Saturday, September 28, 2013

நகுலனின் மேற்றிசைப் போர்ப்பயணம் - சபாபர்வம் பகுதி 31

Nakula's Westward Journey! | Sabha Parva - Section 31 | Mahabharata In Tamil

(திக்விஜய பர்வம் - 07)

பதிவின் சுருக்கம் : நகுலன் மேற்கு நோக்கி படையெடுப்பது; நகுலன் அடக்கிய நாடுகளின் விபரம்…

Shalya sees Nakula

வைசம்பாயனர் சொன்னார், "நான் இப்போது உன்னிடம் நகுலனின் சாதனைகளையும், வெற்றிகளையும் குறித்தும் முன்பு வாசுதேவன் {கிருஷ்ணன்} அடக்கிய திசையை அந்த மேன்மையானவனும் {நகுலனும்} எப்படி அடக்கினான் என்பதையும் உரைக்கப் போகிறேன்.(1) புத்திகூர்மையுள்ள நகுலன், தங்கள் கூச்சலாலும், சிங்க முழக்கங்களாலும் நடுங்கச் செய்த வீரர்களாலும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியாலும் உலகை நடுங்கச் செய்த படை சூழ, காண்டவப்பிரஸ்தத்தில் இருந்து மேற்கு நோக்கி சென்றான்.(2,3)

அந்த வீரன் {நகுலன்} முதலில் (தேவர்ப்படைத் தளபதி) கார்த்திகேயனுக்கு {முருகனுக்குப்} பிடித்தமான மலைநாடான ரோஹீதகத்தைத் தீவிரமாகத் தாக்கினான். அந்த நாடு காண்பதற்கு இனிமையாகவும், செழிப்புடனும், பசுக்கள் நிறைந்து, அனைத்துவிதமான செல்வங்களும், உற்பத்திகளும் நிறைந்தாக இருந்தது.(4) அந்த நாட்டின் மத்தமயூரகர்களுடன் பாண்டுவின் மகன் {நகுலன்} நடத்திய போர் கடுமையாக இருந்தது. அதன்பிறகு, அந்த சிறப்புமிகுந்த நகுலன், பல பொருட்களால் நிறைந்த சைரீஷகம் என்ற முழு பாலைவனப் பகுதியையும் அதே போன்ற மற்றொன்றான மஹேத்தத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். அரசமுனியான ஆக்ரோசன் என்பவனுடன் அந்த வீரன் கடும்போர் புரிந்தான்.(5,6) 

பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்}, அந்த நாட்டின் அப்பகுதியை விட்டு அகன்று தசார்ணர்களையும், சிபிக்களையும், திரிகர்த்தர்களையும், அம்பஷ்டர்களையும், மாலவர்களையும், கர்ப்படர்களின் ஐந்து இனக்குழுக்களையும், இரு பிறப்பாளர்களான {பூணூல் அணிந்த} மத்தியமகேயர்களையும் வாடதானர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். வளைந்த சுற்றுகளைக் கொண்ட தனது பயணத்தில் அந்த மனிதர்களில் காளை, உத்ஸவ-ஸங்கேதகர்கள் என்ற (மிலேச்ச) இனக்குழுக்களை வெற்றி கொண்டான். அந்தச் சிறப்பு மிகுந்த வீரன் {நகுலன்}, கடற்கரையில் வசித்த பெரும் பலம் வாய்ந்த கிராமணீயர்கள்,(7-9) சூத்திரர்கள், சரஸ்வதி நதிக்கரையில் இருந்த ஆபிரர்கள், மீன்பிடி தொழில் செய்த அனைத்து இனக்குழுக்களையும், மலைகளில் வசித்தவர்களையும்,(10) ஐந்து ஆறுகளின் பெயரால் {பஞ்சநதம் என்று} அழைக்கப்படும் நாட்டையும், அமர மலையையும், உத்தரஜ்யோதிஷம் என்ற நாட்டையும், திவ்யகடம் என்ற நகரத்தையும், துவாரபாலர்கள் என்ற ஒருவகை இனக்குழுவையும் விரைவாகத் தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தான். அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்}, ராமடர்களையும், ஹாரஹூணர்களையும் {ஹாரர்களையும், ஹூணர்களையும்}, மேற்கிலிருந்த பல்வேறு மன்னர்களையும் வீழ்த்தினான்.(11-12) 

அங்கே அப்படி தங்கியிருந்த போது நகுலன், ஓ பாரதா {ஜனமேஜயா}, வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்குத்) தூதுவர்களை அனுப்பினான்.(13) யாதவர்கள் அனைவருடன் சேர்ந்து வாசுதேவன் {கிருஷ்ணன்} அவனது {நகுலனின்} கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டான். அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரன் {நகுலன்}, மத்ர நாட்டு நகரமான சாகலத்துக்குச் சென்று,(14) தனது மாமன் சல்லியனைப் பாண்டவர்களின் கட்டுப்பாட்டை அன்பினால் ஏற்க வைத்தான். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, விருந்தோம்பலுக்கும், சல்லியனின் உபசரிப்புக்கும் தகுதியுடைய அந்த சிறப்பு வாய்ந்த இளவரசன் {நகுலன்}, தனது மாமனால் {சல்லியனால்} நன்கு உபசரிக்கப்பட்டான்.(15) போரில் திறன்பெற்ற அந்த இளவரசன் {நகுலன்}, சல்லியனிடம் இருந்து பெரும் எண்ணிக்கையிலான நகைகளையும், ரத்தினங்களையும் பெற்றுக் கொண்டு அவனது நாட்டை விட்டு அகன்றான். 

பிறகு அந்த பாண்டுவின் மகன் {நகுலன்}, கடற்கரையில் வசித்த மிலேச்சர்களையும்,(16) முரட்டு இனக்குழுக்களான பஹ்லவர்களையும், {பர்ப்பரர்களையும்}, கிராதர்களையும், யவனர்களையும், சகர்களையும் தனது பலத்தால் அடக்கினான்.(17) இப்படி பல்வேறு ஏகாதிபதிகளை வீழ்த்தி, அவர்களைத் தனக்குக் கப்பம் கட்ட வைத்த குருக்களில் முதன்மையான நகுலன், செல்வங்களை நிறைத்துக் கொண்டு, தனது சுவடுகளைப் பின்பற்றித் தனது சொந்த நகரத்திற்குத் திரும்பினான். ஓ மன்னா {ஜனமேஜயா}, பத்தாயிரம் ஒட்டகங்கள் மிகவும் சிரமத்துடன் சுமந்து வரக்கூடிய அளவுக்குப் பெரும் செல்வத்தை அவற்றின் முதுகில் ஏற்றிக்கொண்டு வந்தான் நகுலன்.(18) இந்திரப்பிரஸ்தத்தை அடைந்த அந்த மாத்ரியின் அதிர்ஷ்டக்கார வீர மகன் {நகுலன்}, தான் கொண்டு வந்த அனைத்து செல்வத்தையும் யுதிஷ்டிரனிடம் கொடுத்தான்.(19)

ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படியே முன்பொரு காலத்தில் வாசுதேவனால் {கிருஷ்ணனால்} அடக்கப்பட்ட வருண தேவனின் திசையான மேற்கிலிருந்த நாடுகளை நகுலனும் வென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(20)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்