Sunday, February 24, 2013

தேவர்களைக் கலங்கடித்த கருடன்! |ஆதிபர்வம் - பகுதி 32

Garuda attacked the Gods! | Adi Parva - Section 32 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 20)

பதிவின் சுருக்கம் : கருடனுடன் மோதிய தேவர்கள்; தோற்றோடிய தேவர்கள்; பல நதிகளின் நீர்கொண்டு அமுதமிருக்கும் இடத்தில் இருந்த நெருப்பை அணைத்த கருடன்...

சௌதி சொன்னார், "ஓ பிராமணர்களில் முதன்மையானவரே! இப்படித் தேவர்கள் போருக்குத் தயாராக இருக்கையில், பறவைகளின் மன்னன் கருடன், அந்த விவேகமுள்ளவர்கள் முன் விரைவாக வந்தான்.(1) அவனது பெரும்பலத்தைக் கண்ட தேவர்கள் அச்சத்தால் நடுங்கி, ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(2) சோமத்தை (அமுதத்தைக்) காப்பவர்களில் அளவிட முடியா பலத்துடனும், நெருப்பு போன்ற சுடரொளியுடனும், பெரும் சக்தியுடனும் கூடிய பௌமனன் (தேவ தச்சன் {விஸ்வகர்மா}) இருந்தான்.(3) சிறிது நேரமே நீடித்த ஒரு பயங்கர மோதலுக்குப் பிறகு, பறவைகள் மன்னனால் {கருடன்}, கூர்நகங்களாலும், அலகாலும், சிறகுகளாலும் அடிபட்ட அவன் இறந்தவனாகக் களத்தில் வீழ்ந்து கிடந்தான்.(4)



அந்த விண்ணோடி {கருடன்}, தனது சிறகுகளால் பெரும்புயலை ஏற்படுத்தி, புழுதிப்படலத்தால் உலகங்களை இருளில் முழ்க வைத்துத் தேவர்களைத் திகைக்கவைத்தான்.(5) பின்னவர்கள் {தேவர்கள்} அங்கு ஏற்பட்ட புழுதியால் தாக்கப்பட்டு, மூர்ச்சையாகி விழுந்தனர். அமுதத்தைக் காத்த இறவாதவர்கள் {தேவர்கள்} அந்தத் தூசிப்படலத்தால் குருடாகி கருடனைக் காண முடியாதவர்களாகினர்.(6)

இப்படிக் கருடன் அந்தத் தேவலோகத்தையே கலங்கடித்தான். தேவர்களைத் துவைத்தெடுத்து, தனது சிறகுகளாலும் அலகுகளாலும் காயங்களை உண்டாக்கினான்.(7) பிறகு அந்த ஆயிரம் கண் கொண்ட தேவன் {இந்திரன்} வாயுவைப் பார்த்து, ‘இந்தத் தூசி மழையை மறைய செய்வாயாக. இஃது உண்மையில் உன்னுடைய வேலையே’ என்றான்.(8) பிறகு, பலம்வாய்ந்த வாயு தேவன் அந்தப் புழுதியை விரட்டியடித்தான். இருள் மறைந்த பிறகு, தேவர்கள் கருடனைத் தாக்கினர்.(9) அந்தப் பெரும்பலம் வாய்ந்தவன் தேவர்களால் தாக்கப்படும்போது, யுக முடிவில் வரும் பெரும் மேகம் போலப் பெரிதாக முழங்கி அனைத்து உயிருக்கும் அச்சத்தை ஏற்படுத்தினான்.(10)

எதிரி வீரர்களைக் கொல்பவனும், சக்திமிக்கவனுமான அந்தப் பறவைகளின் மன்னன் {கருடன்}, தனது சிறகுகளைப் பயன்படுத்தி உயர்ந்தான். இருபுறக்கூர் கொண்ட வாட்கள் {பட்டிசங்கள்}, கூர்முனை முட்கள் பதித்த இரும்புத் தண்டங்கள் {பரிகங்கள்}, கூர் ஈட்டிகள், கதாயுதங்கள், பளபளப்பான கணைகள், சூரிய வடிவிலான பல சக்கரங்கள், ஆகியவற்றைக் கொண்ட தேவர்களும், இந்திரனும், கருடன் தங்கள் தலைக்குமேல் உயர்வதைக் கண்டனர்.(11-13) அந்தப் பறவைகள் மன்னன் {கருடன்}, அவர்களை அனைத்துத் திக்குகளிலிருந்தும் பலதரப்பட்ட ஆயுதங்களால் அடித்தும்[1] சிறிதும் தள்ளாடாமல் கடும் போர் புரிந்தான். பெரும் வீரம் கொண்ட வினதையின் மைந்தன் {கருடன்}, வானில் ஒளிர்ந்து, அனைத்துப் புறங்களிலும் தேவர்களைத் தனது சிறகாலும், மார்பாலும் தாக்கினான்.(14) கருடனின் கூர்நகங்களாலும், அலகாலும் தாக்குண்ட தேவர்களின் உடலில் இருந்து அதிகமான இரத்தம் வழிந்தது.(15)

[1] கருடன் ஆயுதமேதும் கொண்டு வரவில்லை. ஆக அவன் தேவர்களை ஆயுதம் கொண்டு தாக்கியதாகச் சொல்வது பொருத்தமாக இல்லை. கும்பகோணம் பதிப்பு, மன்மதநாததத்தரின் பதிப்பு, பிபேக் திப்ராயின் பதிப்பு ஆகியவற்றில் கருடன் ஆயுதம் கொண்டு போரிட்டதாகக் குறிப்பேதும் இல்லை.. மேலே அடித்தும் என்றிருக்கும் இடத்தில் "அவர்களால் அடிக்கப்பட்டும்" என்று இருந்திருக்க வேண்டும், தேவர்களால் பலபக்கங்களில் இருந்தும் கருடன் ஆயுதங்களால் தாக்கப்படுகிறான், இருந்தும் அவன் தள்ளாடாமல் தாக்கப்படுகிறான் என்று பொருள்படும். தள்ளாடாமல் போர்புரிந்தான் என்பது அஃதை உறுதி செய்கிறது.

பறவை மன்னனால் {கருடனால்} வீழ்த்தப்பட்ட சாத்யர்களும், கந்தர்வர்களும் கிழக்குப்புறம் பாய்ந்து ஓடினர், வசுக்களும் ருத்ரர்களும் தென்புறமாகவும்,(16) ஆதித்யர்கள் மேற்குப்புறமாகவும், அஸ்வினி இரட்டையர்கள் வடபுறமாகவும் ஓடினர். பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்டவர்கள் போரிலிருந்து ஓடி, ஒவ்வொரு நொடியும் தங்கள் எதிரியைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.(17)

கருடன், யக்ஷர்களுடனும், பெரும் தைரியம் மிகுந்த அஸ்வக்கிரந்தன், ரேணுகன், துணிவுமிக்கக் கிரதனன், தபனன், உலூகன், சுவசனன்[2], நிமேஷன், பிரருஜன் {ப்ரருஜன்} மற்றும் புளினன் ஆகியோருடனும் போர் புரிந்தான்.(18,19) அந்த வினதையின் மைந்தன் {கருடன்}, அனைவரையும் தனது சிறகுகளாலும், கூரியநகங்களாலும், அலகாலும் துவைத்தெடுத்து, எதிரிகளைத் தண்டிப்பவனும், யுக முடிவில் பினகையை (சிவ தனுசு) ஏந்தி கோபத்துடன் இருக்கும் சிவனைப் போலக் காட்சியளித்தான்.(20) பெரும் வீரமும் துணிவும் கொண்ட யக்ஷர்கள் அந்த விண்ணோடியால் {கருடனால்} துவைக்கப்பட்டு, அடர்ந்த இரத்தமழையைப் பொழியும் கரும் மேகக்குவியல் போலக் கிடந்தனர்.(21)

[2] இனிமையாய் பேசுபவன் என்று பொருள்.

கருடன் அவர்கள் உயிரைக் கவர்ந்து, அமுதம் இருக்கும் இடத்திற்குச் சென்றான். அஃது அனைத்துப்புறத்திலும் நெருப்பால் சூழப்பட்டு இருப்பதைக் கண்டான்.(22) அந்தப் பயங்கரமான நெருப்பின் சுடர்கள் வானத்தையே மூடியபடி இருந்தது. அச்சுடர்கள் பெரும் காற்றால் அசைக்கப்பட்டு, சூரியனையே எரித்து விடுவது போல இருந்தன.(23) அந்தப் புகழ்பெற்றவனான கருடன், எட்டாயிரத்து நூறு வாய்களைக் {கொண்ட உருவம் எடுத்துக்} கொண்டு, அந்த வாய்களால் விரைவாகப் பல நதிகளின் நீரைக் குடித்து {வாயில் அடக்கிக் கொண்டு}, பெரும் வேகத்துடன் திரும்பி வந்தான். அந்த நீரைக் கொண்டு அந்த எதிரிகளை அழிப்பவனும், சிறகுகளைத் தன் வாகனமாகக் கொண்டவனுமானவன் {கருடன்} அந்த நெருப்பை அணைத்தான். அந்த நெருப்பை அணைத்தபிறகு (அமுதம் இருக்கும் இடத்தில்) நுழையும் ஆவலினால் சிறிய உருவத்தை எடுத்துக் கொண்டான்" {என்றார் சௌதி}.(24,25)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்