Wednesday, March 13, 2013

ஆஸ்தீகர் பிறப்பு! | ஆதிபர்வம் - பகுதி 48

The Birth of Astika! | Adi Parva - Section 48 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 36)

பதிவின் சுருக்கம் : வாசுகியும் அவன் தங்கை ஜரத்காருவும் பேசியது; வாசுகி மகிழ்ச்சி; ஆஸ்தீகர் பிறந்தார்...

சௌதி சொன்னார், "ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! {சௌனகரே}, தனது தலைவன் தன்னைவிட்டுப் பிரிந்தவுடன், ஜரத்காரு தனது தமையனிடம் {வாசுகியிடம்} சென்றாள். அவனிடம் {வாசுகியிடம்} நடந்த அனைத்தையும் சொன்னாள்.(1) அந்தப் பாம்புகளின் இளவரசன் {வாசுகி}, பேரழிவு {போன்ற} செய்தியைக் கேட்டு, பரிதாபகரமாக இருந்த தனது சகோதரியிடம் {ஜரத்காருவிடம்}, அதைவிடப் பரிதாபமான நிலையில் இருந்து பேசினான்.(2)

அவன் {வாசுகி}, "ஓ இனிமையானவளே!, உன்னை அளித்த காரணத்தை நீயே அறிவாய். பாம்புகளின் நனமைக்காக உங்கள் சேர்க்கையினால் மகன் பிறந்தால், அந்தச் சக்தி மிக்கவன், பாம்பு வேள்வியில் இருந்து நம் எல்லோரையும் காப்பான். பழங்காலத்தில் தேவர்களின் முன்னிலையில் பெருந்தகப்பனே {பிரம்மனே} இதைச் சொல்லியிருக்கிறான்.(3,4) ஓ நற்பேறுபெற்றவளே! {ஜரத்காருவே}, அந்த முனிவனுடனான {ஜரத்காருவுடனான} சேர்க்கையால் நீ கருவுற்றனையா? அந்த ஞானமுள்ளவருக்கு {முனிவர் ஜரத்காருவுக்கு} உன்னை அளித்தது கனியற்றதாக இருக்கக்கூடாது என்பதே என் இதயத்தின் விருப்பம்.(5)

உண்மையில், இதை நான் உன்னிடம் கேட்பது சரியாகாது. இருப்பினும், விஷயத்தின் அழுத்தத்தைக் {முக்கியத்தை} கருதியே நான் உன்னைக் கேட்கிறேன்.(6) எப்போதும் கடுமையான தவங்களில் ஈடுபடுபவரான உன் தலைவனின் {முனிவர் ஜரத்காருவின்} பிடிவாதத்தை அறிந்த நான், அவர் சபித்து விடக்கூடும் என்பதால் {அவர் திரும்பி வர வேண்டி} அவர் பின் செல்லமாட்டேன்.(7) ஓ இனிமையானவளே! உனது தலைவன் {ஜரத்காரு} என்னவெல்லாம் செய்தான் என்று விவரமாகக்கூறு. எனது இதயத்தில் நெடுங்காலமாகச் செருகப்பட்டிருப்பதும், பயங்கரமாகக் கலங்கடிப்பதுமான கணையை அகற்றி விடு" என்றான் {வாசுகி தனது தங்கை ஜரத்காருவிடம்}.(8)

பாம்புகளின் மன்னனான வாசுகியால் இப்படிக் கூறப்பட்ட ஜரத்காரு, விரிவாகப் பேசி அவனைச் சமாதானப்படுத்தினாள்.(9) அவள், "தவவலிமை கொண்டவரான அந்த உயரான்ம முனிவரிடம் {முனிவர் ஜரத்காருவிடம்} பிள்ளையைப் பற்றி நான் கேட்டதற்கு, "இருக்கிறது" என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.(10) அவர் {முனிவர் ஜரத்காரு}, கேலிக்காகக் கூட மெய்யற்றதைப் பேசிக் கேட்ட நினைவு எனக்கில்லை. ஓ மன்னா {வாசுகி}, இதைப் போன்ற முக்கிய நேரத்தில் அவர் ஏன் பொய்மை பேச வேண்டும்? அவர் {முனிவர் ஜரத்காரு},(11) "பாம்பினத்தின் மகளே {வாசுகியின் தங்கை ஜரத்காருவே}, நமது தாம்பத்தியத்தின் நோக்கமான பலனை எண்ணி நீ வருந்தாதே. ஒளிரும் கதிரவனைப் போன்ற பிரகாசத்துடன் உனக்கொரு மகன் பிறப்பான்" என்றார்.(12) ஓ சகோதரா! {வாசுகி}, இதைச் சொல்லிவிட்டு, தவத்தை செல்வமாகக் கொண்ட எனது கணவர் {முனிவர் ஜரத்காரு} சென்றுவிட்டார். ஆகையால், உனது மனத்தில் உள்ள ஆழ்ந்த வருத்தமானது மறையட்டும்" {என்றாள் பெண்பாம்பான ஜரத்காரு}.’(13)

சௌதி தொடர்ந்தார், "இதைக் கேட்ட பாம்புகளின் மன்னன் வாசுகி தனது சகோதரியின் {பாம்பு ஜரத்காருவின்} வார்த்தைகளை ஏற்று, பெருமகிழ்வுடன், "அப்படியே ஆகட்டும்" என்றான்.(14) அந்தப் பாம்புகளின் தலைவன் {வாசுகி}, தன் தங்கையை வாழ்த்தியும், பொருத்தமாகப் புகழ்ந்தும், செல்வத்தை அளித்தும் நன்கு கவனித்துக் கொண்டான்.(15) பிறகு, ஓ பிராமணர்களில் சிறந்தவரே {சௌனகரே}, பெரும் காந்தியைக் கொண்ட அந்தக் கரு, வானத்தில் இருக்கும் வளர்பிறை மதியைப் போல வளர ஆரம்பித்தது.(16)

அந்தப் பாம்புகளின் சகோதரி {ஜரத்காரு}, குறித்த நேரத்தில், தேவலோகக் குழந்தைக்கு ஒப்பான காந்தியுடன் ஒரு மகனை ஈன்றெடுத்தாள். அவன் {பின்னாளில்} தன் முன்னோர்களையும் தாய்வழி உறவினர்களையும் அச்சத்திலிருந்து விடுவிப்பவன் ஆனான்.(17) அந்தக் குழந்தை, பாம்பு மன்னனுடைய {வாசுகியுடைய} வீட்டிலேயே வளர்ந்தான். வேதங்களையும், அதன் கிளைகளையும், பிருகுவின் மைந்தரான முனிவர் சியவனரிடம் படித்தான்.(18) சிறுவனாக இருந்தபோதிலும் அவனது நோன்புகள் கடுமையானதாக இருந்தன. அறிவுக்கூர்மையைக் கொடையாகக் கொண்டும், அறம்சார்ந்த எல்லாக் குணங்களுடனும், ஞானத்துடனும், உலக விருப்பங்கள் அற்று, ஞானியைப் போல இருந்தான். அவன் கருவில் இருந்தபோது ‘இருக்கிறது’ என்று சொல்லி அவன் தந்தை காட்டிற்குச் சென்றதால் அவன் ஆஸ்தீகன்[1] என்ற பெயரில் அழைக்கப்பட்டான்.(19,20)


[1] ‘ஆஸ்தி’ என்றால் இருக்கிறது என்று பொருள். அவன் தந்தை “ஆஸ்தி” என்று கூறிசென்றதால் ஆஸ்தீகன் என்றழைக்கப்பட்டான்.

அவன் சிறுவனாக இருந்தபோதிலும் புத்திக்கூர்மையோடு தீவிரமானவனாக இருந்தான். பாம்புகளின் அரண்மனையில் பெரும் அக்கறையுடன் அவன் {ஆஸ்தீகன்} வளர்க்கப்பட்டான்.(21) திரிசூலம் தரித்தவனும், தேவர்களின் தலைவனும், சிறப்பு வாய்ந்தவனுமான மகாதேவனைப் போலப் அவன் {ஆஸ்தீகன்} பொன்வண்ணத்தில் இருந்தான். நாளுக்கு நாள் அவன் வளர்ந்து, பாம்புகளை மகிழ்வூட்டினான்" {என்றார் சௌதி}.(22)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்