Tuesday, May 28, 2013

சத்தியவதி சொன்ன இரகசியம்! | ஆதிபர்வம் - பகுதி 105

The Secret revealed by Satyavati! | Adi Parva - Section 105 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 41)

பதிவின் சுருக்கம் : சத்யவதி தனக்கு ஏற்கனவே பிறந்த வியாசரைக் குறித்துப் பீஷ்மரிடம் சொன்னது; சத்தியவதியின் திட்டத்தை பீஷ்மர் ஏற்பது; வியாசரை நினைத்த சத்தியவதி; சத்தியவதியின் கூற்றை ஏற்ற வியாசர்; தன் மருமகளிடம் பேசிய சத்தியவதி...

பீஷ்மர் சொன்னார், "ஓ தாயே, பாரத அரசமரபின் தொடர்ச்சிக்கான வழிமுறை குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக.(1) ஒரு தகுதிவாய்ந்த பிராமணரை அழைத்து, அவருக்குச் செல்வத்தைக் காணிக்கையாகக் கொடுத்து, விசித்திரவீரியனின் மனைவியரிடத்தில் {அம்பிகை, அம்பாலிகையிடம்} வாரிசுகளை உண்டாக்கலாம்" என்றார்.(2)

"வைசம்பாயனர் தொடர்ந்தார், "சத்தியவதி மெல்லப் புன்னகைத்து, துக்கத்தால் உடைந்த குரலுடன் பீஷ்மரிடம்,(3) "ஓ பெருங்கரத்தையுடைய பாரதா {பீஷ்மா}, நீ சொல்வது உண்மைதான். உன் மீதிருக்கும் நம்பிக்கையில், நமது குலம் விருத்தியடையும் ஒரு வழியைச் சொல்கிறேன்.(4) துன்ப காலங்களில் அனுமதிக்கப்படும் நடைமுறைகளை நீ நன்கறிந்திருப்பதனால் அதை உன்னால் மறுக்க முடியாது என்று நினைக்கிறேன். நமது குலத்தில் நீயே அறம் நிறைந்தவன், நீயே உண்மை நிறைந்தவன், நீயே எங்கள் ஒரே புகலிடம்.(5) எனவே, நான் உண்மையில் என்ன சொல்கிறேன் என்பதைக் கேட்டு, எது முறையோ அதைச் செய்வாயாக. எனது தந்தை {வளர்ப்புத் தந்தை-மீனவர்} ஓர் அறம்சார்ந்த மனிதராவார். அறத்திற்காகவே அவர் ஒரு படகை வைத்திருந்தார்.(6) ஒரு நாள், எனது இளமையின் தொடக்கத்தில், நான் அந்தப் படகில் துடுப்புப் போடச் சென்றிருந்தேன். அப்போது, அறம் சார்ந்தவர்களில் முதன்மையானவரும், பெரும் ஞானமுள்ளவருமான முனிவர் பராசரர், யமுனையைக் கடக்க எனது படகில் ஏறினார்.(7)



நான் நதியின் மீது துடுப்புப் போடும்போது, அந்த முனிவர் {பராசரர்} ஆசையால் தூண்டப்பட்டு என்னிடம் மென்மையான வார்த்தைகளில் பேசினார்.(8) எனது தந்தையைக் குறித்த பயமே எனது மனத்தில் பெரிதாக இருந்தது. ஆனால் முனிவரின் {பராசரரின்} சாபத்தைக் குறித்த பயமே இறுதியாக வென்றது. அவரிடம் ஒரு புனிதமான வரத்தையும் நான் பெற்றதால், என்னால் அவருடைய வேண்டுதலை மறுக்க முடியவில்லை.(9) பெரும் சக்தி வாய்ந்த அந்த முனிவர் {பராசரர்} முதலில் அந்த இடத்தை அடர்த்தியான மூடுபனியால் மறைத்து, அவரது முழுக் கட்டுப்பாட்டிற்குள் என்னைக் கொண்டு வந்து, தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.(10) அதற்கு முன்பு என் உடலில், முகம்சுழிக்க வைக்கும் மீன் நாற்றம் இருக்கும். ஆனால் அந்த முனிவர் அந்த நாற்றத்தை அகற்றி இப்போது என்னிடம் இருக்கும் நறுமணத்தைத் தந்தார்.(11) அந்த முனிவர் {பராசரர்} என்னிடம், அந்த {யமுனை} நதியின் தீவில் அவரது குழந்தையை {வியாசரை} ஈன்றெடுத்தாலும், நான் கன்னித் தன்மையைத் தொடர்வேன் என்றும் சொன்னார்.(12)

என்னுடைய பருவ காலத்தில் என்னிடம் பிறந்த பராசரரின் குழந்தை, பெரும் சக்திகளையுடைய பெரிய முனிவனாகி, துவைபாயனன் (தீவில் பிறந்தவர்) {வியாசர்} என்று பெயரில் அழைக்கப்பட்டான்.(13) அந்தச் சிறப்பு மிக்க முனிவன், வேதங்களை நான்காகப் பிரித்து இந்த உலகத்தில் வியாசன் (பிரிப்பவர் அல்லது ஒழுங்குசெய்பவர்) என்ற பெயரால் அழைக்கப்பட்டான். அவனது கரிய நிறத்திற்காகக் கிருஷ்ணன் (கருப்பன்) என்றும் அழைக்கப்பட்டான்.(14) பேச்சில் உண்மையுடன், ஆசைகளைத் துறந்த அந்தப் பெரும் துறவி, தனது பாவங்களை எரித்து, அவன் பிறந்தவுடனேயே தனது தந்தையுடன் {பராசரருடன்} சென்றுவிட்டான்.(15) உன்னாலும் என்னாலும் இப்பணிக்கு அவன் நியமிக்கப்பட்டால் அந்த ஒப்புயர்வற்ற பிரகாசமுள்ளவன், உனது தம்பியின் {விசித்திரவீரியனின்} மனைவியரிடம் {அம்பிகை, அம்பாலிகையிடம்} நல்ல பிள்ளைகளைப் பெற்றெடுப்பான்.(16) அவன் செல்லும்போது என்னிடம், "தாயே, நீ சிரமப்படும்போது என்னை நினைத்துக் கொள்வாயாக" என்று சொல்லிச் சென்றான். ஓ பெருங்கரமுடைய பீஷ்மா, நீ விரும்பினால், அந்தப் பெரும் துறவியை நான் இப்போது அழைப்பேன்.(17) ஓ பீஷ்மா, நீ விரும்பினால், அத்துறவி விசித்திரவீரியனின் நிலத்தில் {மனைவியரிடத்தில்} பிள்ளைகளைப் பெற்றெடுப்பான் என்பதை உறுதியாகச் சொல்வேன்" என்றாள்.(18)

வைசம்பாணர் தொடர்ந்தார், அந்தப் பெருமுனிவரைப் பற்றிய குறிப்பைச் சொல்லும்போதே பீஷ்மர் தனது கரத்தைக் குவித்துக் கொண்டு, "அந்த மனிதர் {வியாசர்} அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் நீதிகளில் தனது பார்வையைச் செலுத்தும் ஞானியாவார். அவர் பொறுமையாக இருந்து, அறம் எதிர்கால அறத்திற்கும், பொருள் எதிர்காலப் பொருளுக்கும், இன்பம் எதிர்கால இன்பத்திற்கும் இட்டுச்செல்லும் வகையில் நடந்து கொள்பவராவார்.(19,20) எனவே, உன்னால் சொல்லப்படும் காரியம் நமக்கும் நன்மையைத் தந்து, அறத்திற்கும் உட்பட்டே இருக்கும். இஃது ஒரு சிறந்த ஆலோசனை. இதில் எனக்கு முழு ஏற்பும் உண்டு" என்றார்.(21)

ஓ குரு பரம்பரையின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, இப்படிப் பீஷ்மர் சொன்னதும், காளி (சத்தியவதி) துவைபாயன {வியாச} முனிவரை மனத்தால் நினைத்தாள்.(22) வியாசர், வேதங்களை விவரித்துக் கொண்டிருக்கும்போது தனது தாயின் {சத்தியவதியின்} அழைப்பை உணர்ந்து, யாரும் அறியா வண்ணம் அவளிடம் {சத்தியவதியிடம்} வந்தார்.(23) சத்தியவதி தன் மகனை வாரியணைத்து வரவேற்றுத் தனது கண்ணீரால் அவரைக் குளிப்பாட்டினாள்.(24) தன் மகனின் {வியாசரின்} முன்னிலையில் அந்த மீனவ மகள் {சத்தியவதி} நீண்ட நேரம் பெரிதும் அழுதாள். அவளின் {சத்தியவதியின்} முதல் மகனான பெரும் வியாசர், அவள் அழுவதைக் கண்டு, குளிர்ந்த நீரால் அவளது முகத்தைக் கழுவினார். பிறகு அவளிடம் {சத்தியவதியிடம்} பணிந்து,(25) "ஓ தாயே, உனது விருப்பத்தை நிறைவேற்றவே நான் வந்துள்ளேன். எனவே, ஓ அறம்சார்ந்தவளே கால விரயமின்றி எனக்குக் கட்டளையிடுவாயாக. நான் உனது விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்" என்றார்.(26)

பிறகு, பாரதர்களின் குடும்பப் புரோகிதர் வந்து அந்தப் பெரும் முனிவரை {வியாசரை} வழிபட்டார். வியாசர் அந்த வழிபாட்டுகளை ஏற்றுச் சில வழக்கமான மந்திரங்களை உச்சரித்தார்.(27) தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பைக் கண்டு மகிழ்ந்து, அவர் {வியாசர்} தமது ஆசனத்தில் அமர்ந்தார். சத்தியவதி அவர் {வியாசர்} வசதியாக அமர்ந்ததை உறுதி செய்து கொண்டு, சில வழக்கமான விசாரிப்புகளை விசாரித்து, அவரிடம், "ஓ கல்விமானே, மகன்கள் தங்கள் பிறப்பை தந்தை மூலமாகவும் தாய் மூலமாகவும் அடைகின்றனர்.(28,29) எனவே, அவர்கள் இரு பெற்றோருக்கும் (தந்தை - தாய்) பொதுவான சொத்தாகும். தந்தைக்கு இருக்கும் அதே உரிமை தாய்க்கும் இருக்கிறது என்பதில் யாரும் சிறு சந்தேகமும் இருக்காது.(30)

ஓ பிரம்மமுனியே, நிச்சயமாக, விதிப்படி நீயே எனது மூத்த மகனானது போல், விசித்திரவீரியன் எனது இளைய மகன் ஆவான். பீஷ்மன் எப்படித் தந்தைவழியில் விசித்திரவீரியனின் சகோதரனோ அப்படியே நீயும் தாய்வழியில் சகோதரன். நீ என்ன நினைக்கிறாய் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், மகனே {வியாசனே} இதைத் தான் நான் நினைக்கிறேன். சந்தனுவின் மகன் பீஷ்மன் உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பதால், அந்த உண்மைக்காகவே, நாட்டை ஆள்வதற்குப் பிள்ளையைப் பெற விரும்பவில்லை.(31,32) எனவே, ஓ பாவங்களற்றவனே,  உனது தம்பி விசித்திரவீரியனிடம் இருக்கும் பாசத்திற்காகவும், நமது அரசகுலத்தின் பரம்பரை தொடர்ச்சிக்காகவும், பீஷமனின் வேண்டுகோளுக்காகவும் எனது கட்டளையின் பேரிலும், எல்லா உயிர்க்கும் அன்புகூர, அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பை வழங்க, உனது இதயத்தின் சுதந்திரத்துடன், நான் சொல்வதை நீ செய்ய வேண்டும். உனது இளைய சகோதரனின் {விசித்திரவீரியனிடம்} இரு விதவைகள் {அம்பிகை, அம்பாலிகை} இளமையுடனும் பெரும் அழகுடனும் தேவர்களின் மகளைப் போல உள்ளனர்.(33,34)  அறத்திற்காகவும், தர்மத்திற்காகவும், வாரிசு பெற அவர்கள் விருப்பம் கொண்டுள்ளனர். அந்தக் காரியத்திற்கு நியமிக்கப்பட நீயே தகுதிவாய்ந்தவன். எனவே, அவர்களிடம் நமது குலம் தழைக்கவும், நமது பரம்பரையின் தொடர்ச்சிக்காவும் பிள்ளைகளைப் பெறு" என்றாள் {சத்தியவதி}.(35)

இதைக் கேட்ட வியாசர், "ஓ சத்தியவதி, இவ்வாழ்விலும், மறுவாழ்விலும் உள்ள அறத்தின் தன்மைகளை நீ அறிவாய். ஓ பெரும் ஞானம் கொண்டவளே, உனது அன்பும் அறத்திலேயே நிலைத்திருக்கிறது.(36) எனவே, உனது கட்டளையின் பேரில், அறத்தை எனது நோக்கமாகக் கொண்டு, நீ விரும்பியதை நான் செய்வேன்.(37) நிச்சயமாக இந்தச் செயல் நான் அறிந்த உண்மையான மேலுலகத் தர்மத்திற்குக் கட்டுப்பட்டதே, நான் எனது தம்பிக்கு மித்ரனையும் வருணனையும் போன்ற மகன்களைக் கொடுப்பேன். அந்த மங்கையர் ஒரு முழு வருடத்திற்கு நான் சொல்லும் நோன்பைக் கடைப்பிடிக்க வேண்டும். அதனால் அவர்கள் தூய்மையடைவார்கள். கடும் தவம் செய்யாமல் என்னிடம் எந்தப் பெண்மணியாலும் நெருங்க முடியாது" என்றார்.(38,39)

பிறகு சத்தியவதி, "ஓ பாவங்களற்றவனே, நீ சொல்வதுபோலத் தான் இருக்க வேண்டும். ஆனால், அந்த மங்கையர் உடனே கருவுறும்படி ஏதாவது செய்வாயாக. மன்னன் இல்லாத நாட்டில் மக்கள் பாதுகாப்பின்றி அழிந்து போவர். வேள்விகளும் புனிதமான காரியங்களும் தடைப்படும். மேகங்கள் மழையைப் பொழியாது. தேவர்கள் மறைந்து போவர்.(40) மன்னன் இல்லாத நாட்டை எப்படிப் பாதுகாக்க முடியும்? எனவே, அந்த மங்கையர் கருவுற நடவடிக்கை எடுப்பாயாக. அந்தப் பிள்ளைகள் தங்கள் தாயின் கருவறையில் இருக்கும்வரை பீஷ்மன் அவர்களைக் கவனித்துக் கொள்வான்" என்று சொன்னாள்.(41)

வியாசர், "அகாலத்தில் எனது தம்பிக்கு பிள்ளைகளை நான் கொடுக்க வேண்டும் என்றால், அந்த மங்கையர் எனது கோரத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதுவே அவர்கள் கடினமான நோன்பு நோற்றதற்குச் சமமாகும்.(42) கோசல நாட்டு இளவரசியால் எனது கடும் நாற்றத்தையும், கொடும் தோற்றத்தையும், கோரமுகத்தையும், எனது ஆடையையும், எனது உடலையும் தாங்கிக் கொள்ள முடியுமென்றால், அவள் அருமையான பிள்ளையைச் சுமப்பாள்" என்று பதிலுரைத்தார்.(43)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "சத்தியவதியிடம் இப்படிச் சொன்ன பிறகு, பெரும் சக்தி வாய்ந்த வியாசர் அவளிடம், "கோசலத்தின் இளவரசி சுத்தமான ஆடைகளும், ஆபரணங்களும் பூண்டு அவளது படுக்கையறையில் எனக்காகக் காத்திருக்கட்டும்" என்றார். இதைச் சொல்லிவிட்டு அந்த முனிவர் மறைந்து போனார். சத்தியவதி தனது மருமகளைத் தனிமையில் சந்தித்து, நன்மை பயக்கத்தக்க அறம்சார்ந்த வார்த்தைகளைப் பேசினாள், "ஓ கோசல இளவரசி, நான் சொல்வதைக் கேட்பாயாக. இஃது அறத்திற்குக் கட்டுப்பட்டது.(44-46) எனது கேடுகாலத்தால், பாரதர்களின் பரம்பரை அழியப்போகிறது. எனது துயரத்தையும், தனது தந்தையின் குலத்தொடர்ச்சி அழிவதையும் கண்ட பீஷ்மன், நமது குலம் தழைக்க விரும்பி, ஓர் ஆலோசனையை என்னிடம் கூறியிருக்கிறான். இருப்பினும் அந்த ஆலோசனை நிறைவேறுவது உன்னிடமே இருக்கிறது. ஓ மகளே, அதை நிறைவேற்றி, பாரதர்களின் இழந்த பரம்பரையை மீட்டுக் கொடுப்பாயாக.(47,48) ஓ அழகான இடையைக் கொண்டவளே, இந்திரனைப் போன்ற பிரகாசத்துடன் ஒரு பிள்ளையை ஈன்றெடுப்பாயாக. அவன் நமது பரம்பரை வழி வந்த இந்த நாட்டின் சுமையைத் தாங்கிக் கொள்வான்." என்றாள்.(49) சத்தியவதி தான் பேச நினைத்ததைத் தனது அறம் சார்ந்த மருமகளிடம், அறத்திற்குக் கட்டுப்பட்டுத் தனது கோரிக்கையைச் சொல்வதில் பெரும் சிரமத்திற்கிடையில் வெற்றி கண்டாள். அந்தக் கடைசி நேரத்தில் வந்திருந்த பிராமணர்களுக்கும், முனிவர்களுக்கும், கணக்கிலடங்கா விருந்தினர்களுக்கும் உணவளித்தாள்" {என்றார் வைசம்பாயனர்}.(50)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்