Sunday, March 17, 2013

ஆஸ்தீகர் உறுதி! | ஆதிபர்வம் - பகுதி 54

Promise of Astika! | Adi Parva - Section 54 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 42)

பதிவின் சுருக்கம் : ஆஸ்திகருக்கு ஜரத்காரு பழைய வரலாறுகளைத் தெரிவித்தாள்; ஆஸ்தீகர் பாம்புகளை விடுவிக்க உதவுவதாக வாக்களிப்பது; வேள்வி அரங்கில் நுழைந்த ஆஸ்தீகர்...

சௌதி சொன்னார், "அதன்பிறகு, அந்த நாகமங்கை ஜரத்காரு, தனது மகனை {ஆஸ்தீகனை} அழைத்து, பாம்புகளின் மன்னன் வாசுகி சொன்னபடி பேசினாள்.(1) அவள், "ஓ மகனே! {ஆஸ்தீகனே} எதற்காக நான் எனது தமையனால் {வாசுகியால்} உனது தந்தைக்கு {ஜரத்காருவுக்கு} அளிக்கப்பட்டேனோ அந்தக் குறிக்கோளை அடைய இப்போது நேரம் வந்து விட்டது. எனவே, எது செய்யப்பட வேண்டுமோ அதைச் செய்" என்றாள் {பெண் பாம்பு ஜரத்காரு}.(2)

ஆஸ்தீகர், "ஓ தாயே!{ஜரத்காருவே}, மாமா {பாம்பு மன்னன் வாசுகி} ஏன் உன்னை எனது தந்தைக்கு {முனிவர் ஜரத்காருவுக்கு} மணமுடித்துக் கொடுத்தார்? உண்மை முழுமையும் சொல்வாயானால், அதைக் கேட்டதும் நான் தகுந்ததைச் செய்ய ஏதுவாக இருக்கும்" என்றார்.(3)

தனது உறவினர்களின் நன்மையில் விருப்பம் கொண்டவளும், துயரத்தால் கலங்காதவளுமான, அந்தப் பாம்புகள் மன்னனின் {வாசுகியின்} தங்கை ஜரத்காரு,(4) "ஓ மகனே! {ஆஸ்தீகனே}, பாம்புகள் அனைவருக்கும் தாய் கத்ரு என்று அறியப்படுகிறாள். கோபத்தால் தனது மைந்தர்களை {பாம்புகளை} அவள் {கத்ரு} ஏன் சபித்தாள் என்பதை அறிந்து கொள்வாயாக.(5)

அவள் {கத்ரு}[1] பாம்புகளிடம், "வினதையைப் பந்தயத்தில் வீழ்த்தி எனது அடிமையாக்கிக் கொள்ள, அந்தக் குதிரைகளின் இளவரசன் உச்சைஸ்ரவஸின் பொய்யான தோற்றமுண்டாக்க நீங்கள் {பாம்புகள்} மறுத்ததால், வாயுவைச் சாரதியாகக் கொண்டவன் {அக்னியானவன்}, ஜனமேஜயன் வேள்வியில் உங்களை எரிக்கட்டும். அங்கே அழிந்து மீட்கப்படாத ஆவிகளின் உலகத்தை {யமலோகத்தை} நீங்கள் {பாம்புகளாகிய நீங்கள்} அடைவீர்கள்" என்றாள்.(6,7)

[1] கத்ரு பாம்புகளைச் சபித்த விவரங்களை ஏற்கனவே ஆதிபர்வம் - பகுதி 16 மற்றும் பகுதி 20 ஆகியவற்றில் கண்டோம்.

இதைக் கேட்ட அனைத்து உலகங்களின் பெருந்தகப்பன் {பிரம்மன்} அவளிடம் {கத்ருவிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி அவளது சாபத்தை அங்கீகரித்தான்.(8) {உன் தாய்மாமனான பாம்புகளின் மன்னன்} வாசுகி, அந்தச் சாபத்தையும், பெருந்தகப்பனின் {பிரம்மனின்} வார்த்தைகளையும் கேட்டு, அமுதம் கடையப்பட்ட சந்தர்ப்பத்தில் தேவர்களின் பாதுகாப்பை நாடினார்.(9) ஓ குழந்தாய்! {ஆஸ்தீகனே} தேவர்கள் சிறந்த அமுதத்தை அடைந்து, தங்கள் காரியம் நிறைவேறியதும், வாசுகியை முன்னிட்டுக் கொண்டு பெருந்தகப்பனைச் {பிரம்மனைச்} சந்தித்தனர்.(10) அந்தச் சாபத்தை விலக்க மன்னனான வாசுகியுடன் அனைத்துத் தேவர்களும், தாமரையில் பிறந்தவனிடம் {பிரம்மனிடம்} மன்றாடினர்.(11)

தேவர்கள், "ஓ தலைவா! {பிரம்மனே} பாம்புகள் மன்னன் வாசுகி, தனது உறவினர்களை நினைத்து வருந்துகிறான். அவனது தாயின் {கத்ருவின்} சாபத்தை விலக்குவது எவ்வாறு?" என்றனர்.(12) பிரம்மன், "ஜரத்காரு {முனிவர்}, ஜரத்காரு என்ற மங்கையை மனைவியாக வரிப்பான். அவளுக்குப் பிறக்கும் பிராமணன் {ஆஸ்தீகன்}, அந்தப் பாம்புகளை விடுவிப்பான்" என்று கூறினான்.(13)

ஓ தேவர்களைப் போன்றவனே {ஆஸ்தீகனே}, அந்த வார்த்தைகளைக் கேட்டவரும், பாம்புகளில் சிறந்தவருமான வாசுகி, வேள்வி நடப்பதற்குச் சிறிது காலம் முன்னர், என்னை உனது உயர் ஆன்மத் தந்தைக்கு {முனிவர் ஜரத்காருவிற்கு} மணமுடித்துக் கொடுத்தார்.(14) அந்தத் திருமணத்தால் நீ எனக்குப் பிறந்தாய். இப்போது அந்த நேரம் வந்துவிட்டது. எங்களை இந்த ஆபத்தில் இருந்து நீதான் காக்க வேண்டும்.(15) என்னை உனது விவேகமுள்ள தந்தைக்கு {முனிவர் ஜரத்காருவிற்கு} அளித்த காரணம் நிறைவேற எனது தமையனையும் {வாசுகியையும்}, என்னையும் {பெண் பாம்பு ஜரத்காருவையும்} அந்த நெருப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும். நீ என்ன நினைக்கிறாய் மகனே?" என்று கேட்டாள் {பெண் பாம்பான ஜரத்காரு}."(16)

சௌதி தொடர்ந்தார், "இவ்வாறு சொல்லப்பட்ட ஆஸ்தீகர், தனது தாயிடம் {ஜரத்காருவிடம்}, "ஆம், நான் நிறைவேற்றுவேன்" என்று சொல்லிவிட்டு, கலக்கமடைந்திருந்த வாசுகியிடம் அவனுக்கு உயிர் கொடுப்பது போல,(17) "ஓ வாசுகி! பாம்புகளில் சிறந்தவரே, உயர்ந்தவரே, அந்தச் சாபத்திலிருந்து உம்மை விடுவிப்பேன் என்று உமக்கு உண்மையாகச் சொல்வேன்.(18) கவலை கொள்ளாதீர். ஓ பாம்பானவரே! {வாசுகியே!} இனிமேல் எந்தப் பயமும் உமக்கு இல்லை. நன்மையைச் செய்ய நான் கடுமையாக முயற்சிப்பேன்.(19) கேலிக்காக நான் கூறிய வார்த்தைகள்கூட, பொய்த்தது என்று இதுவரை யாரும் சொன்னதில்லை. இதைப் போன்ற முக்கியமான நேரத்தில் நான் கூறுவதற்கு வேறொன்றுமில்லை. ஓ மாமனே! {வாசுகியே} இன்று அங்கு நான் சென்று, வேள்வியில் அமர்ந்திருக்கும் அந்த ஏகாதிபதிக்கு {ஜனமேஜயனுக்கு} எனது வார்த்தைகளில் அருள் கலந்து அவனை {ஜனமேஜயனைத்} மனநிறைவுப்படுத்தி, ஓ அருமையானவரே {வாசுகியே}, அந்த வேள்வியை நிறுத்துகிறேன்.(20-21) ஓ உயர்ந்த மனம் கொண்டவரே! {வாசுகியே} ஓ பாம்புகளின் மன்னரே {வாசுகியே}, நான் சொல்லும் அனைத்தையும் நம்புங்கள். எனது தீர்மானம் நிறைவடையாமல் இருக்காது என்பதை நம்புங்கள்" என்றார் {ஆஸ்தீகர்}.(22)

வாசுகி, "ஓ ஆஸ்தீகா! எனக்கு மயக்கம் வருகிறது. எனது இதயம் உடைகிறது. நான் தாயின் சாபத்தால் பீடிக்கப்பட்டிருப்பதால், திசைகளின் புள்ளிகளை என்னால் காண முடியவில்லை" என்றான்.(23) ஆஸ்தீகர், "பாம்புகளில் சிறந்தவரே {வாசுகியே}, நீர் இனி வருந்தவேண்டியதில்லை. அந்த நெருப்பின் மீதான உமது பயத்தை நான் போக்குகிறேன்.(24) யுகத்தின் முடிவைப் போல் எரியும் நெருப்பைப் போன்ற இந்தத் தண்டனையைப் போக்குகிறேன். உமது பயத்தை வளர்க்காதீர்" என்றார்."(25)

சௌதி தொடர்ந்தார், "பிறகு, பிராமணர்களில் சிறந்தவரான ஆஸ்தீகர், வாசுகியின் இதயத்தில் இருக்கும் பயத்தைப் போக்கி, அதைத் தான் எடுத்துக்கொண்டு, பாம்புகளின் மன்னனின் {வாசுகியின்} நன்மைக்காக, எல்லாச் சிறப்புகளுடனும் கூடிய ஜனமேஜயனின் வேள்விக்கு விரைந்தார்.(26,27) அங்குச் சென்ற ஆஸ்தீகர் அருமையான வேள்வி சாலையையும், அங்கு சூரியனுக்கோ, அக்னிக்கோ ஒப்பான ஒளிபொருந்திய எண்ணற்ற சதஸ்யர்களையும் கண்டார்.(28) ஆனால் வாயில் காப்போரால் அவர் {ஆஸ்தீகர்} உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அந்தப் பெரும் துறவி {ஆஸ்தீகர்} அவர்கள் ஏற்கும்படி அவர்களை வாழ்த்தி வேள்வி நடக்கும் இடத்திற்குள் நுழைந்தார்.(29) பிராமணர்களில் சிறந்தவரும், அறம் மிக்கோரில் முதன்மையானவருமான அந்த ஆஸ்தீகர், அந்த அருமையான வேள்விமண்டபத்திற்குள்ளே நுழைந்ததும், எண்ணற்ற சாதனைகள் புரிந்த மன்னனையும் {ஜனமேஜயனையும்}, ரித்விக்குகளையும், சதஸ்யர்களையும், புனிதமான அக்னியையும் போற்றி வாழ்த்தினார் {ஆஸ்தீகர்}.(30)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்