Sunday, September 15, 2013

வருண சபை! - சபாபர்வம் பகுதி 9

The Sabha of Varuna! | Sabha Parva - Section 9 | Mahabharata In Tamil

(லோகபால சபாகயானா பர்வம் - 05)

பதிவின் சுருக்கம் : வருணனின் சபா மண்டபம் எப்படி இருக்கும் என்பதை யுதிஷ்டிரனுக்கு நாரதர் விவரிப்பது…

நாரதர் சொன்னார், "ஓ யுதிஷ்டிரா, வருணனின் தெய்வீக சபை பிரகாசத்தில் இணையற்றதாக உள்ளது. அது நீள அகலங்களில் யம சபையைப் போன்றே உள்ளது. அதன் சுவர்களும், வளைவுகளும் தூய வெள்ளை நிறத்தில் உள்ளன.(1) அது (தேவ தச்சன்) விஸ்வகர்மனால் நீருக்குள் கட்டப்பட்டது. அது சுற்றிலும் அற்புதமான கனிகளையும், மலர்களையும் கொடுக்கவல்ல தங்கத்தாலும் ரத்தினங்களாலும் ஆன மரங்களால் சூழப்பட்டுள்ளது.(2) நீலமும் மஞ்சளும், கருப்பும் கருமையும், வெள்ளையும் சிவப்பும் ஆகிய நிறங்களில் பூங்கொத்துகள் மிகுந்து இருக்கும் பல மரங்கள் அங்கே இருக்கின்றன.(3) அந்த மரங்களில், பல வண்ணங்களில் அழகாக இருக்கும், நூற்றுக்கணக்கான, ஆயிரக் கணக்கான பல்வேறு இனங்களைச் சேர்ந்த பறவைகள், தங்கள் இனிய இசையை எழுப்பிக் கொண்டிருக்கின்றன.(4) அந்த மாளிகை குளிர்ச்சியாகவும் இல்லாமல், வெப்பமாகவும் இல்லாமல் மிகுந்த மகிழ்ச்சிகரமான சூழ்நிலை கொண்டதாக இருந்தது. வருணனுக்குச் சொந்தமான அந்த சபா மண்டபத்தில் பல இருக்கைகளுடன் கூடிய பல வெண்ணிற அறைகளும் இருக்கின்றன. அங்கே வருணன் தெய்வீக ஆடைகள் உடுத்தி, தெய்வீக ஆபரணங்களும் நகைகளும் பூண்டு, தெய்வீக வாசனைப் பொருட்களை மேனியில் தரித்து, தனது ராணியுடன் {வாருணியுடன்} அமர்ந்திருக்கிறான். நீர்த்தேவனான வருணனுக்காகக் காத்திருந்து, ஆதித்தியர்கள் அவனை வழிபடுகிறார்கள்.(5-7)

வாசுகி, தக்ஷகன், ஐராவதன் என்று அழைக்கப்படும் நாகன், கிருஷ்ணனும் லோகிதனும், பத்மனும், பெரும் சக்தி கொண்ட சித்ரனும், கம்பலன் மற்றும் அசுவதரன் என்று அழைக்கப்படும் நாகர்களும், திருதராஷ்டிரன், வலாஹகன், மதிமான் {மணிமான்}, குண்டதாரன், கார்க்கோடகன், தனஞ்சயன், பாணிமத் {பாணிமான்}, பெரும் பலம் வாய்ந்த குண்டகன், ஓ பூமியின் தலைவனே {யுதிஷ்டிரா}, பிரஹ்லாதன், மூஷிகதன், ஜனமேஜயன் மற்றும் அனைத்து நற்குறிகளும், மண்டலங்களும் நீண்ட தலைகளும் கொண்ட பல பாம்புகளும் அங்கு இருந்தன. ஓ யுதிஷ்டிரா, இவர்கள் அனைவரும் எந்தத் துயரமும் இல்லாமல் சிறப்பு வாய்ந்த வருணனுக்காகக் காத்திருந்து, அவனை வழிபடுகிறார்கள். ஓ மன்னா, விரோசனனின் மகன் பலி, முழு உலகத்தையும் அடக்கிய நரகன்,(8-12) சங்கிரகன் {ஸமஹ்ராதன்}, விப்ரசித்தி மற்றும் தானவர்களான காலகஞ்சன், சுஹனு, துர்முகன், சங்கன், சுமணன் {ஸுமனஸ்}, சுமதி, கடோதரன், மஹாபார்ஸ்வன், கர்த்தனன், பிடரன், விஸ்வரூபன், ஸ்வரூபன், விரூபன், மஹாசிரஸ் {மஹாசிரன்}, தசக்ரீவன், வாலி, மேகவாசஸ் {மேகவாஸன்}, தசாவரன், டிட்டிபன், விடபூதன், சங்கிரதன் {ஸமஹ்லாதன்}, இந்திரதாபனன் ஆகிய தைத்தியர்களும் தானவர்களும் காது குண்டலங்களுடனும்(13-15) மலர் அலங்காரங்களுடனும், மணிமுடிகளுடனும் {கிரீடங்களுடனும்} தெய்வீக ஆடைகள் பூண்டு, தங்கள் வீரத்தால் பல வரங்களைப் பெற்று, சாகாத வரத்தை அனுபவித்து {மேலுலகில்}, நன்னடத்தை கொண்டு, நல்ல சபதங்களை மேற்கொண்டு, அந்த அறைகளில் சுருக்குக் கயிறைத் தனது ஆயுதமாகக் கொண்ட சிறப்பு மிகுந்த வருணனுக்காகக் காத்திருந்து, அவனை வழிபட்டார்கள்.

ஓ மன்னா, பெருங்கடல்கள் நான்கும், பாகீரதி {கங்கை} ஆறும், கலிந்தி {யமுனை}, விதிசை, வேணை, வேகமான நீரோட்டம் கொண்ட {வேகவாஹினி} நர்மதை, விபாசை, சதத்ரு, சந்திரபாகை, சரஸ்வதி, இராவதி, விதஸ்தை, சிந்து, தேவநதி, கோதாவரி, கிருஷ்ணவேன்வா {கிருஷ்ணவேணி}, நதிகளின் ராணி காவேரி, கிம்புனை, விசல்யை, வைதரணி ஆறு, திருதீயை, ஜ்யேஷ்டிலை, பெரும் சோணை {சோணமெனும் பெரும் நதம்}, சர்மண்வதி, பெரும் நதியான பர்ணாசை, சரயு, வாரவத்யை, நதிகளின் ராணி லாங்கலி, கரதோயை, ஆத்ரேயி, சிவுப்பு மஹாநதம் {லௌஹித்யம்}, லகன்தி {லங்கதி}, கோமதி, சந்தியை, திரிஸ்ரோதசி ஆகிய புனிதமான நதிகளும், புனிதப் பயணம் செல்லக்கூடிய உலகப்புகழ்பெற்ற இடங்கள்,(16-23) மேலும் பல நதிகள், புனித நீர்நிலைகள், ஏரிகள், கிணறுகள், நீரூற்றுகள், பெரியதும் சிறியதுமான குளங்கள் அனைத்து உருவமெடுத்து அங்கே வந்து, ஓ பாரதா {யுதிஷ்டிரா} தலைவன் வருணனுக்காகக் காத்திருந்து, அவனை வழிபட்டன.

விண்ணுலகின் {சொர்க்கத்தின்} புள்ளிகளும் {திசைகளும்}, அனைத்து மலைகளும், அனைத்து நீர் வாழ் உயிரினங்களும் வருணனை வணங்கி அங்கே நிற்கின்றன. கருவி {இசை கருவி} மற்றும் குரல் இசைக்கு தங்களை அர்ப்பணித்திருந்த கந்தர்வ, அப்சரஸ்களின் பல்வேறு இனங்களும், புகழ்ச்சிப் பாடல்களைப் பாடிக்கொண்டு வருணனுக்காகக் காத்திருக்கின்றனர். தான் கொண்டிருக்கும் ரத்தினங்களால் வளமான குறிப்பிட்ட அனைத்து மலைகளும் உருவம் கொண்டு அந்த சபைக்கு வந்து ஒருவருடன் ஒருவர் பேசி மகிழ்ந்தனர்.(24-27) சுனபன் என்ற பெயர் கொண்ட வருணனின், முதல் அமைச்சர் {தலைமை அமைச்சர்}, தனது மகன்கள், பேரர்கள் மற்றும் தெய்வீக நீர்நிலைகளுடனும் தனது தலைவனுக்குப் பணி செய்ய காத்திருந்தான். இப்படி உருவம் கொண்டு வந்த அனைவரும் அந்த தெய்வத்தை {வருணனை} வணங்கினர்.(28,29) ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, எனது உலக சுற்றலின் போது கண்ட வருணனின் சபா மண்டபம் இப்படித்தான் இருக்கும். இனி குபேரனின் சபா மண்டபத்தைக் குறித்து கேள்". {என்றார் நாரதர்}.(30)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்