Monday, July 08, 2013

பாண்டவர்களை வாரணாவதம் அனுப்புங்கள் - ஆதிபர்வம் பகுதி 144

Let Pandava's go Varanavata | Adi Parva - Section 144 | Mahabharata In Tamil

(ஜதுக்கிரகப் பர்வம் - 2)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்களை வாரணாவதத்திற்கு அனுப்புமாறு திருதராஷ்டிரனிடம் வேண்டிய துரியோதனன்; அதிலுள்ள பாதகங்களை எடுத்துக்கூரிய திருதராஷ்டிரன்; சாதகங்களை எடுத்துச் சொன்ன துரியோதனன்....

Let Pandava's go Varanavata 
Adi Parva - Section 144 | Mahabharata In Tamil
வைசம்பாயனர் தொடர்ந்தார், "தனது கண்களைப் போன்ற ஞானம் கொண்ட மன்னன் திருதராஷ்டிரன், தனது மகனின் இந்த வார்த்தைகளைக் கேட்டும், கணிகர் சொன்னதை நினைத்துப் பார்த்தும், துயரடைந்ததால், அவனது மனம் {நன்மைக்கும் தீமைக்குமாக} ஆட்டம் கண்டது. பிறகு துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி,(1,2) மற்றும் நான்காவதாகத் துச்சாசனனும் சேர்ந்து ஆலோசனை நடத்தினர். இளவரசன் துரியோதனன், திருதராஷ்டிரனிடம்,(3) “ஓ! தந்தையே, புத்திசாலித்தனமான சூழ்ச்சியால், பாண்டவர்களை வாரணாவதம் எனும் நகரத்திற்கு அனுப்புவீராக. அதன் பிறகு நாம் அவர்களைக் குறித்து அஞ்சத் தேவையில்லை" என்றான்.(4)


தனது மகனால் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், சிறிது நேரம் யோசித்துவிட்டுத் துரியோதனனிடம்,(5) "பாண்டு எப்போதும் அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்தான். அவன் எப்போதும் தனது உறவினர்களிடம் கடமையுணர்வுடனேயே இருந்தான். குறிப்பாக என்னிடம் மிகுந்த கடமையுணர்ச்சியுடன் இருந்தான்.(6) அவன் உலக இன்பங்களைப் பெரிதாகக் கருதாமல், நாடு உட்பட அனைத்தையும் எனக்குத் தந்துவிட்டான்.(7) அவனது மகனும், அவனைப் போலவே அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்து, எல்லா நற்செயல்களும் புரிகிறான். அவன் உலகப்புகழை அடைந்து, மக்களின் அன்புக்குரியவனாகவும் இருக்கிறான்.(8) பல கூட்டாளிகளைக் கொண்டிருக்கும் அவனை, தந்தைவழியில் அவனுக்கு வந்த நாட்டிலிருந்து எப்படி விரட்ட முடியும்?(9) அமைச்சர்களும், (நாட்டின்) படைவீரர்களும், அவர்களது பேரன்களும் பாண்டுவால் நன்கு பேணிப் பராமரிக்கப்பட்டவர்கள்.(10) ஓ! மகனே, இப்படிப் பழங்காலத்தில் பாண்டுவால் நன்மையடைந்த குடிமக்கள், யுதிஷ்டிரனுக்காக, நம்மை நமது நண்பர்களுடனும், உறவினர்களுடனும் சேர்த்துக் கொன்றுவிட மாட்டார்களா?" என்றான்.(11)

அதற்குத் துரியோதனன், “ஓ! தந்தையே, நீர் சொல்வது அனைத்தும் உண்மையே. நமது எதிர்காலத்தின் மீது விழுந்திருக்கும் தீமையைக் கணக்கில் கொண்டு, நாம் மக்களுக்குச் செல்வத்தையும், மரியாதைகளையும் கொடுத்தோமென்றால், அவர்கள் நமது அதிகாரத்தைக் கண்டு நம் பக்கமே நிற்பார்கள். ஓ! மன்னா, பொக்கிஷமும், நாட்டின் அமைச்சர்களும் இந்த நொடியில் நமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றனர்.(12,13) எனவே, நீர் ஏதாவது நல்ல வழிமுறைகளைக் கையாண்டு, பாண்டவர்களை இங்கிருந்து வாரணாவத நகரத்திற்கு வெளியேற்றிவிடுவீராக.(14) ஓ! மன்னா, ஆட்சி உரிமைகள் அனைத்தும் என்னிடம் வந்தபிறகு, குந்தி அவளது மைந்தர்களுடன் அவ்விடத்தில் இருந்து இங்கே திரும்பி வரட்டும்" என்று பதிலுரைத்தான்.(15)

திருதராஷ்டிரன், “ஓ! துரியோதனா, இதே சிந்தனைதான் என் மனத்திலும் இருக்கிறது. ஆனால், அது பாவம் நிறைந்த செயலெனவே, நான் அதை வெளியிடவில்லை.(16) பாண்டவர்கள் நாடுகடத்தப்படுவதைப் பீஷ்மரோ, துரோணரோ, க்ஷத்திரியோ {விதுரரோ}, கௌதமரோ (கிருபரோ) ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.(17) ஓ! அன்பு மகனே, அவர்களின் பார்வையில், கௌரவர்களான நாமும், பாண்டவர்களும் இணையானவர்களே. ஞானமுள்ள அறம்சார்ந்த மனிதர்கள் இரு தரப்புகளுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காணமாட்டார்கள்.(18) எனவே, நாம் பாண்டவர்களிடம் இப்படி நடந்து கொண்டால், ஓ! மகனே, நாம் குரு குலத்தவர் கைகளாலும், இந்தச் சிறப்புவாய்ந்தவர்கள் கைகளாலும், இந்த முழு உலகத்தின் கைகளாலும் மரணிக்க மாட்டோமா? {அவர்கள் நம்மைக் கொல்லாமல் விடுவார்களா?}" என்று கேட்டான்.(19)

துரியோதனன், "பீஷ்மருக்கு இரு தரப்பிடமும் அளவு கடந்த பாசமெல்லாம் கிடையாது, எனவே அவர் (சச்சரவு வரும்போது) நடுநிலையே வகிப்பார். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} என் பக்கம் இருக்கிறான். மகன் எங்கிருக்கிறானோ அங்கேதான் தந்தையும் இருப்பார் என்பதில் ஐயம் கிடையாது.(20) துரோணரும், அஸ்வத்தாமரும் இருக்கும் பக்கத்தில் தான் சரத்வானின் மகனான கிருபரும் இருக்க முடியும். அவரால் துரோணரையும், தனது தங்கையின் மகனையும் (அஸ்வத்தாமனையும்) புறக்கணிக்க முடியாது.(21) க்ஷத்திரி (விதுரன்), ரகசியமாக நமது எதிரிகள் பக்கத்தில் இருப்பினும், அவரது வாழ்வை நடத்த நம்மையே நம்பியிருக்கிறார். அவர் பாண்டவர்கள் பக்கம் நின்றாலும், அவர் ஒருவரால் மட்டுமே நமக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திவிட முடியாது.(22)  எனவே, எந்த அச்சமும் கொள்ளாமல் பாண்டவர்களை வாரணாவதத்திற்கு நாடுகடத்துவீராக. அவர்கள் இந்நாளிலேயே அங்கே செல்லத் தக்க நடவடிக்கைகளை எடுப்பீராக.(23) ஓ! தந்தையே, இச்செயலால் சுடர்விட்டெரியும் நெருப்பு உட்கொள்வதுபோல என்னை உட்கொள்ளும் துயரை அணைப்பீராக. அத்துயரம், எனது உறக்கத்தைக் களவாடுகிறது. பயங்கரமான கணை போல எனது இதயத்தைத் துளைக்கிறது" என்றான் {துரியோதனன்}.(24)


ஆதிபர்வம் பகுதி 144ல் உள்ள சுலோகங்கள் : 24
ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்