Sunday, November 17, 2013

மலை போல் நின்ற கிர்மீரன்! - வனபர்வம் பகுதி 11அ

Kirmira stood like a mountain | Vana Parva - Section 11a | Mahabharata In Tamil

(கிர்மீரவத பர்வம்)

கிர்மீர வதம் குறித்து திருதராஷ்டிரன் விதுரனிடம் கேட்டல்; விதுரன் திருதராஷ்டிரனுக்கு கிர்மீரன் மற்றும் பாண்டவர்கள் சந்திப்பை விவரித்தல்

திருதராஷ்டிரன் சொன்னான், "ஓ க்ஷத்தா {விதுரா}, கிர்மீரனின் அழிவைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்! அந்த ராட்சசனுக்கும் பீமசேனனுக்கும் இடையில் நடந்த போரைக் குறித்து எனக்குச் சொல்!"

விதுரன், "மனித சக்தியை விஞ்சிய பீமசேனனின் சாதனைக் கதையைக் கேளும்! பாண்டவர்களுடன் நான் (அவர்களுடன் இருந்து) உரையாடிக் கொண்டிருந்த போது, இதை நான் கேள்வியுற்றேன்!


"ஓ மன்னர்களின் முதன்மையானவனே {திருதராஷ்டிரா}, பகடையில் தோல்வியுற்று, இங்கிருந்து வெளியேறிய பாண்டவர்கள் பகலும் இரவுமாக மூன்று நாட்கள் பயணித்து, காம்யகம் என்ற பெயர் கொண்ட வனத்தை அடைந்தனர். ஓ மன்னா, கொடூரமான நடு இரவில், இயற்கை உறங்கிக் கொண்டிருந்த போது, கொடும் செயல்கள் புரியும்  மனிதரை உண்ணும் ராட்சசர்கள் உலவ ஆரம்பித்த போது, தவசிகளும், இடையர்களும், கானகத்தில் திரிபவர்களும், நர மாமிச உண்ணிகளுக்குப் பயந்து காம்யக வனத்தைத் தவிர்த்து தூரமான இடங்களுக்கு ஓடினர். 

ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த நேரத்தில் பாண்டவர்கள் அந்த வனத்தில் நுழைந்த போது, சுட்டெரிக்கும் கண்களுடன் ஒரு பயங்கரமான ராட்சசன், எரிகொள்ளியுடன் அவர்கள் {பாண்டவர்கள்} கண் முன் தோன்றி அவர்களது பாதையைத் தடுத்துக் கொண்டு நின்றான். நீண்ட கரங்களும், பயங்கரமான முகமும், கொண்ட அவன் அந்த குரு குலத்தைத் தழைக்க வைப்பவர்களின் {பாண்டவர்களின்} வழியில் அவர்களைத் தடுத்துக் கொண்டு நின்றான். எட்டு பற்கள் வெளியே தள்ளிக் கொண்டு, தாமிரச் சிவப்பான கண்களுடன், சூரியக் கதிர்களைப் பிரதிபலிக்கும் மின்னலுடன் கூடிய பெரும் மேகங்களுக்கு அடியில் கூட்டமாக நிற்கும் கொக்குகள் போல, மேல் நோக்கி நின்ற நெருப்பு போன்ற தலைமுடியுடன் நின்றிருந்தான். 

மழைநீர் நிறைந்த மேகம் கர்ஜிப்பது போல, தனது வகை உயிரினங்களின் தன்மைக்கேற்ப மாயத் தோற்றம் கொண்டிருந்தான் அந்தப் பேயுரு கொண்டவன். அந்தப் பயங்கரமான கர்ஜனையைக் கேட்ட பறவைகளும் மற்ற நீர் வாழ் நில வாழ் விலங்குகள் அனைத்தும் பயத்தால் கதறி எல்லா புறங்களிலும் விழ ஆரம்பித்தன. மான்களும் சிறுத்தைகளும், எருமைகளும், கரடிகளும் எல்லா திக்குகளுக்கும் ஓடும் நிலையில், அந்தக் கானகமே நகர்வது போல காட்சி அளித்தது. அந்த ராட்சசனின் பெரும் மூச்சால் உண்டான காற்றில் ஆடி கொடிகள் அனைத்தும் தங்கள் தாமிர வண்ண இலைகள் கொண்ட கரங்களால் மரங்களை அணைத்துக் கொண்டு தவித்தன.

அந்த நேரத்தில் அங்கு கடுமையான பெருங்காற்று வீசியது. வானம் இருட்டி, தூசிப்படலம் அந்த வானத்தை மூடியது. ஐம்புலனுக்கும் பெரும் எதிரி துக்கமானது போல, பாண்டவர்கள் முன்னிலையில் அவர்கள் அறியாத எதிரியான அந்த ராட்சசன் தோன்றினான். கருப்பு நிறத்தில் இருந்த மான் தோலை உடுத்தியிருந்த பாண்டவர்களைத் தூரத்திலேயே கண்ட ராட்சசன் அவர்களது பாதையைப் பெரும் மைனக மலை தடுத்து நிற்பது போல நின்றான். 

இதுவரை இதுபோன்றவனைக் கண்டிராத தாமரைக் கண் கொண்ட கிருஷ்ணை {திரௌபதி} அவனைக் கண்ட பயத்தால், தனது கண்களை மூடிக் கொண்டாள். துட்சாசனனால் கலைந்த கூந்தலுடன் பாண்டவர்களுக்கு மத்தியில் ஐந்து மலைகளுக்கு நடுவே வெட்டிச் செல்லும் ஊற்று போல இருந்தாள். பயத்தில் மூழ்கிய அவளைக் கண்ட ஐந்து பாண்டவர்களும், ஆசையால் உந்தப்பட்ட ஐம்புலன்களும் புலன் நுகர் பொருட்களைப் பின்பற்றி இருப்பது போல அவளைத் {திரௌபதியைத்} தாங்கினர். 

பெரும் (தவ) சக்தி கொண்ட தௌமியர், பாண்டுவின் மகன்களுக்கு முன்னிலையில், அந்த ராட்சசனால் பரப்பப்பட்டிருந்த பயங்கரமான மாயையை பல மந்திரங்களால் அழித்து, அந்த ராட்சசனையும் அழிக்க கணக்கிட்டார். நேர்மையற்ற வழிகளைப் பின்பற்றுபவனும், நினைத்த உருவை எடுக்கும் வல்லமை பெற்றவனுமான அந்தப் பலம் வாய்ந்த ராட்சசன், மாயை அகன்றதைக் கண்டு, கோபத்தால் தனது கண்களை அகல விரித்து, மரணத்தைப் போல காட்சியளித்தான். 

பிறகு மன்னன் யுதிஷ்டிரன் பெரும் விவேகத்துடன் அவனிடம், "நீ யார், யாருடையவன் (யாருடைய மகன்)? நாங்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்" என்று கேட்டான். இப்படிச் சொல்லப்பட்ட ராட்சசன், நீதிமானான யுதிஷ்டிரனிடம், "நான் பகனின் தம்பி, எல்லோராலும் கொண்டாடப்படும் கிர்மீரன் {Kirmira}. இங்கே வரும் மனிதர்களை வீழ்த்தி எனது உணவைச் சம்பாதித்து, யாருமற்ற இந்த காம்யக வனத்தில் வசதியாக வசிக்கிறேன். எனது உணவின் உருவில் எனது அருகில் வந்திருக்கும் நீங்கள் யார்? உங்கள் அனைவரையும் சண்டையில் வென்று, இன்பமாக உங்களை உண்பேன்" என்றான் {கிர்மீரன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்தப் பாவியின் இவ்வார்த்தைகளைக் கேட்டதும், யுதிஷ்டிரன் தனது பெயரைச் சொல்லி, தனது குல வழியைச் சொல்லத் தொடங்கினான், "நான் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன். பாண்டுவின் மகன். நீ என்னைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். நாட்டை இழந்த நான், எனது தம்பிகள் பீமசேனன், அர்ஜுனன், மேலும் மற்றவர்களுடன் சுற்றித் திரியும்போது, எனது வனவாச காலத்தைக் கழிக்க உனது ஆளுகைக்குட்பட்ட இந்தப் பயங்கரமான கானகத்திற்குள் வந்தேன்" என்றான்.

விதுரன் தொடர்ந்தான், "கிர்மீரன் யுதிஷ்டிரனிடம், "நல்ல அதிர்ஷ்டத்தாலேயே, விதி இன்று எனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற வந்திருக்கிறது! ஆயுதம் ஏந்திய நிலையிலேயே, இந்தப் பூமி முழுவதும் பீமனைக் கொல்லும் நோக்கத்தில் தொடர்ந்து சுற்றி வருகிறேன். ஆனால் நான் பீமனைக் காணவில்லை. நல்ல அதிர்ஷ்டத்தாலேயே, எனது சகோதரனைக் கொன்றவனும், நீண்ட நாள் நான் தேடி வந்தவனும் என்னிடம் வந்திருக்கிறான். அந்தண வேடத்தில் இருந்த அவனே எனது அன்புச் சகோதரனான பகனை, தான் கற்ற அறிவியலின் அறத்தால் வெட்ராக்கிய வனத்தில் {Vetrakiya forest} வைத்து கொன்றான். 

அவனுக்கு உண்மையில் கரத்தில் வலுவில்லை! முன்பொரு சமயம், அந்தத் தீய ஆன்மாவே இந்தக் கானகத்தில் இருந்த எனது அன்பு நண்பனான ஹிடிம்பனைக் கொன்று, அவனது தங்கையை {ஹிடிம்பையைக்} கற்பழித்தான். அந்த முட்டாள் இப்போது இந்த எனது ஆழ்ந்த கானகத்திற்குள், பாதி இரவு கழிந்து, அதுவும் நாங்கள் உலவ ஆரம்பிக்கும் சமயத்தில் வந்திருக்கிறான். இன்று நான் எனது நீண்ட நாள் பழியை இவனை {பீமனைத்} தண்டித்துத் தீர்த்துக் கொள்வேன். இன்று இவனிடம் {பீமனிடமிருந்து} இருந்து நிறைய இரத்தத்தை எடுத்து பகனைத் (பகனின் ஆவியை) திருப்திப்படுத்துவேன். ராட்சசர்களின் எதிரியைக் கொல்வதன் மூலம், எனது நண்பனுக்கும் {ஹிடும்பனுக்கும்}, எனது சகோதரனுக்கும் {பகனுக்கும்} நான் பட்ட கடனில் இருந்து விடுபட்டு மேலான மகிழ்ச்சியை அடைவேன். முன்பு பீமசேனன் பகனால் விடப்பட்டிருந்தாலும், இன்று உன் முன்னிலையில், ஓ யுதிஷ்டிரா, நான் அவனை {பீமனை} விழுங்குவேன். பெரும் அசுரனை (வாதாபியை) உண்டு செரித்த அகத்தியரைப் போல, நானும் இந்த பீமனை உண்டு செரித்துவிடுவேன்!" என்றான் {கிர்மீரன்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்