Monday, August 05, 2013

எனக்குக் கணவனைக் கொடு! - ஆதிபர்வம் பகுதி 171

Give me a husband! | Adi Parva - Section 171 | Mahabharata In Tamil

(சைத்ரரதப் பர்வம் - 05)

பதிவின் சுருக்கம் : பாஞ்சாலம் செல்லும் வழியில் பாண்டவர்களைச் சந்தித்த வியாசர்; திரௌபதியின் முன்ஜென்ம வரலாற்றைச் சொன்னது...

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பீமசேனன், அர்ஜுனன் மற்றும் இரட்டைர்களிடம் பாஞ்சால பயணத்தைப் பற்றி குந்தி பேசினாள். அவர்களனைவரும், "அப்படியே ஆகட்டும்" என்றனர்.(1) அப்போது, ஓ மன்னா {ஜனமேஜயா}, குந்தி தனது மகன்களுடன் அந்த (தனது வீட்டில் தங்க இடமளித்திருந்த) பிராமணரை வணங்கிவிட்டு, சிறப்புவாய்ந்தவனான துருபதனின் மகிழ்ச்சி நிறைந்த நகரத்தை {காம்பில்யத்தை} நோக்கிப் புறப்பட்டாள்".(2)

வைசம்பாயனர் சொன்னார், "சிறப்பு மிகுந்த பாண்டவர்கள் மாற்றுருவம் கொண்டு பிராமணரின் இல்லத்தில் தங்கியிருந்தபோது, ஒரு சமயம், சத்தியவதி மைந்தரான வியாசர், அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தார்.(3) எதிரிகளைத் தண்டிப்பவர்களான பாண்டவர்கள், அவர் வருவதைக் கண்டு, எழுந்திருந்து, வரவேற்பதற்கு எட்டெடுத்து வைத்து, மரியாதையுடன் வணங்கி, அவரெதிரில் அமைதியாகக் கரங்கூப்பி நின்றனர்.(4) இப்படிப் பாண்டவர்களால் வழிபடப்பட்ட அந்த முனிவர் மிகுந்த மனநிறைவையடைந்தார். அவர்களை அமரச் சொல்லி, அவர்களிடம் மகிழ்ச்சியாகப் பேசி,(5) "எதிரிகளை அழிப்பவர்களே, நீங்கள் சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி அறம்சார்ந்த வாழ்வு வாழ்கிறீர்களா? நீங்கள் பிராமணர்களை வழிபடுகிறீர்களா? நீங்கள் தகுதியுடையோருக்கு மரியாதை செலுத்துவதில் பின்தங்கி இருக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்" என்று கேட்ட அந்த முனிவர்,(6) அறம் சார்ந்த பல வார்த்தைகளையும், விரும்பத்தக்க பல தலைப்புகளிலும் பேசி, அவர்களிடம்,(7) "ஒரு குறிப்பிட்ட ஆசிரமத்தில் வாழ்ந்த, ஒரு சிறப்பு வாய்ந்த முனிவருக்கு, ஓர் அழகான பெண் இருந்தாள். அவள் மெல்லிடையும், அழகான உதடுகளும், அழகான புருவங்களும், அழகான பெண்ணுக்கு உண்டான அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருந்தாள்.(8) அவள் தனது சொந்தச் (கடந்தபிறவிச்) செயல்களின் பலனாக நற்பேறற்றவளாக இருந்தாள். கற்புடையவளாக, அழகானவளாக இருந்தும், அந்த மங்கை ஒரு கணவனை அடைந்தாளில்லை.(9) துக்கமான இதயத்துடன், ஒரு கணவனை அடைய, அவள் துறவு நோன்பைப் பயில ஆரம்பித்தாள். தனது துறவின் மூலம் சங்கரனை (மஹாதேவனை) மனநிறைவு கொள்ளச் செய்தாள்.(10)

அவர் அவளுக்கு நன்மை செய்ய விரும்பி, அந்தச் சிறப்புவாய்ந்த மங்கையிடம், "நீ அருளப்பட்டிரு! விரும்பிய வரத்தைக் கேள்! நீ விரும்பியதைக் கொடுக்க வந்திருக்கும் சங்கரன் நான்!" என்றார்.(11)

தனக்கு நன்மையைப் பெற விரும்பிய அந்த மாது, அந்தத் தலைமைத் தெய்வத்திடம் திரும்பத் திரும்ப, "அனைத்துத் தகுதிகளையும் கொண்டவரை எனக்குக் கணவராகக் கொடுப்பாயாக" என்று கேட்டாள்.(12)

அப்போது, பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையான அந்த ஈசானன் (மஹாதேவன்), "ஓ அருளப்பட்டவளே, பாரத இளவரசர்களில் ஐவரை நீ கணவர்களாக அடைவாய்" என்றான்.(13)

இப்படிச் சொல்லப்பட்ட அந்த மங்கை, வரம் கொடுத்த அந்தக் கடவுளிடம், "ஓ தலைவா {கடவுளே}, உனது கருணையால் நான் ஒரு கணவரை மட்டுமே அடையவே விரும்புகிறேன்" என்றாள்.(14)

அதற்கு அந்தத் தெய்வம் அருமையான வார்த்தைகளால், "ஓ மாதே, 'எனக்குக் கணவனைக் கொடு' என்று முழுமையாக ஐந்து முறை நீ கேட்டாய்.(15) எனவே, வேறு பிறவியில் நீ ஐந்து கணவர்களை அடைவாய்" என்றான்.

பாரதக் குலத்தின் இளவரசர்களே! {பாண்டவர்களே} அந்தத் தெய்வீக அழகுடைய மங்கைதான் துருபதனின் பரம்பரையில் பிறந்திருக்கிறாள். பிருஷதனின் குலத்தில் வந்த அந்தக் களங்கமற்ற கிருஷ்ணை {திரௌபதி}, {பாண்டவர்களாகிய} உங்கள் அனைவருக்கும் மனைவியாக நியமிக்கப்பட்டிருக்கிறாள்.(16) எனவே, பலம் வாய்ந்தவர்களே, பாஞ்சாலர்களின் தலைநகர் சென்று அங்கே வாழ்வீராக. அவளை மனைவியாக அடைந்த பிறகு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை" என்றார்".(17)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பாண்டவர்களிடம் இப்படிச் சொல்லிவிட்டு, அருள்நிறைந்த அந்தச் சிறப்பு வாய்ந்த பெரும்பாட்டன். அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டார். அந்தப் பெருந்துறவி அவர்களை விட்டகன்று, எங்கிருந்து வந்தாரோ அங்கேயே சென்றார்".(18)



ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்