Friday, November 08, 2013

கபடமாய்ப் பேசுகிறாய் விதுரா! - வனபர்வம் பகுதி 4

O Vidura, your speech is crooked | Vana Parva - Section 4 | Mahabharata In Tamil

(ஆரண்யக பர்வத் தொடர்ச்சி)

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




திருதராஷ்டிரன் விதுரனை அழைத்து ஆலோசனை கேட்டல்; விதுரன் பாண்டவர்களை அழைக்கச் சொல்லல்; திருதராஷ்டிரன் விதுரனை நிந்திப்பது; விதுரன் பாண்டவர்களிடம் செல்வது

வைசம்பாயனர் சொன்னார், "பாண்டவர்கள் காட்டுக்குச் சென்ற பிறகு, தனது கண்ணைப் போன்ற ஞானம் கொண்டவனும் அம்பிகையின் மகனுமான திருதராஷ்டிரன் மிகுந்த சோகத்துக்கு உள்ளானான். வசதியாக அமர்ந்திருந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, ஆழமான அறிவு கொண்ட அறம் சார்ந்த விதுரனிடம், "உனது புரிதல் பார்கவனைப் {Bhargava -சுக்கிரனைப்} போன்று தெளிவானது. அனைத்து நுட்பங்களையும், நீதிகளையும் நீ அறிவாய். அனைத்து கௌரவர்களையும் சமமான பார்வையில் பார்ப்பவன் நீ. எனக்கும் அவர்களுக்கும் எது சரியாக இருக்கும் என்பதைச் சொல். ஓ விதுரா, இப்படி காரியங்கள் நடந்திருக்கும் வேளையில், நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்? குடிமக்களிடம் நல்லெண்ணத்தை நான் எப்படிப் பெறுவேன்? நம்மை குடிமக்கள் வேர் வரை அழித்திடாமல் இருக்க, நான் எப்படி அவர்களின் நன்மதிப்பைப் பெறுவது? உகந்த அற்புதமான காரியங்கள் அனைத்தையும் நீ அறிந்திருப்பதால், எங்கள் அனைவருக்கும் சொல்" என்றான் {திருதராஷ்டிரன்}.

விதுரன், "ஓ மன்னா {திருதராஷ்டிரா} மூன்று நெறிகள் (பொருள், இன்பம் மற்றும் வீடு ஆகியன) அறத்திலேயே தங்கள் அடித்தளத்தைக் கொண்டிருக்கின்றன. நாடுகளின் அடித்தளங்களும் அறத்தை அடிப்படையாகக் கொண்டவையே என்று முனிவர்கள் சொல்கிறார்கள். ஆகையால், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, உமது பலத்தில் சிறந்ததைக் கொண்டு, அறவழியில் உனது மகன்களையும், பாண்டுவின் மகன்களையும் பேணும். உனது மகன்கள் நீதிமானான யுதிஷ்டிரனை அழைத்து, பகடை ஆட்டத்தில் அவனை வீழ்த்திய போது, சுபலனின் மகனைத் {சகுனியைத்} தலைமையாகக் கொண்ட தீய ஆன்மாக்களுக்கு அந்த அறம் கிட்டியிருக்கிறது. ஓ மன்னா {திருதராஷ்டிரா}, இந்த முழு அநீதியை நான் நேராக்கப் பார்க்கிறேன். ஓ குருக்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, உமது மகன் பாவங்களில் இருந்து விடுபட்டு, நல்ல மனிதர்களிடம் தனது நிலையை மீட்டெடுக்கப் பார்க்கிறேன். உம்மால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அத்தனையையும் பாண்டுவின் மகன்கள் அடையட்டும். ஒரு மன்னன் தன் உடைமைகளில் திருப்திகொண்டு மற்றவர்களின் உடைமைகளுக்கு ஆசைப்படக்கூடாது என்பது நிச்சயம் உயர்ந்த அறநெறியாகும். உமது நற்பெயர் பாதிக்கப்படாது. குடும்பத்துக்குள் வேற்றுமைகள் நிலவாது. நீர் நியாயமற்றவனாக இருக்க மாட்டீர். பாண்டவர்களைத் திருப்திப்படுத்தி, சகுனியைச் சிறுமைப்படுத்துவதே இப்போது உமது முக்கிய கடமையாகும். உமது மகன்களுக்கு, அவர்கள் தொலைத்த நற்பேறை மீட்டெடுத்துக் கொடுக்க வேண்டும் என்று நீர் நினைத்தீரானால், ஓ மன்னா {திருதராஷ்டிரா}, இந்த நடத்தையை விரைவாக மேற்கொள்ளும். நீர் அப்படிச் செய்யவில்லை என்றால், குருக்கள் நிச்சயம் அழிவைச் சந்திப்பர். பீமசேனனோ அர்ஜுனனோ கோபப்பட்டால் எதிரிகளைக் கொல்லாமல் விட மாட்டார்கள். போரில் வல்லவனான சவ்யசச்சினையும் {அர்ஜுனனையும்}, உலகத்தின் ஆயுதங்களில் மிக வலிமையான காண்டீவத்தையும், பெரும் பலம்வாய்ந்த பீமனையும் கொண்டவர்களால் இந்த உலகத்தில் எதைத்தான் அடைய முடியாது? முன்பு, உமது மகன் {துரியோதனன்} பிறந்த காலத்தில் நான் உமக்கு *"இந்த அதிர்ஷ்டமற்ற குழந்தையைக் கைவிடும். இதில் தான் உமது குலத்தில் நன்மை இருக்கிறது" என்று சொன்னேன். ஆனால் நீர் அதன்படி நடந்து கொள்ளவில்லை. ஓ மன்னா, இப்போதும் உமது நன்மைக்கான வழியையே குறிப்பிடுகிறேன். நான் சொல்வது போல நீர் நடந்தால், பின்னால் நீர் வருந்தத் தேவையில்லை. பாண்டுவின் மகன்களுடன் சேர்ந்து உமது மகனும் {துரியோதனனும்} ஒன்றாக ஆள மகிழ்ச்சியாகச் சம்மதிப்பானானால், பிற்பாடு நீர் வருந்த வேண்டியிருக்காது. வேறு மாதிரியாகச் செய்ய வேண்டுமானால், உமது மகிழ்ச்சிக்காக உமது மகனைக் கைவிடும். துரியோதனனை ஒதுக்கி, பாண்டுவின் மகனை ஆட்சி உரிமையில் நிறுவும். ஓ மன்னா {திருதராஷ்டிரா}, ஆசையற்ற அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, இந்தப் பூமியை அறம் சார்ந்து ஆளட்டும். பிறகு, பூமியின் மன்னர்கள் அனைவரும் வைசியர்களைப் போல நமக்குத் தாமதமில்லாமல் காணிக்கை தருவார்கள். ஓ மன்னா {திருதராஷ்டிரா}, துரியோதனன், சகுனி மற்றும் கர்ணன் ஆகியோர் ஆயத்தத்துடன் பாண்டவர்களுக்காகக் காத்திருக்கட்டும். துச்சாசனன், திறந்த சபையில் பீமசேனனிடமும், துருபதனின் மகளிடமும் மன்னிப்பு கேட்கட்டும். அனைத்து அதிர்ஷ்டக்குறிகளும் கொண்ட யுதிஷ்டிரனை அரியணையில் அமர்த்தி அவனை நீர் தணிக்க வேண்டும். நீர் கேட்டதலா, நான் வேறு என்ன ஆலோசனை கூற முடியும்? இவற்றைச் செய்வதால், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, நீர் செழுமையை அடைவீர்" என்றான் {விதுரன்}.

திருதராஷ்டிரன், "ஓ விதுரா, இந்தச் சபையில் பாண்டவர்களைக் குறித்தும், என்னைக் குறித்தும் நீ சொல்லிய இவ்வார்த்தைகள், அவர்களுக்கு நன்மையே தவிர எங்களுக்கு இல்லை. எனது மனம் அதை ஏற்கவில்லை. இவற்றையெல்லாம் உனது மனத்தில் எப்படி தீர்மானம் செய்தாய்? நீ பாண்டவர்களின் சார்பாகப் பேசியதால், நீ என்னுடன் நட்பாக இல்லை என்பதைக் காண்கிறேன். பாண்டுவின் மகன்களுக்காக எனது மகன்களை நான் எப்படிக் கைவிடுவேன்? சந்தேகமற அவர்கள் எனது மைந்தர்கள்தான். ஆனால் துரியோதனன் எனது உடலில் இருந்து உதித்தவன். பாகுபாடு பார்க்காத எவன்தான் எனது உடலை மற்றவர்களுக்காகக் கைவிடச் சொல்வான்? ஓ விதுரா, உன்னை நான் உயர்ந்த மதிப்பில் வைத்திருந்தாலும், நீ சொல்வது அனைத்தும் கபடமாக இருக்கிறது. நீ விரும்பியவாறு இங்கு இருக்கவோ அல்லது இங்கிருந்து நீ போகவோ செய்யலாம். என்னதான் மகிழ்ச்சியூட்டப்பட்டாலும், கற்பற்றவள் கணவனை ஏமாற்றத்தான் செய்வாள்" என்றான்.

வைசம்பாயனர் சொன்னார், "ஓ மன்னா {ஜனமேஜயனே}, இதைச் சொன்ன திருதராஷ்டிரன், திடீரென எழுந்து, உள் அறைகளுக்குள் சென்றான். விதுரன், "இந்தக் குலம் அழிந்தது" என்று சொல்லி, பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} இருக்கும் இடத்திற்குச் சென்றான்.
---------------------------------------------------------------------------------------------
*"இந்த அதிர்ஷ்டமற்ற குழந்தையைக் கைவிடும். இதில் தான் உமது குலத்தில் நன்மை இருக்கிறது"........

மேலும் விவரங்களுக்கு:


அரசனே! துரியோதனனைக் கைவிடு! - ஆதிபர்வம் பகுதி 115

வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஜனமேஜயா, அதே சமயத்தில் திருதராஷ்டிரன் காந்தாரியிடம் நூறு மகன்களையும், வைசிய மனைவியிடம் ஒரு மகனையும் பெற்றான். பாண்டு, தனது இரு மனைவிகளான குந்தி மற்றும் மாத்ரி மூலம் ஐந்து மகன்களைப் பெற்றான். பின்னாட்களில் பெரும் ரதவீரர்களாக இருந்த அந்த ஐவரும், தேவர்களால் குரு பரம்பரைத் தொடர்ச்சிக்காகப் பெறப்பட்டவர்கள்."

ஜனமேஜயன், "ஓ அந்தணர்களில் சிறந்தவரே, எப்படி காந்தாரி அந்த நூறு மகன்களையும் பெற்றாள்? எத்தனை வருடங்களில் பெற்றாள்?........... 

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்