Monday, July 29, 2013

புதிய பண்டிகை உதயமானது! - ஆதிபர்வம் பகுதி 166

The rise of a new festival! | Adi Parva - Section 166 | Mahabharata In Tamil

(பக வத பர்வம் - 8)

பதிவின் சுருக்கம் : பகன் கொல்லப்பட்டதும், அவனுடைய சொந்தங்கள் பீமனுடன் உடன்படிக்கை செய்து கொண்டது; ஏகச்சக்கர நகரத்தின் வாயிலில் பகாசுரனின் உடலைக் கிடத்திய பீமன்; பிராமணனின் வீட்டை அடைந்து, நடந்த கதையைச் சொன்ன பீமன்; பகனுடைய மரணத்தைத் திருவிழாவாகக் கொண்டாடிய அந்த நகரத்து மக்கள்...

வைசம்பாயனர் சொன்னார், "பெரும் மலையைப் போன்ற பகன், இப்படி (பீமனின் முட்டியால்) ஒடிக்கப்பட்டு, பயங்கரமாகக் கதறியபடியே இறந்தான்.(1) இச்சத்தங்களால் அச்சமடைந்த ராட்சசனின் உறவினர்கள் தங்கள் பணியாட்களுடன் வெளியே வந்தனர்.(2) உணர்வையிழந்து அச்சமடைந்திருக்கும் அவர்களைக் கண்டவனும், தாக்குபவர்களில் முதன்மையானவனுமான அந்தப் பீமன், அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களை (நரமாமிசம் உண்பதைக் கைவிடுவோம் என்று) உறுதியேற்க வைத்து,(3) "இனி மேல் மனிதர்களைக் கொல்லாதீர்கள். அப்படி மனிதர்களைக் கொன்றீர்கள் என்றால், நீங்களும் பகனைப் போலச் சாக வேண்டியதுதான்." என்றான்.(4)

ஓ மன்னா {ஜனமேஜயா} பீமனின் பேச்சைக் கேட்ட ராட்சசர்கள், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, பீமன் விரும்பிய உறுதியை ஏற்றனர்.(5) ஓ பாரதா {ஜனமேஜயா} அந்நாளிலிருந்து, (அந்தப் பகுதியைச் சேர்ந்த) ராட்சசர்கள் மனிதர்களுடன் சமாதானமாக வாழ்வதையே அந்த நகரவாசிகள் கண்டனர்.(6) பிறகு பீமன், உயிரற்ற அந்த நரமாமிச உண்ணியை இழுத்துச் சென்று நகரத்தின் வாயில்கள் ஒன்றில் கிடத்தி, யாரும் கவனிக்கும் முன்பே அங்கிருந்து சென்றுவிட்டான்.(7) பகனின் ரத்த சம்பந்தமுள்ள உறவினர்கள், பீமனின் பலத்தால் அவன் கொல்லப்பட்டதைக் கண்டு, மிகவும் அஞ்சி, பல திசைகளில் தப்பி ஓடினர்.(8) அதே நேரத்தில், அந்த ராட்சசனைக் கொன்ற பிறகு, பீமன் அந்தணரின் வசிப்பிடத்திற்குத் திரும்பி, யுதிஷ்டிரனிடம் நடந்தது அத்தனையையும் விவரமாகக் கூறினான்.(9)

அடுத்த நாள் காலையில் வெளியே வந்த நகரவாசிகள், உடல் முழுவதும் ரத்தத்தால் நனைந்து, தரையில் பிணமாகக் கிடக்கும் ராட்சசனைக் கண்டனர்.(10) பெரும் மலையைப் போன்ற அந்த நரமாமிச உண்ணி, சின்னாபின்னமாகச் சிதைக்கப்பட்டு தரையில் கிடப்பதைக் கண்ட பார்வையாளர்களின் முடிகள் சிலிர்த்துக் கொண்டு நின்றன.(11) அவர்கள் விரைவாக ஏகசக்கரம் திரும்பி, தாங்கள் கண்டதைத் தெரிவித்தனர். ஓ மன்னா, அதன் பிறகு, அந்நகர குடிமக்களில் இளமையானவர்களும், முதுமையானவர்களும் ஆயிரக்கணக்கில் தங்கள் மனைவியருடன் வந்து பகனைக் கண்டு, அதை ஒரு அமானுஷ்ய மனிதனின் சாதனை என்று கருதி மலைத்து நின்றனர். ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, உடனே அவர்கள் தங்கள் தேவர்களிடம் வேண்டிக் கொள்ளத் தொடங்கினர்.(12,13)

அதன்பிறகு, அந்தக் குறிப்பிட்ட நாளில் அந்த ராட்சசனுக்கு உணவு எடுத்துச் செல்லும் முறை யாருக்கு வருகிறது என்று அவர்கள் அனைவரும் கணக்கிட்டனர். பிறகு சரியாக உறுதி செய்து கொண்டு, அவர்கள் அனைவரும் (தங்கள் ஆவலைத் தணித்துக் கொள்ள) அந்த அந்தணனிடம் வந்து கேட்டனர்.(14) இப்படியே தொடர்ச்சியாகக் கேட்கப்பட்ட அந்த அந்தணர்களில் காளையானவன், பாண்டவர்களை மறைக்க எண்ணி, குடிமக்களிடம்,(15) "நான் ராட்சசனின் உணவை எடுத்துச் செல்லப் பணிக்கப்பட்ட பிறகு, எனது உறவினர்களுடன் அமர்ந்து அழுது கொண்டிருந்தேன். அப்போது மந்திரங்கள் அறிந்த ஒரு உயர் ஆன்ம அந்தணர்,(16) நகரத்தின் துயரத்தை உறுதி செய்து கொண்டு, என்னிடம் வந்து நான் அழும் காரணத்தையும் கேட்டார். அதன் பிறகு அந்த அந்தணர்களின் முதன்மையானவர், புன்னகையுடன் எனக்கு அனைத்து வாக்குறுதிகளையும் கொடுத்து,(17) "இன்று அந்த ராட்சசப் பாவிக்கு நான் உணவு எடுத்துச் செல்கிறேன். நீ எனக்காகப் பயப்படாதே!" என்று சொல்லி,(18) உணவை எடுத்துக் கொண்டு பகன் வசித்த கானகத்திற்குச் சென்றார். நம் அனைவருக்கும் நன்மையாக அமைந்த இந்தக் காரியம் நிச்சயமாக அவராலேயே ஆனது." என்றான்.(19)

பிறகு அந்த (நகரத்தின்) அந்தணர்களும், க்ஷத்திரியர்களும் இதைக் கேட்டு பெரிதும் ஆச்சரியமடைந்தனர். வைசியர்களும், சூத்திரர்களும் இதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.(20) பிறகு, குடிமக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பண்டிகையைக் கொண்டாட ஏற்பாடு செய்தனர். அதில் (பகன் மீதிருந்த அச்சத்திலிருந்து விடுவித்த அந்தணரின் {பீமனின்} நினைவாக) அந்தண வழிபாடே முக்கிய சடங்காக இருந்தது[1]" {என்றார் வைசம்பாயனர்}.(21)


[1] மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்த 21ம் ஸ்லோகத்தில், "அந்த இயல்புக்கு மிக்க சாதனையைக் கண்டு இவ்வாறு மகிழ்ச்சியடைந்த குடிமக்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர். பாண்டவர்களும் அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்" என்றிருக்கிறது. புதிய பண்டிகை குறித்த குறிப்பேதும் இல்லை. கும்பகோணம் பதிப்பில், "அந்தப் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்களனைவரும் மிகுந்த ஆச்சரியமும் சந்தோஷமுமுற்றவர்களாகி, அப்போதே பிராம்மண பூஜை செய்தனர். பிறகு, கிராமணங்களிலுள்ளவர்கள் அனைவரும் அந்த மிகுந்த ஆச்சரியத்தைப் பார்ப்பதற்கு அந்த நகரத்திற்கு வந்தனர். பாண்டவர்களும் அங்கேயே வசித்தனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இதன்பேரில் ஆச்சரியமடைந்த திளைத்த பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும், சூத்திரர்கள் அனைவரும், அந்தப் பிராமணனுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒரு விருந்தை ஏற்பாடு செய்தனர். அந்நாட்டின் குடிமக்கள் அனைவரும் அந்த இயல்புக்கு மிக்க ஆச்சரியத்தைக் காண வந்தனர். பிருதையின் மகன்களும் அங்கேயே தொடர்ந்து வாழ்ந்தனர்" என்றிருக்கிறது.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்