Thursday, July 25, 2013

அந்தணன் துயரம்! - ஆதிபர்வம் பகுதி 159

Brahmana's Distress! | Adi Parva - Section 159 | Mahabharata In Tamil

(பக வத பர்வம் - 1)

பதிவின் சுருக்கம் : ஏகச்சக்கர நகரத்தில் வசித்த பாண்டவர்கள்; மனைவியிடம் துயரத்துடன் பேசிய பிராமணன்; அதைக் கண்டு அந்தப் பிராமணனை அணுகிய குந்தி; அந்தப் பிராமணன் புலம்பியதைக் கேட்ட குந்தி...

ஜனமேஜயன், "ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, அந்தப் பெரும் தேர் வீரர்களும், குந்தி மைந்தர்களுமான பாண்டவர்கள், ஏகச்சக்கரத்திற்கு வந்த பிறகு என்ன செய்தார்கள்?" என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் சொன்னார், "அந்தப் பெரும் தேர் வீரர்களான குந்தியின் மைந்தர்கள், ஏகச்சக்கரம் வந்ததும், ஒரு பிராமணனின் இல்லத்தில் சிறிது காலம் தங்கினர்.(2) இரந்துண்டு {பிச்சையெடுத்து} வாழும் வாழ்வை மேற்கொண்டு, மகிழ்ச்சிகரமான கானகங்களையும், நிலப்பகுதிகளையும், பல நதிகள் மற்றும் ஏரிகளையும் கண்டு, தங்கள் செயல்களால் அந்த நகரவாசிகளுக்குப் பிடித்தமானவர்களாகினர்.(3,4) இரவு வந்ததும், குந்தியின் முன் தாங்கள் இரந்து பெற்று வந்ததை ஒன்றாகச் சேர்த்து வைத்தனர்.குந்தி அவற்றை முழுமையாகச் சேர்த்து ஒவ்வொருவருக்கான பகுதியாகப் பிரித்துக் கொடுப்பாள். அதையே அவர்கள் ஒவ்வொருவரும் பெற்றுக் கொண்டனர்[1].(5)


[1] இந்தப் பழக்கம் திரௌபதியின் திருமணத்திற்குப் பிறகு நினைவுகூரப்படுகிறது.

அந்த எதிரிகளைத் தண்டிக்கும் வீரர்கள் அனைவரும் தங்கள் தாயுடன் சேர்ந்து அந்த உணவின் முழுப் பகுதியில் சரி பாதியை உண்டபோது, பீமன் மட்டுமே தனித்து மறுபாதியை உண்டான்.(6) ஓ பாரதக் குலத்தில் காளையே, இப்படியே பாண்டவர்கள் அங்கே சிலகாலம் வாழ்ந்தனர்.(7) ஒரு நாள், பாரதர்களில் காளைகளான அவர்கள் அனைவரும் பிச்சையெடுக்கச் சென்றுவிட்டார்கள். பீமன் மட்டும் (தனது தாயுடன்) பிருதையுடன் (வீட்டில்) இருந்தான்.(8) ஓ பாரதா, அந்நாளில் அந்தப் பிராமணரின் உள் அறையில் இருந்து இதயத்தைப் பிளக்கும் அழுகைச் சத்தம் வருவதைக் குந்தி கேட்டாள்.(9) இரக்க குணமும் நன்மையை விரும்பும் இதயமும் கொண்ட குந்தியால், இப்படி அந்த பிராமணரின் இல்லத்தில் அந்தப் பரிதாபகரமான அழுகையைக் கேட்டுத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.(10)

துயரத்தால் தாக்குண்ட அந்த இனிமையான பிருதை {குந்தி}, பீமனிடம் கருணை நிறைந்த வார்த்தைகளைச் சொன்னாள். அவள்,(11) "ஓ மகனே, நமது துயர் தணிந்து, இந்த பிராமணரின் இல்லத்தில், அவரால் மதிக்கப்பட்டு, திருதராஷ்டிரனின் மகனுக்குத் தெரியாமல், நாம் இங்கு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம்.(12) ஓ மகனே, நாம் இங்கு மகிழ்ச்சியாக வசித்ததற்கு ஈடாக, இந்த பிராமணருக்கு நாம் செய்ய வேண்டிய நன்மையைக் குறித்து எப்போதும் நான் சிந்தித்தே வருகிறேன்.(13) ஓ குழந்தாய், எவன் செய்ந்நன்றி மறவாமல் இருக்கிறானோ அவனே உண்மையான மனிதன். தான் மற்றவர்களிடம் பெறுவதைவிட அவன் அதிகமாகத் திரும்பக் கொடுப்பான்.(14) இந்த பிராமணருக்கு ஏதோ துயரேற்பட்டிருக்கிறது. அதில் ஐயம் இல்லை. நம்மால் அவருக்கு ஏதாவது உதவி இருக்குமானால், நாம் நிச்சயம் அதைச் செய்ய வேண்டும்" என்றாள்.(15)

தாயின் வார்த்தைகளைக் கேட்ட பீமன், "ஓ தாயே, அந்த பிராமணனின் துயரம் எப்படிப்பட்டது, அஃது எங்கிருந்து உருவானது என்பதை உறுதி செய்து கொள்வாயாக. அவற்றை அறிந்தால், அஃது எவ்வளவு கடினமாக இருப்பினும் நான் அதை அவர்களுக்குச் சாதித்துக் கொடுப்பேன்" என்றான்".(16)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ மன்னா, தாயும் மகனும் இப்படி ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, மறுபடியும் அவர்கள் அந்த பிராமணன் மற்றும் அவனது மனைவியும் அழுவதைக் கேட்டார்கள்.(17) அப்போது குந்தி, தாம்புக்கயிற்றால் கட்டப்பட்ட கன்றைக் காணச் செல்லும் ஒரு பசுவைப் போல அந்தச் சிறப்புமிகு பிராமணன் இருந்த உள் அறைக்குள் விரைவாகச் சென்றாள்.(18) அங்கே பிராமணன், தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் சோகம் நிரம்பிய முகத்துடன் உட்கார்ந்து கொண்டு இருப்பதைக் கண்டாள்.(19)

அவன், "இவ்வுலக வாழ்வு நாணலைப் போன்று உள்ளீடற்றதாகக் கனியற்றதாக இருக்கிறது. இறுதியில் சுதந்திரம் இல்லாமல் {பிறருக்கு அடிமையாகவே} துயரத்துடனேயே முடிகிறது. வாழ்க்கையில் துன்பம் மட்டுமே இருக்கிறது.(20) வாழ்வு என்றாலே அது துயரம் என்ற நோய்தான். வாழ்க்கை என்பது உண்மையில் துயரங்களின் தொகுப்பு மட்டும்தான்.(21) ஆன்மா ஒன்று. ஆனால் அஃது அறத்தை ஈட்ட வேண்டியிருக்கிறது, பொருள் மற்றும் இன்பத்தையும் ஈட்ட வேண்டியிருக்கிறது. இவை மூன்றையும் ஒரே நேரத்தில் செய்வதால், இவையே ஒன்றுக்குள் ஒன்று அடிக்கடி முரண்பட்டுத் துயரத்தைக் கொடுக்கின்றன.(22) சிலர் நமது விருப்பங்களில் உயர்ந்த நோக்கம் முக்தியடைவது என்கின்றனர். ஆனால் நான் அதை அடையவே முடியாது என்று நம்புகிறேன். பொருளீட்டுவது நரகத்தைத் தருகிறது. பொருளீட்டுதலில் உள்ள நாட்டம் துயரத்தைத் தருகிறது.(23) ஒருவரின் பொருள் மீது மற்றவர் ஆசை கொள்வதால், அந்தப் பொருளை அடைந்த பிறகு பெரும் துயரம் வருகிறது. ஏதாவது ஆபத்து நேர்ந்தால், அதற்கு உடைமையாளன் துயரடைகிறான்.(24) நான் இந்த ஆபத்திலிருந்து தப்பிக்கும் வழியை அறியவில்லை. ஆபத்திலிருந்து தப்பித்து, எனது மனைவியுடனும், குழந்தைகளுடனும் இந்தப் பகுதியைவிட்டுப் பறந்து செல்ல என்னால் முடியவில்லை.(25)

ஓ பெண்ணே நினைவுப்படுத்திப் பார், நான் முன்பே வேறு இடத்திற்குச் சென்று மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று சொன்னேன்! நீதான் என் பேச்சைக் கேட்கவில்லை.(26) நான் பலமுறை தொடர்ந்து சொல்லியும் நீ "நான் இங்கேயே பிறந்தேன், இங்கேயே வளர்ந்தேன், இஃது எனது மூதாதையர் வீடு" என்றாய்.(27) ஓ பெண்ணே, உனது மதிப்புக்குரிய தந்தையும், தாயும், பல காலத்திற்கு முன்னரே சொர்க்கம் சென்றனர். உனது உறவினர்கள் எல்லோரும் இறந்துவிட்டார்கள். இருப்பினும் நீ இங்கேயே வாழ வேண்டும் என்று ஏன் விரும்பினாய்?(28) உனது உறவினர்கள் மீது கொண்ட பாசத்தால், நான் சொன்னதை நீ கேட்கவில்லை. ஆனால் இன்று நேரம் வந்துவிட்டது, உனது உறவினர்களில் ஒருவர் இறப்பதை நீ காணப் போகிறாய்.(29) அக்காட்சி எனக்கு வருத்தத்தை அளிக்கிறதே! எனது மரணத்திற்கான நேரம் வந்ததாகவே நான் நினைக்கிறேன். நான் உயிருடன் இருக்கும் வரை, என்னைச் சார்ந்தவர்கள் யாரும் இறப்பதை நான் அனுமதியேன்.(30)

எனது நற்காரியங்களில் எல்லாம் நீ துணை புரிந்திருக்கிறாய். சுய நலனைப் பார்க்காமல், என்னிடம் தாயைப் போல அன்பு பாராட்டினாய். தேவர்கள் உன்னை எனக்கு உண்மையான தோழியாக (நட்பாக) கொடுத்திருக்கிறார்கள். நீ மட்டுமே எனக்கு நிரந்தர வசிப்பிடமாவாய்.(31) எனது பெற்றோரால், நீ என்னுடன் இல்லறத்தில் இணைந்தாய். தூய குலத்தில் பிறந்து, நல்ல நிலையில் வளர்ந்து, பிள்ளைகளைப் பெற்று, என்னிடம் அர்ப்பணிப்புடன் இருந்து அப்பாவியாக வாழ்ந்து வந்திருக்கிறாய். உன்னை நான் தேர்ந்தெடுத்து, உரிய சடங்குகளுடன் மணந்த காரணத்தால், எனது உயிரைக் காக்கச் சபதமேற்றிருக்கும் உன்னை நான் கைவிட முடியாது. என் மகனை எவ்வாறு என்னால் கைவிட முடியும்?(32-34) இளம் வயதிலிருப்பவனும், தாடையில் முடி முளைக்காதவனுமான (முழு மனிதனாகாத) எனது மகனை நான் எப்படிக் கைவிட முடியும்? நான் ஒரு கணவனைத் தேர்ந்தெடுத்து அளிப்பதற்காகவே, உலகம் படைத்தோனால் என்னிடம் கொடுக்கப்பட்ட எனது மகளை நான் எப்படிக் கைவிடுவேன். அவள் {மகள்} மூலம் பெறும் மகனால் {பேரனால்} கிடைக்கும் நல்லுலகங்களை நான் எப்படி அடைவேன்?(35,36)

சில மனிதர்கள் மகனிடமே தந்தையின் பாசம் அதிகம் இருக்கும் என்கின்றனர். சிலர் மகளிடம்தான் அதிகம் இருக்கும் என்கின்றனர். ஆனால் எனக்கு இருவருமே சமமாக இருக்கின்றனர்.(37) எவளிடம் எனது நித்திய அருளும், என் பரம்பரையும், மகிழ்ச்சியுமிருக்கிறதோ அந்த எனது அப்பாவி மகளைக் கைவிட எப்படித் துணிவேன்?(38) நான், எனது வாழ்வை துறந்து மறு உலகம் சென்றாலும் என்னால் நிம்மதியாக இருக்க முடியுமா? இவர்கள் எப்படித் தங்கள் வாழ்வை நகர்த்துவார்கள்?(39) இங்கு இருக்கும் யாரையும் துறப்பது கொடுமையானதே. மறுபுறம், நான் என்னைத் தியாகம் செய்தால், நானில்லாமல் இவர்கள் அழிந்து போவார்கள்.(40) நான் வீழ்ந்துகிடக்கும் துயரமானது பெரியதாகும். இதிலிருந்து தப்பிக்க வழியறியாமல் இருக்கிறேனே. ஐயோ நான் என் நெருங்கியவர்களுடன் எங்குச் செல்வேன். நான் இவர்களுடன் சேர்ந்து மொத்தமாக இறந்து போக வேண்டும். இவர்கள் இல்லாமல் நான் உயிருடன் வாழ முடியாது!" என்றான்".(41)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்