Sunday, February 24, 2013

பாம்புகளின் நாவுகள் பிளந்தன! | ஆதிபர்வம் - பகுதி 34

Snakes tongue divided into twain! | Adi Parva - Section 34 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 22)

பதிவின் சுருக்கம் : கருடனிடம் நட்பு கொண்ட இந்திரன்; தன் பலத்தைச் சொன்ன கருடன்; பாம்புகளைத் தன் உணவாகக் கேட்ட கருடன்; பாம்புகளிடம் அமுதத்தைக் காட்டிய கருடன்; அமுதத்தைக் கவர்ந்தான் இந்திரன்; பாம்புகளின் நாவுகள் பிளந்தன...

சௌதி தொடர்ந்தார், "அதன் பின்பு கருடன், "ஓ புரந்தரா! {இந்திரா}, நீ விரும்புவது போலவே உனக்கும் எனக்குமான இடையில் நட்பு உண்டாகட்டும். எனது பலம் தாங்க முடியாதது என்பதை அறிந்து கொள்வாயாக.(1) ஓ ஆயிரம் வேள்வி செய்தவனே! தன் பலத்தைத் தானே உயர்வாகப் பேசுவதை நல்லவர்கள் அனுமதிக்க மாட்டார்கள், தங்கள் பெருமையையும் பேச மாட்டார்கள்.(2) ஓ நண்பனே! காரணமில்லாத தற்பெருமை சரியானதல்ல என்றாலும், நீ நண்பனாகிவிட்டுக் கேட்டபடியால், உனக்குப் பதிலளிக்கிறேன்.(3) ஓ சக்ரா! {இந்திரா}, மலைகளுடனும், கானகங்களுடனும் பெருங்கடல்களின் நீருடனும் இருக்கும் இந்த முழுப் பூமியை, அதன் மேல் நீ இருப்பினும் எனது இறகு ஒன்றைக் கொண்டே என்னால் சுமக்க முடியும்.(4) அனைத்து உலகங்களையும், அதனுள் இருக்கும் அசைவன, அசையாதன ஆகியவற்றையும் ஒன்றாகச் சேர்த்தாலும் அனைத்தையும் சோர்வில்லாமல், எனது பலத்தால் நான் சுமக்க முடியும் என்பதை நீ அறிந்து கொள்வாயாக" என்றான்."(5)



சௌதி தொடர்ந்தார், "ஓ சௌனகரே! இப்படிப் பெரும் துணிவுமிக்கக் கருடன் பேசியதும், (தேவலோக) மகுடத்தை அணிந்தவனும், தேவர்களுக்குத் தலைவனும், எப்போதும் உலகத்தின் நன்மையைக் கருதி நிற்பவனுமான இந்திரன்,(6) "நீ சொல்வது போல் தான் இருக்கிறது. அனைத்தும் உனக்குச் சாத்தியப்படும். உள்ளம் நிறைந்த எனது உண்மையான நட்பை இப்போது ஏற்றுக் கொள்வாயாக.(7) சோமத்தை வைத்து உனக்கெந்தப் பயனும் இல்லையென்றால், அதை என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடு. நீ யாரிடம் இதைக் கொண்டு போகிறாயோ, அவர்கள் எப்போதுமே எங்களை எதிர்ப்பவர்களாவர்" என்று மறுமொழி கூறினான் {இந்திரன்}.(8)

அதற்குக் கருடன், "இந்தச் சோமத்தை நான் எடுத்துச் செல்ல ஒரு காரணம் இருக்கிறது. இந்தச் சோமத்தை யாரும் அருந்துவதற்குத் தரமாட்டேன்.(9) ஓ ஆயிரங்கண் கொண்டவனே! {இந்திரனே}, நான் இதைக் கீழே வைத்தவுடன், ஓ தேவலோகத் தலைவனே! அதை உடனே எடுத்துக் கொண்டு வந்து விடு" என்றான்.(10) அதற்கு இந்திரன், "ஓ முட்டையிடும் இனத்தைச் சேர்ந்தவனே! உன்னால் இப்போது சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்டு நான் பெரிதும் மகிழ்கிறேன். ஓ விண்ணோடிகளில் சிறந்தவனே! {கருடனே}, என்னிடம் இருந்து நீ விரும்பும் ஏதாவது வரத்தைப் பெற்றுக் கொள்வாயாக" என்றான் {இந்திரன்}.(11)

சௌதி தொடர்ந்தார், "அதன்பிறகு கருடன், கத்ருவின் மைந்தர்களை நினைவில் கொண்டு, ஏமாற்று வேலையால் ஏற்பட்ட தனது தாயின் அடிமைக் கட்டையும், நன்றாகத் தெரிந்த அதன் காரணத்தையும்[1] நினைவுகூர்ந்து,(12) "என்னதான் எல்லா உயிரினங்களையும் ஆளுமை செய்யும் பலம் எனக்கு இருந்தாலும், நீ சொன்னபடியே செய்வேன் {வரம் கேட்பேன்}. ஓ சக்ரா {இந்திரா}, வலிமைமிக்கப் பாம்புகள் எனது உணவாகட்டும்" என்று கேட்டான்.(13)

[1] இங்கு ‘நன்றாகத் தெரிந்த காரணம்’ என்பது அருணனின் சாபம் என்று கங்குலி விளக்குகிறார். குழந்தை வரத்தை கத்ரு முதலில் கேட்டாள். அவளுக்கு ஆயிரம் பாம்புகள் பிறந்தன. அவளை அடுத்து குழந்தை வரம் கேட்ட வினதை, தன் சகோதரிகளின் புத்திரர்களை விட உயர்வான புத்திரவரம் கேட்டாள். அதே போல் பாம்புகள் பிறந்தும், தன் குழந்தைகள் பிறக்காமல் இருந்த போது வினதை பொறாமையால் அவசரப்பட்டு முட்டையை உடைக்கு அரைகுறை வளர்ச்சி கொண்ட அருணன் பிறந்து சபித்தான். அருணனின் பலம் கண்டு பொறாமை கொண்ட கத்ரு வினதையை அடிமையாக்கினாள். வினதை அடிமையானபோது கருடன் பிறக்காததால் கருடனும் வினதையுடன் அடிமை ஆனான். அருணன் முன்பே பிறந்துவிட்டதால் அவன் அடிமை ஆகவில்லை). ஆக இந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் மூல காரணம் சகோதரிகளுக்கு இடையேயான பொறாமையே ஆகும்.

இதைக்கேட்ட தானவர்களைக் கொல்பவன் {இந்திரன்}, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு, தேவாதி தேவனும், பேருயிரும் (பரமாத்மாவும்), யோகிகளின் தலைவனுமான ஹரியிடம் சென்றான்.(14) பின்னவன் {ஹரி}, கருடன் கூறிய அனைத்தையும் அங்கீகரித்தான். தேவலோகத்தின் புகழ்பெற்ற தலைவன் {இந்திரன்}, கருடனிடம்,(15) "சோமத்தை நீ கீழே வைத்தவுடன், அதை நான் எடுத்து வந்துவிடுகிறேன்" என்று சொல்லிக் கருடனுக்கு விடைகொடுத்தான். அழகான இறகுகளைக் கொண்ட அந்தப் பறவையானவன் {கருடன்}, பிறகு தனது தாயின் {வினதையின்} இருப்பிடத்திற்கு வேகமாகச் சென்றான்.(16)

பெருமகிழ்ச்சியில் இருந்த கருடன், அனைத்துப் பாம்புகளிடமும், "நான் இப்போது அமுதத்தைக் கொண்டு வந்துவிட்டேன். இதை {அமுதகலசத்தை} குசப்புல்லின் {தர்ப்பைப் புல்லின்} மீது வைக்கிறேன்.(17) நீங்கள் சென்று உங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, வழிபாடுகளையும், சடங்குகளையும் முடித்து, இங்கமர்ந்து அமுதத்தைக் குடியுங்கள்.(18) நான் உங்கள் உத்தரவை நிறைவேற்றிவிட்டதால், நீங்கள் சொன்னவாறே, இன்றே {இப்போதே} என் தாய் {வினதை} அடிமைக்கட்டிலிருந்து விடுபடட்டும்" என்று சொன்னான். பாம்புகளும் கருடனிடம், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லித் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளச் சென்று விட்டன.(19-20)

அதே வேளையில், சக்ரன் {இந்திரன்}, அமுதத்தை எடுத்துக் கொண்டு தேவலோகம் சென்றுவிட்டான். பாம்புகளும் தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு, தங்கள் வழிபாடுகளையும் சடங்குகளையும் முடித்துக் கொண்டு, அமுதத்தைக் குடிக்க மிகுந்த ஆவலுடனும் மகிழ்ச்சியுடனும் வந்தன.(21) அமுதம் வைக்கப்பட்டிருந்த, அந்தக் குசப்புற்களால் ஆன படுக்கை {தர்ப்பைப்புற்கள் பரப்பியிருந்த இடம்} வெறுமையாக இருப்பதையும், {ஏமாற்றியதற்குப்} பதில் செய்கையாகத் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதையும் அறிந்தனர்.(22) அமுதம் வைக்கப்பட்டிருந்ததால் அந்தக் குசப்புற்களைத் தங்கள் நாவால் நக்கத் தொடங்கின. இந்தச் செயலால், அந்தப் பாம்புகளின் நாக்குகள் இரண்டாகப் பிளந்தன[2].(23) அமுதத்துடன் இருந்த தொடர்பால், அந்தக் குசப் புற்களும் தெய்வீகத் தன்மை கொண்டதாகின. இப்படியே புகழ்மிக்கக் கருடன், பாம்புகளுக்காக (தேவலோகத்திலிருந்து) அமுதத்தைக் கொண்டு வந்தான். இப்படியே கருடன் செய்த செயலால் பாம்புகளின் நாவுகளும் பிளந்தன.(24)

[2] ஒரு வேளை அமுதம் கீழே சிந்தியிருக்குமோ என்ற நப்பாசையினால், பாம்புகள் குசப்புற்களை நக்கின. குசப்புற்கள் கூர்மையாக இருக்குமாதலால் அவற்றின் நாக்குகள் இரண்டாகப் பிளந்தன. சில புராணங்களில் அமுதம் ஒரு துளி சிந்தியதாகவே உள்ளது. அமிர்தம் பட்டதாலேயே தர்ப்பைப் புற்கள் புனிதமானதாகின. 

அதன்பிறகு அந்த அழகான இறகுகளைக் கொண்ட பறவையானவன் {கருடன்}, பெரும் மகிழ்வுற்று, அந்த அழகான கானகத்தில், தனது தாயுடன் {வினதையுடன்} மகிழ்ச்சியாக வாழ்ந்தான். மகத்தான செயல்களைப் புரிந்தும், அனைத்து விண்ணோடிகளாலும் பெரிதும் மதிக்கப்பட்டும் பாம்புகளைத் தின்றும் தன் தாய்க்கு {வினதைக்கு} மகிழ்ச்சியை ஏற்படுத்தினான்.(25) எந்த மனிதன் இந்தக் கதையை நல்ல பிராமணர்கள் உள்ள சபையில் கேட்கிறானோ அல்லது உரக்க உரைக்கிறானோ, அவன் நிச்சயம் சொர்க்கம் அடைவான். கருடனின் சாதனைகளை ஒப்பிப்பதால் பெரும் நற்பேற்றையும் அவன் பெறுவான்" {என்றார் சௌதி}.(26)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்