Sunday, January 05, 2014

நிர்வாணமானான் நளன் - வனபர்வம் பகுதி 61

Nala went nude | Vana Parva - Section 61 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

நளன் சூதில் தோற்று, வனத்திற்குச் செல்வது; பசியால் வாடுவது; ஆடைகளை இழப்பது; தனது மனைவியான தமயந்தியை தெற்கு நோக்கிச் செல்லுமாறு சொல்வது; தமயந்தி மறுப்பது...

பிருகதஸ்வர் சொன்னார், " வார்ஷ்ணேயன் {தேரோட்டி} சென்ற பிறகு, நீதிமானான நளனிடமிருந்து நாட்டையும் எஞ்சியிருந்த செல்வங்களையும் வென்றான் புஷ்கரன். ஓ மன்னா {யுதிஷ்டிரா} தனது நாட்டை இழந்த நளனிடம், புஷ்கரன் சிரித்துக் கொண்டே, "விளையாட்டு தொடரட்டும். ஆனால் இப்போது உன்னிடம் பந்தயப்பொருள் என்ன இருக்கிறது. தமயந்தி மட்டுமே இருக்கிறாள்; மற்ற யாவையும் நான் வென்றுவிட்டேன். நல்லது என்று நீ விரும்பினால், தமயந்தியை இப்போது பந்தயப் பொருளாக வை" என்றான்.


புஷ்கரனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த அறம்சார்ந்த மன்னன் {நளன்}, கோபத்தால் தனது இதயம் வெடித்துவிடுவது போல உணர்ந்து, ஒரு வார்த்தையும் பேசாதிருந்தான். மனம் நொந்து புஷ்கரனைப் பார்த்த பெரும் புகழ்வாய்ந்த மன்னன் {நளன்}, தனது உடலில் இருந்த அனைத்து ஆபரணங்களையும் கழற்றினான். ஒற்றையாடையில் உடலை மூடி, அனைத்து செல்வங்களையும் துறந்து, நண்பர்களின் துயரத்தைப் பெருக்கும்வகையில், வெளியேறினான் மன்னன் {நளன்}. அவன் அப்படி வெளியேறும்போதும், தமயந்தியும், ஒற்றையாடை உடுத்தி, அவன் பின்னால் தொடர்ந்து சென்றாள்.

புறநகருக்கு வந்த நளன் அங்கே தனது மனைவியுடன் மூன்று இரவுகள் தங்கினான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நளன் மீது கவனம் செலுத்தும் எவனும் கொல்லப்படுவான் என்று நகரம் முழுவதும் பிகடனம் செய்தான் புஷ்கரன். புஷ்கரனின் இவ்வார்த்தைகளாலும், நளன் மீது அவன் {புஷ்கரன்} கொண்டிருந்த விரோத மனப்பான்மையை அறிந்ததாலும், ஓ யுதிஷ்டிரா, அக்குடிமக்கள் அவனுக்கு எந்த விருந்தோம்பலையும் செய்யவில்லை. அவன் விருந்தோம்பலுக்குத் தகுந்தவன் என்றாலும் அவனை யாரும் கருதிப் பார்க்காததால், நளன் நகரத்திற்கு வெளியே புறநகரில் நீரை மட்டும் உண்டு மூன்று இரவுகளைக் கழித்தான். பசியால் துன்புற்ற அம்மன்னன் {நளன்}, பழங்களையும், கிழங்குகளையும் தேடிச் சென்றான். தமயந்தியும் அவனைப் பின்தொடர்ந்தாள்.

பட்டினியால் துயரம் கொண்ட நளன், பல நாட்களுக்குப் பிறகு தங்க நிறத்தாலான சிறகுகள் கொண்ட சில பறவைகளைக் கண்டான். பிறகு அந்த நிஷாதர்களின் பலம் வாய்ந்த தலைவன் {நளன்} தனக்குள்ளேயே, "இவையே {பறவைகளே} எனது இன்றைய உணவும் செல்வமும் ஆகும்" என்று நினைத்து, தான் அணிந்திருந்த ஆடையைக் கொண்டு அவற்றை மூடினான். அப்போது அந்தப் பறவைகள் வானத்தில் எழுந்தன. துயரத்துடன் நிர்வாணமகாக தரையைப் பார்த்துக் கொண்டு நின்ற நளனைக் கண்டு அந்த விண்ணதிகாரிகள் {பறவைகள்}, "ஓ சிறுபுத்தி கொண்டவனே {நளனே}, நாங்களே அந்தப் பகடைக்காய்கள். ஆடைகளுடன் கூட நீ செல்லக்கூடாது என்று விரும்பிய நாங்கள், உனது உடையை எடுத்துச் செல்லவே வந்தோம்" என்றன.

தான் ஆடையற்றிருப்பதையும், பகடைகள் (தனது ஆடையுடன்) சென்றுவிட்டதையும் அறிந்த அறம்சார்ந்த நளன், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தமயந்தியிடம், "ஓ களங்கமற்றவளே, நான் யாருடைய கோபத்தால் எனது நாட்டை இழந்தேனோ, யாருடைய ஆதிக்கத்தால் துயரத்திற்கும் பசிக்கும் ஆளானேனோ, யாரால் நிஷாதர்களிடம் இருந்து விருந்தோம்பலையும் வாழ்வாதாரத்தையும் நான் பெறமுடியவில்லையோ, ஓ மருட்சியுடையவளே {தமயந்தி}, அவை பறவைகளின் உரு கொண்டு எனது ஆடைகளை எடுத்துச் சென்றுவிட்டன. இந்தக் கடும் விபத்தில் வீழ்ந்து, துயரத்தால் பீடிக்கப்பட்டு, உணர்வுகளற்று இருக்கும் நான் உனக்குத் தலைவனாக இருக்கிறேன். ஆகையால், உனது நன்மைக்காக நான் பேசும் வார்த்தைகளைக் கேள்.

இந்தப் பல சாலைகள், அவந்தி  தென்னக நாடுகளுக்கு வழிகாட்டுகின்றன. அவந்தி நகரத்தையும் ரிக்ஷவான் என்ற மலையையும் தாண்டிப் போகின்றன. இதுவே விந்தியம் என்று அழைக்கப்படும் பெரும் மலை, {இது} கடலைநோக்கி ஓடும் இந்த பயோஷ்ணி ஆறு, இங்கே துறவிகளின் ஆசிரமங்களும், பலதரப்பட்ட கனிகளும், கிழங்குகளும் இருக்கின்றன. இந்தச் சாலை விதரப்ப நாட்டுக்கு செல்கிறது. அந்தச் சாலை கோசல நாட்டிற்கு செல்கிறது. தெற்கே செல்லும் இந்த சாலைகளுக்கு அப்பால் தென்னகம் {தென்நாடு} இருக்கிறது" என்றான். இப்படி பீமனின் மகளிடம் {தமயந்தியிடம்} பேசிய துயர் நிறைந்த நளன், ஓ பாரதா {யுதிஷ்டிரா}, தமயந்தியிடம் திரும்பத் திரும்ப இந்த வார்த்தைகளைப் பேசினான்.

அதன்பிறகு துயரத்தால் நிறைந்து, கண்ணீரால் தடைபட்ட குரலுடன் தமயந்தி அந்த நிஷாதனிடம் {நளனிடம்} பரிதாபகரமாக, "ஓ மன்னா, உமது நோக்கத்தை நினைத்து எனது இதயம் நடுங்குகிறது, எனது உறுப்புகள் அனைத்தும் தளர்கின்றன. நீர் உமது நாட்டை இழந்து, செல்வங்களை இழந்து, ஆடையற்று, பசியால் தேய்ந்து, சிரமப்படும் போது, உம்மை இந்தத் தனிமையான கானகத்தில் எப்படி விட்டுச் செல்வேன்? ஆழ்ந்த கானகத்தில், களைப்புடனும், பசியால் பீடிக்கப்பட்டும், உமது பழைய அருளை நினைவுகூரும் போது, ஓ பெரும் ஏகாதிபதியே {நளரே}, நான் உமது களைப்பை நீக்கி ஆறுதலளிப்பேன். ஒவ்வொரு துயருக்கும் மனைவிக்கு இணையான மருந்து வேறில்லை என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். ஓ நளரே, அந்த உண்மையைத் தான் நான் உம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்" என்றாள் {தமயந்தி}.

தனது ராணியின் {தமயந்தியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட நளன், "ஓ கொடியிடையுடைய தமயந்தி, எல்லாம் நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. துயரத்தில் இருக்கும் மனிதனுக்கு மனைவிக்கு இணையான நட்போ மருந்தோ கிடையாதுதான். நான் உன்னைக் கைவிட முயலவில்லை. ஆகையால், ஓ மருட்சியுடையவளே, உனக்கு ஏன் இந்த அச்சம்? ஓ களங்கமற்றவளே, நான் என்னைக் கைவிட்டாலும் விடுவேனே, உன்னைக் கைவிடேன்" என்றான். 

பிறகு தமயந்தி, "ஓ பெரும் பலம்வாய்ந்த மன்னா {நளரே}, நீர் என்னைக் கைவிட நினைக்கவில்லை என்றால், விதரப்ப நாட்டிற்குச் செல்லும் வழியை நீர் எனக்கு ஏன் சுட்டிக்காட்டுகிறீர்? ஓ மன்னா {நளரே}, நீர் என்னைக் கைவிடமாட்டீர் என்பதை நான் அறிவேன். ஆனால், ஓ பூமியின் தலைவா, உமது மனம் தடுமாறுவதைக் கருத்தில் கொண்டே நீர் என்னைக் கைவிடுவீர் என எண்ணுகிறேன்.  ஓ மனிதர்களில் சிறந்தவரே, நீர் அவ்வழியை எனக்குத் திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டுவதால், ஓ தேவர்களைப் போன்றவரே {நளரே}, எனது துயரத்தை அதிகரிக்கிறீர். எனது உறவினர்களிடம் நான் செல்ல வேண்டும் என்பது உமது நோக்கமாக இருந்தால், அது உமக்கு திருப்தியை அளிக்கும் என்றால், நாம் இருவரும் சேர்ந்தே விதரப்ப்ப நாட்டிற்கு செல்வோம். ஓ மரியாதைகள் கொடுப்பவரே, அங்கே விதர்ப்ப நாட்டு மன்னர் நம்மை மரியாதையுடன் வரவேற்பார். அவரால் மதிக்கப்பட்டு, ஓ மன்னா, நீர் நமது இல்லத்தில் மகிழ்ச்சியாக வாழலாம்" என்றாள் {தமயந்தி}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்