Sunday, July 07, 2013

பொறாமை கொண்ட துரியோதனன்! - ஆதிபர்வம் பகுதி 143

Jealousy of Duryodhana | Adi Parva - Section 143 | Mahabharata In Tamil

(ஜதுக்கிரகப் பர்வம் - 1)

பதிவின் சுருக்கம் : அரக்கு மாளிகை எரியூட்டப்பட்ட வரலாற்றைச் சுருக்கமாகச் சொன்ன வைசம்பாயனர்; துரியோதனனுக்கும், திருதராஷ்டிரனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...

Jealousy of Duryodhana
Adi Parva - Section 143 | Mahabharata In Tamil
வைசம்பாயனர் தொடர்ந்தார், "சுபலனின் மகனும் (சகுனியும்), மன்னன் துரியோதனனும், துச்சாசனனும், கர்ணனும் ஒருவருக்கு ஒருவர் ஆலோசனை செய்து ஒரு தீய திட்டத்தை வகுத்தனர்.(1) குரு குல மன்னன் திருதராஷ்டிரனின் சம்மதத்தைப் பெற்றுக் குந்தியையும், அவளது மைந்தர்களையும் எரித்துவிட அவர்கள் தீர்மானித்தனர்.(2) ஆனால், மேலோட்டமான குறிப்புகளைக் கொண்டே இதயத்தைப் படிக்கும் வல்லமைபெற்றவனும், ஞானியுமான விதுரன், இந்தத் தீயவர்களின் வதனத்தைக் கவனித்தே அவர்களது நோக்கத்தைப் புரிந்து கொண்டான்.(3) பாண்டவர்களின் நன்மைக்குத் தன்னை அர்ப்பணித்தவனும், உண்மை அறிவும், ஞான ஆன்மாவும் கொண்டவனும், பாவங்களற்றவனுமான அந்த விதுரன், குந்தியும் அவளது மைந்தர்களும் எதிரிகளிடம் இருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தான்.(4)


அதன் பொருட்டுப் பெரும் காற்றையும், கடும் அலைகளையும் சமாளிக்கும் ஒரு படகைக் கொணர்ந்த விதுரன், குந்தியிடம்,(5) "இந்தத் திருதராஷ்டிரர் (குரு) குலத்தின் பெருமைகளையும், வாரிசுகளையும் அழிக்கப் பிறந்திருக்கிறார். தனது தீய ஆன்மாவால், நித்தியமான அறத்தை அவர் கைவிடப்போகிறார்.(6) ஓ! அருளப்பட்டவளே, காற்றிலும், அலைகளிலும் நிலைத்து நிற்கும் ஒரு படகை இந்த நீரோட்டத்தில் தயாராக வைத்திருக்கிறேன். உங்களைச் சுற்றி மரணம் விரித்திருக்கும் வலையிலிருந்து, அப்படகில் ஏறி உனது மைந்தர்களுடன் தப்பித்துக் கொள்வாயாக" என்றார்.(7)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, இந்த வார்த்தைகளைக் கேட்ட சிறப்பு வாய்ந்த குந்தி, பெரிதும் துயரடைந்தாள். தனது மைந்தர்களுடன், அந்தப் படகில் அடியெடுத்து வைத்து, கங்கையில் சென்றாள்.(8) பாண்டவர்கள், விதுரனின் ஆலோசனைப்படி, அந்தப் படகைக் கைவிட்டு, தங்கள் எதிரிகள் (தாங்கள் வாரணாவதத்தில் இருந்த போது) கொடுத்த செல்வத்தை எடுத்துக் கொண்டு அடர்ந்த கானகத்திற்குள் பாதுகாப்பாக நுழைந்தனர்.(9) இருப்பினும், பாண்டவர்களின் அழிவுக்காகக் கட்டப்பட்டிருந்த அரக்கு வீட்டில், ஏதோ ஒரு காரணத்திற்காக அங்கு வந்திருந்த ஓர் அப்பாவி நிஷாதப் {வேடுவப்} பெண்மணி, தனது மைந்தர்களுடன் எரிந்து போனாள்.(10) {அந்த அரக்கு வீட்டைக் கட்டிய} மிலேச்சர்களில் இழிந்தவனான பாவி புரோச்சனனும் அந்த நெருப்பில் எரிந்து போனான். இப்படியே திருதராஷ்டிரனின் மைந்தர்கள் தங்கள் ஆலோசகர்களுடன், அவர்களது எதிர்பார்ப்புகளில் ஏமாற்றப்பட்டனர் {பாண்டவர்கள் எரிந்தார்கள் என்று நம்பி அவர்கள் ஏமாந்தனர்}.(11)

இப்படியே விதுரனின் ஆலோசனையால், சிறப்பு வாய்ந்த பாண்டவர்கள் தங்கள் தாயுடன் காக்கப்பட்டனர். ஆனால், (வாரணாவத) மக்கள், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை அறியவில்லை.(12) அரக்குவீடு எரிவதைக் கண்ட வாரணாவத மக்கள் (பாண்டவர்கள் எரிந்து இறந்துவிட்டதாகக் கருதி) பெரிதும் வருத்தப்பட்டனர்.(13) அவர்கள் மன்னன் திருதராஷ்டிரனிடம் நடந்தது அத்தனையும் தெரியப்படுத்தத் தங்கள் தூதர்களை அனுப்பினர். அவர்கள் அந்த ஏகாதிபதியிடம் சென்று, "உமது இலக்கை நீர் அடைந்துவிட்டீர். இறுதியாக, பாண்டவர்களை நீர் எரித்துக் கொன்றுவிட்டீர்!(14) ஓ! குரு குல மன்னா {திருதராஷ்டிரரே}, உமது விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டு, உ்மது பிள்ளைகளுடன் இந்த நாட்டை மகிழ்ச்சியாக அனுபவிப்பீராக" என்றனர். இதைக் கேட்ட திருதராஷ்டிரனும் அவனது பிள்ளைகளும், தங்கள் உறவினர்களையும், க்ஷத்திரியையும் (விதுரனையும்), குரு குலத்தில் முதன்மையான பீஷ்மரையும் சேர்த்துக் கொண்டு, தாங்கள் துக்கமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டு, பாண்டவர்களுக்கு இறுதி மரியாதைகளைச் செய்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(15,16)

ஜனமேஜயன், “ஓ! பிராமணர்களில் சிறந்தவரே {வைசம்பாயனரே}, அரக்கு வீடு எரிந்த வரலாற்றையும், அதிலிருந்து பாண்டவர்கள் தப்பித்த வரலாற்றையும் நான் முழுவதுமாகக் கேட்க விரும்புகிறேன்.(17) தீயவரின் (கணிகரின்) ஆலோசனைகளைக் கேட்டு, செயல்பட்ட அவர்கள் செய்த (கௌரவர்கள்) செயல் கொடுஞ்செயலாகும். நடந்த வரலாறு அத்தனையும் எனக்குச் சொல்வீராக. நான் அதைக் கேட்கும் ஆர்வத்தால் எரிந்து கொண்டிருக்கிறேன்" என்று கேட்டான்.(18)

வைசம்பாயனர் சொன்னார், “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, அரக்கு மாளிகை எரிந்ததையும், ஓ! ஏகாதிபதி! பாண்டவர்கள் தப்பியதையும் பற்றி நான் இப்போது உரைக்கக் கேட்பாயாக.(19) பலத்தால் பீமசேனனும், ஆயுதச் சாதனைகளால் அர்ஜுனனும் விஞ்சியிருப்பதைக் கண்ட தீய துரியோதனன் வருத்தத்துடன் சிந்தனையில் ஆழ்ந்தான்.(20) சூரியனின் மகனான கர்ணனும், சுபலனின் மகனான சகுனியும் பல வழிகளில் பாண்டவர்களின் மரணத்திற்காக முயன்றனர்.(21) பாண்டவர்களும், ஒன்றன்பின் ஒன்றாக அவற்றைத் தடுத்துவிட்டு, விதுரனின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்து அவற்றைப் பற்றி எப்போதுமே பேசாமலிருந்தனர்.(22)

ஓ! பாரதா {ஜனமேஜயா}, பாண்டு மைந்தர்களின் சாதனைகளைக் கண்ட குடிமக்கள், பொது இடங்கள் அனைத்திலும் அவர்களைப் பற்றியே பேசத் தொடங்கினர்.(23) மாளிகை முற்றத்திலும், மற்ற இடங்களிலும் கூடிப் பாண்டுவின் மூத்த மகனே (யுதிஷ்டிரன்), நாட்டை ஆளும் தகுதியைப் பெற்றவன் என்று அவர்கள் பேசினர்.(24) அவர்கள், "திருதராஷ்டிரன், அறிவுக்கண் கொண்டவனாக இருந்தாலும் (பிறவியிலேயே) பார்வையற்றவனாக இருப்பதால், முன்பே அவனால் நாட்டை அடைய முடியவில்லை. எனவே, இப்போது அவனால் எப்படி அடைய முடியும்?(25) கடும் நோன்புகள் நோற்று, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் சந்தனுவின் மைந்தனான பீஷ்மர் முன்பே ஆட்சி உரிமையை நிராகரித்துவிட்டார். அவர் இப்போதும் அஃதை ஏற்கமாட்டார். (26) எனவே, நாம் இப்போது, பாண்டவர்களில் மூத்தவனை (அரியணையில்) உரிய சடங்குகளுடன் {மன்னனாக} அமர்த்தலாம். அவன் வேதமறிந்தவனாகவும், உண்மையானவனாகவும், அன்பானவனாகவும் இருக்கிறான்.(27)  சந்தனுவின் மகனான பீஷ்மரையும், நீதிகள் அறிந்த திருதராஷ்டிரனையும் அவன் வழிபட்டு நிற்கிறான். அவன் முன்னவரையும், பின்னவரையும் அவர்களது பிள்ளைக்குட்டிகளுடன் மகிழ்ச்சியாக வைத்திருப்பான்" என்றனர்.(28)

யுதிஷ்டிரன் மீது அன்பு கொண்டவர்கள் இப்படிப் பேசிச் செல்வதைக் கேட்ட பாவியான துரியோதனன், மிகுந்த துன்பம் அடைந்தான்.(29) பெருந்துயர் கொண்ட அந்தத் தீய இளவரசனால் {துரியோதனனால்} அப்பேச்சுகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பொறாமையால் கொதிப்படைந்து, திருதராஷ்டிரனிடம் சென்று,(30) அவன் தனிமையாக இருப்பதைக் கண்டு, மரியாதையுடன் வணங்கி, யுதிஷ்டிரனை ஆதரிக்கும் குடிமக்களால் வெறுப்புண்டு, அந்த ஏகாதிபதியிடம்,(31) “ஓ! தந்தையே, கலைந்து செல்லும் குடிமக்கள் தீய சகுனத்தைக் காட்டும் வார்த்தைகளை உச்சரிப்பதைக் கேட்டேன். உம்மையும், பீஷ்மரையும் கூடக் கடந்து, அவர்கள் பாண்டுவின் மகனை மன்னனாக்க விரும்புகின்றனர்.(32) பீஷ்மர் இந்த நாட்டை ஆளமாட்டார். எனவே அவர் இதை ஏற்றுக் கொள்வார். குடிமக்கள் நமக்குப் பெருந்தீங்கு செய்ய முனைகின்றனர் என்றே தெரிகிறது.(33) பாண்டு, தமது மூதாதையர் நாட்டைத் தமது அறத்தின் சாதனைகளால் அடைந்தார். ஆனால் நீரோ, நாட்டைப் பெற முழுத் தகுதி இருந்தும், உமது குருட்டுத்தன்மையால், அஃதை அடைய முடியவில்லை.(34) பாண்டுவின் வாரிசு என்ற முறையில் பாண்டுவின் மகன் இந்நாட்டை அடைந்தால், அவனுக்குப் பிறகு அவனது மகனும், அதற்குப் பிறகு அவனது மகனின் மகனுமே பாண்டுவின் வழியில் அதைப் பெறுவார்கள்.(35) அவ்வழக்கத்தின் பயனாக, ஓ! உலகத்தின் மன்னா! நாமும், நமது சந்ததியும் அரச குலத்திலிருந்து விலக்கப்பட்டு, மனிதர்கள் அனைவராலும் நிச்சயம் அவமதிக்கப்படுவோம்.(36) எனவே, ஓ! ஏகாதிபதி! நிலைத்த துயரத்திற்கு நாம் ஆளாகாதவாறும், உணவுக்காக மற்றவர்களை நம்பியிருக்கும் நிலை நமக்கு ஏற்படாதவாறும், தகுந்த ஆலோசனைகளைப் பெறுவீராக.(37) ஓ! மன்னா, நீர் ஏற்கனவே அரசுரிமையைப் பெற்றுவிட்டீர், எனவே எவ்வளவுதான் மக்கள் நமக்குச் சாதகமாக இல்லையெனினும் நாமே அரசாட்சியைத் தொடர வேண்டும்" என்றான் {துரியோதனன்}".(38)


ஆதிபர்வம் பகுதி 143ல் உள்ள சுலோகங்கள் : 38
ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்