Friday, November 08, 2013

செல்வத்தைப் பகிர்ந்து வாழ் யுதிஷ்டிரா! - வனபர்வம் பகுதி 5

Yudhishthira divide thy property | Vana Parva - Section 1 | Mahabharata In Tamil

(ஆரண்யக பர்வத் தொடர்ச்சி)

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




விதுரன் பாண்டவர்களைக் காம்யக வனத்தில் சந்தித்தல்; விதுரன் திருதராஷ்டிரன் சொன்னவற்றை பாண்டவர்களுக்குச் சொல்லல்...

வைசம்பாயனர் சொன்னார், "காட்டில் வாழ விரும்பிய அந்த பாரத குலத்துக் காளைகளான பாண்டவர்கள், தங்களைத் தொடர்பவர்களுடன், கங்கைக் கரையில் இருந்து குருக்ஷேத்திரக் களத்திற்குச் சென்றனர். சரஸ்வதி, திரிசத்வதி மற்றும் யமுனையில் {நதிகளில்} தங்களைச் சுத்திகரித்துக் கொண்டு, ஒரு கானகத்தை விட்டு மற்றொரு கானகத்திற்கு மேற்கு நோக்கிப் பயணித்தனர். நீண்ட பயணத்திற்குப் பிறகு அவர்கள், முனிவர்கள் அடிக்கடி செல்லும் சரஸ்வதி நதிக்கரையில் உள்ள காம்யக வனத்திற்குச் சென்றனர். 


ஓ பாரதா {ஜனமேஜயா}, பறவைகளும் மான்களும் நிறைந்த அந்தக் கானகத்தில் அந்த வீரர்கள் முனிவர்களால் உற்சாகமும் ஆறுதலும் அடைந்து அங்கேயே வசிக்கத் தொடங்கினர். பாண்டவர்களைப் பார்க்கத் துடித்துக் கொண்டிருந்த விதுரன், அனைத்து நற்பொருட்களும் நிரம்பிய காம்யக வனத்திற்கு தனி ரதத்தில் நுழைந்தான். வேகமான குதிரைகளால் இழுக்கப்பட்ட ரதத்தில் காம்யக வனத்தை அடைந்து, நீதிமானான யுதிஷ்டிரன் திரௌபதியுடன் ஓய்வாக இருப்பதையும், தம்பிகளும் அந்தணர்களும் சூழ்ந்திருப்பதையும் கண்டான். வேகமான எட்டுகளுடன் நடந்து வந்த விதுரனைக் கண்ட அறம்சார்ந்த மன்னன் {யுதிஷ்டிரன்} தனது தம்பியான பீமசேனனிடம், "என்ன செய்தியுடன் க்ஷத்தா {விதுரர்} இங்கு வருகிறார்? சகுனியால் அனுப்பப்பட்டு, மீண்டும் பகடையாட நம்மை அழைக்க வருகிறாரா? சிறு மனம் கொண்ட சகுனி நமது ஆயுதங்களையும் பகடையின் மூலம் வெல்லலாம் என நினைக்கிறானா? ஓ பீமசேனா, நான் சவாலுக்கு அழைக்கப்பட்டால், என்னால் இங்கு தங்க முடியாது. நீ வா. காண்டீவத்தின் இருப்பு சந்தேகத்துக்கிடமானால், நாம் நமது நாட்டை அடையவே முடியாது" என்றான்.

வைசம்பாயனர் சொன்னார், "ஓ மன்னா {ஜனமேஜயா}, பாண்டவர்கள் எழுந்திருந்து விதுரனை வரவேற்றனர். அவர்களால் வரவேற்கப்பட்ட அஜமீட குலத்தைச் சேர்ந்தவன் (விதுரன்) அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து, வழக்கமான விசாரிப்புகளை விசாரித்தான். சிறிது நேரம் விதுரன் ஓய்வெடுத்த பிறகு, அந்த மனிதர்களில் காளைகள், அவன் {விதுரன்} வந்த காரணத்தைக் கேட்டனர். விதுரன் அவர்களுக்கு அம்பிகையின் மகன் திருதராஷ்டிரன் சொன்னது தொடர்பான அத்தனையும் விவரமாகச் சொன்னான்.

விதுரன், "ஓ அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, திருதராஷ்டிரன், அவரை நம்பியிருக்கும் என்னை அழைத்து தக்க மரியாதைகள் செய்து, "காரியங்கள் இப்படி நடந்திருக்கின்றன. இப்போது, பாண்டவர்களுக்கும் எனக்கும் எது நல்லது என்பதைச் சொல்." என்று கேட்டார். நான் கௌரவர்களுக்கு திருதராஷ்டிரனுக்கும் நன்மை பயக்கும் காரியங்களைச் சொன்னேன். நான் சொன்னதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கும் வேறு வழி தெரியவில்லை. ஓ பாண்டவர்களே, நான் கூறிய ஆலோசனைகள் மிகுந்த நன்மை பயக்கத்தக்கவை, ஆனால் அம்பிகையின் மகன் {திருதராஷ்டிரன்} அவற்றை கவனிக்கத் தவறிவிட்டார். நோய்வாய்ப்பட்டவனுக்கு மருந்து எப்படிப் பிடிக்காதோ அப்படி எனது வார்த்தைகள் மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} தோற்றன. ஓ எதிரிகள் அற்றவனே {யுதிஷ்டிரனே}, சுத்தமான வழியில் வந்த குடும்பத்திலுள்ள அனைத்து கற்பற்ற தந்திரசாலிகளையும் அறத்தின் பாதைக்குக் கொண்டு வர முடியாது. ஆகையால் என்னால் திருதராஷ்டிரனைத் திருப்ப முடியவில்லை. மூன்று இலக்க வயது அடைந்தவனை இளம் பெண்ணுக்குப் பிடிக்காதது போல, திருதராஷ்டிரருக்கு எனது வார்த்தைகள் பிடிக்கவில்லை. நிச்சயம் குருக்களின் குலத்துக்கு அழிவு ஏற்படப்போகிறது. நிச்சயம் திருதராஷ்டிரர் நற்பேறை அடையமாட்டார். எப்படி தாமரை இலையில் விழுந்த தண்ணீர் அப்படியே நிற்கிறதோ, அதே போல எனது ஆலோசனைகள் அத்தனையும் திருதராஷ்டிரரிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பிறகு கோபம் கொண்ட திருதராஷ்டிரர், "ஓ பாரதா {விதுரா}, நீ எங்கு செல்ல விரும்புகிறாயோ அங்கே செல். இனிமேல் இந்த பூமியையோ அல்லது நகரத்தையோ ஆள உனது துணையை நாட மாட்டேன்" என்று சொன்னார். ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே {யுதிஷ்டிரனே}, மன்னர் திருதராஷ்டிரனால் கைவிடப்பட்டு, நல்ல ஆலோசனைகளை வழங்கவே உன்னிடம் வந்தேன். நான் அந்தத் திறந்த சபையில் என்ன சொன்னேன் என்பதை மறுபடியும் கூறுகிறேன். நான் சொல்வதைக் கேட்டு மனதில் வைத்துக் கொள். பகைவர்களால் கடுமையான துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டவன், பொறுமையுடன் இருந்து தனக்கு ஆதரவுகளைத் தேடிக்கொண்டு, சிறு நெருப்பை உண்டாக்கிய மனிதர்கள், அதை பெரும் நெருப்பாக மாற்றி விடுவது போல மொத்த உலகையும் தனியாக ஆள்வான். ஒருவனின் செல்வத்தை துணைவர்களுக்கும் பகிர்ந்தளித்து மகிழ்ச்சியாக இருந்தாலும், அதுவே துணைவர்களை அடையும் சிறந்த வழியாகும். துணைவர்களைக் கொண்டவன், உலகத்தின் அரசுரிமையை வெல்கிறான் என்று சொல்லப்படுகிறது. ஓ பாண்டவனே {யுதிஷ்டிரனே}, உனது செல்வத்தை உனது துணைவர்களுக்கு பகிர்ந்து கொடு. எப்போதும் அவர்களுடன் உண்மையாக நடந்து கொள். அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் பேசு. உனது உணவைக் கூட அவர்களுடன் பகிர்ந்து கொள். அவர்கள் எதிரில் தற்பெருமை பேசாதே! இந்த நடத்தை மன்னர்களின் செழுமையை வளர்க்கிறது!" என்றான்.

யுதிஷ்டிரன், "ஆசையில் சபலமடையாமல், இந்த உயர்ந்த அறிவை அறிந்து, நீர் அறிவுறுத்துவது போலவே நடந்து கொள்கிறேன்! காலம், இடம் குறித்து என்ன ஆலோசனை சொல்கிறீரோ அதன்படியே கவனமாக நடந்து கொள்கிறேன்" என்றான்.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்