Monday, September 23, 2013

பதினாலாவது நாளில் ஓய்ந்த ஜராசந்தன் - சபாபர்வம் பகுதி 23

Jarasandha tired out on fourteenth day! | Sabha Parva - Section 23 | Mahabharata In Tamil

(ஜராசந்த வத பர்வம் - 04)

பதிவின் சுருக்கம் : ஜராசந்தன் மோதுவதற்கு பீமனைத் தேர்ந்தெடுத்தல்; கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் போர் தொடங்கல்; ஜராசந்தனுக்கும் பீமனுக்கும் நடந்த உக்கிரமான போர்; உணவு உறக்கம் இல்லாமல் நடந்த பதிமூன்று நாள் போர்; பதினாலாவது நாளில் ஜராசந்தன் களைத்துப் போதல்; அதை கிருஷ்ணன் பீமனுக்கு உணர்த்துதல்; பீமன் ஜராசந்தனைக் கொல்ல விரும்புதல்…

Jarasandha encounters Bhima

வைசம்பாயனர் சொன்னார், "அனைத்துப் பேச்சாளிகளிலும் முதன்மையானவனும், யாதவ குலத்தைச் சார்ந்தவனுமான கிருஷ்ணன், போரிடத் தீர்மானித்திருந்த ஜராசந்தனிடம்,(1) "ஓ மன்னா {ஜராசந்தா}, எங்கள் மூவரில் நீ யாருடம் போரிட விரும்புகிறாய்? எங்களில் யார் {உன்னுடனான} போரிட ஆயத்தமாக வேண்டும்?" என்று கேட்டான்.(2)

இப்படிக் கேட்கப்பட்டவனும், மகத ஆட்சியாளனும், பெரும் பிரகாசமிக்கவனுமான மன்னன் ஜராசந்தன், {கிருஷ்ணனை மாடு மேய்ப்பவன் என்றும், அர்ஜுனனைச் சிறுவன் என்றும் நினைத்து} தான் பீமனுடம் போரிட விரும்புவதாகத் தன் கருத்தை வெளிப்படுத்தினான்.(3) பிறகு புரோகிதர், கோரோசனையையும்[1], மலர் மாலைகளையும், பிற மங்கலப் பொருட்களையும், நினைவை மீட்டெடுக்கவும், காயங்களையும் வலியையும் ஆற்றவும் கூடிய பல மருந்துகளையும் கொண்டு வந்து, போருக்காக மூச்சிரைத்துக் கொண்டிருந்த ஜராசந்தனை அணுகினார்.(4) ஒரு சிறப்புமிக்க  பிராமணரைக் கொண்டு தன் நன்மைக்கான சடங்குகளை முடித்த மன்னன் ஜராசந்தன், க்ஷத்திரியக் கடைமைகளை நினைவுகூர்ந்து, போருரிகளை உடுத்திக் கொண்டான்.(5) 

[1] பசுவின் வயிற்றிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் நிறமுள்ள வாசனைப் பண்டம். கோரோசனை என்ற பொருளை மாட்டிலிருந்து எடுத்து மருந்தாகப் பயன்படுத்துவது பாரதம் முழுவதும் வழக்கமாக இருந்தது.
மணிமுடியை அகற்றி, தலைமுடியை வாரிக் கட்டிக் கொண்ட ஜராசந்தன், கண்டங்களை {கரைகளை} வெடித்துச் சிதற வைக்கும் பெருங்கடலைப் போல நின்றான்.(6) பிறகு, பேராற்றல் கொண்ட அந்த ஏகாதிபதி {ஜராசந்தன்}, பீமனிடம், "நான் உன்னுடன் போரிடப் போகிறேன். மேன்மைமிக்க மனிதனால் வீழ்த்தப்படுவதே சிறந்தது" என்றான்.(7) இதைச் சொல்லிவிட்டு, அனைத்து எதிரிகளையும் ஒடுக்கும் ஜராசந்தன், தேவர்கள் தலைவனை நோக்கி விரையும் அசுரன் பலனைப் போல பீமனை நோக்கி விரைந்தான்.(8) கிருஷ்ணன் {மங்கலக் காரியங்களைச் செய்து} பீமனுக்காக தேவர்களை இருப்புக்கு அழைத்தான். கிருஷ்ணனின் மைத்துனனான பெரும் பலம் வாய்ந்த பீமசேனன் போரிடும் விருப்பத்துடன் ஜராசந்தனை நோக்கி முன்னேறினான்.(9)

மனிதர்களில் புலிகளும், பேராற்றல் கொண்டவர்களுமான அந்த வீரர்கள், வெறுங்கையையே தங்கள் ஆயுதமாகக் கொண்டு, ஒருவரையொருவர் வீழ்த்த விரும்பி உற்சாகமாக மோதலில் ஈடுபட்டனர்.(10) ஒருவர் கரங்களை அடுத்தவர் பற்றிக் கொண்டும், ஒருவருக்கொருவர் கால்களைப் பின்னிக் கொண்டும், தங்கள் கக்கங்களைத் தட்டிக் கொண்டு மோதினர். அடிக்கடி ஒருவர் கழுத்தை மற்றவர் தங்கள் கரங்களால் பிடித்தும், இழுத்தும், வன்முறையுடன் தள்ளியும், ஒருவர் உடல் உறுப்புகளை மற்றவர் அழுத்தியும் தொடர்ந்து தங்கள் கக்கங்களைத் தட்டிக் கொண்டும் முழக்கமிட்டனர்.(11,12) ஓ மேன்மையானவனே {ஜனமேஜயா}, சில நேரங்களில் தங்கள் கரங்களை விரித்துக் கொண்டும், சில நேரங்களில் அருகில் இழுத்துக் கொண்டும் {சித்ரஹஸ்தங்களைச் செய்து கொண்டும்}, பிறகு உயர்த்தியும் தாழ்த்தியும், ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டனர். கழுத்தால் கழுத்தை மோதி, நெற்றியால் நெற்றியை மோதி, மின்னல் கீற்றுகளைப் போல நெருப்புப் பொறிகள் பறக்க வைத்தனர்.(13) பல வகைகளில் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து, உள்ளே இருக்கும் நரம்புகளும் பாதிக்கும் வண்ணம் வன்முறையுடன் ஒருவரை ஒருவர் மிதித்துக் கொண்டும், உள்ளங்கைகளை இறுக மூடி மற்றவர் மார்பில் குத்திக் கொண்டனர். வெறும் கையையே ஆயுதமாகக் கொண்டு முழங்கும் மேகங்களைப் போல கட்டிப்பிடித்து, மதம் கொண்ட இரு யானைகள் தங்கள் துதிக்கைகளைக் கொண்டு தாக்கிக் கொள்வது போல ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.(14,15) 

ஒருவர் அடியை மற்றவர் வாங்கிக் கொண்டு, ஒருவரை ஒருவர் இழுத்துக் கொண்டும், தள்ளிக் கொண்டும், கோபம் கொண்ட சிங்கங்களைப் போல ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.(16) தனது உறுப்புகளால் மற்றவரின் அனைத்து உறுப்புகளையும் தாக்கியும், தன் கரத்தை மற்றவருக்கு எதிராகப் பயன்படுத்தியும், ஒருவர் மணிக்கட்டை மற்றவர் பிடித்தும், ஒருவரை ஒருவர் தொலைவாகத் தூக்கி வீசினர்.(17) மற்போரில் சாதித்தவர்களான அந்த இரு வீரர்களும் ஒருவர் கரத்தை மற்றவர் பிடித்து, தன்னை நோக்கி இழுத்து, ஒருவரை ஒருவர் வன்முறையுடன் நசுக்கினர்.(18) பிறகு அந்த வீரர்கள் மற்போரில் பிருஷ்டபங்கம் என்ற சாதனையைச் செய்ய தொடங்கினர். அச்சாதனையில், ஒருவரை, அவரது முகம் தரையை நோக்கி இருக்கும் வண்ணம் வைத்துத் தூக்கி எறிதலும், பின்பு எதிரியை அதே நிலையில் நீண்ட நேரம் தக்க வைத்தலும் ஒரு முறையாகும். தங்கள் கரத்தால் ஒவ்வொருவரும் சம்பூர்ண மூர்ச்சை மற்றும் பூர்ணகும்பம் ஆகிய சாதனைகளையும் செய்தனர்.(19) சில வேளைகளில் காய்கறிகளைக் கட்டும் கயிறைப் போல தங்கள் கரங்களை ஒருவருக்கு ஒருவர் பின்னினர் {திருணபீடம் செய்தனர்}. விரல்களை மடக்கி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர் {பூர்ணயோகம்}. ஒரு உறுப்பைத் தாக்குவது போல பாசாங்கு காட்டி உடலின் வேறு உறுப்பைத் தாக்கினர் {முஷ்டிகம்}. இப்படி அந்த வீரர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டனர்[2].(20)

[2] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், பிருஷ்டபங்கம் = முதுகைத் தரையிற்படும்படி செய்வதனால் உண்டாகும் அவமானம், ஸம்பூர்ணமூர்ச்சை = வயிறு முதலான இடங்களில் கசக்குவதனாலுண்டாகும் மூர்ச்சை, திருணபீடம் = நார் முதலியவற்றினாற் கயிற்திரிப்பது போல ஒருவரோடொருவர் கைகால்களைப் பின்னிக் கொள்வது, பூர்ணயோகம் = தலை முதல் கால் வரையில் முழு உடம்பையும் சேர்த்தணைப்பது; அசதியடித்தல், முஷ்டிகம் = ஓரிடத்தில் குத்துவதாகக் காட்டி மற்றோரிடத்தில் குத்துவது" என்றிருக்கிறது.

ஓ மனிதர்களில் புலியே {ஜனமேஜயா}, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோரைக் கொண்ட ஆயிரக்கணக்கான குடிமக்கள், ஏன் பெண்களும் வயது முதிர்ந்தவர்களும் கூட அங்கே வந்து கூடி அந்தப் போரைக் கண்டனர். அந்தக் கூட்டம் இடைவெளியில்லாமல் நெருக்கத்துடன் கூடியிருந்ததைப் பார்ப்பதற்கு ஒரு பெரும் திடமான பொருள் போல இருந்தது.(21,22) மற்போர் வீரர்கள் தங்கள் கரங்களைத் தட்டிக் கொள்ளும் ஒலியும், ஒருவரைக் கீழே வீழ்த்த மற்றவர் கழுத்தைப் பிடித்து இழுப்பதும், ஒருவர் காலை மற்றவர் பிடித்து, மோதிக் கொள்வதுமான ஒலிகள் அனைத்தும் கூடி மலை நொறுங்கி விழுவது போலவும், இடியின் முழக்கம் போலவும் இருந்தது.(23) பலம் வாய்ந்தவர்களில் முதன்மையானவர்களான அவர்கள் இருவரும் தங்களுக்குள் மோதிக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பி, ஒருவரின் சிறு தவறையும் பயன்படுத்தி முன்னிலை பெற இருவரும் விழிப்புடன் இருந்தனர்.(24) மேலும், ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, பெரும் பலம் வாய்ந்த பீமனும் ஜராசந்தனும் கடுமையாகப் போரிட்டு பழங்காலத்தின் விருத்திரன் மற்றும் வாசவனை நினைவுபடுத்தும் வகையிலான தங்கள் கரங்களின் அசைவுகளால் மக்கள் கூட்டத்தை விரட்டினர்.(25) 

இப்படியே அந்த இரு வீரர்களும் ஒருவரை ஒருவர் இழுத்து, பின்னுக்குத் தள்ளி, திடீரென வெட்டி இழுத்து, தலைகுப்புற தள்ளி, பக்கவாட்டில் தள்ளி, ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். சில நேரங்களில் தங்கள் கால் முட்டிகளை வைத்துத் தாக்கிக் கொண்டனர். ஒருவரை ஒருவர் சத்தமாகத் திட்டிக் கொண்டு, விரல்களை இறுக மூடித் தாக்கிக் கொண்டு, பெரும் பாறை இறங்கி வருவதைப் போல அடியை ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக் கொண்டனர். அகலமான தோள்களும், நீண்ட கரங்களும் கொண்ட இரு மற்போர் வல்லுனர்களும், ஒருவரை ஒருவர் இரும்பு கதாயுதத்தைப் போன்ற தங்கள் நீண்ட கரங்களால் தாக்கிக் கொண்டனர்.(26-28) அந்த இரு வீரர்களுக்கிடையேயான அந்தப் போர், கார்த்திகை மாதத்தின் முதல் (சந்திர) நாளில் {பிரதமையில்} துவங்கியது. பிறகு அந்தச் சிறப்பு மிகுந்த வீரர்களால் இடைவெளியும் உணவும் இன்றி இரவு பகல் பாராமல் பதிமூன்றாவது சந்திர நாள் {திரியோதசி} வரை தொடர்ந்தது. பதினாலாவது சந்திர நாள் {சதுர்த்தசி} இரவில் மகத ஏகாதிபதி {ஜராசந்தன்} களைப்பால் விலகினான்.(30) 

ஓ மன்னா, அந்த ஏகாதிபதி களைப்பாக இருப்பதைக் கண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, கடும் செயல்கள் செய்யும் பீமனிடம் அவனைத் தூண்டிவிடுவதற்காக,(31) "ஓ குந்தியின் மகனே {பீமரே}, களைப்பு மிகுதியால் இருக்கும் பகைவனை நசுக்கக் கூடாது, அப்படி நசுக்கினால் அவன் இறக்கவும் நேரிடலாம்.(32) எனவே, ஓ குந்தியின் மகனே {பீமரே}, இந்த மன்னன் உம்மால் ஒடுக்கப்படக் கூடாது. மறுபுறம், ஓ பாரத குலத்தின் காளையே, உமது பகைவனிடம் உமக்கு இணையானவனாக இருக்கும்வகையில் மட்டுமே உமது கரங்கொண்டு போரிடுவீராக" என்றான்.(33) 

பிறகு, கிருஷ்ணனால் இப்படிச் சொல்லப்பட்டவனும், எதிரிகளைக் கொல்பவனுமான பாண்டுவின் மகன் {பீமன்}, ஜராசந்தனின் நிலையை உணர்ந்து, அவனது உயிரை எடுக்கத் தீர்மானித்தான்.(34) பலம்வாய்ந்த மனிதர்களின் முதன்மையான அந்தக் குரு குல இளவரசன் {பீமன்}, இதுவரை போரில் தோல்வியுறாத ஜராசந்தனை வீழ்த்த விரும்பித் தன் பலம் மற்றும் ஆற்றலனைத்தையும் ஒருங்கே கூட்டினான் {பீமன்}" {என்றார் வைசம்பாயனர்}.(35)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்