Wednesday, February 27, 2013

பாம்புகளின் ஆலோசனை! | ஆதிபர்வம் - பகுதி 37

Consultation of the Snakes! | Adi Parva - Section 37 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 25)

பதிவின் சுருக்கம் : தங்கள் தாயுடைய சாபத்திலிருந்து தப்பிக்க ஆலோசனையில் ஈடுபட்ட பாம்புகள்; பாம்புகள் சொன்ன திறனற்ற ஆலோசனைகளைக் கேட்டு கவலை கொண்ட வாசுகி...

சௌதி சொன்னார், "அந்தப் பாம்புகளில் சிறந்தவனான வாசுகி, தனது தாயின் சாபத்தைக் கேட்டு, அதை {அந்தச் சாபத்தை} எப்படிச் செயலிழக்க வைப்பது என்பது குறித்து சிந்தித்தான்.(1) தனது சகோதரர்கள் ஐராவதன் மற்றும் ஏனைய பாம்புகளுடன் சேர்ந்து எந்தக் காரியத்தைச் செய்தால் அது சிறந்ததாக இருக்கும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினான்.(2)



வாசுகி, "`ஓ பாவமற்றவர்களே! சாபத்தின் காரணம் உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்தச் சாபத்தைச் செயலிழக்க வைக்க முயற்சி செய்ய வேண்டும்.(3) சாபங்கள் அனைத்திற்கும் பரிகாரம் உண்டு. ஆனால் தங்கள் தாயினால் சபிக்கப்பட்டவர்களுக்குப் பரிகாரம் கிடையாது.(4) மாற்றமில்லாதவனும், முடிவில்லாதவனுமான உண்மையானவன் {பிரம்மன்} முன்னிலையில் இந்தச் சாபம் இடப்பட்டதைக் கேட்டு என் இதயம் நடுங்குகிறது.(5) அந்த மாற்றமில்லாத தலைவன் {பிரம்மன்} நமது தாயைச் சபிக்க விடாமல் தடுக்காததால், நமக்கு அழிவுகாலம் வந்துவிட்டது என்பது நிச்சயம்.(6)

எனவே, பாம்புகளைப் பாதுகாப்பது எப்படி என்பது குறித்து இன்று ஆலோசிப்போம். நேரத்தை நாம் வீணடிக்கவேண்டாம்.(7) நீங்கள் அனைவருமே புத்திசாலிகள்; முடிவெடுப்பதில் சிறந்தவர்கள். முற்காலத்தில் குகைக்குள் ஒளிந்து கொண்ட அக்னியைத் தேவர்கள் மீண்டும் அடைந்ததைப் போல, நாம் ஒன்றாக ஆலோசித்து, பாம்புகளின் அழிவுக்கான ஜனமேஜயனின் வேள்வி நடைபெறாதவாறும், நாம் அழிவைச் சந்திக்காதவாறும் விடுதலைக்கான வழிகளைக் கண்டுபிடிப்போம்" என்றான் {வாசுகி}."(8,9)

சௌதி தொடர்ந்தார், "{வாசுகியால்} இப்படிக் கேட்டுக்கொள்ளப்பட்ட கத்ருவின் விவேகமுள்ள வாரிசுகள் {பாம்புகள்} ஒன்றாகக் கூடி, தங்கள் கருத்துக்களை ஒருவரோடொருவர் பரிமாறிக் கொண்டனர்.(10) பாம்புகளில் ஒரு தரப்பு, "உயர்ந்த பிராமணர்களின் தோற்றத்தை ஏற்று {வேடம் புனைந்து}, ஜனமேஜயனிடம் "(நீ செய்ய கருதியிருக்கும்) இந்த உனது வேள்வி நடக்கக்கூடாது" என்று வேண்டிக் கேட்போம்" என்றன.(11)

தங்களை விவேகிகளாக நினைத்துக் கொண்ட சில பாம்புகள், "நாம் அவனுக்கு விருப்பமான ஆலோசகர்களாக ஆக வேண்டும்.(12) பிறகு எந்தக் காரியமாக இருந்தாலும், அவன் நிச்சயமாக நம் ஆலோசனைகளைக் கேட்பான். நாம் வேள்வி தடைபடும்படியாக அவனுக்கு ஆலோசனை அளிப்போம்.(13) விவேகிகளில் முதன்மையான அந்த மன்னன் {ஜனமேஜயன்} நம்மை மேன்மையானவர்களாக மதித்துத் தன் வேள்வியைக் குறித்து நம்மிடம் நிச்சயம் கேட்பான். நாம் "அது {நடக்கக்} கூடாது" என்று சொல்லி,(14) அதனால் இவ்வுலகத்திலும் அடுத்த உலகத்திலும் ஏற்படும் {ஏற்படும் எனப் பொய்யாகத்}  தீமைகளைச் சுட்டிக்காட்டி, அந்த வேள்வி நடக்காமல் பார்த்துக் கொள்வோம்.(15) அல்லது எவன் பாம்பு வேள்வியின் சடங்குகளை நன்கறிந்தவனோ, எவன் அந்த ஏகாதிபதியின் {ஜனமேஜயனின்} நன்மையை எண்ணி வேள்விப்புரோகிதனாக நியமிக்கப்படுவானோ, அந்த மனிதன் மரணமடையும் வகையில், பாம்புகளில் ஒருவன் அவனைக் கடிக்கட்டும். வேள்வியின் புரோகிதன் இறந்தால் அந்த வேள்வி நிறைவு பெறாது.(16,17) பாம்பு வேள்வியின் சடங்குகளை அறிந்தவர்கள் எவரோ, வேள்வியின் ரித்விக்குகளாக நியமிக்கப்படக்கூடியவர்கள் எவரோ, அவர்கள் அனைவரையும் கடித்து, அதன் மூலம் நம் நோக்கத்தை நாம் நிறைவேற்றிக் கொள்வோம்” என்று சொல்லின.(18)

ஒழுக்கமும், கருணையும் கொண்ட சில பாம்புகள், "உங்களது இவ்வாலோசனை தீமையானது. பிராமணர்களைக் கொல்வது தகாது.(19) ஆபத்துக் காலங்களில் நீதிமிக்கோரின் {நல்லோரின்} நடைமுறைகளால் அருளப்பட்ட பரிகாரங்களே சரியானது ஆகும். அநீதியானது {அதர்மம்} இறுதியில் உலகத்தை அழித்துவிடும்” என்றன.(20)

வேறு சில பாம்புகள், "நாம் ஒளியுடைய மின்னலுடன் கூடிய மேகங்களாக மாறிச் சென்று, மழையைப் பொழிந்து எரியும் வேள்வித்தீயை அணைத்துவிடுவோம்" என்றன.(21) வேறு சில சிறந்த பாம்புகள், "இரவில் சென்று சோமச்சாறு {சோமரசம்} உள்ள பாத்திரத்தைத் திருடிச் சென்றுவிடுவோம். அஃது அந்தச் சடங்குக்குத் தடங்கலைச் செய்யும்.(22) அல்லது, அந்த வேள்வியில் நூற்றக்கணக்கான ஆயிரக்கணக்கான பாம்புகள் மக்களைக் கடித்து, எங்கும் பீதியைப் பரப்பட்டும்.(23) அல்லது, பாம்புகள், தங்கள் சிறுநீரையும் மலத்தையும் கலந்து தூய உணவைக் களங்கப்படுத்தட்டும்" என்றன.(24)

வேறு சில பாம்புகள், "நாம் மன்னனின் {ஜனமேஜயனின்} ரித்விக்குகளாக மாறி, ஆரம்பத்திலேயே ‘எங்களுக்கு வேள்விக்கான தக்ஷிணையைக் கொடு’ என்று கேட்டு அவனது வேள்வியைத் தடுப்போம்.(25) அவன் (மன்னன் {ஜனமேஜயன்}) நம் சக்திக்கு உட்பட்டு நாம் விரும்புவதைச் செய்வான்” என்றன. அங்கே இருந்த வேறு சில {பாம்புகள்}, "மன்னன் {ஜனமேஜயன்} நீரில் நீந்தி விளையாடும்போது,(26) அவனைத் நமது இருப்பிடத்திற்குத் தூக்கிச் சென்று, அந்த வேள்வி நடைபெறாதவாறு அவனைக் கட்டிப் போடுவோம்" என்றன. இன்னும் சில தங்களைப் புத்திசாலிகளாகக் கருதிக் கொண்டு,(27) "மன்னனை {ஜனமேஜயனை} அணுகி, நம் நோக்கம் நிறைவடையும் வகையில் அவனைக் கடிப்போம். அவனுடைய மரணத்தால் தீமைகள் அனைத்தின் வேர்களும் அறுந்துவிடும்.(28) ஓ கண்களால் கேட்பனே[1], இதுவே எங்கள் அனைவரின் முடிவான தீர்மானமாகும். நீ சரியென்று கருதுவதை விரைவாகச் செய்வாயாக" என்றன.(29)

[1] பாம்புகளுக்கு புறக்காது கிடையாது. கட்செவி – கண்களில் செவிகொண்டவை பாம்புகள் என தமிழ் இலக்கியங்கள் கூறும். பாம்பின் தலையில் செவியின் அமைப்பு கண்களுக்கு மத்தியில் உள்ளது. அது தரையில் மற்றும் காற்றும் ஏற்படும் அதிர்வுகளை ஒலியாக உணரச் செய்யும் என அறிவியலும் சொல்கிறது. அசுணமா என்ற பாம்பு பலத்த முரசொலி எழுப்பினால் இறந்து விடும் எனத் தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றன.

இவ்வாறு சொல்லிவிட்டுக் குறிப்பாக பாம்புகளில் சிறந்த வாசுகியை {பதிலை எதிர்பார்த்து} நோக்கின. சிறிது நேரம் சிந்தித்த வாசுகி,(30) "பாம்புகளே, நீங்கள் சொன்ன முடிவான தீர்மானம் பின்பற்றுவதற்குத் தகுந்ததாக இல்லை. உங்கள் அனைவரின் ஆலோசனைகளும் எனக்குப் பிடித்த வகையில் இல்லை.(31) உங்கள் நன்மைக்காக நான் என்ன சொல்ல முடியும்? புகழ்மிக்க (நம் தந்தைக்) கசியபரின் கருணை மட்டுமே நமக்கு நன்மை செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்.(32) பாம்புகளே, உங்கள் பரிந்துரைகள் அனைத்திலும் எதை எனது நன்மைக்காகவும், நமது குல நன்மைக்காகவும் பின்பற்றுவது என்பதை என் இதயம் அறியவில்லை.(33) உங்கள் நன்மைக்காக நான் என்ன செய்யவேண்டுமோ, அதைச் செய்தாக வேண்டும். அந்தச் செயலின் நன்மையோ, தீமையோ என்னைச் சேர்ந்தது என்பதே என்னை இவ்வளவு கவலையடையச் செய்கிறது” என்று பதிலளித்தான் {வாசுகி}."(34)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்