Sunday, July 28, 2013

குந்தியைக் கடிந்து கொண்ட யுதிஷ்டிரன்! - ஆதிபர்வம் பகுதி 164

Yudhishthira rebuked Kunti! | Adi Parva - Section 164 | Mahabharata In Tamil

(பக வத பர்வம் - 6)

பதிவின் சுருக்கம் : பிச்சை எடுக்கச் சென்ற பாண்டவர்கள் திரும்பி வந்தது; பீமன் பகாசுரனிடம் செல்லப்போவதைக் கேட்டு மிகவும் துயரமடைந்த யுதிஷ்டிரன்; குந்தியைக் கடிந்து கொண்ட யுதிஷ்டிரன்; பீமனை ஆற்றலை எடுத்துச் சொல்லி அவனைத் தேற்றிய குந்தி...

வைசம்பாயனர் சொன்னார், "காரியத்தை முடிப்பதாகப் பீமன் "செய்கிறேன்" என்று உறுதி கூறிய பிறகு, ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்த நாளைக்கான தங்கள் பிச்சையைப் பெற்றுப் பாண்டவர்கள் வீடு திரும்பி வந்தனர்.(1) அப்போது பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன், பீமனின் முகத்தோற்றத்தை வைத்து, அவன் சாதிக்க நினைத்திருக்கும் காரியத்தின் இயல்பை ஊகித்தான். தனது தாயின் அருகில் அமர்ந்த யுதிஷ்டிரன், அவளிடம் கமுக்கமாக,(2) "ஓ தாயே, பெரும் வலிமைமிக்கவனான பீமன் சாதிக்க நினைக்கும் காரியம் என்ன? அவன் உனது கட்டளையின் பேரில் அக்காரியத்தைச் செய்யப் போகிறானா? அல்லது சொந்த விருப்பத்தில் செய்யப் போகிறானா?" என்று கேட்டான்.(3)


குந்தி, "எதிரிகளைத் தண்டிப்பவனான பீமன், எனது கட்டளையின் பேரில், ஒரு பிராமணனுக்கு நன்மை செய்து, {ராட்சசனிடம் இருந்து} இந்த நகரத்தை விடுவிக்கும் செயற்கரிய காரியத்தைச் செய்யப் போகிறான்" என்றாள்.(4)

யுதிஷ்டிரன், "ஓ தாயே, என்ன கடுங்காரியம் செய்துவிட்டாய்? இந்தச் செயற்கரிய கடினமான காரியம் தற்கொலைக்கு ஒப்பானதாகும். ஒருவன் தனது சொந்தக் குழந்தையைக் கைவிடுவதைக் கற்றோர் மெச்சுவதில்லை.(5) ஓ தாயே, மற்றவர்களுக்காக உனது சொந்த மகனையே தியாகம் செய்ய ஏன் விரும்புகிறாய்? ஓ தாயே, உனது பிள்ளையை இப்படிக் கைவிடுவதனால், நீ மனிதச் செயல்களுக்கு எதிராக மட்டுமல்ல, வேதங்களின் படிப்பினைகளுக்கும் எதிராகச் செயல்படுகிறாய்.(6) பீமனின் கர வலிமையை நம்பியே நாம் இரவில் மகிழ்ச்சியுடன் உறங்குகிறோம். திருதராஷ்டிரனின் தீய மகன்களிடம் இருந்து நாட்டை மீட்கும் காரியமும் அவனை நம்பியே இருக்கிறது.(7) எந்தப் பீமனின் பேராற்றலை நினைத்து துரியோதனனும் சகுனியும் விழிதட்டாமல் இரவு முழுவதும் உறங்குவதில்லையோ,(8) எந்தப் பீமன் நம்மை அரக்கு மாளிகை அபாயத்திலிருந்து மீட்டானோ, புரோசனனின் மரணத்திற்குக் காரணமான அந்தப் பீமனின் ஆற்றலை நம்பியே, திருதராஷ்டிரனின் மகன்கள் அழிந்து விட்டதாகவும், உலகத்திலுள்ள அனைத்துச் செல்வங்களையும் அடைந்துவிட்டதாகவும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.(9,10) ஓ தாயே நீ அவனைக் கைவிடுவதாக முடிவு செய்துவிட்டாயா? நீ உன் சுயநினைவை இழந்து விட்டாயா? துயரங்கள் மேகமாகச் சூழ்ந்து உனது புத்தியைக் கெடுத்துவிட்டனவா?" என்றான்.(11)

தனது மகனிடம் இருந்து இவ்வார்த்தைகளைக் கேட்ட குந்தி, "ஓ யுதிஷ்டிரா, விருகோதரனைக் {பீமனைக்} குறித்து நீ வருத்தப்படாதே. எனது புத்தியின் பலவீனத்தால் நான் இந்த முடிவை எடுக்கவில்லை.(12) திருதராஷ்டிரன் மகன்களுக்குத் தெரியாமல் நாம் இந்த பிராமணரின் இல்லத்தில் கவலையில்லாமல் வாழ்ந்து வருகிறோம். அவரும் நம்மைப் பெரிதும் மதிக்கிறார்.(13) ஓ மகனே, அதற்குக் கைம்மாறாக இதைச் செய்யத் தீர்மானித்தேன். செய்ந்நன்றியையும் நற்குணங்களையும் இழக்காதவனே மனிதன் ஆவான்.(14)

ஒருவனுக்குப் பிறர் செய்யும் காரியங்களை விடப் பலமடங்கு அதிகமாக அவன் அவர்களுக்குச் செய்ய வேண்டும். அரக்கு மாளிகை நிகழ்ச்சியிலும், ஹிடிம்பனின் அழிவிலும் பீமனின் வீரத்தை நான் கண்டிருக்கிறேன். விருகோதரனிடம் {பீமனிடம்} எனக்கிருக்கும் நம்பிக்கை பெரியது. பீமனது கரங்களின் பலம் பத்தாயிரம் யானைகளின் பலத்திற்குச் சமமானதாகும்.(15,16) அதனாலேயே, அவனால், யானை கனம் கொண்ட உங்கள் ஒவ்வொருவரையும் வாரணாவதத்திலிருந்து சுமந்து கொண்டு வர முடிந்தது. பீமனின் பலத்திற்கு ஈடாக இந்த உலகத்தில் யாரும் இல்லை; இடியைக் கையில் தாங்கி நிற்கும் போர்வீரர்களின் முதன்மையானவனையே {இந்திரனையே} அவன் வென்றுவிடுவான்.(17) அவன் பிறந்தவுடன், எனது மடியில் இருந்து, மலையின் சாரலில் விழுந்தான். அவனது உடலின் கனத்தால் அவன் விழுந்த பாறை துண்டு துண்டாக உடைந்து போனது.(18)

ஓ பாண்டுவின் மைந்தனே, இதிலிருந்தும் நான் பீமனின் பலத்தை அறிந்து கொண்டேன். இந்தக் காரணங்களுக்காகவே, பிராமணனின் எதிரிக்கு எதிராக, நான் அவனை நிறுத்தத் தீர்மானித்தேன்.(19) நான் முட்டாள்தனமாகவோ, அறியாமையாலோ அல்லது ஏதேனும் லாப நோக்கத்தோடோ இப்படிச் செயல்படவில்லை. அறச்செயல் செய்வதற்காகவே இந்த முடிவை வலிந்து எடுத்தேன்.(20) ஓ யுதிஷ்டிரா, இச்செயலால் இரு காரியங்கள் சாதிக்கப்படும்; ஒன்று பிராமணனுக்கான செய்ந்நன்றியைச் செய்வது, மற்றொன்று உயர்ந்த அறத்தகுதியை அடைவது.(21)

பிராமணனுக்கு உதவி செய்யும் க்ஷத்திரியன், அதன் பிறகு ஆனந்தமான உயர்ந்த பகுதிகளை {சொர்க்கத்தை} அடைவான் என்பது எனது உறுதி.(22) அப்படியே ஒரு க்ஷத்திரியனின் உயிரைக் காப்பாற்றும் மற்றொரு க்ஷத்திரியன் மறுவுலகில் பெறுவது போல இவ்வுலகிலும் பெரும் புகழ் பெறுவான்.(23)  ஒரு வைசியனுக்கு உதவும் க்ஷத்திரியன் இவ்வுலகத்தில் பெரும் புகழ் பெறுவான்.(24) மன்னர் இனம் தன்னைத் தஞ்சமடையும் சூத்திரனையும் காக்க வேண்டும். அப்படிச் செய்தால், அடுத்தப் பிறவியில் அவன் ஓர் அரசகுடும்பத்திலோ அரசவழியிலோ பிறந்து, வளமை பெற்று, மற்ற மன்னர்களின் மரியாதையைப் பெற்றிருப்பான்.(25) ஓ பூருகுலத்தில் முளைத்த வழித்தோன்றலே, கடந்து சென்ற நாட்களில் சிறப்புவாய்ந்த ஞானி வியாசர், கடுந்தவம் செய்து தான் கண்டதை என்னிடம் சொன்னார். எனவே, இந்தக் காரியத்தைச் செய்யும் தீர்மானத்துக்கு நான் வந்தேன்" என்றாள் {குந்தி}.(26)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்