Tuesday, March 05, 2013

பரீக்ஷித்தைக் கொன்றான் தக்ஷகன்! | ஆதிபர்வம் - பகுதி 43

Takshaka Killed Parikshit! | Adi Parva - Section 43 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 31)

பதிவின் சுருக்கம் : தன் திறனை தக்ஷகனுக்கு நிரூபித்துக் காட்டிய கசியபர்; கசியபரிடம் சமாதானம் பேசிய தக்ஷகன்; புழுவாகிக் கனியில் இருந்த தக்ஷகன்; பரீக்ஷித் கொல்லப்பட்டான்...

சௌதி சொன்னார், "அதன் பிறகு தக்ஷகன் {பாம்பு மன்னன்}, என்னால் கடிபட்ட எந்த உயிரையும் உம்மால் குணப்படுத்த முடியும் என்றால், ஓ கசியபரே என்னால் கடிக்கப்படும் இந்த மரத்திற்கு உயிரைத் தாரும்.(1) ஓ பிராமணர்களில் சிறந்தவரே {கசியபரே}, இந்த ஆலமரத்தை உங்கள் பார்வை முன்பே {விஷத்தினால்} எரிக்கிறேன். உங்களால் முடிந்ததைச் செய்து, நீங்கள் சொன்னது போல உங்கள் மந்திரங்களின் திறமையை எனக்குக் காட்டும்" என்றான்.(2) கசியபர், "அப்படி நீ நினைத்தாயானால் ஓ பாம்புகளின் மன்னா {தக்ஷகா}, இந்த மரத்தைக் கடி. உன்னால் கடிபட்டாலும், ஓ பாம்பே, அதை நான் காப்பாற்றுவேன்" என்றார்."(3)

சௌதி தொடர்ந்தார், "அந்தப் பாம்புகளின் மன்னன் {தக்ஷகன்}, சிறப்புமிக்கக் கசியபர் இப்படிச் சொன்னவுடன், அந்த ஆலமரத்தைக் கடித்தான்.(4) அந்தச் சிறப்புமிக்கப் பாம்பால் கடிக்கப்பட்ட அந்த மரமானது, பாம்பின் விஷம் ஊடுருவி அனைத்துப்புறங்களும் பற்றி எரிந்தன.(5) ஆலமரத்தை அப்படி எரித்ததும் அந்தப் பாம்பு {தக்ஷகன்}, கசியபரிடம், "ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, உம்மால் ஆனதை முயற்சித்து, இந்தக் கானகத்தின் மன்னனை {ஆலமரத்தை} காப்பாற்றும்" என்றான்."(6)

சௌதி தொடர்ந்தார், "பாம்புகளின் மன்னன் {தக்ஷகன்} ஏற்றிய விஷத்தால் {அந்த} மரம் {ஆலமரம்} சாம்பலாகியிருந்தது. அந்தச் சாம்பலை எடுத்த கசியபர்,(7) "ஓ பாம்புகளின் மன்னா, இந்தக் கானகத்தின் மன்னன் மீது என் வித்தையின் பலத்தை நான் பிரயோகிப்பதை பார். ஓ பாம்பே {தக்ஷகனே}, உனது மூக்கின் அருகிலேயே {உன் முன்னாலேயே} நான் அவனுக்கு உயிர் தருகிறேன்" என்றார்.(8) பிறகு பிராமணர்களில் சிறந்தவரும், சிறப்புமிக்கவரும், நன்கு கற்றவருமான அந்தக் கசியபர் சாம்பல் குவியலாக்கப்பட்ட அந்த மரத்திற்குத் தன் வித்தையினால் உயிரூட்டினார்.(9) முதலில் மொட்டு ஒன்றை உருவாக்கினார். அதன் பிறகு, அதைச்சுற்றி இலைகள் இரண்டை உருவாக்கினார். அதன்பிறகு, மரத்தின்தண்டையும், அதன் கிளைகளையும், பிறகு இலைகளுடன் கூடிய முழுவதும் வளர்ந்த மரத்தையே உருவாக்கினார்.(10)

சிறப்புமிக்கக் கசியபரால் புத்துயிர் பெற்ற மரத்தைக் கண்ட தக்ஷகன், அவரிடம் {கசியபரிடம்} "எனது விஷத்தையோ அல்லது என்னைப் போன்ற இன்னொருவரின் விஷத்தையோ நீர் முறிப்பது ஆச்சரியமன்று. ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே, எந்தச் செல்வத்தை விரும்பி நீர் அங்குச் செல்கிறீர்?(11,12) அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனிடம் {பரீக்ஷித்திடம்} என்ன பரிசு கிடைக்கும் என்று நீர் நம்புகிறீரோ, அதை அடைவதற்கு எவ்வளவு கடினமாக இருந்தாலும், நானே அதைத் தருகிறேன்.(13) புகழால் அலங்கரிக்கப்பட்டவரே, பிராமணரின் {சிருங்கி} சாபத்தால் பாதிக்கப்பட்டவனும், வாழ்நாள் குறுகியவனுமான மன்னனிடம் {பரீக்ஷித்திடம்} தங்கள் வெற்றிச் சந்தேகத்திற்கிடமானதே.(14) அப்படி ஆகி விட்டால், மூவுலகிலும் பரவியிருக்கும் தங்கள் ஒளி வீசும் புகழானது (கிரகணத்தின் போது) ஒளியை இழக்கும் சூரியனைப் போல மறைந்துவிடும்.(15)

அதற்குக் கசியபர், "பொருட்செல்வத்திற்காகவே நான் அங்குச் செல்கிறேன். அதை நீ எனக்குக் கொடுப்பாயாக. ஓ பாம்பே, உனது தங்கத்தை எடுத்துக் கொண்டு, நான் வந்த வழியே திரும்புகிறேன்" என்றார்.(16) தக்ஷகன், "ஓ மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே, நீர் அந்த மன்னனிடம் எதிர்பார்த்தைவிட அதிகமாகவே தருகிறேன். அதனால் நீர் அங்கே செல்லாதீர்" என்றான்."(17)

சௌதி தொடர்ந்தார், “இதைக் கேட்டவரும், பெரும் சக்தியும் அறிவும் கொண்டவரும், பிராமணர்களில் சிறந்தவருமான அந்தக் கசியபர் அம்மன்னனை {பரீக்ஷித்தை} நினைத்துத் தியானத்தில் அமர்ந்தார்.(18) அந்த முனிவர்களில் முதன்மையானவரும், பெரும் சக்தி கொண்டவரும், ஆன்மிக ஞானத்தைக் கொடையாகக் கொண்டவருமான கசியபர் பாண்டவ குலத்தில் வந்த மன்னனின் {பரீக்ஷித்தின்} வாழ்நாள் உண்மையிலேயே தீர்ந்ததைக் கண்டு தக்ஷகனிடம் தான் விரும்பிய அளவிற்குச் செல்வத்தைப் பெற்றுக் கொண்டு வந்த வழியே திரும்பிப் போனார். அப்படி வந்த வழியே சிறப்புமிக்கக் கசியபர் சென்றதும், சரியான நேரத்தில் தக்ஷகன் ஹஸ்தினாபுரத்திற்குள் நுழைந்தான்.(19,20) வழியிலேயே, மன்னன் மிகுந்த எச்சரிக்கையுடன் வாழ்வதாகவும், விஷமுறிவுக்கான மந்திரங்களாலும், மருந்துகளாலும் பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும் அறிந்தான் {தக்ஷகன்}."(21)

சௌதி தொடர்ந்தார், "அந்தப் பாம்பு {தக்ஷகன்}, "அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்} எனது மாயையால் ஏமாற்றப்பட வேண்டும். ஆனால் அதற்கு என்ன வழி?" என்று சிந்தித்தான்.(22) பிறகு தக்ஷகன் சில பாம்புகளைத் துறவிகள் போல வேடம்பூணச் செய்து, பழங்கள், தர்ப்பைப் புற்கள், தண்ணீர் ஆகியவற்றோடு அனுப்பினான்.(23) பின் தக்ஷகன் அவர்களிடம், ‘அவசர வேலையிருப்பதாகக் காட்டிக்கொண்டு, பொறுமையின்மைக்கான எந்த அடையாளத்தையும் காட்டிக் கொள்ளாமல், அரசனிடம் {பரீக்ஷித்திடம்} சென்று (நீங்கள் அவனுக்குப் பரிசாக எடுத்துச் செல்லும்) பழங்களையும், பூக்களையும், தண்ணீரையும் அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்} ஏற்குமாறு மட்டும் செய்யுங்கள்’ என்றான்."(24)

சௌதி தொடர்ந்தார், "அந்தப் பாம்புகளும், தக்ஷகன் உத்தரவிட்டவாறே நடந்து கொண்டன. அவை தர்ப்பைப் புல்லையும், நீரையும், பழங்களையும் கொண்டு சென்றன.(25) பெரும் சக்தி கொண்ட அந்த மன்னர்களில் முதன்மையானவன் {பரீக்ஷித்} அந்தக் காணிக்கைகளை ஏற்றுக் கொண்டான். அவர்கள் {வந்தவர்களின்} வேலை முடிந்தவுடன், "சென்று வாருங்கள்" என்று சொன்னான்.(26) துறவிகளைப் போல வேடம்பூண்டு வந்த பாம்புகள் சென்றவுடன், மன்னன் {பரீக்ஷித்} தனது அமைச்சர்களிடமும், நண்பர்களிடமும்,(27) "அந்தத் துறவிகள் கொண்டு வந்த, இந்த அருஞ்சுவைக் கனிகளை என்னுடன் சேர்ந்து உண்ணுங்கள்" என்றான்.(28) விதியின் உந்துதலாலும், முனிவரின் {சிருங்கியின்} வார்த்தைகளாலும், மன்னன் {பரீக்ஷித்} தனது அமைச்சர்களுடன் அந்தப் பழங்களை உண்ண விரும்பினான்.(29) தக்ஷகன் புகுந்திருந்த, அந்தக் குறிப்பிட்ட பழத்தை மன்னனே {பரீக்ஷித்தே} உண்பதற்காக எடுத்தான். அப்படி அவன் அதை எடுத்து உண்ணும்போது, ஓ சௌனகரே, அதன் உள்ளிருந்து கண்கள் கருப்பாகவும், செம்பு நிற உடலுடனும், புரிந்துகொள்ள முடியாத உருவத்துடனும், ஓர் அருவருக்கத்தக்க புழு வெளியே வந்தது.

அந்த மன்னர்களில் முதன்மையானவன் அதை எடுத்துத் தனது சபை உறுப்பினர்களிடம்,(30,31) "கதிரவன் மறைகிறான். விஷத்தால் எனக்கு இனிமேல் கண்ணீரில்லை. அதனால், எனது பாவகாரியத்திற்குப் பரிகாரமாகவும், அத்துறவியின் {சிருங்கின்} வார்த்தைகள் உண்மையாகவும், இந்தப் புழுவே தக்ஷகனாக மாறி என்னைக் கடிக்கட்டும்" என்றான். அச்சபை உறுப்பினர்களும், விதியால் உந்தப்பட்டு, அவனது பேச்சை அங்கீகரித்தனர்.(32,33) பிறகு அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்}, தனது நேரம் வந்ததும், புலனுணர்வை இழந்தவனைப் போல புன்னகையுடன், அந்தப் புழுவை உடனே எடுத்துத் தனது கழுத்தில் விட்டுக்கொண்டான்.(34) அவன் அப்படிப் புன்னகைத்துக் கொண்டிருக்கும்போதே, மன்னனுக்குக் காணிக்கையாகக் கொடுக்கப்பட்ட அந்தப் பழத்திலிருந்து வெளியே வந்த (புழுவின் உருவத்தில் இருந்த) தக்ஷகன், அந்த ஏகாதிபதியின் {பரீக்ஷித்தின்} கழுத்தைச் சுற்றிக் கொண்டான். விரைவாக மன்னனின் {பரீக்ஷித்தின்} கழுத்தைச் சுற்றிக் கொண்ட பாம்புகளின் மன்னன் தக்ஷகன் பேரொலியுடன் முழங்கியவாறு, புவியைக் காப்பவனைக் கடித்தான்" {என்றார் சௌதி}.(35,36)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்