Sunday, July 21, 2013

ஹிடிம்பனைக் கொன்றான் பீமன்! - ஆதிபர்வம் பகுதி 156

Bhima Killed Hidimva! | Adi Parva - Section 156 | Mahabharata In Tamil

(ஹிடிம்ப வத பர்வம் - 3)

பதிவின் சுருக்கம் : உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த குந்தியும், பாண்டவர்களும்; ஹிடிம்ப பீம மற்போரைக் குறித்து ஹிடிம்பை மூலமாக அறிந்த கொண்ட பாண்டவர்கள்; பீமனைக் கேலி செய்த அர்ஜுனன்; ஹிடிம்பனைக் கொன்ற பீமன்; பீமனைக் கொண்டாடிய அர்ஜுனன்...

வைசம்பாயனர் சொன்னார், "தங்கள் தாயுடன் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தவர்களான அந்த மனிதர்களில் புலிகள், ஹிடிம்பையின் இயல்புக்குமிக்க அழகைக் கண்டு வியந்தனர்.(1) குந்தி, அவளது அழகைக் கண்டு ஆச்சரியப்பட்டு, அவளிடம் இனிமையாகவும், உறுதியேற்படுத்தும் வகையிலும்(2) "ஓ தேவர்களின் மகளைப் போல இருப்பவளே, நீ யாருடையவள்? யார் நீ? ஓ அழகான நிறம் கொண்டவளே, என்ன காரியமாக நீ இங்கே வந்திருக்கிறாய்? எங்கிருந்து வந்திருக்கிறாய்?(3) நீ கானக தேவதையாகவோ, அப்சரஸாகவோ இருப்பின், உன்னைப் பற்றி முழுமையாகச் சொல்வாயாக. நீ ஏன் இங்கிருக்கிறாய் என்பதையும் சொல்வாயாக" என்று கேட்டாள்.(4)

அதற்கு ஹிடிம்பை, "நீ பார்த்துக் கொண்டிருப்பதும், நீல மேகத்தின் நிறத்தைக் கொண்டதும் {இருண்டதும்}, விரிந்ததுமான இந்தக் கானகம், ஹிடிம்பன் என்ற ராட்சசனின் வசிப்பிடமாகும்.(5) ஓ அழகான பெண்மணியே, என்னை அந்த ராட்சசத் தலைவனுடைய தங்கையாக அறிந்து கொள்வாயாக. மதிப்புக்குரிய பெண்மணியே, நான் எனது சகோதரனால் ஏவப்பட்டு, உன்னையும் உனது பிள்ளைகளையும் கொல்ல வந்தேன்.(6) எனது சகோதரனின் அந்தக் கொடூரமான கட்டளையைக் கேட்டு இங்கு வந்த நான், பலம்வாய்ந்த உனது மகனைக் கண்டேன்.(7) ஓ அருளப்பட்ட மங்கையே, எல்லா உயிரினுள்ளும் படர்ந்தூடுருவியிருப்பவனான காதல் தேவன் {மன்மதன்}, என்னை, உனது மகனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(8) உனது பலம் வாய்ந்த மகனை எனது கணவராக நான் (மனத்தால்) தேர்ந்தெடுத்தேன். உங்களையெல்லாம் வெளியேற்ற என்னால் முடிந்த வரை முயன்றேன். ஆனால் (உனது மகனின் எதிர்ப்பால்) முடியவில்லை.(9) எனது தாமதத்தைக் கண்ட அந்த மனித ஊனுண்ணி {ஹிடிம்பன்}, உனது மகன்களைக் கொல்ல இங்கே வந்தான்.(10) ஆனால் அவன், உனது பெரும் பலம் வாய்ந்த மகனான, எனது கணவரால் {பீமனால்} வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளான்.(11) நரனும் ராட்சசனும் ஆன அந்த இரும் பெரும் பலசாலிகளும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திப் போரிட்டுக் கொண்டே, ஒருவரை ஒருவர் நசுக்கி, இந்த முழுப் பகுதியையும் தங்கள் முழக்கங்களால் நிரப்பிக் கொண்டிருப்பதைப் பார்" என்றாள்.(12)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அவளது வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், அர்ஜுனன், நகுலன் மற்றும் பெரும் சக்தி படைத்த சகாதேவன் ஆகியோர் வேகமாக எழுந்து, பீமனும், ராட்சசனும் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டனர்.(13) ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டும், ஒருவரையொருவர் பெரும் பலத்துடன் இழுத்துக் கொண்டும் இரு சிங்கங்கள் மோதிக் கொள்வதைப் போல அவர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டிருந்தனர்.(14) அவர்களது சண்டையால் எழுந்த புழுதியால், அந்தக் காடே பற்றி எரிவதைப் போலத் தெரிந்தது.(15) புழுதியால் மறைக்கப்பட்ட உடல்களைக் கொண்ட அவர்கள், பார்ப்பதற்கு பனியால் மூடப்பட்ட இரண்டு பெரும் மலைகளைப் போல இருந்தனர்.(16)

அப்போது, ராட்சசனால் ஒடுக்கப்படும் பீமனைக் கண்ட அர்ஜுனன், உதடுகளில் புன்னகையுடன், மெதுவாக,(17) "ஓ பெரும் கரம் கொண்ட பீமரே, அஞ்சாதீர்! நீர் இந்தப் பயங்கரமான ராட்சசனோடு சண்டையிட்டுக் களைத்துப் போவதை (உறங்கிக் கொண்டிருந்ததால்) நாங்கள் அறியாதிருந்தோம்.(18) உமக்கு உதவி செய்ய நான் இப்போது இங்கே நிற்கிறேன். நான் இந்த ராட்சசனைக் கொல்ல, நீர் எனக்கு வழிவிடுவீராக. நகுலனும் சகாதேவனும் நமது தாயைக் காக்கட்டும்" என்றான்.(19)

இதைக் கேட்ட பீமன், "ஓ தம்பி, அந்நியனைப் போல் நின்று சண்டையை மட்டும் பார்ப்பாயாக! முடிவை எண்ணி அஞ்சாதே. எனது கரங்கள் எட்டும் தொலைவிற்குள் வந்த பிறகு, இவன் உயிருடன் தப்பமாட்டான்" என்றான்.(20)

அர்ஜுனன், "ஓ பீமரே, இந்த ராட்சசனை இவ்வளவு நேரம் உயிருடன் வைத்திருப்பதன் அவசியம் என்ன? ஓ எதிரிகளை ஒடுக்குபவரே, நாம் செல்ல வேண்டும். இன்னும் இங்கேயே தங்க முடியாது.(21) கிழக்குச் சிவக்கிறது, காலைச் சந்தி வரப்போகிறது. அக்காலத்தில் ராட்சசர்களின் பலம் கூடும். எனவே, ஓ பீமரே, விளையாடாமல் துரிதமாகச் செயல்பட்டு இந்தப் பயங்கரமான ராட்சசனை உடனே கொல்வீராக. நாளின் இரு சந்தி காலங்களில் ராட்சசர்கள் தங்கள் மாய சக்திகளைப் பயன்படுத்தி ஏமாற்றுவார்கள். உமது கரங்களின் பலம் அத்தனையையும் பயன்படுத்துவீராக" என்றான்".(22,23)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அர்ஜுனனின் இந்தப் பேச்சால் கோபம் மூண்ட பீமன், அண்ட அழிவின் {பிரளயத்தின்} போது பயன்படும் வாயுவின் (தனது தந்தையின்) பலத்துடன், பெரும் கோபம் கொண்டு அந்த நீல மேகம் போன்ற ராட்சசனின் உடலைத் தூக்கி, நூறு முறை சுழற்றினான்.(24,25)

அப்போது பீமன், அந்த மனித ஊனுண்ணியிடம் {ஹிடிம்பனிடம்}, "ஓ ராட்சசா, உனது புத்திக்கூர்மை வீணே. வீணாக இந்தப் புனிதமற்ற பெருத்த சதைகளை நீ வளர்த்திருக்கிறாய். எனவே புனிதமற்ற இறப்புக்கு நீ தகுதியுள்ளவனே. நான் இன்று உன்னை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறேன்.(26) இன்று இந்தக் கானகத்தை நான் முட்செடிகள் இல்லாத அருளப்பட்ட கானகமாக்குகிறேன். ஓ ராட்சசா, நீ மனிதர்களை உனது உணவாக இனி கொள்ள முடியாது" என்றான்.(27)

அப்போது அர்ஜுனன், "ஓ பீமரே, இந்த ராட்சசனைக் கொல்வது கடினமாக இருப்பின், நான் உமக்கு உதவி செய்து, உம்முடன் சேர்ந்து தாமதிக்காமல் அவனைக் கொல்கிறேன்.(28) அல்லது ஓ விருகோதரரே {பீமரே}, நான் தனியாக இந்த ராட்சசனைக் கொல்கிறேன். அதற்காவது வழிவிடுவீராக. நீர் களைத்திருக்கிறீர். கிட்டத்தட்ட வேலையை முடித்துவிட்டீர். உமக்கு ஓய்வு தேவைப்படுகிறது" என்றான்".(29)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அர்ஜுனனின் வார்த்தைகளைக் கேட்ட பீமன், நெருப்பெனக் கோபம் கொண்டு, அந்த ராட்சசனைத் தரையில் தேய்த்து, விலங்கைக் கொல்வதைப் போல அவனைக் கொன்றான்.(30) அந்த ராட்சசன் கொல்லப்படும்போது, அவன் பயங்கரமான பேரொலியை எழுப்பினான். அவ்வொலி அக்கானகம் முழுதும் நிறைந்து, ஈரமான பேரிகை {நனைந்த மேளம்} போல ஆழ்ந்த ஒலியாக இருந்தது.(31) பிறகு அந்தப் பலம்வாய்ந்த பீமன், அவ்வுடலைத் தனது கைகளில் பிடித்து, இரண்டாக மடித்து, நடுவில் உடைத்து அவனது சகோதரர்களை {தன் சாதனையால்} மனநிறைவு கொள்ளச் செய்தான்.(32) ஹிடிம்பன் கொல்லப்பட்டதைக் கண்டதும், அவர்கள் பெரிதும் மகிழ்ந்து, தாமதிக்காமல் எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தப் பீமனை வாழ்த்தினர்.(33) பெரும் ஆற்றலைக் கொண்ட அந்தச் சிறப்பு மிக்கப் பீமனைப் பெரிதும் கொண்டாடிய அர்ஜுனன், அவனிடம்,(34) "மரியாதைக்குரிய மூத்தவரே {அண்ணா}, இக்கானகத்தின் அருகிலேயே ஒரு நகரமிருப்பதாக நான் நினைக்கிறேன். நீர் அருளப்பட்டிருப்பீராக. உடனே நாம் அங்குச் சென்றால், துரியோதனனால் நமது சுவடுகளை அறிய முடியாது" என்றான்.(35) பிறகு, பலம்வாய்ந்தவர்களும், தேர் வீரர்களுமான அந்த மனிதர்களில் புலிகள், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, தங்கள் தாயுடன் தொடர்ந்தனர். ராட்சசப் பெண்ணாண ஹிடும்பையும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றாள்" {என்றார் வைசம்பயானர்}.(36)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்