Saturday, July 27, 2013

"என்னைக் கைவிடு" என்றாள் மனைவி! - ஆதிபர்வம் பகுதி 160

"Abandon me" said the wife! | Adi Parva - Section 160 | Mahabharata In Tamil

(பக வத பர்வம் - 2)

பதிவின் சுருக்கம் : பிராமணனிடம் அவனது மனைவி பேசியது...

வைசம்பாயனர் சொன்னார், "பிராமணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அவனது மனைவி, "ஓ பிராமணரே! நீர் சாதாரண மனிதரைப் போலத் துயரடையக்கூடாது. இது புலம்புவதற்கான நேரமில்லை.(1) நீர் கல்விமான்; மனிதர்கள் அனைவரும் இறப்பது உறுதி என்பதை நீர் அறிவீர்; தவிர்க்க முடியாதவற்றிற்காக யாரும் வருத்தப்படக்கூடாது.(2) மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் ஒருவனின் சுயத்திற்குப் பயன்படவே ஏற்பட்டனர். புரிந்து கொள்ளும் நல்ல அறிவைக் கொண்ட நீர், உமது துயரங்களைக் கொன்று போடுவீராக. நானே அங்குச் செல்வேன்.(3) நிச்சயமாக இந்தக் காரியமே ஒரு பெண்ணின் உயர்ந்த தெய்வீகக் கடமையாகும். அஃதாவது, அவள் தனது உயிரையே தியாகம் செய்தாவது தனது கணவரின் நலத்தைப் பேண வேண்டும்.(4) அப்படிப்பட்ட எனது செயல் உம்மை மகிழ்விக்கும், இந்த உலகத்திலும், மறு உலகத்திலும் எனக்குப் புகழையுண்டாக்கும்.(5) நிச்சயமாக நான் சொல்லும் இதுவே உயர்ந்த அறமாகும். அதனால் நீர் அறத்தையும், மகிழ்வையும் ஒன்றாக அடையமுடியும்.(6)

மனைவியை ஒருவன் எக்காரணத்திற்காக விரும்புவானோ, அதை நீர் என் மூலமாக அடைந்து விட்டீர். நான் உமக்கு ஒரு மகளையும் ஒரு மகனையும் பெற்றுக் கொடுத்து எனது கடனிலிருந்து விடுபட்டுவிட்டேன்.(7) உம்மால் உமது குழந்தைகளை நன்கு பேணி பராமரித்து மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும். ஆனால் என்னாலோ, உம்மைப் போல மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியாது.(8) நீரே எனது வாழ்வும், செல்வமும், தலைவரும் ஆவீர். உம்மை இழந்தால், பிறகு நானும், இந்த இளம் பிள்ளைகளும் எப்படி வாழ முடியும்?(9) என்னைச் சார்ந்திருக்கும் இரு குழந்தைகளை வைத்துக் கொண்டு, இவர்களைக் காப்பாற்ற நீர் இல்லாமல், தலைவனில்லாமல் விதவையாகி, அறத்தின் பாதையிலான வாழ்வை என்னால் எவ்வாறு வாழ இயலும்?(10)

நம்பிக்கையற்ற மரியாதையற்ற வீணான மனிதர்கள், இந்த உமது மகளைக் கைப்பற்ற விரும்பினால், நான் அவர்களிடம் இருந்து இவளை எப்படிப் பாதுகாப்பேன்?(11) தரையில் தூக்கியெறியப்பட்ட இறைச்சியை ஆவலுடன் உண்ணும் பறவைகளைப் போலக் கணவனை இழந்தப் பெண்ணை அடைய தீய மனிதர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.(12) நான் நிலையின்றித் தள்ளாடி, நேர்மையான மனிதர்களால் விரும்பப்படும் பாதையில் தொடர்ந்து பயணிக்க முடியாத நிலை ஏற்படலாம்.(13) உமது அப்பாவி மகளான இவளை, உமது மூதாதையர்கள் நடந்த வழியில் என்றும் எவ்வாறு என்னால் நடத்திச் செல்ல முடியும்?(14) நான் தலைவனில்லாதிருக்கும் காலத்தில், இந்தக் குழந்தையை {உமது மகனை} உம்மைப்போன்ற அறம்சார்ந்தவனாக எப்படி வளர்க்க முடியும்?(15) தலைவனில்லாத என்னை அதிகாரம் செய்து, சூத்திரர்கள் வேதத்தைக் கேட்க விரும்புவது போல, நம்பத்தகாத மனிதர்கள் உமது மகளின் கரத்தைக் கேட்பார்கள்.(16)

உமது ரத்தமும் குணமும் இல்லாதவர்களுக்கு நான் உமது மகளை அளிக்காவிட்டால், அவர்கள் வேள்வி நெய்யைத் தூக்கிச் செல்லும் காக்கையைப் போல அவளைத் தூக்கிச் செல்வார்கள்.(17) உமது மகன் உம்மைப் போல் இல்லாமல் இருந்து, உமது மகளும் நம்பத்தகாதவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தால், இந்த உலகத்தின் நேர்மையற்ற மனிதர்களாலும் நான் நிந்திக்கப்படுவேன். அப்படி நிந்திக்கப்படும்போது நிச்சயம் சாவேன்.(18,19) உம்மையும் என்னையும் இழந்த இந்தப் பிள்ளைகள், நீர் வற்றும் போது அழியும் மீனைப் போல அழிந்து விடுவர்.(20)

நீர் {கணவர்} இல்லாமல் மூவரும் அழிவது நிச்சயம். எனவே, நீர் என்னைத் தியாகம் செய்வதே தகும்.(21) ஓ பிராமணரே! பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்த பெண், தனது தலைவனுக்கு முன்பு இறந்து போனால் அதுவே உயர்ந்த தகுதி {புண்ணியம்} என்று நீதிகளை அறிந்த மனிதர்கள் கூறுகிறார்கள்.(22) உமக்காக, மகனையும், மகளையும், உறவினர்களையும், ஏன் உயிரைக் கூட விடத் தயாராயிருக்கிறேன்.(23) தனது தலைவனுக்குப் பிடித்தமான காரியங்களை எப்போதும் செய்யும் பெண்களின் கடமையானது, வேள்விகள், துறவு, நோன்பு மற்றும் தானங்கள் அனைத்திலும் உயர்ந்ததாகும்.(24) எனவே, நான் செய்யத்துணிவது உமது குலத்துக்கும் உமக்கும் உயர்ந்த அறமாகும்.(25)

குழந்தைகள், உறவினர், மனைவியர் மற்றும் இவ்வுலகில் விரும்பப்படும் அனைத்துப் பொருட்களும், ஒருவனைத் துயரம் மற்றும் ஆபத்தில் இருந்து காப்பதற்கே பேணி வளர்க்கப்படுகின்றன என்று ஞானியர் சொல்கின்றனர்.(26) ஒருவன் தன்னை ஆபத்திலிருந்தும், துயரத்தில் இருந்தும் விடுவித்துக் கொள்ளத் தனது செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும். அந்தச் செல்வத்தைக் கொண்டுதான் தனது மனைவியைப் பராமரித்துப் பாதுகாக்க முடியும்.(27) எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத விபத்துகளுக்கு அளிக்கவே ஒருவனின் மனைவி, மகன், செல்வம், வீடு ஆகியவை அடையப்படுகின்றன என்று உண்மையைக் கற்றவர்கள் தெளிவாக விளக்குகின்றனர்.(28) ஒரு தனி மனிதனின் சுயதத்துக்கு ஈடாக, அவனது உறவினர்கள் அனைவரையும் சேர்த்து நிகர்த்துப் பார்த்தாலும் {எடைபோட்டுப் பார்த்தாலும்}, அஃது ஈடாகாது.(29) எனவே, மரியாதைக்குரியவரே, என்னைக் கைவிட்டு உமது சுயத்தைக் காத்துக் கொள்வீராக. என்னைத் தியாகம் செய்ய எனக்கு அனுமதி கொடுத்து, உமது பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்வீராக.(30)

நீதிகளை அறிந்தவர்கள், பெண்கள் கொல்லப்படலாகாது என்று தங்கள் உடன்படிக்கைகளில் சொல்கின்றனர். அந்த நீதிகளை ராட்சசர்கள் அறியாதவர்களல்லர். ராட்சசர்கள் ஓர் ஆணைக் கொல்வது நிச்சயமாக இருந்தாலும், அவர்கள் ஒரு பெண்ணைக் கொல்வது ஐயத்திற்கிடமானதே. ஒழுக்க விதிகளை அறிந்த நீர், என்னை ராட்சசன் முன்பு கிடத்துவீராக.(31,32) நான் நிறைந்த மகிழ்ச்சியை அடைந்துவிட்டேன். பல இனிமையானவற்றை அடைந்திருக்கிறேன். மேலும் நிறைந்த ஆன்மத் தகுதிகளையும் ஈட்டியிருக்கிறேன். உம்மால் நான் எனக்கன்பான இந்தப் பிள்ளைகளையும் பெற்றேன். எனவே, நான் சாவதற்கு வருந்தவில்லை.(33) நான் உமக்குப் பிள்ளைகள் பெற்றுக் கொடுத்து வயதாகிவிட்டேன். நான் எப்போதும் உமக்கு நன்மை செய்யவே விரும்புகிறேன். இவை அனைத்தையும் நினைவில் நிறுத்தியே நான் இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளேன்.(34) ஓ மரியாதைக்குரியவரே, என்னைக் கைவிட்டு, நீர் மற்றுமொரு மனைவியை அடையலாம். அவள் மூலமாக நீர் ஆன்மத் தகுதிகளை மறுபடியும் அடையலாம்.(35) அதில் பாவமில்லை. ஓர் ஆணுக்கு மறுமணம் என்பது அறச்செயலே. ஆனால், அதுவே பெண்ணுக்கு இரண்டாம் கணவனை அடைந்தாலே பெரும்பாவம் ஆகும்.(36) இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, உமது தியாகம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதையும் நினைவில் கொண்டு, என்னைக் கைவிட்டு உமது சுயத்தையும், உமது குலத்தையும், உமது பிள்ளைகளையும் காத்துக் கொள்ளும்" என்றாள்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ பாரதா, மனைவியால் இப்படிச் சொல்லப்பட்ட பிராமணன், அவளைக் கட்டியணைத்துக்கொண்டான். துயரத்தால் உந்தப்பட்ட இருவரும் அமைதியாக அழுதனர்".(37)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்