Friday, May 03, 2013

யயாதி கண்ட உலகங்கள்! | ஆதிபர்வம் - பகுதி 89

Regions beheld by Yayati! | Adi Parva - Section 89 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 25)

பதிவின் சுருக்கம் : அஷ்டகனுக்கும், யயாதிக்கும் இடையில் நடந்த உரையாடல்; அஷ்டகனின் தாய்வழிப் பாட்டனான யயாதி...

யயாதி, "நான் நகுஷ மைந்தனும், பூருவின் தந்தையுமான யயாதி ஆவேன். அனைத்து உயிரையும் மதிக்காததால், தேவர்கள், சித்தர்கள், மற்றும் முனிவர்களின் உலகத்திலிருந்து, எனது அறத் தகுதிகள் குன்றி நான் விழுந்து கொண்டிருக்கிறேன்.(1) வயதால் நான் உன்னை விட மூத்தவன் என்பதாலேயே நான் உன்னை முதலில் வணங்கவில்லை. நிச்சயம், வயதில் மூத்தவர்களையும், கல்வியில் உயர்வானவர்களையும், தவத் தகுதிகளில் உயர்வானவர்களையும் எப்போதும் பிராமணர்கள் மதிப்பார்கள்" என்றான்.(2)

அஷ்டகன் "ஓ ஏகாதிபதி! வயதால் மூத்தவர்கள் மதிக்கப்பட வேண்டும் என்று நீர் சொல்கிறீர். ஆனால் கல்வியாலும், தவத் தகுதிகளாலும் உயர்ந்தவர்களே வழிபடுவதற்கு உண்மையான தகுதி வாய்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது" என்றான்.(3)

யயாதி, "பாவம் என்பது, நான்கு அறச்செயல்களின் தகுதிகளையும் அழிக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. தற்பெருமையானது ஒருவனை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் பண்புகளில் ஒன்றாகும். அறவோர், தீயவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றமாட்டார்கள்.(4)

தங்கள் தவத் தகுதிகள் அதிகரிப்பதற்கான செயல்களையே அவர்கள் செய்வார்கள். நானும் பெரும் அறத்தகுதிகளைக் கொண்டிருந்தேன். ஆனால் அவையெல்லாம் குன்றிவிட்டன. எனது சிறந்த முயற்சிகளினால் கூட என்னால் அவற்றை மீட்டெடுக்க முடியாது. தனது நன்மையில் அக்கறையுள்ளவன், எனது விதியைக் கண்டு செருக்கற்றவனாக இருப்பானாக.(5)

அப்படிப்பட்டவன் பெரும் செல்வங்களை அடைந்து, அவனது தகுதிகளை வளர்க்கும் வேள்விகளைச் செய்வான். அவன் அனைத்தையும் கற்று, பணிவுள்ளவனாக இருப்பான். அவன் முழு வேதங்களையும் அறிந்து, இவ்வுலகம் சார்ந்த இன்பங்களிலிருந்து விடுபட்டு, ஆன்மீகத்திற்குத் தன்னை அர்ப்பணித்துத் தேவலோகம் செல்வான்.(6)

பெரும் செல்வத்தை அடைந்தவன் எவனும் பேருவகைக் கொள்ளக்கூடாது. முழு வேதங்களையும் அறிந்தவன் எவனும் தகுதிகளற்று இருக்கக் கூடாது. மனிதர்களின் உலகத்தில் பல்வேறு இயற்கைப் பண்புகள் இருக்கின்றன. அங்கே விதியே தலைமையானது. சக்தியும், முயற்சியும் கனியற்றதாக {பயனற்றவையாக} இருக்கின்றன. விதியின் வலிமையை அறிந்த ஞானமுள்ளோர், அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும், பேருவகையோ {செருக்கோ}, துன்பமோ அடையக்கூடாது.(7)

செழுமையும், துக்கமும் விதியைச் சார்ந்தே இருக்கின்றன, தனது முயற்சியாலோ, சக்தியாலோ அல்ல என்பதை அறிந்தவன், விதி வலியது என்பதை உணர்ந்து துயரமோ, பேருவகையோ கொள்ள மாட்டான்.(8)

அறிவுள்ளவன் எப்போதும், துயரங்களில் துன்பப்படாமலும், செழுமையில் பேருவகை கொள்ளாமலும் மனநிறைவுடன் இருப்பான். விதியே தலைமையானது என்று உணரும்போது, துயரமும், பேருவகையும் {செருக்கும்} ஏற்படாது.(9)

ஓ அஷ்டகா, இந்த உலகத்தில் பெரும் சக்தியின் கட்டளைகளை அறிந்த நான், எப்போதும் அச்சமடைவதில்லை; துயரத்தை ஊக்குவிப்பதும் இல்லை.(10)

பூச்சிகளும், புழுக்களும், முட்டையிடும் இனங்களும், தாவர வகைகளும், ஊர்ந்து செல்லும் இனமும், மனித உடலில் வசிக்கும் புழுப் பூச்சிகளும், நீர்களில் இருக்கும் மீன்களும், கற்களும், புற்களும், கட்டைகளும் என அனைத்தும் படைக்கப்பட்டனவே. அவை தனது செயல்களுக்கான விளைவுகளிலிருந்து விலக்கப்படும்போது தலைமை ஆன்மாவோடு (பரமாத்மாவோடு) கலக்கின்றன.(11)

இன்பமும், துன்பமும் நிலையில்லாதன.  எனவே, ஓ அஷ்டகா! நான் ஏன் துயரடைய வேண்டும்? துன்பத்தை விலக்க என்ன செயல் செய்ய வேண்டும் என்பதை நாம் அறிய மாட்டோம்.  எனவே, யாரும் துன்பத்தைக் கண்டு துயருறக்கூடாது" என்றான்.(12)

அஷ்டகனின் தாய்வழிப் பாட்டனான மன்னன் யயாதி, அனைத்து அறங்களையும் தன்னகத்தே கொண்டு அந்தரத்தில் மிதந்து கொண்டு பேசிக்கொண்டிருந்த போது, அந்தப் பேச்சின் முடிவில் அஷ்டகன் அவனைக் கேள்வி கேட்டான்.(13)

அஷ்டகன் "ஓ மன்னர் மன்னா! நீர் எந்த உலகங்களையெல்லாம் கண்டு இன்பமாக இருந்தீர்? ஒவ்வொரு உலகிலும் எவ்வளவு காலம் அப்படி இன்பமாக இருந்தீர்? பேரான்மாக்களின் செயல்களையும், கட்டளைகளையும் அறிந்த சாமர்த்தியமுள்ள குருக்களைப் போல, அறத்தின் கட்டளைகளை உரைக்கின்றீரே!" என்று கேட்டான்.(14)

யயாதி, "நான் இந்தப் பூவுலகில் பெரும் மன்னனாக இருந்தேன். முழு உலகமும் எனது ஆளுகைக்குள் இருந்தது. அதைத் துறந்து, எனது தவத் தகுதிகளை வளர்த்துக் கொண்டு மேலுலகம் அடைந்தேன். நான் அங்கே ஆயிரம் வருடங்கள் இருந்து, மிகவும் உயர்ந்த இடத்திலிருப்பதும், ஆயிரம் கதவுகளை உடையதும், நூறு யோஜனைகள் கொண்டதுமான ஓர் இடத்தில் இருக்கும் இயல்புக்குமிக்க அழகுடைய இந்திரனின் வசிப்பிடத்தை அடைந்தேன். அங்கேயும் நான் ஆயிரம் வருடங்கள் இருந்து, இன்னும் உயரமான இடத்திற்குச் சென்றேன்.(15,16)

அந்த இடத்தில் நிலைத்த மகிழ்ச்சி இருந்தது, அழிவு என்பதே இல்லாத இடமாகவும் அஃது இருந்தது. அந்த இடம் படைப்பாளனும், பூமியின் தலைவனுமானவன் இருக்கும் இடமாகும். அந்த இடத்தை அடைவது மிகவும் கடினம். அங்கேயும் நான் ஆயிரம் வருடங்கள் வசித்தேன்,(17) அதன்பிறகு அதைவிடவும் உயர்ந்த இடமான தேவர்களுக்குத் தேவன் (விஷ்ணு) வசிக்கும் இடத்திற்குச் சென்றேன். அங்கேயும் மகிழ்ச்சியுடன் இருந்தேன். தேவர்களாலேயே கொண்டாடப்படும் பல்வேறு இடங்களில் நான் வசித்தேன்(18). நினைத்த உருவத்தை அடையும் சக்தி பெற்று, நந்தனம் என்ற இடத்தில் இருக்கும் நந்தவனத்தில் அப்சரஸ்களுடன் விளையாடிக்கொண்டு, கோடி வருடங்கள் வாழ்ந்தேன். அங்கே கணக்கிலடங்கா வண்ண வண்ண மலர்களையும், நறுமணத்தை உடைய அழகான மரங்களையும் கண்டேன்.(19)

இப்படியே பல வருடங்கள் கடந்து, நித்தியமான மகிழ்ச்சியை நான் அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, ஓ மன்னா, ஓ மன்னர்களில் சிம்மத்தைப் போன்றவனே, ஒரு நாள், தேவதூதன் ஒருவன் கடுமையான முகபாவத்துடனும், சத்தத்துடனும், ஆழ்ந்த பெருங்குரலுடனும், "கேடு வந்தது! கேடு வந்தது! கேடு வந்தது!" என்று மூன்று முறை சத்தமிட்டது மட்டுமே என் நினைவிலிருக்கிறது.(20) நான் எனது அறத்தகுதிகளை இழந்து நந்தனத்திலிருந்து விழுந்தேன். அப்போது வானத்திலிருந்து தேவர்கள்,(21) "அந்தோ! என்னவொரு தீயூழ் {துரதிர்ஷ்டம்}. அறம் சார்ந்தவனாக இருந்தும், புனிதமான கடமைகளைச் செய்திருந்தும், யயாதி தனது தவத் தகுதிகளை இழந்து விழுந்து கொண்டிருக்கிறானே" என்று துயருற்றுச் சொல்லினர். அப்போது நான் விழுந்து கொண்டிருந்தேன். நான் அவர்களிடம் சத்தமாக, "தேவர்களே, நான் விழப்போகும் ஞானமுள்ளோர் இருக்கும் இடம் எங்கே இருக்கிறது? என்று கேட்டேன்.(22) அவர்கள் உங்களுக்குச் சொந்தமான இந்தப் புனிதமான வேள்விகள் நடக்கும் இடத்தைக் காண்பித்தனர். வேள்விநெருப்பில் ஊற்றப்படும் நெய்யால் உருவாகும் சுற்றுப்புறத்தைக் கருமையாக்கிக் கொண்டு வரும் சுருண்ட புகையைக் கண்டேன். அதன் வழிகாட்டுதல்படி, நான் உங்கள் பகுதியை அணுகிக் கொண்டிருக்கிறேன். உங்கள் இடத்திற்கு வந்ததில் இதயத்தால் மகிழ்கிறேன்" என்றான்.(23)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்