Thursday, November 14, 2013

துரியோதனன் பெற்ற சாபம்! - வனபர்வம் பகுதி 10

The curse on Duryodhana | Vana Parva - Section 10 | Mahabharata In Tamil

(ஆரண்யக பர்வத் தொடர்ச்சி)

துரியோதனனுக்கு உபதேசம் செய்யுமாறு திருதராஷ்டிரன் வியாசரிடம் கோரல்; வியாசர் மைத்ரேயர் அதைச் செய்வார் என்று உரைத்தல்; மைத்ரேயர் துரியோதனனுக்கு அறிவுரை கூறல்; தனது ஆலோசனையைக் கேட்காத துரியோதனனை மைத்ரேயர் சபித்தல்;

திருதராஷ்டிரன் சொன்னான், "ஓ ஆழ்ந்த ஞானம் கொண்ட முனிவரே {வியாசரே}, நீர் சொன்னது போலத்தான் இருக்கிறது! இந்த மன்னர்கள் அறிவதைப் போல நானும் இதை அறிவேன்! குருக்களுக்கு நன்மையானவற்றை நீர் எனக்குச் சுட்டிக் காட்டியபடியே, ஓ முனிவரே, விதுரன், பீஷ்மர், துரோணர் ஆகியோரும் சுட்டிக் காட்டினர். நான் உம்முடைய உதவிக்குத் தகுதி வாய்ந்தவனானால், உமக்கு குருக்களிடம் உங்களுக்கு கருணை இருக்குமானால், எனது தீய மகன் துரியோதனனுக்கு உபதேசம் செய்யும்"

வியாசர், "ஓ மன்னா {திருதராஷ்டிரா}, பாண்டவச் சகோதரர்களைக் கண்ட பிறகு, நம்மைக் காண விரும்பி புனிதமான முனிவரான மைத்ரேயர் இங்கு வருகிறார். ஓ மன்னா, அந்தப் பலம் பொருந்திய முனிவர் {மைத்ரேயர்}, உனது குலத்தின் நன்மை கருதி உனது மகனுக்கு உபதேசிப்பார். மேலும், ஓ கௌரவனே {திருதராஷ்டிரனே}, அவர் அறிவுறுத்துவதை சந்தேகத்திற்கிடமில்லாமல் பின்பற்ற வேண்டும். அவர் பரிந்துரைப்பது செய்யப்படவில்லையானால், அந்த முனிவர் {மைத்ரேயர்} உனது மகனைக் கோபத்தால் சபிப்பார்" என்றார் {வியாசர்}.


வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதைச் சொல்லிவிட்டு, வியாசர் புறப்பட்டார், பிறகு மைத்ரேயர் அங்கு வந்தார். மன்னன் {திருதராஷ்டிரன்} தனது மகனுடன் சேர்ந்து அந்த முனிவர்களின் தலைவரை {மைத்ரேயரை} மரியாதையுடன் வரவேற்று, ஆர்கியா கொடுத்து மற்ற சடங்குகளைச் செய்தான். பிறகு அம்பிகையின் மகனான மன்னன் திருதராஷ்டிரன் மரியாதை நிறைந்த வார்த்தைகளுடன் அந்த முனிவரிடம் {மைத்ரேயரிடம்}, "ஓ புனிதமானவரே, குருஜாங்காலத்திலிருந்து உங்களது பயணம் இனிமையாக அமைந்ததா? அந்த வீரர்களான ஐந்து பாண்டவர்களும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா? அந்தக் குரு குலத்தின் காளைகள் குறித்த காலம் வரை வெளியே தங்க கருதியிருக்கிறார்களா? கௌரவர்களுக்கிடையே சகோதரப் பாசம் எப்போதும் பலவீனமடையுமா?" என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.

மைத்ரேயர், "பல இடங்களுக்கு தீர்த்த யாத்திரை செய்து, நான் குருஜாங்காலத்தை அடைந்தேன். அங்கே நான் நீதிமானான யுதிஷ்டிரனை எதிர்பாராத விதமாக காம்யக வனத்தில் சந்தித்தேன். ஓ மேன்மையானவனே {திருதராஷ்டிரனே}, அங்கே மான் தோல் உடுத்தி, ஜடாமுடி தரித்து, ஆசிரமத்தில் தங்கியிருக்கும் உயர் ஆன்ம யுதிஷ்டிரனைக் காண பல முனிவர்கள் வந்திருந்தனர். ஓ மன்னர் மன்னா {திருதராஷ்டிரா}, அங்கேயே நான் உனது மகன்களின் பெரும்பிழையையும், பகடையாட்டத்தினால் அவர்களைத் தாக்கியிருக்கும் பேரிடரையும் குறித்துக் கேள்விப்பட்டேன். ஆகையால், அதன் காரணமாகவும் கௌரவர்களின் நன்மைக்காகவுமே நான் உன்னிடம் வந்தேன். ஓ மேன்மையானவனே, உன் மீது எனக்கு அதிக அன்பிருக்கிறது. நான் உன்னிடம் மகிழ்ச்சி கொள்கிறேன். ஓ மன்னா {திருதராஷ்டிரா}, நீயும் பீஷ்மரும் இருக்கும் போது {வாழ்ந்து கொண்டிருக்கும் போது} எக்காரணம் கொண்டும் உனது மகன்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. ஓ மன்னா {திருதராஷ்டிரா}, நீயே காளைகள் கட்டி வைக்கப்படும் நடு முளை போன்றவன். தண்டிக்கவும் வெகுமதி கொடுக்கவும் தகுதி உடையவன். எல்லோரையும் தாக்கப்போகும் பெருந்தீங்கை இன்னும் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறாய். ஓ குரு குல வழி வந்தவனே, சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட பாவிகளின் செயல்களைப் போல உனது சபையில் நடந்த தவறுகளுக்காக, தவசிகள் உன்னை நன்றாக நினைக்கவில்லை.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பின்னர் சீற்றம் நிறைந்த இளவரசன் துரியோதனனிடம் திரும்பிய சிறப்பு மிகுந்த முனிவர் மைத்ரேயர், மெல்லிய வார்த்தைகளில், "ஓ பலம்வாய்ந்த கரம் கொண்ட துரியோதனா, ஓ சொல்திறம் மிக்க மனிதர்களில் சிறந்தவனே, ஓ சிறப்பானவனே, என் {உன்} நன்மைக்காக நான் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவி கொடு { give heed unto the words I utter for my good}. ஓ மன்னா {துரியோதனா}, பாண்டவர்களிடம் சண்டையிட முயலாதே! ஓ மனிதர்களில் காளையே, பாண்டவர்களைப் போல, குருக்களைப் போல, உலகத்தைப் போல உனது நன்மையை நீயே அமைத்துக் கொள். அந்த மனிதர்களில் புலிகள் {பாண்டவர்கள்} அனைவரும் போரில் பெரும் பராக்கிரமம் கொண்ட வீரர்கள். பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டவர்கள். அவர்கள் உடல் இடியைப் போன்று கடினமானது. தங்கள் வாக்கின் படி நடந்து கொண்டு, தங்கள் ஆண்மையின் மீது கர்வத்தோடு {பெருமையோடு} இருக்கின்றனர். அவர்கள், ஹிடிம்பனையும் கிர்மீரனையும் தலைமையாகக் கொண்ட நினைத்த உரு எடுக்கக்கூடிய, தேவர்களுக்கு எதிரிகளான கடும் ராட்சசர்களைக் கொன்றிருக்கின்றனர். அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள் {பாண்டவர்கள்} இங்கிருந்து சென்ற போது, அந்தக் கடும் ஆன்மா கொண்ட ராட்சசன், இரவு நேரத்தில் அவர்களுடைய பாதையைப் பெரும் மலைபோல இருந்து தடுத்தான். சிறு மானைப் புலி கொல்வதைப் போல, போரிடுவதில் மகிழ்ச்சி கொள்பவனும், பலம் பொருந்தியவர்களில் முதன்மையானவனுமான பீமன், அந்த மிருகத்தைக் கொன்றான். ஓ மன்னா, பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டவனும், பெரும் பலம்பொருந்திய வீரனுமான ஜராசந்தனை, ஒரு போட்டியின் போது, பீமன் எப்படிக் கொன்றான் என்பதையும் கருதிப்பார். வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, துருபதனின் மகன்களையும் மைத்துனர்களாகக் கொண்டவர்களைப் போர்க்களத்தில் சந்திக்க பலவீன நிலை மற்றும் மரணத்தை வேண்டாத எவன்தான் துணிவான்? ஓ பாரத குலத்தின் காளையே {துரியோதனா}, உனக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் சமாதானம் ஏற்படட்டும்! எனது ஆலோசனைகளைப் பின்பற்று. கோபத்திடம் நீ சரணடையாதே!

"ஓ மன்னா {ஜனமேஜயா}, மைத்ரேயரால் இப்படி எச்சரிக்கப்பட்ட துரியோதனன், யானையின் துதிக்கையைப் போல இருந்த தனது தொடைகளைத் தட்டி, சிரித்துக் கொண்டே தரையைத் தனது காலால் தேய்த்து, ஒரு வார்த்தையும் பேசாமல், தலையைத் தொங்கப்போட்டவாறு நின்றான். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, தான் சொன்னதைக் கேட்கவிருப்பமற்ற, பூமியை தேய்த்துக் கொண்ட துரியோதனனைக் கண்ட மைத்ரேயர் கோபம் கொண்டார். விதியால் உந்தப்பட முனிவர்களில் சிறந்த மைத்ரேயர் மிகுந்த சீற்றம் கொண்டு, துரியோதனனைச் சபிக்க தனது மனதில் எண்ணம் கொண்டார். பிறகு, மைத்ரேயர் கண்கள் கோபத்தால் சிவக்க, நீரைத் தொட்டு, திருதராஷ்டிரனின் தீய மனம் கொண்ட மகனிடம் {துரியோதனனிடம்}, "நான் சொல்வதைச் செய்ய முடியாது என்று குறிப்புகளால் உணர்த்திய இழி செயலால், ஏற்படுபடப்போகும் கனியின் பலனை விரைவாக அறுத்தெடுப்பாய். உன்னால் இழைக்கப்பட்ட பெரும் பிழைகளால் உண்டாகும் பெரும் போரில், பலம் பொருந்திய பீமன் உனது தொடையை தனது கதையின் வீச்சால் நொறுக்குவான்" என்று சபித்தார்.

அந்த முனிவர் {மைத்ரேயர்} இப்படிப் பேசி முடித்ததும், மன்னன் திருதராஷ்டிரன், அவர் சொன்னது நடக்காமல் இருக்க, அந்த முனிவரைச் சமாதானப்படுத்த ஆரம்பித்தான். ஆனால் மைத்ரேயர், "ஓ மன்னா, உனது மகன் பாண்டவர்களுடன் சமாதானம் செய்து கொண்டால், ஓ குழந்தாய், இந்த எனது சாபம், எந்த விளைவையும் ஏற்படுத்தாது, செய்யவில்லை என்றால் நான் சொன்னது நடந்தே தீரும்" என்றார்.

வைசம்பாயனர் சொன்னார், "பீமனின் பலத்தை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பிய மன்னர்களில் முதன்மையான துரியோதனின் தந்தை {திருதராஷ்டிரன்}, மைத்ரேயரிடம், "கிர்மீரன் எப்படி பீமனால் கொல்லப்பட்டான்?" என்று கேட்டான்.

மைத்ரேயர், "ஓ மன்னா {திருதராஷ்டிரா}, எனது வார்த்தைகளை மதிக்காத உனது மகனால் {துரியோதனனால்}, நான் உன்னிடம் மறுபடியும் பேச மாட்டேன். நான் சென்றதும், விதுரன் உனக்கு யாவையும் விளக்குவான்!" என்றார். இவற்றைச் சொன்ன மைத்ரேயர், தான் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே சென்றார். (பீமனின் கைகளால் ஏற்பட்ட) கிர்மீரனின் மரணச் செய்தியைக் கேட்ட துரியோதனன் அமைதியின்றி வெளியே சென்றான்.

******************ஆரண்யக பர்வம் முற்றிற்று******************

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்