந்த அற்புத நிகழ்வைக் கண்டு, அந்தப் பறவையை ஒரு பேருயிர் என்றெண்ணினான். {அப்படி எண்ணிய} இந்திரன்,(23,24) "ஓ பறவைகளில் சிறந்தவனே! {கருடனே}, நான் உனது பலத்தின் எல்லையை அறிய விரும்புகிறேன். நான் உன்னுடன் நிலைத்த நட்பு கொள்ள விரும்புகிறேன்" என்றான்" {என்றார் சௌதி}.(25)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்