Friday, September 13, 2013

நாரதரின் விசாரணை - சபாபர்வம் பகுதி 5உ

The enquiry of Narada | Sabha Parva - Section 5E | Mahabharata In Tamil

 (லோகபால சபாகயானா பர்வம்)

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




"நாரதர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "நீ அந்தணர்களையும், ஞானிகளையும் அவர்களது தரத்துக்கு ஏற்றபடியும், கல்வியின் பல கிளைகளில் அவர்கள் அடைந்த தகுதியின் அடிப்படையிலும் வழிபடுகிறாயா? உனக்கு முன்பே இருந்த மனிதர்களால் பயிலப்பட்ட மூன்று வேதங்களை அடிப்படையாகக் கொண்ட அறத்தில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா? அவர்களால் பின்பற்றப்பட்ட பழக்க வழக்கங்களை நீயும் பின்பற்றுகிறாயா? சாதித்த அந்தணர்கள் உனது இல்லத்தில் சத்துள்ள அற்புதமான உணவால் உனது பார்வையில் கொண்டாடப்படுகிறார்களா? அந்த விருந்தின் முடிவில் பணம் சம்பந்தமான பரிசுகளை அவர்கள் பெறுகிறார்களா? ஆசைகளை உன் முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, மனதில் ஒருமையுடன், வாஜபேயம் மற்றும் புண்டரிகம் {Vajapeya and Pundarika} என்ற வேள்விகளை அதன் முழு சடங்குகளுடன் செய்ய முயற்சிக்கிறாயா? 



உனது உறவினர்களுக்கும், மூத்தவர்களுக்கும், முதியவர்களுக்கும், தேவர்களுக்கும், துறவிகளுக்கும், அந்தணர்களுக்கும், மக்களுக்கும் நன்மையைச் செய்து கொண்டு கிராமங்களில் இருக்கும் நெடிய (ஆல) மரங்களுக்கும் நீ தலை வணங்குகிறாயா?

ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரனே}, யாருடைய துன்பத்துக்கும் கோபத்துக்கும் காரணமாய் நீ இருக்கிறாயா? மூன்று அதிர்ஷ்டமான கனிகளை அருளும் புரோகிதர்கள் உனது அருகில் இருக்கிறார்களா? ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரனே}, நான் சொன்னவாறு உனது நாட்டங்களும் பயிற்சிகளும் இருக்கின்றனவா? இவைகள் {மேலே சொன்னவைகள்} ஒருவனது புகழை பரப்பி, அறம், இன்பம் மற்றும் பொருளுக்குக் காரணமாக இருந்து  வாழ்வின் நீட்சியை மேம்படுத்தும். நான் மேற்சொன்ன வழிகளில் தன்னை அமைத்துக் கொள்பவன், தனது நாடு துயரத்திலோ அல்லது பாதிக்கப்பட்டோ இருப்பதைக் காண மாட்டான்; அந்த ஏகாதிபதி முழு உலகத்தையும் வென்று, உயர்ந்த இன்பநிலையை அனுபவிப்பான்.

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, சாத்திரமறியா அமைச்சர்களின் பேராசை கொண்ட செயலால், நன்னடத்தையுள்ள, தூய ஆன்மா கொண்ட, மரியாதைக்குரிய நபர் யாரும், பொய்க் குற்றச்சாட்டின் பேரிலோ, திருட்டு காரணமாகவோ பாழாக்கப்படாமல், கொல்லப்படாமல் இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.

ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரனே}, உனது அமைச்சர்கள் பேராசையின் காரணமாக செல்வத்துடன் பிடிபட்ட உண்மையான திருடர்களை தப்ப விடவில்லை என நான் நம்புகிறேன்.

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, உனது அமைச்சர்களை லஞ்சத்தால் வெல்ல முடியாது என்றும், ஏழை பணக்காரனிடையே நடக்கும் சச்சரவுகளில் அவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்றும் நான் நம்புகிறேன். மன்னர்கள் ஆட்படக்கூடாத பதின்நான்கு{14} தீமைகளான நாத்திகம் {1}, பொய்மை {2}, கோபம் {3}, விழிப்பற்ற நிலை {அஜாக்கிரதை} {4}, காலம் கடத்துதல் {5}, ஞானமுள்ளோரை சந்திக்காமலிருத்தல் {6}, ஒன்றும் செய்யாது சும்மா இருத்தல் - சோம்பல் {Idle} {7}, மன அமைதியின்மை {ஐம்புலன்களுக்கு உட்படுதல்} {8}, ஒரே மனிதரிடம் {தான் மட்டும்} மட்டும் ஆலோசனை செய்வது {9}, பொருள் குறித்த அறிவியலை அறியாதவர்களிடம் ஆலோசனை பெறுவது {10}, ஒரு தீர்க்கப்பட்ட திட்டத்தைக் கைவிடுவது {11}, ஆலோசனையை ரகசியமாக வைத்துக் கொள்ளாது வெளிப்படுத்துதல் {12}, நன்மைக்கான மங்கள காரியங்களைச் செய்யாமை {13}, எதையும் சிந்திக்காமல் செய்வது {14} - ஆகியவற்றில் இருந்து  நீ விடுபட்டு இருக்கிறாயா? ஓ! மன்னா இவற்றால், ஏகாதிபதிகள் பாழடையாமல் தங்கள் அரியணையில் நிலைத்தும் இருப்பார்கள். உனது வேதகல்வி, உனது செல்வம் மற்றும் சாஸ்த்திர ஞானம், திருமணம் ஆகியவை கனி கொடுத்திருக்கின்றனவா?" என்ற கேட்டார் {நாரதர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "முனிவர் {நாரதர்} முடித்ததும், யுதிஷ்டிரன், "ஓ! முனிவரே, எப்படி வேதம், செல்வம், மனைவி, சாத்திர ஞானம் ஆகியவை கனி கொடுக்கின்றன?" என்று கேட்டான்.

அதற்கு முனிவர் {நாரதர் யுதிஷ்டிரனிடம்}, "வேதங்கள், அதைப் படித்து முடித்து, அக்னிஹோத்ரமும், வேள்விகளும் செய்ய ஆரம்பித்ததும் கனியைக் கொடுக்கிறது. செல்வம், ஒருவன் அதை அனுபவித்து பிறகு அதைத் தானமாகக் கொடுக்கும்போது கனியைக் கொடுக்கிறது. ஒரு மனைவி, அவள் பயன்படும்போதும், பிள்ளைகளைப் பெறும்போதும் கனி கொடுக்கிறாள். சாத்திர ஞானம்,  அடக்கத்தினாலும், நன்னடத்தையாலும் கனி கொடுக்கிறது," என்றார்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அந்தப் பெரும் துறவியான நாரதர், யுதிஷ்டிரனிடம் அப்படிப் பதிலுரைத்து மேலும் அந்த ஆட்சியாளனிடம், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சமூகத்தின் வரிகளில் இருந்து சம்பளம் கொடுக்கப்படும் உனது அரசாங்கத்தின் அதிகாரிகள், லாபத்தின் மீது இருக்கும் விருப்பத்தால் உந்தப்படாமல், வெகுதூரத்தில் இருந்து வரும் வணிகர்களிடம் இருந்து சரியான நிலுவைகளைத்தான் {சுங்கத்தைத் தான்} வசூலிக்கிறார்களா? ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உனது நாட்டுக்கும் தலைநகருக்கும் பொருட்களைக் கொண்டு வரும் வணிகர்கள், போலி காரணங்கள் மூலம் ஏமாற்றப்படாமல் (பொருள் வாங்குபவர்களாலும் {நுகர்வோராலும்}, அதிகாரிகளாலும் {அரசாங்கத்தாலும்}) மரியாதையாக நடத்தப்படுகிறார்களா?

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, பொருளாதாரக் கோட்பாடுகளை அறிந்த முதியோர்கள் சொல்லும் அறம் மற்றும் பொருள் சம்பந்தமான அறிவுறுத்தல்கள் நிறைந்த வார்த்தைகளைக் கேட்கிறாயா? விவசாய உற்பத்தி, பசுக்கள், கனிகள் மற்றும் மலர்கள் பெருகவும் அறம் வளரவும் அந்தணர்களுக்கு தேனையும், தெளிந்த நெய்யையும் பரிசாகக் கொடுக்கிறாயா? ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உன்னால் நியமிக்கப்பட்ட கைவினைஞர்கள் மற்றுக் கலைஞர்களுக்கு, நான்கு மாதத்திற்கு வேண்டிய அளவு வேலைக்குத் தேவையான பொருட்களையும், அவர்களது கூலியையும் முன்பே கொடுக்கிறாயா? உன்னால் நியமிக்கப்பட்டவர்கள் செய்த வேலையைக் கண்டு, அவர்கள் சிறப்பை நல்ல மனிதர்கள் முன்னிலையில் பாராட்டி, பரிசளித்து, அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கிறாயா?

ஓ! பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, யானைகள், குதிரைகள், ரதங்கள் குறித்த விஷயங்களில் (முனிவர்களின்) பழமொழிகளைப் {aphorism} பின்பற்றுகிறாயா?

ஓ! பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நகருக்கும் செறிவூட்டப்பட்ட இடங்களுக்கும் பயன்படும், ஆயுத அறிவியல், போரில் பயன்படுத்தக்கூடிய கருவிகள் குறித்த பழமொழிகளும், உனது சபையில் படிக்கப்படுகிறதா?

ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, புதிர் நிறைந்த அனைத்து மந்திரங்களையும், எதிரிகளை அழிக்கும் அனைத்து விஷங்களின் ரகசியங்களையும் அறிந்து வைத்திருக்கிறாயா? நெருப்பு, பாம்புகள், மற்றும் உயிருக்கு நாசத்தை விளைவிக்கக்கூடிய மற்ற மிருகங்கள், ராட்சசர்கள் ஆகியோரிடம் இருக்கும் பயத்தில் இருந்து நாட்டைப் பாதுகாக்கிறாயா? அனைத்துக் கடமைகளையும் அறிந்த நீ, உனது தந்தை, குருடர், ஊமை, முடவர், உருக்குலைந்தவர் {அவலட்சணமானவர்}, நண்பர்கள் இல்லாதவர்கள், வீடில்லாத துறவிகள் ஆகியோரை ஆதரித்து வருகிறாயா? ஓ! ஏகாதிபதி, உறக்கம் {1), சோம்பல் {2}, அச்சம் {3}, கோபம் {4}, மன பலவீனம் {5}, காலம் கடத்துதல் {6} என்ற ஆறு தீமைகளை வெளியேற்றிவிட்டாயா?

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், சிறப்பு மிகுந்த குருக்களின் காளை {யுதிஷ்டிரன்}, அந்த அந்தணர்களில் சிறந்தவரின் வார்த்தைகளைக் கேட்டு, அவரைப் {நாரதரைப்} பணிந்து வணங்கி, அவரது பாதங்களை வழிபட்டான். அவர் {நாரதர்} கேட்ட அனைத்திலும் திருப்தி கொண்ட அந்த ஏகாதிபதி, தெய்வீக உருவில் இருந்த நாரதரிடம், "நீர் வழிகாட்டிய படியே நடந்து கொள்கிறேன். உமது அறிவுறுத்தலால் எனது ஞானம் விரிந்திருக்கிறது {வளர்ந்திருக்கிறது}," என்று சொல்லிய அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} அவர் சொன்ன ஆலோசனைகளுக்கு ஏற்ப நடந்து கொண்டு, *கடல்களைக் கச்சையாக அணிந்த முழு உலகையும் சரியான நேரத்தில் பெற்றான். நாரதர் மறுபடியும் {யுதிஷ்டிரனிடம்}, "அந்தணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகிய நான்கு வகைகளைக் காக்கும் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கும் மன்னன், அவனது நாட்களை மகிழ்ச்சியாகக் கடத்தி, இதற்குப் பிறகு அவன் சக்ரனின் {இந்திரனின்} உலகத்தை (விண்ணுலகத்தை) அடைவான்.”{என்றார் நாரதர்}.
----------------------------------------------------------------
*கடல்களை கச்சையாக அணிந்த முழு உலகையும்.....

இதிலிருந்து நாம் அறிவது என்னவெனில், இந்த மஹாபாரதம் இயற்றப்பட்டு குறைந்தது 4500 வருடங்களாவது இருக்கும் என கணிக்கப்படுகிறது. அத்தகைய தொன்மைவாய்ந்த காலத்திலேயே இந்த பூமியின் வடிவானது தட்டையானது அல்ல என்று  இந்த பாரத கண்டத்திலுள்ள அறிஞர் பெருமக்களால் அறியப்பட்டுள்ளது என்பதனை நாம் உணரலாம்.

வியாசர், கடல்களை என்று பன்மையில் சுட்டிக்காட்டுகிறார். கடல் ஒரே பரப்பாக இருந்தாலும், வேறு வேறு இடங்களில் வேறு வேறு பெயர்களிலேயே அழைக்கப்படுகிறது. அதையேச அப்படி பன்மையாகச் சுட்டிக் காட்டுகிறார் என்று ஏற்கலாம்.

தற்காலத்தில் அவற்றின் {கடல்களின்} பெயர்கள் சில...

இந்திய பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகிய பெருங்கடல்களாகவும், அரபிக் கடல் போன்ற சில சிறுங்கடல்களாகவும், வங்காள விரிகுடா போன்ற வளைகுடாக்களாகவும் உலகைச் சுற்றிய கடலானது நிலப்பரப்பினைக் கொண்டு பகுதி பகுதியாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்