Sunday, March 17, 2013

தக்ஷகனைப் பாதுகாத்த இந்திரன்! | ஆதிபர்வம் - பகுதி 53

Indra protected Takshaka! | Adi Parva - Section 53 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 41)

பதிவின் சுருக்கம் : வேள்வியை நடத்திய அந்தணர்களின் பெயர்கள்; வேள்வி குறித்து அறிந்த தக்ஷகன் இந்திரனின் பாதுகாப்பை அடைந்தான்; கவலைக்கொண்ட வாசுகி தங்கை ஜரத்காருவிடம் ஆஸ்திகனின் உதவியைக் கோரியது…

சௌனகர், "பாண்டவ குலத்தில் வந்த விவேகியான மன்னன் ஜனமேஜயனின் பாம்பு வேள்வியில், எந்தப் பெரும் முனிவர்கள், ரித்விக்குகளாக இருந்தனர்?(1) பாம்புகளுக்கு அச்சமூட்டியதும், அவைகளுக்குத் துன்பத்தைக் கொடுத்ததுமான அந்தப் பயங்கரமான பாம்பு வேள்வியில் யாரெல்லாம் சதஸ்யர்களாக இருந்தனர்?(2) ஓ சூத மைந்தா! {சௌதியே}, இந்த விவரங்களை விரிவாகக் கூறினால், அந்தப் பாம்பு வேள்வியின் சடங்குகளை யார் அறிந்திருந்தனர் என்று நாங்கள் தெரிந்து கொள்வோம்" என்று கேட்டார்.(3)

அதற்குச் சௌதி, "அந்த ஏகாதிபதியின் {ஜனமேஜயனின்} ரித்விக்குகளாகவும், சதஸ்யர்களாகவும் இருந்த அந்த விவேகிகளின் பெயர்களை நான் உமக்குச் சொல்கிறேன்.(4) சண்டபார்கவர் என்ற பிராமணர் ஹோத்ரியாக அந்த வேள்வியில் இருந்தார். வேதங்களை அறிந்தவர்களில் முதன்மையான அவர் {சண்டபார்கவர்}, சியவனரின் பரம்பரையில் வந்த புகழ் வாய்ந்தவராவார்.(5) கல்விமானும், முதிர்ந்தவரும் பிராமணரான கௌத்சர், வேத சுலோகங்களை உச்சரிக்கும் உத்கத்ரியாக இருந்தார். ஜைமினி பிராமணராகவும், சாரங்கரவர் மற்றும் பிங்களர் அத்வர்யுக்களாகவும்,(6) வியாசர் தனது மகன் {சுகர்} மற்றும் சீடர்களுடனும், உத்தாலகர், பிரமதகர், சுவேதகேது, பிங்களர்[1] ஆத்ரேயர், குண்டர், ஜடரர், காலகடர் என்னும் பிராமணர், வத்ஸ்யர், எப்போதும் ஜபத்திலும், வேதகல்வியிலும் ஈடுபடும் முதிர்ந்த சுருதசிரவஸ், கோஹலர், தேவசர்மர், மௌத்கல்யர், சமசௌரபர் ஆகியோருடன்,(7-9) வேதங்களை முழுவதும் அறிந்த மற்றும் பல பிராமணர்கள் அந்தப் பரீக்ஷித் மைந்தனின் {ஜனமேஜயனின்} வேள்வியில் சதஸ்யர்களாக இருந்தனர்.(10)


[1] மூலத்தில் பிங்களர் இல்லை. மூலத்தில் இவ்விடத்தில் கீழ்கணடவாறு உள்ளது. வியாச புத்திரர் மற்றும் அவர் சீடன், உத்தாலகர், பிரமதகர், சுவேதகேது ஆகிய ஐவரும் சதஸ்யர்களாக  இருந்தனர். அசிது, தேவலர், நாரதர் ஆகிய சிறந்த தேவரிஷிகளுடன் ஆத்ரேயர், குண்டர், ஜடரர், காலகடர் என்னும் பிராமணர், வத்ஸ்யர், எப்போதும் ஜபத்திலும், வேதகல்வியிலும் ஈடுபடும் முதிர்ந்த சுருதசிரவஸ், கோஹலர், தேவசர்மர், மௌத்கல்யர், சமசௌரபர் உள்ளிட்ட பல சன்னியாசிகளும், பிராமணர்களும் இந்த நாக வேள்வியின் சதஸ்யங்களை அறிந்த மற்றும் பலரும் பரீக்ஷித் மைந்தனின் {ஜனமேஜயனின்} வேள்வியில் சதஸ்ய கர்மத்தில் ஆங்காங்கே  உதவினர். சம்ஸ்க்ருதம் அறிந்த நண்பர் தாமரையின் மூலம் கிடைத்த தகவல் இது.

அந்தப் பாம்பு வேள்வியில், ரித்விக்குகள் தெளிந்த நெய்யை நெருப்பில் விட ஆரம்பித்ததும், எல்லா உயிரினங்களிடத்திலும் பயத்தை உண்டாக்கும் பயங்கரமான பாம்புகள் அந்த நெருப்பில் வந்து விழத் தொடங்கின.(11) அப்படி விழுந்த அந்தப் பாம்புகளின் கொழுப்பும், மஜ்ஜையும் {எலும்புக்குள் இருக்கும் சத்தும்} உருகி ஆறுகளாக ஓடின. பாம்புகள் தொடர்ந்து வந்து எரிந்ததால், அந்தச் சுற்றுவட்டாரம் முழுவதும் தாங்கமுடியாத கடும் நாற்றமெடுத்தது.(12) அப்படி நெருப்பில் விழுந்த மற்றும் விழுவதற்கு முன் ஆகாயத்தில் இருந்த அந்தப் பாம்புகளின் கதறல்களும் தொடர்ந்த வண்ணம் இருந்தன.(13)

அதே நேரத்தில், ஜனமேஜயன் பாம்புகளின் யாகத்தை நடத்துகிறான், என்று அறிந்ததுமே, அந்தப் பாம்புகளின் இளவரசன் தக்ஷகன் புரந்தரனின் (இந்திரன்) அரண்மனைக்குக் சென்றான்.(14) அந்தப் பாம்புகளில் சிறந்தவன் {பாம்பு தஷகன்}, நடந்தவைகள் அனைத்தையும் கூறி, தனது தவறுகளை ஏற்றுக் கொண்டு பீதியினால் இந்திரனின் பாதுகாப்பை நாடினான்.(15) {அதைக் கேட்டு} நிறைவடைந்த இந்திரன், "ஓ பாம்புகளின் இளவரசனே, ஓ தக்ஷகா, பாம்பு வேள்வியால் இந்த இடத்தில் உனக்கு எந்தப் பயமுமில்லை.(16) உனக்காக என்னால் பெருந்தகப்பன் {பிரம்மன்} சமாதானம் செய்யப்பட்டார். ஆகையால் உனக்கு எந்தப் பயமும் வேண்டாம். உனது இதயத்தில் இருக்கும் அச்சமானது தணியட்டும்" என்றான் {இந்திரன்}.(17)

சௌதி தொடர்ந்தார், "இப்படி அவனால் {இந்திரனால்} ஊக்குவிக்கப்பட்ட, அந்தப் பாம்புகளில் சிறந்தவன் {தஷகன்} இந்திரனின் இருப்பிடத்திலேயே தங்கி மகிழ்ச்சியுடன் இருந்தான்.(18) ஆனால், வாசுகி {பாம்பு}, இப்படிப் பாம்புகள் தொடர்ந்து நெருப்பில் விழுவதைக் கண்டும், தனது குடும்பம் {பாம்பினம்} ஒரு சில உறுப்பினர்களாகக் குறைக்கப்பட்டதைக் கண்டும் மிகவும் வருந்தினான். பெரும் துயரம் கொண்ட அந்தப் பாம்புகள் மன்னனின் {வாசுகியின்} இதயம் உடையும் நிலையில் இருந்தது. அவன் {பாம்பு மன்னன் வாசுகி} தனது தங்கையை {ஜரத்காருவை} வரவைத்து,(19,20) "ஓ இனிமையானவளே! {ஜரத்காருவே}, எனது உறுப்புகள் எரிகின்றன. தேவலோகத்தின் புள்ளிகள் எனக்குத் தெரியவில்லை. நான் எனது சுயநினைவை இழந்து கீழே விழப்போகிறேன். எனது மனம் குழம்புகிறது {நிலையற்று இருக்கிறது},(21) பார்வை மங்குகிறது, எனது இதயம் உடைகிறது. உணர்விழந்து, இன்று அந்த எரியும் நெருப்பில் விழுந்துவிடப் போகிறேன்.(22)

பரீக்ஷித் மைந்தனின் {ஜனமேஜயனின்} இந்த வேள்வி நமது இனத்தை அழிக்க உருவானதாகும். மரணதேவனின் வசிப்பிடத்திற்கு நானும் செல்ல வேண்டும் என்று தெளிவாகத் தெரிகிறது.(23) ஓ என் தங்கையே! {ஜரத்காருவே}, நம்மையும், நமது உறவினர்களையும் காப்பதற்கு உன்னை எதற்காக ஜரத்காருவுக்கு அளித்தேனோ, அதற்கான நேரம் வந்துவிட்டது.(24) ஓ பாம்பினப் பெண்களில் சிறந்தவளே! {ஜரத்காருவே}, நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேள்வியை ஆஸ்தீகன் தடுத்து நிறுத்துவான், என்று பழங்காலத்தில் பெருந்தகப்பன் என்னிடம் சொல்லியிருக்கிறார்.(25) எனவே, ஓ குழந்தாய்! {ஜரத்காரு} எனது பாதுகாப்புக்காகவும், என்னை நம்பியிருப்பவர்களின் பாதுகாப்புக்காகவும், வேதங்களில் முழுமை கண்டவனும், வயதில் முதிர்ந்தவர்களாலும் மதிக்கப்படுபவனான உனது மைந்தனை {ஆஸ்தீகனைக்} வேண்டிக் கேட்டுக் கொள்வாயாக" என்றான் {பாம்பு மன்னன் வாசுகி}."(26)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்