Sunday, July 28, 2013

பாலகனின் மழலைச் சொற்கள்! - ஆதிபர்வம் பகுதி 161

Lisp of a child! | Adi Parva - Section 161 | Mahabharata In Tamil

(பக வத பர்வம் - 3)

பதிவின் சுருக்கம் : தங்கள் தாயின் பேச்சைக் கேட்ட மகள் தனது தந்தையிடம் பேசியது; பச்சிளம் பாலகனின் பேச்சைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த அந்தப் பிராமணக் குடும்பம்; அவர்களிடம் சென்ற குந்தி...

வைசம்பாயனர் சொன்னார், "தனது பெற்றோரின் துயர் நிறைந்த வார்த்தைகளைக் கேட்ட மகள் பெரும் துயரடைந்து, அவர்களிடம்,(1) "உங்களைக் கவனித்துக் கொள்ள யாருமில்லாதது போல் {அநாதைகள் போல} இவ்வளவு துயரடைந்து நீங்கள் ஏன் அழுது கொண்டிருக்கிறீர்கள்? நான் சொல்வதைக் கேட்டுவிட்டு, எது சரியோ அதைச் செய்யுங்கள்.(2) குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் என்னைக் கைவிடுவது என்பது ஐயத்திற்கிடமில்லாதது. எப்படியும் என்னைக் கைவிடத்தான் போகிறீர்கள். எனவே, இப்போது என்னைக் கைவிட்டு, அனைத்தையும் காத்துக் கொள்ளுங்கள்.(3) பிள்ளைகள் நம்மைக் காப்பார்கள் (இந்த உலகத்திலும், மறு உலகத்திலும்) என்று எண்ணியே ஒரு மனிதன் அவர்களைப் பெறுகிறான். என்னைப் படகாகப் பயன்படுத்தி இந்தக் கடினகால நீரோடையைக் கடந்து செல்லுங்கள்.(4)



ஒரு பிள்ளை, தனது பெற்றோரை இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் காக்கிறான். ஆகையாலேயே கற்றோர்கள் அந்தப் பிள்ளையைப் புத்ரன் (காப்பவன்)என்று அழைக்கின்றனர்.(5) மூதாதையர்கள் என்னிடமிருந்து மகளின் பிள்ளையை எதிர்பார்ப்பார்கள் (முக்திக்காக). ஆனால், (எனது பிள்ளைகளுக்காகக் காத்திராமல்) நான் எனது தந்தையைக் காப்பதன் மூலம் அவர்களைக் காத்தவளாவேன்.(6) எனது தம்பியான இவன் பச்சிளம் பருவத்தில் இருக்கிறான். எனவே, நீங்கள் அழிந்தால் அவனும் இறப்பது ஐயத்திற்கிடமில்லாதது.(7) எனது தந்தையாகிய நீர் இறந்தால், எனது தம்பியும் உம்மைத் தொடர்வான். பித்ருக்களுக்குக் கொடுக்கப்படும் பிண்டம் கொடுக்கப்படாமல் அவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாவார்கள்.(8)

எனது தந்தையாலும் தம்பியாலும் கைவிடப்பட்டு, ஏன் எனது தாயாலும் கைவிடப்பட்டு (கணவரும் பிள்ளையும் இறந்த பிறகு அவளும் உயிருடன் இருக்க மாட்டாளாகையால்) நான் பெரும் துயரத்திற்குள் ஆழ்ந்து முழுவதுமாக அழிந்து போவேன்.(9) நீரும், என் தம்பியும், என் தாயும் இந்த ஆபத்திலிருந்து தப்பித்தீர்களென்றால் நீங்கள் கொடுக்கும் பிண்டத்தால் நமது முன்னோர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.(10) தானே தான் தனக்கு மகன் {நாமே நமக்கு மகனாகப் பிறக்கிறோம்}. மனைவியே ஒருவனுக்கு நட்பு, ஒரு மகளோ எப்போதும் பிரச்சனையின் ஊற்றுக்கண்ணாவாள். அந்த ஊற்றுக்கண்ணை அகற்றி உங்களைக் காத்துக் கொண்டு, எனக்கு அறவழியை அமைத்துக் கொடுங்கள்.(11) ஓ தந்தையே, நான் பெண்ணானதால், உம்மை இழந்து, உதவியற்றுத் துயரத்தில் விழுந்து, அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டியிருக்கும்.(12) எனவே, நான் எனது தந்தையின் குலத்தைக் காக்க எண்ணி, எனது அறத்தகுதியின் அடிப்படையில் அந்தக் கடினமான காரியத்தை முடிப்பேன்.(13)

என்னை விட்டுவிட்டு பிராமணர்களில் சிறந்த நீர் அங்கே (ராட்சசனிடம்) சென்றால், நான் மிகவும் வருந்துவேன். எனவே, ஓ தந்தையே, என்னிடம் கருணை கொள்வீராக.(14) ஓ மனிதர்களில் சிறந்தவரே, நமக்காகவும், நமது குலத்துக்காகவும், நமது அறத்தகுதிகளுக்காகவும் எப்படியும் எப்போதாவது பிரிய வேண்டிய என்னை இப்போது கைவிட்டு உங்களைக் காத்துக் கொள்வீராக.(15) ஓ தந்தையே, தவிர்க்க முடியாத இந்த விஷயத்தில் தாமதம் வேண்டாம். நீர் சொர்க்கத்திற்குச் சென்றதும் நாங்கள் எங்கள் உணவுக்காக அந்நியர்களிடம் நாய்களைப் போலப் பிச்சை எடுத்துத் திரிவதைவிட வலி நிறைந்ததாக வேறு எது இருக்க முடியும்? ஆனால் நீர் உமது உறவினர்களுடன் இந்தச் சிரமத்திலிருந்து காக்கப்பட்டாலோ, நான் மகிழ்ச்சியாகத் தேவர்கள் இருக்கும் பகுதிகளில் வாழ்வேன்.(16,17) இப்படி மகளை அளித்துவிட்டு, தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும் படையல் வைத்தால் நன்மை நடக்கும் என்றே நாம் கேள்விப்படுகிறோம்" என்றாள்".(18)

வைசம்பயாணர் தொடர்ந்தார், "அந்த பிராமணன் தனது மனைவியுடன், தனது மகளின் ஒப்பாரியைக் கேட்டு முன்னை விட அதிகத் துக்கம் கொண்டான். அம்மூவரும் சேர்ந்து அழத் தொடங்கினர்.(19) இதைக் கண்ட பச்சிளங்குழந்தையான அவர்களது மகன், இனிமையான குரலில், கண்கள் மகிழ்ச்சியில் பிரகாசிக்க,(20) "அழாதீர்கள், ஓ தந்தையே, நீரோ, ஓ தாயே, நீயோ, ஓ தமக்கையே, நீயோ அழாதீர்கள்" என்று புன்னகைத்துக் கொண்டே அவர்கள் ஒவ்வொருவரையும் அணுகினான்.(21) இறுதியில் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு ஒரு புல்லை எடுத்து, " மனிதர்களை உண்ணும் அந்த ராட்சசனை இதைக் கொண்டு நான் கொன்றுவிடுவேன்" என்றான்.(22) அவர்கள் அப்போது பெரும் துயரத்திலிருந்தாலும், குழந்தையின் இனிமையான மழலைப் பேச்சு அவர்களின் முகத்தில் பெரும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தது.(23) பிறகு குந்தி இது தான் தக்க சமயம் என்று நினைத்து, அவர்களை அணுகி, இறந்தவர்களை மீட்கும் அமுதம் போன்ற வார்த்தைகளை அவர்களிடம் பேசி, அவர்களைத் துக்கத்திலிருந்து மீட்டெடுத்தாள்" {என்றார் வைசம்பாயனர்}.(24)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்