Sunday, March 10, 2013

மனைவியைப் பிரிந்த ஜரத்காரு! | ஆதிபர்வம் - பகுதி 47

Jaratkaru parting his wife! | Adi Parva - Section 47 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 35)

பதிவின் சுருக்கம் : ஜரத்காருவின் நிபந்தனைகளை ஏற்ற வாசுகி; வாசுகியின் தங்கையைத் திருமணம் செய்த ஜரத்காரு; வாரிசு உண்டானபின் மனைவியைப் பிரிந்தார் ஜரத்காரு...

சௌதி சொன்னார், "{பாம்புகளின் மன்னன்} வாசுகி முனிவர் ஜரத்காருவிடம், "ஓ பிராமணர்களில் சிறந்தவரே! {ஜரத்காருவே}, இந்த மங்கை {பாம்பு ஜரத்காரு} உமது பெயர் கொண்டவளே. இவள் ஆன்மிகத் தகுதி வாய்ந்த எனது தங்கையாவாள்.(1) உமது மனைவியை நான் பராமரிப்பேன். இவளை ஏற்றுக் கொள்வீராக. ஓ ஆன்மிகத்தைச் செல்வமாகக் கொண்டவரே! {ஜரத்காருவே}, எனது எல்லாத் திறன்களையும் பயன்படுத்தி நான் இவளைக் காப்பேன். ஓ முனிவர்களில் முதன்மையானவரே! {ஜரத்காருவே}, உமக்காகவே நான் இவளை வளர்த்தேன்” என்றான் {வாசுகி}.(2) அதற்கு முனிவர் {ஜரத்காரு}, "நான் அவளைப் பாதுகாக்க மாட்டேன் என்பது இதன்மூலம் ஒப்புக் கொள்ளப்படுகிறது. எனக்குப் பிடிக்காத எதையும் அவள் செய்யக்கூடாது. அவள் அப்படிச் செய்தால், நான் அவளை விட்டு விலகி விடுவேன்" என்றார் {ஜரத்காரு}."(3)



சௌதி தொடர்ந்தார், "அதற்கு "நான் எனது தங்கையைப் பராமரிப்பேன்" என்று அந்தப் பாம்பு {வாசுகி} உறுதி கூறிய பிறகு, ஜரத்காரு அந்தப் பாம்பின் இல்லத்திற்குச் சென்றார்.(4) மந்திரங்களை அறிந்த பிராமணர்களில் முதன்மையானவரும், கடுந்தவங்கள் நோற்றவரும், அறம்சார்ந்தவரும், தவத்திலே பெரியவருமான அவர் {ஜரத்காரு} சாத்திர விதிகளின்படி தம்மிடம் கொடுக்கப்பட்ட அவளது {அந்தப் பாம்பான ஜரத்காருவின்} கரத்தைப் பற்றினார்.(5) பின், பெரும் முனிவர்களால் கொண்டாடப்பட்டவரான அவர் {முனிவர் ஜரத்காரு}, தமது மணவாட்டியை அழைத்துக்கொண்டு தமக்காகப் பாம்புகளின் மன்னனால் {வாசுகியால்} ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றார்.(6)

அந்த அறைக்குள்ளிருந்த பஞ்சணையில் விலையுயர்ந்த மெத்தைகள் விரிக்கப்பட்டிருந்தன. அங்கே ஜரத்காரு தமது மனைவியுடன் {பாம்பு ஜரத்காருவுடன்} வாழ்ந்து வந்தார்.(7) அந்தச் சிறந்த முனிவர் {ஜரத்காரு}, தன் மனைவியுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார். அந்த முனிவர் {ஜரத்காரு}, "எனது விருப்பத்திற்கு மாறாக எதையும் நீ சொல்லவோ, செய்யவோ கூடாது. அப்படி ஏதாகிலும் நீ செய்தால், உடனே நான் உன்னைவிட்டு விலகிவிடுவேன், உனது இல்லத்தில் தங்கமாட்டேன். என்னால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளை உன் மனத்திற்குள் பதியவைத்துக் கொள்" என்று கூறியிருந்தார்.(8,9)

அந்தப் பாம்பு மன்னனின் {வாசுகியின்} தங்கை {பெண் பாம்பு ஜரத்காரு} கவலையுடனும், அதிகமான வருத்தத்துடனும் "அப்படியே ஆகட்டும்" என்றாள்.(10) தனது உறவினர்களுக்கு நன்மை செய்ய விருப்பம் கொண்டு, குற்றமில்லாதவளான அந்த மங்கை, நாய் போன்ற விழிப்புடனும், மான் போன்ற மருட்சியுடனும், காக்கையைப் போன்ற குறிப்புணர்தலுடனும் தனது கணவனை {ஜரத்காருவை} கவனித்துக் கொண்டாள்[1].(11) ஒரு நாள், தனது தீட்டுக் காலத்திற்குப் பிறகு, அந்த வாசுகியின் தங்கை {பெண் பாம்பான ஜரத்காரு}, முறைப்படி குளித்துத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, தனது தலைவரான அந்த முனிவரை அணுகினாள்.(12) அதன் பிறகு அவள் கருத்தரித்தாள். நெருப்பின் தழல் போன்றும், பெரும் சக்தியுடனும், நெருப்பைப் போன்ற பிரகாசத்துடனும் அந்தக் கரு இருந்தது.(13) வளர்பிறைச் சந்திரன் போல அது வளர்ந்து வந்தது.

[1] இங்கே சொல்லப்பட்டிருக்கும் மூலச் சொல் சுவேதகாகீயம் என்பதாகும். சுவ என்றால் நாய் என்றும், ஏத என்றால் மான் என்றும் காக என்றால் காக்கை என்றும் சிலர் பிரித்துக் கொள்வார்கள்; மற்றும் சிலரோ சுவேதகாகம் என்பது கொக்கு என்றும், மழைக்காலத்தில் கூட்டுக்குள்ளிருக்கும் ஆண் கொக்கைப் பெண்கொக்குக் காப்பாற்றுவது போல உபசரித்தாள் என்று சொல்கிறார்கள்.

ஒருநாள் பெரும் புகழ் வாய்ந்த ஜரத்காரு, தனது மனைவியின் மடியில் படுத்து சிறிது நேரத்திற்குள் களைப்புற்றவர் போலத் தூங்கிக் கொண்டிருந்தார். அப்படி அவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது, சூரியன் மேற்கு மலைகளில் உள்ள தன் இல்லத்திற்குள் புகுந்து மறையத் தொடங்கினான்.(14,15) ஓ பிராமணரே! {சௌனகரே}, பகல் அப்படி ஒளியிழந்து கொண்டிருந்த போது, வாசுகியின் சிறந்த தங்கை {ஜரத்காரு} தனது கணவரின் {முனிவர் ஜரத்காருவின்} அறம் அழிந்துவிடுமே என்ற அச்சத்தினால் சிந்தித்தாள்.(16) "நான் இப்போது என்ன செய்வது? எனது கணவரை எழுப்பலாமா வேண்டாமா? தமது அறக் கடமைகளில் அவர் நேரம் தவறாதவராகவும், {அதற்கென} இன்னல்களை அடைய தயாராகவும் இருப்பாரே. அவரைக் கோபப்படுத்தாதவாறு நான் எப்படிச் செயல்படுவது?(17) ஒன்று அவரது கோபத்திற்கு ஆளாக வேண்டும். அல்லது இந்த அறம் சார்ந்த மனிதனின் அறம் கெட்டுப்போக வேண்டும். அறத்தை இழப்பதுவே இந்த இரு தீமைகளில் தீங்கானது என்று நான் எண்ணுகிறேன்.(18) நான் எழுப்பினால் இவரின் கோபத்துக்கு ஆளாவேன். {ஆனால்} இவரது வேண்டுதல்கள் இல்லாமல் மாலை {சந்தியாகாலம்} கரையுமானால், இவர் நிச்சயமாக அறத்தை இழந்துவிடுவார்" என்று நினைத்தாள்.[2] (19)





[2] மனைவி ஜரத்காரு தன் கணவனை எழுப்பினாலும் அவர் கோபித்துக் கொள்வார். எழுப்பாவிட்டாலும் அறம் பிறழ வைத்ததற்காக கோபித்துக் கொள்ளுவார். எனவே எழுப்புவதே மேல். அவரது அறமாவது பிறழாமல் இருக்கட்டுமென நினைத்தாள்.

இனிய சொல்கொண்ட வாசுகியின் தங்கையான அந்த ஜரத்காரு, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து, தனது தவத் துறவுகளால் ஒளிர்ந்தவரும், நெருப்பின் தழலைப் போலப் படுத்துக் கிடந்தவருமான முனிவர் ஜரத்காருவிடம் மென்மையாகப் பேசினாள். அவள் {வாசுகியின் தங்கை ஜரத்காரு}, "ஓ பெரும் நற்பேறுடையவரே! {முனிவர் ஜரத்காருவே}, கதிரவன் மறைகிறான் எழுந்திருப்பீராக.(20,21) ஓ கடுந்தவங்கள் செய்வரே, ஓ சிறப்புமிக்கவரே, நீரால் உங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு, விஷ்ணுவின் பெயரை உச்சரித்துச் செய்யப்படும் மாலை வேண்டுதல்களைச் செய்வீராக. மாலை வேள்விக்கான நேரமாகிவிட்டது.(22) சந்தி வெளிச்சம் (பகலும்  இரவும் சந்திக்கும் வேளையில் இருக்கும் வெளிச்சம்) இப்போது கூட மேற்கு புறத்தில் மென்மையாகச் சூழ்ந்திருக்கிறது {சிறிது இருக்கிறது}" என்றாள் {வாசுகியின் தங்கை ஜரத்காரு}.

இப்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டவரும், சிறந்த தவத்தகுதிகள் கொண்டவருமான புகழ்பெற்ற ஜரத்காரு,(23) கோபத்தால் மேல் உதடுகள் துடிக்கத் தன் மனைவியிடம், "நாகர்குலத்தில் {உதித்த} இனிமையானவளே, நீ என்னை அவமதித்தாய்.(24) இனி ஒருக்காலும் உன்னுடன் இருக்க மாட்டேன். நான் எங்கிருந்து வந்தேனோ அங்கேயே செல்கிறேன். ஓ அழகிய தொடைகளைக் கொண்டவளே. நான் உறங்கி கொண்டிருந்தேனேயானால், சூரியனுக்கு வழக்கமான நேரத்தில் மறையும் சக்தி கிடையாது என்பதை இதயப்பூர்வமாக நம்புகிறேன், அவமதிக்கப்பட்ட மனிதன், தான் அவமதிக்கப்பட்ட இடத்தில் வாழக்கூடாது.(25,26) அதுவும் என்னைப் போன்ற அறம் சார்ந்தவர்கள் {அப்படி வாழ} கூடவே கூடாது" என்றார். தனது கணவனால் {முனிவர் ஜரத்காருவால்} இப்படிச் சொல்லப்பட்ட வாசுகியின் தங்கை ஜரத்காரு, அச்சத்தால் நடுங்கியவாறு,(27) "ஓ பிராமணரே! {முனிவர் ஜரத்காருவே}, அவமதிக்க விரும்பி நான் உம்மை எழுப்பவில்லை. உமது அறம் கெட்டுவிடக்கூடாது என்றே எழுப்பினேன்" என்றாள் {பெண் பாம்பான ஜரத்காரு}.(28)

கோபவசப்பட்டவரும், பெரும் ஆன்மிகத் தகுதி கொண்டவருமான முனிவர் ஜரத்காரு, தன் மனைவியைக் கைவிட விரும்பி, தன் மனைவியிடம் இப்படிப் பேசினார், “ஓ அழகானவளே! ஒருபோதும் நான் பொய்மை பேசியதில்லை. எனவே, நான் செல்வேன்.(29,30) இதுவே நமக்குள்ளான உடன்பாடாகும். ஓ இனியவளே! நான் உன்னுடன் காலத்தை மகிழ்ச்சியாகக் கழித்தேன். ஓ அழகானவளே! நான் சென்ற பிறகு, நான் உன்னை விட்டுச் சென்றேன் என்பதை உன் தமையனிடம் நீ சொல்வாயாக. நான் செல்வதால், எனக்காக நீ வருந்துவது உனக்குத் தகாது” என்றார் {ஜரத்காரு}.(31,32)

இப்படிக் குற்றமில்லாத அங்கங்களை உடையவளான வாசுகியின் அழகான தங்கை {ஜரத்காரு}, பதற்றத்தாலும், துயரத்தாலும் நிறைந்து, அவள் நெஞ்சம் நடுங்கி கொண்டிருந்தாலும், போதுமான அளவு தைரியத்தையும், பொறுமையையும் வரவழைத்துக்கொண்டு முனிவர் ஜரத்காருவிடம் பேசினாள். அவளது வார்த்தைகள் கண்ணீரால் தடைபட்டு வெளிவந்தது. அவளது முகம் பயத்தால் மங்கியது. அவள் தனது கரங்களைக் குவித்து, கண்ணீரில் குளித்த கண்களுடன், "என்னிடம் குற்றம் இல்லாத போது என்னைவிட்டு நீர் பிரிவது தகாது.(33-35) நீர் அறத்தின் பாதையில் செல்பவர். எனது உறவினர்களின் நன்மையைக் கருதிக் கொண்டு நானும் அதே பாதையில்தான் போகிறேன். ஓ பிராமணர்களில் சிறந்தவரே! {முனிவர் ஜரத்காருவே}, என்ன காரணத்திற்காக நான் உம்மிடம் ஒப்படைக்கப்பட்டேனோ,(36) அந்தக் காரியம் நிறைவேறவில்லையே. நற்பேறற்றவளான என்னிடம் வாசுகி என்ன கேட்பான்? ஓ அருமையானவரே! தாயின் {கத்ருவின்} சாபத்தால் பாதிக்கப்பட்ட எனது உறவினர்கள் {எனது} மகனை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அந்தக் காரியம் இன்னும் நிறைவேறவில்லையே! என் உறவினர்களின் நன்மையானது உம்மிடமிருந்து {நான்} ஒரு மகனை பெறுவதையே சார்ந்திருக்கிறது.(37,38) உம்முடனான எனது தொடர்பு பலனளிக்காமல் போகக்கூடாது என்பதற்காகவும், ஓ சிறப்புமிக்க பிராமணரே! குலத்திற்கு நன்மை செய்யும் விருப்பத்தினாலும் நான் உம்மிடம் வேண்டிக் கொள்கிறேன். ஓ அருமையானவரே, உயரான்மாவே, நான் குற்றமற்றவளாக இருக்கும்போது, நீர் ஏன் விலகுகிறீர்? இஃது எனக்குப் புரியவில்லை?" என்றாள்.(39,40)

இப்படிக் கேட்கப்பட்ட பெரும் தவ தகுதிகள் வாய்ந்த முனிவர் ஜரத்காரு, தனது மனைவியிடம் {வாசுகியின் தங்கை ஜரத்காருவிடம்} அந்தச் சூழ்நிலைக்குத் தக்க வார்த்தைகளைப் பேசினார்.(41) அவர், "ஓ நற்பேறுபெற்றவளே! நீ கருவுற்றிருக்கிறாய் என்பதை அறிந்து கொள். அறத்தில் சிறந்து, வேதங்களிலும் அதன் கிளைகளிலும் புலமை கொண்டு, அக்னிக்கு நிகரான ஒரு முனிவனின் ஆன்மா உன்னுள் இருக்கிறது" என்றார் {முனிவர் ஜரத்காரு}.(42) "இப்படிச் சொல்லிவிட்டு, அந்த அற ஆன்மா கொண்ட பெருமுனி ஜரத்காரு, மீண்டும் கடுந்தவங்களைப் பயிலத் தமது இதயத்தில் உறுதியான எண்ணங்கொண்டு {தமது வழியே} சென்றார்" {என்றார் சௌதி}.(43)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்