Wednesday, May 29, 2013

திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் பிறப்பு! - ஆதிபர்வம் பகுதி 106

The Birth of Dhritarashtra, Pandu and Vidura! | Adi Parva - Section 106 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 42)

பதிவின் சுருக்கம் : வியாசரின் மூலம் அம்பிகைக்குப் பிறந்த திருதராஷ்டிரன்; அம்பாலிகைக்குப் பிறந்த பாண்டு; பணிப்பெண்ணுக்குப் பிறந்த விதுரன்...

வைசம்பாயனர் சொன்னார், "கோசல இளவரசியின் மாதவிடாய் முடிந்ததும், சத்தியவதி தனது மருமகளை {அம்பிகையை} நீராட்டிச் சுத்தப்படுத்தி, படுக்கையறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கே இருந்த ஆடம்பரக் கட்டிலில் தனது மருமகளை அமரச் செய்து, அவளிடம் {அம்பிகையிடம்},(1) "ஓ கோசல இளவரசியே {அம்பிகையே}, உனது கணவனின் {விசித்திரவீரியனின்} அண்ணன் இன்று உனது கருவறைக்குள் உனது குழந்தையாக நுழைவான். இன்றிரவு அவனுக்காகத் {வியாசருக்காக} தூங்காமல் காத்திருப்பாயாக" என்றாள்.(2)  தனது மாமியாரின் {சத்தியவதியின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த இனிமையான இளவரசி {அம்பிகை}, பீஷ்மரையும், குரு குலத்தின் பிற மூத்தவர்களையும் நினைத்து அந்தக் கட்டிலில் சாய்ந்திருந்தாள்.(3) அந்த உண்மை நிறைந்த அம்முனிவர் (வியாசர்), தான் அம்பிகையைக் (இளவரசிகளில் மூத்தவள்) குறித்த ஒரு வாக்கை முதலில் கொடுத்திருந்ததால், அவளது அறையில் விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போதே நுழைந்தார்.(4) அந்த இளவரசி {அம்பிகை} அவரது {வியாசரது} கரிய நிறத்தையும், தாமிரக்கம்பிகள் போலச் சிவந்திருந்த சடா முடியையும், எரியும் தழல் போன்ற கண்களையும், கரடு முரடான தாடியையும் பார்த்துப் பயந்து தனது கண்களை மூடிக் கொண்டாள்[1].(5)



[1] கும்பகோணம் பதிப்பில், "பிறகு, பெரும்பாலும் ஜனங்கள் தூங்கிப் போயிருக்கும் பாதி ராத்திரி வேளையில் தீபங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கையில் பகவனான வியாஸ மஹரிஷி கிருகத்தில் பிரவேசித்தார். சொல்தவறாதவரும் பெருந்தவத்திலிருப்பவருமாகிய அந்த வியாஸமஹரிஷி அம்பிகையினிடம் முதலிற்கட்டளையிடப் பட்டிருந்ததனால் அப்போது அவள் சயனத்தினிடம் போனார்." என்றிருக்கிறது.

எனினும், அந்த முனிவர் {வியாசர்}, தனது தாயின் {சத்தியவதியின்} விருப்பத்தை நிறைவேற்றும் விருப்பத்தால் அந்த இளவரசியை {அம்பிகையை} அறிந்தார். அச்சத்திலிருந்த அவள் {அம்பிகை}, கண்ணைத் திறந்து ஒரு முறையேனும் வியாசரைப் பார்க்கவில்லை.(6)  வியாசர் வெளியே வந்த போது, அவரது தாய் {சத்தியவதி} அவரைச் சந்தித்து, "இளவரசி {அம்பிகை} பிள்ளையைப் பெறுவாளா?" என்று கேட்டாள்.(7) அதைக்கேட்டு, "இளவரசி {அம்பிகை} பெறப்போகும் பிள்ளை பத்தாயிரம் யானைகள் பலம் கொண்டவனாக இருப்பான். அவன் சிறந்த அரசமுனியாக இருந்து, பெரும் கல்வியும், புத்திக்கூர்மையும், சக்தியும் பெற்றிருப்பான். அந்த உயர் ஆன்மா தனது காலத்தில் நூறு பிள்ளைகளைப் பெறுவான். ஆனால் அவனது தாயின் {அம்பிகையின்} தவறால் அவன் குருடாகப் பிறப்பான்" என்று வியாசர் பதிலுரைத்தார்.(8-10)

இந்த வார்த்தைகளைக் கேட்ட சத்தியவதி, "ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவனே, குருடாக இருப்பவனால் எவ்வாறு குருக்களுக்குத் தகுந்த ஏகாதிபதியாக முடியும்?(11) குருடாக இருப்பவனால் எவ்வாறு தனது உறவினர்களையும், குடும்பத்தையும், தன் தந்தையுடைய குலத்தின் மகிமையையும் பாதுகாக்க முடியும்? நீ குருக்களுக்கு இன்னும் ஒரு மன்னனைக் கொடுக்க வேண்டும்" என்றாள்.(12) வியாசர் "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிச் சென்று விட்டார். மூத்த கோசல இளவரசி சரியான காலத்தில் ஒரு குருட்டு மகனைப் பெற்றெடுத்தாள்.(13) ஓ எதிரிகளை அழிப்பவனே {ஜனமேஜயனே}, விரைவில் சத்தியவதி, தனது மற்றுமொரு மருமகளிடம் {அம்பாலிகையிடம்} உறுதி பெற்று முன்பு போலவே வியாசரை வரவழைத்தாள்.(14) வியாசர் முன்பு போலவே தனது உறுதிக்கிணங்கத் தனது தம்பியின் {விசித்திரவீரியனின்} இரண்டாவது மனைவியை {அம்பாலிகையை} அணுகினார். அம்பாலிகை அந்த முனிவரைக் {வியாசரைக்} கண்ட பயத்தால் ஒளியிழந்து வெளிறிவிட்டாள். ஓ பாரதா {ஜனமேஜயா}, அவள் {அம்பாலிகை} பயத்தால் வெளிறிப்போவதைக் கண்ட வியாசர் அவளிடம் {அம்பாலிகையிடம்},"எனது கொடும் உருவத்தைக் கண்டு நீ பயத்தால் வெளிறிப் போனதால்,(15-17) ஒளியிளந்து வெளிறிய நிறத்தில் மகனைப் பெறுவாய். ஓ அழகான முகம் கொண்டவளே, உனது மகனின் பெயரும் பாண்டு (மங்கலானவன்) என்று வழங்கப்படும்" என்றார்.(18)

இதைச்சொல்லிவிட்டு அந்தச் சிறப்புமிகுந்த முனிவர் {வியாசர்} அந்த அறையில் இருந்து வெளியே வந்தார். அவர் {வியாசர்} வெளியே வந்தபோது, அவரது தாய் {சத்தியவதி} அவரைச் சந்தித்துக் குழந்தையைப் பற்றிக் கேட்டாள்.(19)  அதற்கு அந்த முனிவர் {வியாசர்} குழந்தை மங்கிய நிறத்தில் பிறந்து பாண்டு என்ற பெயரால் அழைக்கப்படும் என்றார். சத்தியவதி அந்த முனிவரிடம் {வியாசரிடம்} இன்னுமொரு குழந்தையை இரந்து கேட்டாள்.(20)

அந்த முனிவர், "அப்படியே ஆகட்டும்" என்றார். அம்பாலிகை, அவளுக்குரிய காலத்தில் மங்கிய நிறத்தில் ஒரு மகனை ஈன்றெடுத்தாள்.(21) அந்தப் பிள்ளை மிகவும் அழகானவனாக அனைத்து அதிர்ஷ்டக்குறிகளும் பெற்றிருந்தான். அந்தப் பிள்ளையே பின்னாட்களில் பெரும் வில்லாளிகளான பாண்டவர்கள் ஐவரின் தந்தையானான்[2].(22) சிறிது காலத்திற்குப் பிறகு, விசித்திரவீரியனின் மூத்த விதவை {அம்பிகை} தனது மாதவிடாய்க்குப் பிறகு, சத்தியவதியால் வியாசரை அணுகப் பணிக்கப் பட்டாள். தேவலோகத்தைச் சேர்ந்த மங்கை போன்றவளான அழகான அந்த இளவரசி அந்த முனிவரின் {வியாசரின்} கொடும் உருவத்தையும், கடும் நாற்றத்தையும் நினைத்துத் தனது மாமியாரின் உத்தரவை ஏற்க மறுத்தாள். இருப்பினும், அப்சரஸ் போன்ற அழகுடைய தனது தாதிகளில் ஒருத்திக்குத் தனது ஆடை மற்றும் ஆபரணங்களைப் பூட்டி அவரிடம் {வியாசரிடம்} அனுப்பி வைத்தாள். வியாசர் வந்ததும் அந்த மங்கை எழுந்திருந்து அவரை {வியாசரை} வணங்கினாள்.(23-25)

[2] கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகமாக, "பிறகு பிரஸவகாலம் வந்தபோது அம்பாலிகாதேவி ராஜலக்ஷணங்கள் நிரம்பினவனும், ஒளியினால் ஜ்வலிப்பவன் போன்றவனுமாகிய வெண்ணிறமான குமாரனைப் பெற்றாள். அவனுக்குச் சிறந்த வில்லாளிகளாகிய பஞ்சபாண்டவர்களென்னும் புத்ரர்கள் பிறந்தனர். பீஷ்மர் அவ்விரண்டு புத்ரர்களுக்கும் முறையே வேதங்களின் கரைகண்டவர்களாகிய பிராமணர்களைக் கொண்டு ஜாதகர்மம் முதலான கிரியைகளனைத்தையும் சாஸ்திரப்படி க்ரமமாகச் செய்வித்தார். அம்பிகைக்குப் பிறந்த புத்ரன் குருடனாயிருந்ததைக் கண்டு ஸத்தியவதியானவள் தன் புத்ரராகிய வியாஸரையழைத்து, "இவன் பொட்டையன்; அம்பிகைக்கு மற்றுமொரு நல்ல பிள்ளையை நான் விரும்புகிறேன்" என்று சொல்லி அம்பிகைக்காக மற்றொரு புத்ரனை வேண்டினாள். இவ்வாறு வேண்டப்பட்ட வியாஸமஹரிஷி தமது மாதாவை நோக்கி, "அழகான கௌஸல்யை மற்றொருமுறை ஸரியாக இருப்பாளாயின், அவளுக்குத் தர்மசாஸ்திரமும் ராஜநீதிசாஸ்திரமும் தெரிந்த குமாரன் உண்டாவான்" என்று சொன்னார். ஸத்தியவதியானவள் மறுபடியும் தன் மூத்த மருமகளாகிய அம்பிகையைத் தைரியப்படுத்தி ருதுகாலத்தில் அவளை வியாஸரிடம் அனுப்பினாள்" என்றிருக்கிறது.

அவள் அவரை {வியாசரை} மரியாதையுடன் கவனித்துக் கொண்டு, அவர் கேட்டுக்கொண்ட போது அவரருகே அமர்ந்தாள். ஓ மன்னா {ஜனமேஜயா}, கடுந்தவம் இருந்தவரான அம்முனிவர் {வியாசர்} அவளிடம் பெரும் மனநிறைவு கொண்டு,(26) அவளிடம் இருந்து விடைபெறும் முன், "இனிமையானவளே, இனி நீ அடிமையாக {பணிப்பெண்ணாக} இருக்க மாட்டாய். உனது குழந்தை மிகவும் அதிர்ஷ்டசாலி, அவன் அறம் சார்ந்தவனாக இருந்து, இந்தப் பூமியில் புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவனாக இருப்பான்" என்றார்.(27) ஓ மன்னா {ஜனமேஜயா}, கிருஷ்ண துவைபாயனருக்கு {வியாசருக்கு} அவளிடம் பிறந்த மகன் பின்னாட்களில் விதுரன் என்று அழைக்கப்பட்டான். இப்படியே அவன் {விதுரன்} திருதராஷ்டிரனுக்கும், சிறப்புமிகுந்த பாண்டுவுக்கும் சகோதரனானான்.(28) விதுரன் ஆசை மற்றும் விருப்பங்களுக்கு அப்பாற்பட்டவனாக இருந்து ஓர் அரசாங்கத்தின் சட்டங்கள் மற்றும் விதிகளைப் பயின்று அதில் நிபுணனானான். அவனே ஆணிமாண்டவ்யரின் சாபத்தால் பூமியில் பிறந்த தர்மதேவன் {யமன்} ஆவான்.(29) கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்} முன்பைப் போலவே தனது தாயைச் {சத்தியவதியைச்} சந்தித்து மூத்த இளவரசியால் தாம் ஏமாற்றப்பட்டதையும், சூத்திரப் பெண்ணுக்கு மகனைக் கொடுத்ததையும் சொன்னார். அனைத்தையும் சொல்லிவிட்டுத் தனது தாய் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்து போனார்.(30) இப்படியே விசித்திரவீரியனுக்கு உரிமையுள்ள நிலத்தில் {அம்பிகை, அம்பாலிகையிடத்தில்} துவைபாயனருக்கு {வியாசருக்கு}, தேவர்களைப் போன்ற அந்தப் பிரகாசமான குழந்தைகள் குரு பரம்பரையின் தழைக்கச் செய்வதற்காகப் பிறந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(31)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்