Sunday, September 22, 2013

"அடப்பாவி! நீயா அப்பாவி?" என்றான் கிருஷ்ணன் - சபாபர்வம் பகுதி 22

"You sinner, are you innocent?" said Krishna! | Sabha Parva - Section 22 | Mahabharata In Tamil

(ஜராசந்த வத பர்வம் - 03)

பதிவின் சுருக்கம் : தான் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ததாக நினைவில்லை என்று ஜராசந்தன் கூறல்; கிருஷ்ணன் சிறையில் அடைபட்டிருக்கும் மன்னர்களைக் குறித்துச் சொல்லல்; மனிதபலியை உலகம் கண்டதில்லை என்று கூறல்; க்ஷத்திரியர்களின் கடமையை ஜராசந்தன் நினைவூட்டல்; மன்னர்களை விடுவிக்க முடியாதெனவும், மோதுவதற்குத் தயார் எனவும் ஜராசந்தன் கூறல்…

Jarasandha speaking to Krishna

ஜராசந்தன் சொன்னான், "நான் எப்போது உங்களுக்கு தீங்கேதும் செய்தேன் என்று என்னால் நினைவுகூர முடியவில்லை. கவனமாக எனது மனத்தில் நினைத்துப் பார்த்தாலும், நான் உங்களுக்கு என்ன காயமிழைத்தேன் என்று அறிய முடியவில்லை.(1) நான் உங்களுக்கு எத்தீங்கும் இழைக்காத அப்பாவியாக இருக்கும்போது, பிராமணர்களாகிய நீங்கள் ஏன் என்னை பகைவனாகக் கருதுகிறீர்கள்? எனக்கு உண்மையுடன் பதில் சொல்லுங்கள். அதுவே நேர்மையானவர்கள் நடந்து கொள்ளும் முறை.(2) ஒருவரின் இன்பத்திற்கோ அறத்திற்கோ செய்யப்படும் தீங்கு துன்பம் மிகுந்ததாகும். ஓர் அப்பாவி மனிதனின் இன்பதுக்கோ, அறத்திற்கோ தீங்கு செய்யும் ஒரு க்ஷத்திரியன், பெரும் வீரனாகவும், அறவிதிகளை அறிந்தவனாகவும் இருந்தாலும் கூட, பாவிகளுக்கு ஏற்படும் விதி போல, அவன் செழிப்பில் இருந்து வீழ்வான்.(3,4) க்ஷத்திரியர்களின் வழிமுறைகளே மூன்று உலகிலும் நேர்மையானவை. உண்மையில், அறவிதிகளை அறிந்த மனிதர்கள் க்ஷத்திரிய வழிமுறைகளைப் புகழவே செய்கிறார்கள்.(5) எனது {க்ஷத்திரிய} வகைக்கான முறைகளை உறுதியான ஆன்மாவுடன் பின்பற்றும் நான், எனக்குக் கீழ் இருப்பவர்களுக்குத் தீங்கிழைத்ததில்லை. எனவே, இந்தக் குற்றச்சாட்டை நீங்கள் என் மீது வைத்தால் அது பிழையானது ஆகும்" {என்றான் ஜராசந்தன்}.(6)

கிருஷ்ணன், "ஓ வலிய கரங்களை உடையவனே {ஜராசந்தனே}, ஒரு குலத்தின் பெருமையைத் தாங்கி நிற்கும் ஒரு குறிப்பிட்ட தலைவருடைய உத்தரவின் பேரில் நாங்கள் உன்னை எதிர்த்து வந்திருக்கிறோம்.(7) ஓ மன்னா {ஜராசந்தா}, நீ பல க்ஷத்திரியர்களைக் கைதிகளாக (உனது நகரத்தில்) வைத்திருக்கிறாய். இவ்வளவு பெரிய தீங்கு {குற்றம்} செய்திருக்கும் நீ எப்படி உன்னை அப்பாவியாகக் கருதிக் கொள்கிறாய்?(8) ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே {ஜராசந்தா}, அறம் சார்ந்த மன்னர்களுக்கு நீ எப்படித் தீங்கு செய்யலாம்? ஓ மன்னா, பிற மன்னர்களைக் கொடுமையாக நடத்தி, ருத்திர தேவன் வேள்வியல் அவர்களைப் பலியிடப் போகிறாய்.(9) ஓ பிருஹத்ரதனின் மகனே {ஜராசந்தனே}, உன்னால் இழைக்கப்படும் பாவம் எங்களையும் தீண்டலாம். நாங்கள் அனைத்து செயல்களையும் அறத்தன்மையுடன் செய்து வருகிறோம். நாங்கள் அறத்தைக் காக்கும் தகுதியுடனேயே இருக்கிறோம்.(10) 

தேவர்களுக்கு மனிதனை பலியாகக் {நர பலி} கொடுக்கும் முறை எங்குமே காணப்படுவதில்லை. தேவனான சங்கரருக்கு மனிதர்களைப் பலியாகக் கொடுக்க ஏன் நீ விரும்புகிறாய்?(11) உனது வகை சார்ந்த மனிதர்களை நீ {வேள்விப் பலியாகத் தகுதியுடைய} விலங்குகளாகவே மதிக்கிறாய். ஓ ஜராசந்தா, உன்னைப் போன்ற மூடனைத் தவிர வேறு யாரால் இப்படிச் செயல்பட முடியும்?(12) ஒருவன் எந்தச் சூழ்நிலையில் ஒரு செயலைச் செய்திருந்தாலும், அதற்கான கனிகளை அவன் நிச்சயம் அடைவான்.(13) எனவே, எங்கள் உறவினர்களைக் கொன்றவனான உன்னை, துயரில் இருக்கும் மக்களுக்கு உதவும் வகையிலும், எங்கள் குலத்தின் செழிப்புக்காகவும் நாங்கள் கொல்ல வந்திருக்கிறோம்.(14) க்ஷத்திரியர்களில் (உனக்குச் சமமாக) எந்த ஆண்மகனும் இல்லை என நீ நினைக்கிறாய். இது உனது பங்குக்கு நீ செய்யும் பிழையாகும்.(15) 

ஓ மன்னா, பெருமையுடைய ஆன்மாவும், தாய்தகப்பன் வழியில் மதிப்பும் கொண்ட எந்த க்ஷத்திரியன், வெளிப்படையான போரில் ஈடுபடுவதால் நிலையான நல்லுலக {சொர்க்க} வாழ்வை அடையாமல் போகிறான்?(16) ஓ மனிதர்களில் காளையே {ஜராசந்தனே}, க்ஷத்திரியர்கள் விண்ணுலகை நோக்கமாகக் கொண்டு எப்போதும் தங்களைப் போரிலும், வேள்வியிலும் ஈடுபடுத்திக் கொண்டு முழு உலகையும் வெற்றி கொள்வார்கள்.(17) வேத கல்வி, பெரும்புகழ், தவ நோன்புகள், போர்க்களத்தில் மரணம் ஆகிய செயல்கள் அனைத்தும் நல்லுலகை {சொர்க்கத்தை} நோக்கி அழைத்துச் செல்லும். மற்ற மூன்று வழிகளில் நல்லுலகம் கிடைப்பது ஐயம் என்றாலும், போர்க்கள மரணம் நிச்சயம் அதைத் தரும்.(18) போர்க்களத்தில் மரணம் என்பது இந்திரனின் அரண்மனையை அடையும் வழியாகும். அது பல நல்ல தகுதிகளால் அருளப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே நூறு வேள்விகளைச் செய்தவன் (இந்திரன்) தனது குறிப்பிடும்படியான தகுதிகளுடன் இருந்து, அனைத்து அசுரர்களையும் வீழ்த்தி அண்டத்தை ஆண்டு வருகிறான். பெரும் பலத்தில் செருக்குள்ள மகத வீரனான உன்னைத்தவிர வேறு எவரிடம் பகைமை கொண்டால் நிச்சயமாக நல்லுலகை அடைய முடியும்?(19,20) 

ஓ மன்னா {ஜராசந்தா}, பிறரை அவமதிக்க நினைக்காதே. மனிதர்கள் அனைவரிடமும் ஆற்றல் இருக்கிறது. ஓ மனிதர்களின் மன்னா {ஜராசந்தா}, உனது ஆற்றலுக்கு இணையான, மேன்மையான ஆற்றலைக் கொண்ட பல மனிதர்கள் இருக்கிறார்கள்.(21) இவர்கள் அனைவரும் அறியப்படும் வரை, நீயே ஆற்றலுக்காக அறியப்படுவாய். ஓ மன்னா {ஜராசந்தா}, உனது ஆற்றலை எங்களால் தாங்கிக் கொள்ள முடியும்.(22) அதனாலேயே நான் இவ்வாறு பேசுகிறேன். ஓ மகத மன்னா {ஜராசந்தா}, உனக்குச் சமமானவர்கள் முன்னிலையில் உனது மேன்மையான நிலையையும், செருக்கையும் கைவிடுவாயாக. ஓ மன்னா {ஜராசந்தா}, உனது பிள்ளைகளுடனும், அமைச்சர்களுடனும், படைகளுடனும் சேர்ந்து யமலோகத்திற்குச் செல்லாதே.(23) தம்போத்பவன், கார்த்தவீரியன், உத்தரன், பிருஹத்ரதன் ஆகிய மன்னர்களும் மேன்மையானவர்களை அவமதித்ததற்காக தங்கள் படைகளோடு சேர்ந்து அழிவைச் சந்தித்தார்கள்.(24) உன்னிடம் கைதிகளாக இருக்கும் ஏகாதிபதிகளை மீட்க விரும்பி இங்கே வந்திருக்கும் நாங்கள் நிச்சயமாக பிராமணர்கள் அல்ல என்பதை அறிந்து கொள்வாயாக. நான் ரிஷிகேசன் {கிருஷ்ணன்). சௌரி என்றும் நான் அழைக்கப்படுகிறேன். இந்த இரு வீரர்களும் பாண்டுவின் மகன்களாவர்.(25) ஓ மகத மன்னா {ஜராசந்தா}, நாங்கள் உன்னை அறைகூவி ஆழைக்கிறோம். உறுதியோடு எங்களுடன் போரிடுவாயாக. ஒன்று ஏகாதிபதிகள் அனைவரையும் விடுவி அல்லது யமனின் உலகத்தைச் சென்றடைவாயாக" என்றான் {கிருஷ்ணன்}[1].(26)

[1] இவ்விடத்தில் கும்பகோணம் பதிப்பில் ஒரு நீண்ட பகுதி இருக்கிறது. அது கங்குலியின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இடம்பெறவில்லை. அந்தப் பகுதி பின்வருமாறு, "ஜராஸந்தன் இதைக் கேட்டுக் கோபங்கொண்டு பேசத் தொடங்கினான். "நான் கம்ஸனல்லேன்; பிரலம்பனல்லேன்; பாணனல்லேன்; முஷ்டிகனல்லனே; நரகனல்லேன்; இந்த்ரதபனனல்லேன்; கேசியல்லேன்; பூதனையுமல்லேன்; காலயவனனுமல்லேன்; அவர்களல்லரோ உன்னால் யுத்தத்தில் கொல்லப்பட்டவர். நீ இடைக்குலத்திற் பிறந்தவன். உன் முன் ஜாதியை நினை. நீ நம்மிடம் பயந்தோடி நாடோடி மனிதனைப் போலப் பிறப்பிடமான மதுரையை விட்டுக் கடல் தீவைச் சார்ந்தாயன்றோ? கிருஷ்ணா, அப்படிப்பட்ட நீ, இப்போது கார்காலம் கடந்த பிறகு மேகம் கர்ஜிப்பது போல வீணாக கர்ஜிக்கிறாய். மாதவா, உன்னைக் கொன்று என் மருமகனும், உக்ரஸேனன் புத்ரனும், சிறந்த புத்திமானுமாகிய கம்ஸன் கடனை இப்போதே தீர்க்கப் போகிறேன். உன்னையும்,உனக்கு வேண்டினவர்களையும் கொல்வதற்காக உன்னுடன் யுத்தஞ்செய்ய எனக்கு நெடுநாளாக விருப்பமிருந்தது. நல்ல காலமாதலால் இந்திராதிதேவர்க்ள என் ஆரம்பத்தைப் பயன்படச் செய்தனர். கோவிந்தா, இந்தப் பீமஸேனனும், அர்ஜுனனுமாகிய இருவரும் அசக்தர்கள். நான் இவர்களை யுத்தத்தில் பிடித்து ஒரு சிங்கம் சிறு மிருகங்களைக் கொல்வது போலக் கொல்வேன்" என்றான். அப்போது ஸ்ரீ பகவான், "ஜராஸந்தா, ஏன் கர்ஜிக்கிறாய்? நீ சொல்வதைச் செய்கையால் நடத்து. ராஜாக்களுள் இழிவானவனே, அமைச்சர்களுடனும், புத்திரர்களுடனும் உன்னை நான் இப்போது சண்டையில் எனது கட்டளையைச் செய்பவர்களான இவ்விரு பாண்டவர்களால் கொல்லுவிக்கப் போகிறேன். நீ எப்பாடு பட்டாலும் உயிரோடு உன் நகரத்தில் பிரவேசிக்க மாட்டாய்" என்று  சொன்னார்" என்றிருக்கிறது. அதன் பிறகு கும்பகோணம் பதிப்பிலும் கங்குலியின் பதிப்பில் உள்ளதைப் போலவே தொடர்கிறது. அடுத்த அத்தியாயத்துடன் சேர்த்துப் பார்க்கும்போது இந்தப் பகுதி இங்கே சரியாக ஒட்டவில்லை.

ஜராசந்தன், "எந்த மன்னனையும் வீழ்த்தாமல், அவனைக் கைதியாக நான் கொள்வதில்லை. என்னிடம் வீழாத எவரை நான் இங்கே வைத்திருக்கிறேன்?(27) ஆற்றலைக் காட்டி மற்றவர்களைத் தனது ஆட்சிக்குள் கொண்டு வந்து அடிமைகளாக நடத்துவது என்பது க்ஷத்திரியர்கள் தொடர வேண்டிய கடமையாகும்.(28) க்ஷத்திரியர்களின் கடமைகளை உங்களுக்கு எடுத்துரைத்த இத்தருணத்தில், ஓ கிருஷ்ணா, வேள்வியில் தேவர்களுக்கு பலியிடக் கைப்பற்றப்பட்ட இந்த ஏகாதிபதிகளை, இன்று அச்சத்தால் விடுதலை செய்வேனா?(29) துருப்புகளுக்கு எதிராக துருப்புகளை அணிவகுத்துப் போரிடலாமா? அல்லது தனியாக ஒருவரோடொருவர் நேருக்குநேர் போரிடலாமா? அல்லது ஒரே நேரத்தில் இருவருக்கோ, மூவருக்கோ எதிராக போரிவா? அல்லது மூவரிடம் தனித்தனியாகப் போரிடவா? எப்படி வேண்டுமானாலும் நான் தயாராக இருக்கிறேன்" என்றான் {ஜராசந்தன்}.(30)

வைசம்பாயனர் சொன்னார், "கடுஞ்சாதனைகளைச் செய்த அந்த வீரர்களுடன் போரிட விரும்பிய ஜராசந்தன், இவ்வாறு பேசிவிட்டு, (தனது மகன்) சகதேவனை {ஸஹதேவனை} அரியணையில் அமர்த்தினான்.(31) பிறகு ஓ பாரத குலத்தின் காளையே, அந்த மன்னன், போரிடும் முன்னர், தன் தளபதிகளான கௌசிகன் மற்றும் சித்திரசேனனை நினைவுகூர்ந்தான்.(32) இந்த இருவரைத்தான், ஓ மன்னா {ஜனமேஜயா}, இந்த உலகத்திலுள்ள அனைவரும் முன்பு மரியாதையுடன் ஹம்சன், டிம்பகன் என்று அழைத்தார்கள்.(33) ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, பலமிக்க மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், மனிதர்களில் சிறந்தவனும், மதுவைக் கொன்றவனும் {மது என்ற அசுரனைக் கொன்றவனும் / மதுசூதனனும்}, வாய்மையில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனும், ஹலாதரன் தம்பியும், தற்கட்டுப்பாடுதைய தேவனுமான சௌரி {கிருஷ்ணன்}, மகத மன்னன் போரில் பீமனால் கொல்லப்படவே விதிக்கப்பட்டிருக்கிறானேயன்றி மதுவை அழித்தவனாலல்ல என்பதை அறிந்து, பலமிக்க மனிதர்களில் முதன்மையானவனும், புலி போன்ற பலத்தைக் கொண்டவனும், பயங்கர வீரம் கொண்ட போர்வீரனுமான மன்னன் ஜராதசந்தனைத் தானே கொல்ல விரும்பவில்லை" {என்றார் வைசம்பாயனர்}.(34,35)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்