Sunday, March 03, 2013

பரீக்ஷித்துக்குச் செய்தி வந்தது! | ஆதிபர்வம் - பகுதி 42

The message reached Parikshit! | Adi Parva - Section 42 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 30)

பதிவின் சுருக்கம் : சிருங்கியை அறிவுறுத்திய சமீகர்; சாபம் குறித்த செய்தி மன்னனுக்கு அனுப்பிய சமீகர்; பரீக்ஷித்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள்; தக்ஷகனின் விஷத்தை முறிக்க வந்த கசியபர்; கசியபரைச் சந்தித்த தக்ஷகன்...

சௌதி சொன்னார், "அதன்பிறகு சிருங்கி தனது தந்தையிடம் {சமீகரிடம்}, "ஓ தந்தையே! நான் இந்தச் செயலை அவசரத்தில் செய்திருந்தாலும், அல்லது நான் செய்தது சரியில்லாத செயலாக இருந்தாலும், நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எனது வார்த்தைகள் வீணாகாது {பொய்க்காது}.(1) ஓ தந்தையே! நான் உங்களுக்குச் சொல்கிறேன், (ஒரு சாபமானது) வேறு விதமாகாது. நான் விளையாட்டுக்காகக் கூடப் பொய் சொன்னதில்லை" என்றான்.(2)

சமீகர், "ஓ குழந்தாய்! {சிருங்கினே}, நீ பெரும் ஆற்றலுடையவன் என்பதும், உண்மை பேசுபவன் என்பதும் எனக்குத் தெரியும். இதற்கு முன்பு நீ பொய் சொன்னதில்லை. எனவே, உனது சாபமும் பொய்க்காது.(3) ஒரு மகன் தகுந்த வயதை அடைந்தாலும் கூட, அவன் தந்தையால் அறிவுறுத்தப்பட்டால்தான் நற்குணங்களை அடைந்து புகழையும் அடையமுடியும்.(4) {அவ்வாறிருக்க} நீயோ சிறுவனாகையால் எவ்வளவு அதிகமான ஆலோசனைகள் உனக்கு தேவைப்படும்? நீ எப்போதும் தவத்துறவுகளிலேயே ஈடுபடுகிறாய். அறுகுணங்கள் கொண்ட சிறப்புமிக்கவர்கள் கூட, கோபவசப்பட்டால் அந்தக் கோபம் பெருகிக் கொண்டே தான் இருக்கும்.(5) ஓ விதிகளைக் கடைப்பிடிப்பவர்களில் முதன்மையானவனே! நீ எனது மகனாக இருப்பதாலும், சிறுவனாக இருப்பதாலும், உன் அவசரத்தை நான் கண்டதாலும், நான் உனக்கு அறிவுரை வழங்க வேண்டும்.(6)

ஓ மகனே! {சிருங்கியே}, காட்டிலுள்ள பழங்களையும், கிழங்குகளையும் மட்டுமே உண்டு அமைதியுடன் வாழ்ந்து வருவாயாக. உனது இந்தக் கோபத்தைக் கொன்றுவிடு, உனது தவச் செயல்களின் நற்பலன்களை இப்படிக் கெடுத்துக் கொள்ளாதே.(7) கோபமானது, பெரும் வலிகளை {கடினமான விரதங்களை} அனுபவித்துத் தவசிகள் அடையும் அறங்களை {தர்மங்கள்} நிச்சயமாக அழித்து விடுகிறது. பிறகு அறமிழந்தவர்களான அவர்களுக்கு அருள் நிலை இருக்காது.(8) மன்னிக்கும் தன்மையுள்ள துறவிகளுக்கு, அமைதியே எப்போதும் வெற்றியைத் தந்திருக்கிறது. ஆகவே, மன்னிக்கும் குணம் கொண்டவனாக, உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்து, வாழக் கற்றுக் கொள்வாயாக. மன்னிக்கும் தன்மையினால், பிரம்மனாலும் எட்ட முடியாத உலகங்களை நீ அடைவாய்.(9,10) நான் அமைதி வழியைத் தேர்ந்தெடுத்திருப்பதாலும், என்னால் முடிந்த அளவு நன்மையைச் செய்ய வேண்டும் என்பதாலும், என் சக்திக்குத் தகுந்த எதையாவது இதில் நான் செய்ய வேண்டும். மன்னனிடம் {பரீக்ஷித்திடம்}, 'ஓ ஏகாதிபதி, என்னை நீ அவமதித்ததால், அறிவு முதிர்வுறாத எனது இளவயது மகன் கோபம் கொண்டு உன்னைச் சபித்திருக்கிறான்', என்று செய்தியனுப்ப வேண்டும்" என்றார் {சமீகர்}."(11,12)

சௌதி தொடர்ந்தார், "அந்தப் பெரு முனிவர் {சமீகர்}, பெரும் நோன்புகளை நோற்பவர், கருணையால் உந்தப்பட்டுச் சரியான உத்தரவுகள் கொடுத்து, மன்னன் பரீக்ஷித்திடம் தனது சீடனை அனுப்பினார்.(13) முதலில் மன்னனின் {பரீக்ஷித்தின்} நலத்தை விசாரித்துவிட்டு, பிறகு உண்மையான செய்தியைக் கூறுமாறு அறிவுறுத்தி, ஆன்மிகத் தவங்களில் ஈடுபட்டவனும், நன்னடத்தையுள்ளவனுமான கௌர்முகன் என்ற தனது சீடனை அனுப்பினார்.(14) அந்தச் சீடனும் விரைவில் குரு {கௌரவ} குலத்தின் தலைவனான அந்த ஏகாதிபதியை {பரீக்ஷித்தை} அடைந்தான். வாயில்காப்போன் மூலம் தன் வரவைத் தெரிவிக்குமாறு முதலில் சொல்லிவிட்டு, {பிறகு} மன்னனின் அரண்மனைக்குள் நுழைந்தான்.(15) அந்த இருபிறப்பாளனான {பிராமணனான} கௌர்முகன் அந்த ஏகாதிபதியால் {பரீக்ஷித்தால்} தகுந்த முறையில் வழிபடப்பட்டான். சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, மன்னனிடம் {பரீக்ஷித்திடம்}, அவனது அமைச்சர்கள் முன்னிலையில், தனக்கு அறிவுறுத்தியிருந்தபடி அந்தச் சமீகரின் கொடூரமான வார்த்தைகளை முழுமையாகச் சொன்னான்.(16)

கௌர்முகன், "ஓ மன்னர்களுக்கு மன்னா, அற ஆன்மா கொண்ட, உணர்ச்சிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், அமைதி நிறைந்த, கடினமான ஆன்மீக வழிபாடுகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட, சமீகர் என்ற பெயர் கொண்ட, ஒரு முனிவர் உனது ஆளுகைக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்து வருகிறார். ஓ மனிதர்களில் புலியே, அவர் {சமீகர்} பேசா நோன்பிருக்கும்போது அவரது தோளில் உனது வில்லின் நுனியால் இறந்த பாம்பைக் கிடத்தினாய். அவரே {சமீகரே} உன்னை மன்னித்துவிட்டார். ஆனால் அவரது மகனால் {சிருங்கியால்} அது முடியவில்லை.(17-19) ஓ மன்னர்களின் மன்னா {பரீக்ஷித்}, பின்னவனால் {சிருங்கியால்} அவன் தந்தைக்குத் தெரியாமல், இப்போதிலிருந்து ஏழு இரவுகளுக்குள் தக்ஷகன் (என்னும் பாம்பு) உன் மரணத்தை ஏற்படுத்தும் என்று சபிக்கப்பட்டிருக்கிறாய்.(20) சமீகர் உன்னைக் காப்பாற்றத் தனது மகனிடம் {சிருங்கியிடம்} மீண்டும் மீண்டும் வேண்டினார். ஆனால் அவரது மகனுடைய சாபத்தைப் பொய்யாக்க யாரும் இல்லை[1].(21) தனது மகனின் {சிருங்கியின்} கோபத்தை அமைதிப்படுத்தத் அவரால் இயலாத காரணத்தால்[2], ஓ மன்னா, உனது நன்மைக்காக நான் அனுப்பப்பட்டுள்ளேன்" என்றான் {கௌர்முகன்}.(22)


[1] தகுதியில் உயர்ந்தவரால் ஒருவருடைய சாபத்திலிருந்து விலக்கு அளிக்கமுடியும் அல்லது பலனை குறைக்க மடியும். உதா. கத்ருவின் சாபத்தைப் பிரம்மா மாற்றியமைத்தது. அதுபோலச் சிருங்கியின் சாபத்தை மாற்ற அப்போது யாரும் இல்லை.

[2] சிருங்கி கோபத்தை விட்டால் அவனாலேயே சாபத்தை மாற்றமுடியும். அவன் கோபத்தைத் தணித்துக் கொள்ள முடியாததால் சாபத்தைத் திரும்பப் பெற முடியவில்லை. உதா. பௌஷ்யனால் உதங்கருக்குக் கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற முடியவில்லை.

குரு பரம்பரையில் உதித்தவனும், தவ பயிற்சிகளில் ஈடுபடுபவனுமான அந்த மன்னன் {பரீக்ஷித்}, இந்தக் கொடூர வார்த்தைகளைக் கேட்டுத் தனது பாவகரமான காரியத்தை நினைவுகூர்ந்து, மிகவும் வருந்தினான்.(23) அந்த முனிவர்களிலே முதன்மையானவர் {சமீகர்}, பேசா நோன்பு நோற்றிருந்தார் என்பதை அறிந்ததும், இருமடங்கு துயருற்று, அந்த முனிவர் சமீகரின் கருணையையும், தனது பாவகரக் காரியத்தையும் நினைத்துப் பார்த்து மிகவும் வருந்தினான்.(24,25) ஒரு தேவனைப் போன்று காட்சியளித்த அந்த மன்னன், முனிவருக்கு {சமீகருக்கு} இழைக்கப்பட்ட செயலை எண்ணி வருத்தப்பட்ட அளவிற்குக் கூடத் தன் மரணச் செய்திக்காக வருந்தவில்லை.(26)

அதன்பிறகு, "அந்த வழிபடத்தகுந்தவர் {சமீகர்} என்னிடம் கருணையோடு இருக்கட்டும்" என்று சொல்லி கௌர்முகனை மன்னன் {பரீக்ஷித்} அனுப்பி வைத்தான்.(27) அவன் {கௌர்முகன்} சென்றவுடன், ஆழ்ந்த கவலையுடன் இருந்த மன்னன் {பரீக்ஷித்}, சிறிதும் நேரத்தை வீணாக்காமல் தனது அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினான்.(28) ஆலோசனைகளில் சிறந்தவனான அந்த மன்னன் பரீக்ஷித்} அவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, ஒரே தூணில் ஒரு மாளிகையை எழுப்பச் செய்தான். அஃது {அம்மாளிகை} இரவும் பகலும் நன்கு காக்கப்பட்டது.(29)

மருத்துவர்களும், மருந்துகளும், மந்திரங்களில் திறமை மிகுந்த பிராமணர்களும் அந்த மாளிகையில் நிறைய இருந்தனர்.(30) அனைத்துப் புறங்களிலும் பாதுகாக்கப்பட்ட அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்}, தனது கடமைகளை அறம் மிகுந்த அமைச்சர்கள் புடைசூழ அங்கிருந்தே நிறைவேற்றினான்.(31) எவரும் அங்கிருக்கும் மன்னனை நெருங்க முடியவில்லை. காற்று கூடப் புகமுடியாதபடி அந்த இடம் பாதுகாக்கப்பட்டது.(32) ஏழாவது நாள் வந்தபோது, பிராமணர்களில் சிறந்தவரும், பெரும் கல்வி கற்றவருமான கசியபர் (பாம்பு கடித்தபின்)[3] மன்னனைக் குணப்படுத்த விரும்பி (மன்னனின் இருப்பிடம் நோக்கி) வந்துகொண்டிருந்தார்.(33) அவர் நடந்தனவற்றை எல்லாம் கேள்விப்பட்டிருந்தார். பாம்புகளில் முதன்மையான தக்ஷகனால் அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் {பரீக்ஷித்} எமனுலகு அனுப்பப்படுவான் என்பதை அறிந்திருந்தார்.(34) ‘அந்த முதன்மையான பாம்பால் {தக்ஷகனால்} கடிபட்ட பிறகு, அந்த ஏகாதிபதியை {பரீக்ஷித்தை} குணப்படுத்த வேண்டும். அதனால், எனக்குச் செல்வமும் கிடைக்கும், நற்பேறும் கிடைக்கும்’ என்று அவர் எண்ணினார்.(35)

[3] இந்தக் கசியபரும், கருடனின் தந்தையான முனிவர் கசியபரும் வேறு வேறானவர்கள் என்று சொல்லப்படுகிறது. ஆதிபர்வம் பகுதி 20ல் கருடனின் தந்தையான கசியபருக்கு விஷமுறிவு ஞானத்தைப் பிரம்மன் அருளியதாக ஒரு குறிப்பு இருக்கிறது. இருப்பினும் இரண்டு சம்பவங்களுக்கும் உள்ள கால வித்தியாசத்தைக் கணக்கில் கொண்டால் இரண்டு கசியபர்களும் வேறு வேறு என்ற தீர்வையே நாம் எட்ட வேண்டியிருக்கும். அதே சமயம், முனிவர்களின் ஆயுள் மிக நீண்டது எனவும் உணர்தல் வேண்டும். ஆனால் தக்ஷகன் கசியபரின் மகன். கசியபர் - தக்ஷகன் உரையாடல் தந்தை மகன் உரையாடலாக இல்லை என்பதால் இது வேறு கசியபர் என்று முடிவுக்கு வரவேண்டியதிருக்கிறது.

ஆனால், மன்னனைக் குணப்படுத்த இதயத்தில் எண்ணியிருந்த கசியபர், தனது வழியில் நெருங்கி வருவதை, முதிர்ந்த பிராமண வேடத்தில் இருந்த பாம்புகளின் இளவரசன் தக்ஷகன் கண்டான்.(36) அந்தப் பாம்புகளின் இளவரசன் { தக்ஷகன் }, அந்த முனிவர்களில் காளையிடம் {கசியபரிடம்}, "இவ்வளவு வேகமாக எங்குச் செல்கிறீர்? இப்படி நீங்கள் செல்வதன் நோக்கம் என்ன?" என்று கேட்டான் {முதிர்ந்த பிராமணரின் உருவில் இருந்த பாம்பான தக்ஷகன் }.(37) இப்படிக் கேட்கப்பட்ட கசியபர், "குரு பரம்பரையில் வந்தவனும், எதிரிகள் அனைவரையும் ஒடுக்குபவனுமான, மன்னன் பரீக்ஷித்தைத் தனது விஷத்தால் இன்று தக்ஷகன் எரிக்கப் போகிறான்.(38) ஓ மனதிற்கினியவரே, அக்னியைப் போன்ற சக்தி படைத்த தக்ஷகன் அவரைக் கடித்த பிறகு, பாண்டவப் பரம்பரையின் ஒரே பிரதிநிதியான அந்த அளவற்ற வீரமிக்க மன்னனை {பரீக்ஷித்தை} குணப்படுத்தவே நேரத்தை வீணடிக்காமல் வெகு விரைவாகச் சென்று கொண்டிருக்கிறேன்" என்று மறுமொழி சொன்னார்.(39) அதற்குத் தக்ஷகன், "நான்தான் தக்ஷகன், ஓ பிராமணரே {கசியபரே}, நானே அந்தப் பூமியின் தலைவனை {பரீக்ஷித்தை} எரிக்கப் போகிறேன். நில்லும், என்னால் கடிபட்டவனை உம்மால் குணப்படுத்த முடியாது" என்றான்.(40) கசியபர், "எனது கல்வியின் ஆற்றலால், அங்குச் சென்று உன்னால் கடிபட்ட ஏகாதிபதியைக் {பரீக்ஷித்தைக்} குணப்படுத்த முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்றார் {கசியபர்}."(41)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்