Sunday, March 17, 2013

ஆஸ்தீகர் புகழ்ச்சி! | ஆதிபர்வம் - பகுதி 55

Adoration of Astika! | Adi Parva - Section 55 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 43)

பதிவின் சுருக்கம் : ஜனமேஜயனையும், மற்றவர்களையும் புகழ்ந்த ஆஸ்தீகர்; அனைவரும் ஆஸ்தீகரிடத்தில் மனநிறைவு அடைந்தனர்…

ஆஸ்தீகர் சொன்னார், "பழங்காலத்தில் பிரயாகையில் சோமனும் வருணனும், பிரஜாபதியும் வேள்விகளைச் செய்தனர். ஆனால் உனது வேள்வி, அவற்றில் எதிலும் குறைந்ததில்லை. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே! {ஜனமேஜயனே} நம் அன்பிற்குரியவர்கள்[1] அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(1) சக்ரன் (இந்திரன்) நூறு வேள்விகளை நடத்தினான். ஆனால் உனது இந்த வேள்வி, அந்தச் சக்ரனின் பத்தாயிரம் வேள்விகளுக்குச் சமமானதாகும். ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே {ஜனமேஜயனே}, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(2) யமன், ஹரிமேதன், ரந்திதேவ மன்னன் ஆகியோரது வேள்வியைப் போலவே உனது வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள்  அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(3) மயன், மன்னன் சசபிந்து, மன்னன் வைஸ்ரவணன் {குபேரன்} ஆகியோரது வேள்வியைப் போலவே உனது இந்த வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள்  அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(4) நிருகன், அஜமீடன், தசரத மைந்தன் {ஸ்ரீராமன்} ஆகியோரது வேள்வியைப் போலவே உனது வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(5)



[1] நம் அன்புக்குரியவர்கள் என்பது உன் அன்பிற்குரியவர்கள் மற்றும் என் அன்பிற்குரியவர்கள் என இரண்டாகப் பிரிந்து பொருள் தரும்.  நாசூக்காக இதை வேள்வியில் சொல்வதன் மூலம் புகழும்பொழுதே என் உறவினர்களுக்கு கருணை காட்டுவாயாக என வேண்டிக் கொள்கிறார் ஆஸ்திகர். நமக்குச் சம்பந்தம் இல்லாதோர் நம் என்னும் வார்த்தையை உபயோகிக்கும் பொழுது நாம் சுதாரித்துக் கொள்ள வேண்டும். 

அஜமீட குலத்தைச் சேர்ந்த தேவ மைந்தன், மன்னன் யுதிஷ்டிரன் நடத்தியதும், தேவலோகத்திலும் அறியப்படுவதுமான வேள்வியைப் போலவே உனது இந்த வேள்வியும் இருக்கிறது.  பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள்  அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(6) தானே தலைமைப் புரோகிதராக இருந்து சத்தியவதியின் மைந்தரான கிருஷ்ணர் {கிருஷ்ண துவைபாயனர்=வியாசர்} நடத்திய வேள்வியைப் போலவே உனது வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள்  அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்!(7) இங்கே இந்த வேள்வியில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர் அனைவரும் (ரித்விக்குகளும், சதஸ்யர்களும்) விருத்திரனைக் கொன்றவனைப் {இந்திரனைப்} போலவும், பிரகாசத்தில் சூரியனுக்கு இணையாகவும் இருக்கிறார்கள். அவர்கள் அறிந்து கொள்ள இனி வேறு எதுவும் இல்லை. அவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள் யாவும் அழிவற்ற தகுதியைப் {புண்ணியத்தைப்} பெறுகின்றன.(8) உனது ரித்விக்கு, துவைபாயனருக்கு {கிருஷ்ண துவைபாயனருக்கு = வியாசருக்கு} இணையான வேறு எந்த ரித்விக்கும் இந்த உலகத்தில் இல்லை என்பது எனது தீர்மானம். அவரது சீடர்கள் ரித்விக்குகளாகி, தங்கள் கடமைகளுக்குத் தகுந்தவர்களாக, உலகம் முழுவதும் பயணிக்கின்றனர்.(9)

விபாவசு என்றும், சித்ரபானு என்றும் அழைக்கப்படுபவனும், தங்கத்தைத் தன் உயிர்வித்தாகக் கொண்டவனும், கரும்புகையால் அடையாளம் காட்டப்படும் பாதையைக் கொண்டவனும், வலப்புறமாக எரியும் சுடர்களைக் கொண்டவனுமான உயரான்மா (அக்னி), உனது இந்தத் தெளிந்த நெய்யை தேவர்களுக்கு எடுத்துச் செல்லுகிறான்.(10) இந்த மனிதர்களின் உலகத்தில், உன்னைப் போல் குடிகளைக் காக்கும் மன்னன் இன்னொருவன் இல்லை. உனது விரதங்களால் நான் எப்போதும் பெருமை கொள்கிறேன். உண்மையில் நீயே வருணனும், நீதிதேவன் யமனும் ஆவாய்.(11)

வஜ்ரத்தைக் கைகளில் தாங்கியிருக்கும் சக்ரனைப் {இந்திரனைப்} போல இந்த உலகத்திலுள்ள அனைத்து உயிர்களையும் நீயே காக்கின்றாய். இவ்வுலகில் வேள்வி செய்வதில் உனக்கு இணையான பெருமை கொண்ட வேறு எந்த மனிதனோ, எந்த ஏகாதிபதியோ எவனும் இல்லை.(12) நீ கட்வாங்கன், நாபாகன், திலீபன் ஆகியோரைப் போன்றவன். ஆற்றலில் நீ யயாதியைப் போலவும், மாந்தாதா போலவும் இருக்கிறாய். சூரியனைப் போன்ற பிரகாசமும், அற்புதமான சபதங்களும் ஏற்றிருக்கும் ஓ ஏகாதிபதியே, நீ பீஷ்மரை போல் இருக்கின்றாய். சிறந்த நோன்புகளில் நீ பீஷ்மரைப் போன்றவனாவாய்.(13) வால்மீகியைப் போல உனது சக்தியை மறைத்து வைத்திருக்கிறாய். வசிஷ்டரைப் போல உனது கோபத்தை அடக்கி வைத்திருக்கிறாய். இந்திரனின் தலைமையைப் போல உனது தலைமையும் இருக்கிறது. உனது காந்தி{மனதைக் கவரும் ஈர்ப்புத்தன்மை} நாராயணனைப் போல இருக்கிறது.(14) நீதி வழங்குவதில் யமனைப் போல இருகின்றாய். அனைத்து அறங்களும் கொண்ட கிருஷ்ணனைப் போல இருக்கிறாய். நீயே வசுக்களின் நற்பேறுகள் நிறைந்த வீடு. எல்லா வேள்விகளுக்கும் அடைக்கலம் கொடுப்பவன் நீயே.(15) தாம்வோபவனின் பலத்திற்கு ஈடாக உனது பலம் இருக்கிறது. ராமனைப் (ஜமதக்னி மைந்தன் பரசுராமன்) போல, சாத்திரங்களிலும், ஆயுதப்பயிற்சியிலும் சிறந்திருக்கிறாய். அவுர்வா மற்றும் திரித்தனின் சக்திக்கு ஈடாக இருக்கிறது உனது சக்தி. உனது பார்வையால் பகீரதனைப் போல அச்சமூட்டுகிறாய்" {என்றார் ஆஸ்தீகர்}.(16)

சௌதி சொன்னார், "ஆஸ்தீகன் இப்படி அவர்கள் அனைவரையும், மன்னனையும் {ஜனமேஜயனையும்}, சத்யஸ்யர்களையும், ரித்விக்குகளையும், வேள்வி நெருப்பையும் வாழ்த்தி மனநிறைவடையச் செய்தார். மன்னன் ஜனமேஜயன், சுற்றியிருக்கும் சூழ்நிலையின் மாறுதல்களைக் {வேள்வி செய்வோரின் குறிப்புகளை} கவனித்துப் பேசினான்” {என்றார் சௌதி}.(17)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்