Thursday, February 28, 2013

ஏலாபத்திரன் ஞானம்! | ஆதிபர்வம் - பகுதி 38

Elapatra's Knowledge! | Adi Parva - Section 38 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 26)

பதிவின் சுருக்கம் : சாபத்தின் விளைவைத் தடுக்க முடியாது என்று எடுத்துச் சொன்ன ஏலாபத்திரன்; தேவர்களிடம் பேசிய பிரம்மனின் பேச்சைப் பாம்புகளிடம் எடுத்துச் சொன்ன ஏலாபத்திரன்; ஜரத்காருவை எதிர்நோக்கும்படி வாசுகியைத் தூண்டியது...

பிரம்மனிடம் தேவர்கள்
சௌதி சொன்னார், "அனைத்துப் பாம்புகளின் பேச்சையும், வாசுகியின் வார்த்தைகளையும் கேட்ட ஏலாபத்திரன், அவர்களிடம் {பாம்புகளிடம்},(1) "அந்த வேள்வி தடுக்கப்படக் கூடியதல்ல. எவனிடமிருந்து இந்த அச்சம் தோன்றியிருக்கிறதோ அந்தப் பாண்டவ குலத்து மன்னன் ஜனமேஜயனும் தடுக்கப்பட முடியாதவனே.(2) ஓ மன்னா {வாசுகி}, எவன் விதியினால் பாதிக்கப்பட்டானோ, அவன் விதியிடம் மட்டுமே தஞ்சம் அடைய வேண்டும். வேறு எதுவும் அவனுக்குப் புகலிடமாக அமைய முடியாது.(3) பாம்புகளில் சிறந்தவர்களே, நமது அச்சத்தின் காரணம் விதியில் வேர் விட்டிருக்கிறது. எனவே, விதி மட்டுமே நமது புகலிடமாக இருக்க முடியும். நான் சொல்வதைக் கேட்பீராக.(4) பாம்புகளில் சிறந்தவர்களே, அந்தச் சாபம் உச்சரிக்கப்படும்போது, அச்சத்தினால் நான் நமது தாயின் {கத்ருவின்} மடியிலேயே பதுங்கியிருந்தேன். பாம்புகளில் சிறந்தவர்களே, ஓ பெரும் காந்தி மிக்கத் தலைவனே (வாசுகி), {நான் பதுங்கியிருந்த} அந்த இடத்தில், (இந்தச் சாபத்தால்) கவலை கொண்ட தேவர்கள் பெருந்தகப்பனிடம் {பிரம்மனிடம்} பேசும் வார்த்தைகள் எனக்குக் கேட்டன.(5,6)



தேவர்கள், "ஓ பெருந்தகப்பனே!, ஓ தேவர்களுக்குத் தேவா {பிரம்மா}, உமது இருப்பை உணர்ந்தும், இவ்வளவு அன்பானப் புதல்வர்கள் கிடைத்தும், இந்தப் பாவி கத்ருவைத் தவிர வேறு எவரால் உம் முன்னிலையிலேயே இப்படிச் சபிக்க முடியும்?(7) ஓ பெருந்தகப்பனே, நீரும், "அப்படியே ஆகட்டும்" என்று அவளை {கத்ருவை} அங்கீகரித்துள்ளீரே. அவள் {கத்ரு} அப்படிச் செய்வதை நீர் ஏன் தடுக்கவில்லை என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்" என்றனர் {தேவர்கள்}.(8)

அதற்குப் பிரம்மன், "பாம்புகள் பல்கிப் பெருகிவிட்டன. அவை கொடூரமானவையாகவும், உருவத்தால் பயங்கரமானவையாகவும், மிகுந்த விஷத்தன்மை உள்ளனவாகவும் இருக்கின்றன. எனது படைப்புகளின் நன்மையை விரும்பி, நான் கத்ருவைத் தடுக்கவில்லை.(9) எந்த விஷத்தன்மையுள்ள பாம்புகளும், மற்ற பாவிகளும் ஒரு தவறும் செய்யாதவர்களைக் கடிக்கின்றனவோ, அவை உண்மையில் அழியும். ஆனால் எவை தீங்கில்லாதவையோ, அறமுள்ளவையோ அவை அழியாது.(10) பயங்கரமான பேரிடர் சம்பவிக்கும் அந்தக் காலத்தில், பாம்புகள் எப்படி அதில் {அந்த இடரில்} இருந்து தப்பிப்பார்கள் என்பதையும் கேட்பீராக.(11)

யாயாவரர் குலத்திலே[1] புத்திக்கூர்மை உள்ளவனாகவும், ஆசைகளை முழுதும் அடக்கியவனாகவும், ஜரத்காரு என்னும் பெருமுனிவன் பிறப்பான்.(12) அந்த ஜரத்காருவுக்கு, ஆஸ்தீகன் என்ற பெயர் கொண்ட பிள்ளை இருப்பான். அவன் அந்த வேள்வியைத் {நாக வேள்வியைத்} தடுத்து நிறுத்துவான். எந்தப் பாம்புகள் அறம்சார்ந்தனவோ, அவை தப்பிக்கும்" என்றான் {பிரம்மன்}.(13) தேவர்கள் {பிரம்மனிடம்}, "ஓ உண்மைகளை அறிந்தவரே, பெரும் சக்தியும் தவமும் கொண்ட அந்த ஜரத்காரு என்ற முனிவர்களில் முதன்மையானவன், யார் மூலமாகத் தனது சிறப்புமிக்கப் புத்திரனை ஈன்றெடுப்பான்?" என்று கேட்டனர்.(14)

[1] ஓரிடத்திலும் தங்காமல் திரிந்து கொண்டே இருக்கும் முனிவர்கள்

அதற்குப் பதிலளித்த பிரம்மன், "பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்ட அந்த பிராமணர்களில் சிறந்தவன் {ஜரத்காரு}, தனது {ஜரத்காரு என்ற} பெயரைக் கொண்ட தன் மனைவி மூலமே, பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்ட தன் மகனை {ஆஸ்தீகனை} ஈன்றெடுப்பான்.(15) பாம்புகளின் மன்னன் வாசுகிக்கு ஜரத்காரு என்ற பெயரில் ஒரு தங்கை இருக்கிறாள். யாரைக் குறித்து நான் பேசுகிறேனோ, அந்த மகன் {ஆஸ்தீகன்} அவள் மூலமே பிறப்பான். அவன் விடுவிப்பான்" என்றான்."(16)

ஏலாபத்திரன் தொடர்ந்தான், "தேவர்கள் பெருந்தகப்பனிடம் {பிரம்மனிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்றனர். தெய்வமான பிரம்மனும் தேவர்களிடம் இப்படிச் சொல்லிவிட்டுத் தேவலோகம் {பிரம்மலோகம்} சென்றான்.(17) ஓ வாசுகி, ஜரத்காரு எனும் பெயரில் இருக்கும் உன் தங்கையை என் முன்னே நான் காண்கிறேன். கடும் தவம் செய்த (முனிவர்) ஜரத்காரு, ஒரு மணமகளுக்காக அலைந்து {அவர்} பிச்சைக் கேட்கும்போது அவளை {வாசுகியின் தங்கையை}, கொடுத்து எங்களை அச்சத்திலிருந்து விடுவிப்பாயாக. விடுதலைக்கான இந்த வழியை நான் {பிரம்மனிடம் இருந்து} கேட்டேன்" என்றான் {ஏலாபத்திரன்}."(18,19)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்