Monday, July 29, 2013

பீம பகாசுர மோதல்! - ஆதிபர்வம் பகுதி 165

The Fight between Bhima and Vakasura! | Adi Parva - Section 165 | Mahabharata In Tamil

(பக வத பர்வம் - 7)

பதிவின் சுருக்கம் : மறுநாள் காலையில் பிராமணன் கொடுத்த உணவை வண்டியிலேற்றிக் கொண்டு, பகாசுரன் வசிக்கும் காட்டுக்குச் சென்ற பீமன்; ஓரிடத்தில் அமர்ந்து தான் கொண்டு வந்த உணவை உண்டது; அதைக் கண்டு பீமனுடன் மோத வந்த பகாசுரன்; பகாசுரனை இரத்தம் கக்கச் செய்த பீமன்...

தனது தாயின் வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், "ஓ தாயே, துயருற்ற பிராமணன் மீது இரக்கப்பட்டு, நீ வலிந்து செய்த காரியம் நிச்சயமாக சிறப்பானதேயாகும்.(1) ஓ தாயே, நீ பிராமணர்களிடம் இரக்கப்பட்டு அனுப்புவதால், நிச்சயமாகப் பீமன் அந்த மனித ஊனுண்ணியைக் கொன்று உயிருடன் திரும்புவான்.(2) ஆனால், ஓ தாயே, இந்த நகரத்தில் வசிப்பவர்களிடத்தில் யாதொன்றையும் சொல்லாமல், தனது உறுதிமொழியை {சத்தியத்தைக்} காக்குமாறு அந்த பிராமணரிடம் சொல்வாயாக" என்றான்".(3)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இரவு கழிந்ததும், பாண்டு மைந்தன் பீமன், ராட்சசனுக்கான உணவை எடுத்துக் கொண்டு அந்த நரமாமிச உண்ணி இருக்கும் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றான்.(4) பாண்டுவின் வலிமைமிக்க மகன் {பீமன்}, அந்த ராட்சசன் வசித்த கானகத்தை அணுகித் தான் கொண்டு சென்ற உணவைத் தானே உண்ணத் தொடங்கி, அந்த ராட்சசனைப் பெயர் சொல்லி உரக்க அழைத்தான்.(5) பீமனின் வார்த்தைகளைக் கேட்ட ராட்சசன், எரியும் கோபத்துடன் வெளியே வந்து, பீமன் இருக்கும் இடத்தை நெருங்கினான்.(6) பெரும் உடலும், பெரும் பலமும் கொண்டு, கண்கள் சிவக்கச் சிவந்த தாடி மற்றும் தலை மயிருடன் கூடிய அவன் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தான். தனது பாதச் சுவடுகளால் பூமியை ஆழமாக அழுத்தினான்.(7) அவனது வாய் ஒரு காதிலிருந்து அடுத்த காது வரை விரிந்து திறந்திருந்தது. அவனது காதுகள் கணைகளின் முனைகளைப் போல இருந்தன. கடும் முகத்துடன், மூன்று கோடுகளுடன் பள்ளமான நெற்றியும் கொண்டிருந்தான் அந்த ராட்சசன்.(8)

தனது உணவை உண்ணும் பீமனைக் கண்டு, தனது உதடுகளைக் கடித்துக் கொண்டு, கோபத்தால் கண்களை அகல விரித்துப் பீமனிடம்,(9) "என் கண்ணெதிரிலேயே எனது உணவை உண்டு, எமனுலகு செல்ல விரும்பும் இந்த முட்டாள் யார்?" என்றான்.(10)

ஓ பாரதா {ஜனமேஜயா!} இவ்வார்த்தைகளைக் கேட்ட பீமன், அந்த ராட்சசனை மதிக்காமல் ஏளனமாகச் சிரித்து, முகத்தைத் திருப்பாமலேயே உண்பதைத் தொடர்ந்தான்.(11) இதைக்கண்ட அந்த மனித ஊனுண்ணி, தனது இரு கரங்களையும் உயர்த்திக் கொண்டு பேரொலியுடன் பீமனை அங்கேயே, அப்போதே கொன்று போடுவதற்காக அவனை நோக்கி ஓடினான்.(12) எதிரி வீரர்களை அழிக்கும் விருகோதரன் {பீமன்}, அந்த ராட்சசன் மேல் தன் சிறு பார்வையை மட்டும் வீசி, மீண்டும் அவனை மதிக்காமல், ராட்சசனின் உணவைத் தொடர்ந்து உண்டான்.(13) கோபம் நிறைந்த அந்த ராட்சசன், குந்தியின் மகனான விருகோதரனை, தனது இரு கரங்களையும் ஓங்கிப் பின்னாலிருந்து வலிமையாக அடித்தான்.(14) இப்படித் தாக்கப்பட்ட பீமன், அதைச் சிறிதும் மதிக்காமல், ராட்சசனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் தொடர்ந்து உண்டு கொண்டிருந்தான்.(15)

வலிமைமிக்கவனான அந்த ராட்சசன், எரியும் கோபத்துடன், ஒரு மரத்தைப் பிடுங்கி, பீமனைத் தாக்குவதற்காக அவனிடம் ஓடினான்.(16) இதே வேளையில், மனிதர்களில் காளையான பலம்பொருந்திய பீமன், ஓய்வாக மொத்த உணவையும் உண்டு. தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, மோதலுக்காக மகிழ்ச்சியுடன் எழுந்து நின்றான்.(17) பிறகு, ஓ பாரதா, பெரும் சக்தி கொண்ட பீமன் ஏளனமாகச் சிரித்து, கோபம் கொண்ட ராட்சசன் வீசிய மரத்தைத் தனது இடது கையால் பிடித்தான்.(18) அந்த வலிமைமிக்க ராட்சசன், பல மரங்களைப் பிடுங்கி வந்து பீமன் மீது எறிந்தான். அந்தப் பாண்டவனும் அதே அளவுக்கு ராட்சசன் மீது எறிந்தான்.(19) பிறகு, ஓ மன்னா {ஜனமேஜயா}, மனிதனுக்கும் ராட்சசனுக்கும் இடையில் மரங்களைக் கொண்டு நடக்கும் போர் உக்கிரமடைந்து, அந்தப் பகுதியே மரங்களற்றுப் போனது.(20)

அப்போது, அந்த ராட்சசன், தானே பகன் என்று சொல்லிக் கொண்டு, அந்தப் பாண்டவன் மீது பாய்ந்து, பெரும் பலம் வாய்ந்த பீமனைத் தனது கரங்களால் பற்றினான்.(21) அந்தப் பெரும் ஆற்றலைக் கொண்டவனும் {பீமனும்}, வலிய கரங்களைக்  கொண்ட அந்த ராட்சசனைக் கட்டிப் பிடித்து, உற்சாகமவும் வன்முறையுடனும் தனது சக்தியை வெளிப்படுத்தினான்.(22) அந்த ராட்சசன், பீமனால் இழுத்துச் செல்லப்பட்டும், பீமனைத் தான் இழுத்தும் பெரும் களைப்படைந்தவனான.(23) இந்த இருவரின் பெரும் பலத்தால் பூமாதேவி நடுங்கினாள். பெரும் மரங்கள் துண்டு துண்டாகின.(24)

பீமன், ராட்சசன் களைப்படைந்ததைக் கண்டு, அவனைக் தனது கால் முட்டிகளால் பூமியில் அழுத்தி, பெரும் பலத்துடன் தாக்கத் தொடங்கினான்.(25) பீமன், தனது கால்முட்டியை ராட்சசனின் நடு முதுகில் வைத்துக் கழுத்தைத் தனது வலக்கையால் பிடித்து, அவனது {ராட்சசனின்} இடுப்பு ஆடையை இடது கையால் பிடித்து, பெரும் பலத்துடன் அவனை இரண்டாக மடித்துப் போட்டான். அந்த நரமாமிச உண்ணி {பகாசுரன்} பயங்கரமாக அலறினான்.(26,27) ஓ ஏகாதிபதியே! இப்படிப் பீமனின் முட்டியால் ஒடிக்கப்பட்ட அந்த ராட்சசன், குருதியைக் கக்கத் தொடங்கினான்" {என்றார் வைசம்பாயனர்}.(28)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்